Saturday, November 12, 2016

நரிகளுக்கான பொறி


ந்த புது ரூபாய் மாற்றமானது அம்பானி, மல்லையாவை குறிவைத்து அல்ல அவர்கள் பணம் இந்தியாவில் அவர்கள் படுக்கையின் கீழ், கழிவறையில் பதுக்கி வைக்கப்படவில்லை. அது வெளிநாடுகளிலும், நம் நாட்டிலும் என்றோ வெள்ளை பணமாக உலா வந்துக்கொண்டு தான் இருக்கிறது.

இந்தியாவில் வெளிநாட்டு முதலீடு செய்துள்ள நாடுகளின் பட்டியலில் முதலில் நிர்ப்பது மொரிசியச், அமெரிக்க டாலர் மதிப்பில் 900 கோடி அவர்கள் இந்தியாவில் 2015ல் மட்டும் செய்த முதலீடு. அதாவது 2040 கிமீ மொத்த பரப்பளவு கொண்ட சிறு தீவு 3,287,263 கிமீ பரப்பளவு கொண்ட இந்தியாவில் செய்துள்ள தொகை இந்திய மதிப்பில் ரூ58,500 கோடி. அதற்க்கு காரணம் DTAA (Double Taxation Avoidance Agreement ) அதாவது அங்கிருந்து செய்யப்படும் முதலீட்டுக்கோ, அதனால் பெறும் லாபதிற்க்கோ இந்திய அரசாங்கம் எந்த ஒரு வரியையும் விதிக்காது. மேலும் ஏதொரு மொரிசியசின் குடிமகன் இந்திய நிறுவனத்தை கையகப்படுதினாலும் வரி இல்லை என்ற ஒப்பந்தம் இரு நாட்டிற்க்கு இடைய உள்ளது. இங்கு மறைக்கப்படு வரி செலுத்தாமல் அந்த தீவுக்கு கருப்பாக சென்று வரி ஏதும் இல்லாமல் இங்கேயே வந்து மீண்டும் வரி இல்லாமல் குட்டியும் போடுகிறது (ஆனால் சமீபத்தில் இந்த ஒப்பந்தத்திலும் சில மாற்றங்கள் செய்யாப்பட்டு உள்ளது).
  

மொரிசியசு - Mauritius

இது பெரும் முதலைகள் போகும் வழி. சிறு நரிகளுக்கான பொறி தான் இந்த 500, 1000 மாற்றம். நேற்று என் வீட்டு அருகில் இருக்கும் கடைக்கு சென்றிருந்தேன், அந்த கடைக்கு பால் விநியோகம் செய்யும் நபரிடம் வாக்கு வாதத்தில் இருந்தார் கடைக்காரர். இவர் இருக்கும் பழைய ஆயரம் ருபாய் தாளை பெற்று கணக்கை முடிக்கச் சொல்கிறார். அதை வாங்க மறுத்து அந்த நபர் சொன்னது ‘உங்க கிட்ட வாங்கி அவங்க பேங்ல போட்ட, டாக்ஸ் அவர் கட்டனும். இந்த ஒரு தடவ வாங்கிக்க சொல்றார். அடுத்த வாரம் புது நோட்டுன்னா தான்’. யாரும் தான் சம்பாதிக்கும் பணத்தை வங்கியில் போடுவது இல்லை. வங்கியில் செலுத்தினால் வருமானத்திற்கு கணக்கு காட்ட வேண்டும். அந்த வருமானத்திற்கு வரி கட்ட வேண்டும்.

இப்படி அடகு கடைக்காரர், மள்ளிகை கடைக்காரர் என தினம் தினம் போகும் கடைக்காரர்கள் வீட்டில் தூங்குகிறது இந்த கருப்பு பணம். வக்கீல்கள், வைத்தியர்கள் என நீளும் இந்த பட்டியல். இவர்கள் வீடுகளில் அவ்வளவா இருந்து விடும் என்ற கேள்விக்கு நீங்கள் உங்கள் தெருவை தாண்டி, தாலுக்கவை, நகரத்தை, மாவட்டத்தை, மாநிலத்தை தாண்டி மொத்தம் இருக்கும் இந்திய மாநிலங்களோடு இவர்களின் எண்ணிக்கையை பெருக்கிப் பார்த்தல் தெரியும் இந்த மாற்றம் அவசியமா இல்லையா என்று. பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்களில் (MNC) வேலை செய்யும் நாம் வீட்டு வாடகை (rent receipt) என்று பொய்யாக போட்டு வரி எய்ப்பு செய்வது போல இங்கு வணிகம் செய்வோர் பலர் சேர்த்து வைத்திருக்கும் தொகைகளை வெளியே எடுக்கும் முயற்சி தான் இது.

இலவசமாக (திமுக)/ விலை இல்லா (அதிமுக) தரும் டிவி, மிக்சி, பேன்க்கு இவர்கள் எல்லா கடைகளிலும் இந்த swipe machine கொடுத்திட்டு, அதை பயன்படுத்துவதற்க்கான வரி/கட்டணத்தை அரசு ஏற்றுக்கொண்டு இதன் பயன்பாட்டை கட்டாயம் ஆகினால் போதும். இந்த நிலை மாற.

ங்கியிலும், ATM மையங்களிலும் கூட்டம் அலைமோதக் காரணம் நமக்கு யோசிக்கும் திறம் இல்லை என்பதே. ATM கார்டு வைத்திருப்பவர்கள் தினசரி பொருட்களை பல்பொருள் அங்காடியில் (departmental store) வாங்கலாம். அங்கேயே, கருவேப்பிள்ளை கொத்தமல்லி, பச்சை மிளகாய் உட்பட சகலமும் கிடைக்கிறது. மருந்து வாங்க பல கடைகளில் ATM கார்டுகள் பயன்படுத்தலாம் (MedPlus, Apollo). ஒரு வாரம் மட்டுமே இந்த நிலைமை என்பது உணர்ந்தால் பதட்டம் இல்லாமல் இந்த நாட்களை கடக்கலாம். ராகுல் காந்தி ரூ.4000 வாங்க வங்கி வாசலில் நிர்ப்பது எவ்வளவு அபத்தமோ அப்படி தான் debit/credit card வைத்திருப்போர் நிற்பதும்.

நம் பதற்றத்திலும் இந்த மாற்றத்திலும் மாட்டித் தவிப்பது என்னவோ அன்றாடம் கூலி வேலை செய்வோர் தான். கூலி வேலை செய்து சேர்த்த ஆயிரங்கள் செல்லாது என சொன்ன பதற்றத்தை பயன்படுத்தி பலர் ஆயிரம் தாளுக்கு 800 ரூபாய் எனவும், 500ரூபாய் தாளுக்கு 400 ரூபாய் எனவும் ஏமாற்றப்படுகின்றனர். ஏமாற்றுபவர்கள் அம்பானியோ, மல்லையவோ இல்லை அதே தெருவில் ஆட்டோ ஓட்டுபவர், கடை வைத்திருப்பவர்கள் தான். மாற்றம் நம்மில் இருந்து துவங்க வேண்டும்.

நம் பதற்றத்தையும் இந்த அன்றாடம் காட்சிகள் படும் பயத்தையும் தான் இப்போது எதிர் கட்சிகளும், மாநில கட்சிகளும் பேசி பேசி இந்த மாற்றத்தால் பயன் இல்லை என்று கூப்பாடு போடுகிறது. அடுத்த முறையேனும் இவர்கள் வெற்றி பெற வழி தேடுகிறார்களே ஒழிய வேறு கூற்று இல்லை இவர்கள் பேச்சில்.


Monday, November 7, 2016

சீவகாருண்யர்கள்

விருந்திற்கு தான் அழைத்தனர்
சீவகாருண்யர்கள் என்று தான் சொல்லிக்கொண்டனர்
கீரையும் கூட்டும் தான் என்றனர்
அவர் இல் சென்ற போது அவர்கள் சைவம் என்று உணர்த்தியது - வீட்டு வாசலில்
குருதி தேய இணை இணையாய் கிடந்தத மாடுகள்
கல்லூரிக்கு ஓடிய மூத்த மகன் முதுகில் பொதிகள் நிரம்பிய
 கழுத்தறுக்கப்பட்ட குரும்பாடு
அடுத்து வந்த இளைய மகள் இதழில் வழிந்த குரங்கின் கண்ணீர்
அவர் மனைவியின் தோள்லில் தொங்கிய – எழுவது ஆண்டுகள்
என்ற சராசரியை கொண்ட இரண்டே வயதில் கழுத்தறுபட்ட முதலை
அவர் இடையில் நெளிந்த நடு உடலில் கத்தியால் கீறி கிழிக்கப்பட அரவம்
சமணர்களை கழுவேற்றிய சைவத்தினரிடம் யாது காருண்யம் கண்டிட முடியும்!!?



Sunday, September 11, 2016

முத்திரை குத்தப்பட்டவர்கள்

தோ ஒரு கோபத்தில் ஒருவர் செய்யும் கொடூரத்தைக்காட்டிலும் கொடியது அதை நாம் கையாளும் விதம். கொடுஞ்செயல் புரிந்தவனின் மொத்த இனத்தையே நாம் கொடூரராக பார்க்கத் துவங்குவோம். இந்த பார்வையானது இன்று நேற்று வந்ததல்ல, பரசுராமன் ஒரு மன்னன் மேல் இருந்த கோபத்தில் ஒட்டு மொத்த சத்திரிய இனத்தையே அளிக்கக் கிளம்பினார் என்கிறது இதிகாசம். இன்று நம் பார்வையும் இப்படியே இனம், நிறம், மொழி, எல்லை என விரிந்து பிரிந்து கிடக்கிறோம்.

இந்த பார்வையானது இராமாயணதில் துவங்கியது என்பதைவிடவும் இந்த இதிகாசங்களின் மீது சரியான பார்வையும் புரிதலும் இல்லாததே காரணம் என்பது நிதர்சனம். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என தாயின் தலை கொய்தவரும், சிவனின் அருள் பெற்றவரமான பரசுராமன் சத்திரியரான ராமனிடமே தோற்று மனம் மாறுவாதாக கூறப்படுகிறது. ஆக நாம் கொண்ட கொரூர எண்ணம் கொல்ல மீண்டும் ராமன் வரேவேண்டும் என்றால் இன்னுமொரு சீதை தீக்குளிக்க வேண்டுமே. இத்தகைய இதிகாசங்கள் சொல்லும் கருவை காணாது நுனிப்புல் மேய்ந்து ஒவ்வொருவரையும் அவதாரமாக்கி விழுந்து தொழுது பிரிந்து திரிகிறோம்.


ஏதோ ஒரு குழு தவறான புரிதலில் கடவுளின் பெயரால் செய்யும் கொலைகளுக்கு நம்மோடு வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் இனமக்களை ஒரு வித குற்றப் பார்வையில் பார்ப்பது மதம் என்ற முத்திரையோடு பார்க்கும் ஒரு கொடூரம். ஐயப்ப பக்தர்கள் கூட்டமாக செல்லும்போதும், ஆடி மாதம் ஒவ்வொரு தெருவிலும் பாட்டு கூத்து என அமக்களப்படும் போது இல்லாத சலசலப்பு இந்த விநாயகர் ஊர்வலத்தில் வருவதன் காரணம் இந்த முத்திரையோடு பார்க்கும் பார்வையை அரசியலாக்க பார்க்கும் கயவர்களின் வேலை. எல்லா பண்டிகைகளும் மக்கள் கொண்டாடும் போது சச்சரவு வருவதில்லை அதில் அரசியல் நுழையும் போதே மதம், மொழி, சாதி என்ற முத்திரையோடு காட்டப்படுகிறது.

 நாம் அறியாமல் நாம்மில் ஒட்டியிருக்கும் முத்திரையை பயன்படுத்தி ஆதாயம் தேடுகின்றனர். ‘தலித்’ பெண் கொலை, ‘முஸ்லிம்’ தீவிரவாதிகள் வெரிச்செயல், ‘பார்பனனின்’ சூழ்ச்சி போன்ற சொற்றொடர்கள் அர்த்தமற்றதாக வேண்டும்.
http://www.ndtv.com/tamil-nadu-news/tamil-nadu-woman-21-kills-herself-over-morphed-facebook-photos-1424358

நம்மை அறியாமலே நாம் ஒரு முத்திரை பார்வை தான் பார்க்கிறோம். சமூக வலைதளங்களில் பெண்களின் புகை படம் பதியவேண்டாம் சில கயவர்கள் அதை தவறான காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள் என்ற செய்தி இத்தளங்களை உலா வருவோர் எப்படியும் ஒருமுறையேனும் பார்த்திருக்கலாம். அப்படி தவறாக பயன்படுத்துதல் அல்ல அவளுக்கு பிரச்சனை அதை நாம் பெண் என்ற முத்திரையோடு அந்த முத்திரைக்கு பின்னால் கற்பு, அடக்கம் என்ற பொருளோடு கையாளும் விதமே அந்த பெண்ணுக்கு பிரச்சனை.

இந்த மொழி பேசுபவன் இப்படிப்பட்டவனாக தான் இருப்பான் என்ற மொழி முத்திரை. இது தான் திராவிட அரசியல், மொழியால் பிரித்து ஆளுவது. கயத்தாரில் ஆங்கிலேயரால் தூக்கிலடப்பட்ட தெலுங்கு நாயக்கர் வம்சமான வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயருக்கு காட்டிக் கொடுத்தவன் தமிழன். தன் சொந்த பணத்தில் கப்பல் வாங்கி சுதேசி கப்பல் விட்டு செக்கிழுத்து செல்வம் இழந்து வறுமையில் இறந்த வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்மும் (வ.உ.சி) தமிழர் தான். பிறப்பும், இனமும், பேசும் மொழியும் ஏதும் தந்திடாது செய்யும் செயலும், எண்ணமுமே வாழ்வு. மேய்வது வனமனாலும் சேர்வது இனமாக இருக்கட்டும் என்று சொல்வதுண்டு, இனத்தோடு இருப்பது தவறல்ல மற்ற இனத்தை வேறு மாதிரி பார்க்கும் போது தான் பிரச்சனை.

Family only, Brahmins only, vegetarians only, இந்தகைய கொடூர வார்த்தைகள் வாடகைக்கு வீடு தேடி அலையும் போது பார்த்திருக்கலாம். குடும்பம் அல்லாதவர்கள் இப்படி தான் இருப்பாகள் என்ற பார்வை, சைவம் இல்லாதவர்கள் வீட்டை சுத்தாமாக வைத்திருக்க மாட்டார்கள் என்ற ஒரு பார்வை. வீடுகள் தோறும் மாற வேண்டிய பார்வை.

இந்த பார்வை மாற நாம் கர்வமாக சுமக்கும் முத்திரைகள் களைய வேண்டும். நான் வெள்ளையாக, அழகாக, இன்ன சாதியில், இந்த வசதிகளோடு, இந்த ஊரில் என பெருமை பொங்க சுமக்கும் முத்திரைகளை களைந்தால் தான் பிறரை எந்த முத்திரை இன்றியும் பார்க்க முடியும். தான் வெள்ளையாக இருப்பதில் பெருமை கொண்டதால் தான் ஆப்ரிக்கா கண்டத்தை இழிவாக பார்க்கப்பட்டது. தாங்கள் நாகரிகம் அறிந்தவர்கள் என்ற கர்வம் தான் அமெரிக்க பூர்வீகர்கலான செவ்விந்தியர்களை அடிமைப் படுத்ததி அந்த இனம் அழியக் காரணமாக இருந்தது.


மனிதன் என்ற இறுமாப்பு முத்திரை தான் புலியை இன்று வெறும் ஆயிரம் எண்ணிகையில் இருக்க வைத்திருக்கிறது. இன்னும் ஒரு இனம் அழிவதற்குள் களைவோம் இந்த முத்திரைகளை.


Wednesday, August 10, 2016

ஐரோம் சர்மிளா


ஐரோம் சர்மிளா, நவம்பர் 2 , 2000 மணிப்பூர் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மலோம் என்ற சிற்றூரில் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பத்து பேர் இந்தியப் படைத்துறையின் துணைப்படையான அசாம் ரைபிள்சினால் சுடப்பட்டு இறந்தனர். அதில் 1988ஆம் ஆண்டின் தேசிய சிறார் வீரதீர விருது பெற்ற 18 வயது சினம் சந்திரமணி மற்றும் 62 வயதுடைய பெண்மணியும் அடக்கம்.

இந்த படுகொலைக்கு எதிராக 28 வயது ஐரோம் சர்மிளா நவம்பர் 4 உண்ணா போராட்டம் துவங்குகிறார். அன்றையில் இருந்து மூன்றாம் நாள் சர்மிளா தற்கொலைக்கு முயல்வதாக கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கிறது காவல்துறை. வலுகட்டயமாக மூக்கு வழியே உணவு தரப்பட்டுகிறது. இந்திய அமைப்பு சட்டத்தின்படி தற்கொலை முயற்சிக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை என்பதால் அன்றையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் விடுவித்து மீட்டும் கைது செய்யப்படுகிறார்.

இந்திய தலைநகர் டெல்லியில் பாலியில் வன்கொடுமைக்கு ஆளாகி உயிர் விட்ட பெண்ணை இன்று வரை உரித்து உரித்து பார்த்துக்கொண்டு இருக்கிறது நீதித்துறையும் அரசாங்கமும். நீதிமன்ற வேலை நேரம் முடித்து மீண்டும் தனி அமர்வில் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் மேல் முறையீட்டை கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அவர்களுக்கு என வாதாட வக்கீல் தரப்படுகிறது. அவரும் வாய்க்கு வந்த வண்ணம் இன்னும் அந்த பெண்ணை அறுத்து கூறுபோட்டு குற்றவாளிகள் விடுதலைக்கு அயராது பாடுபடுகிறார்.

ஆனால் இந்த ஐரோம் சர்மிளா விடுதலை கைது விடுதலை கைது என மாறி மாறி தன் வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கை உண்ணாமல் நோம்பு இருந்து கழித்ததன் காரணம் கேட்க ஆராய இன்று வரை எந்தத்துறையும் செவி சாய்க்கவில்லை.

16 வருடமாக ஐரோம் சர்மிளா இருந்ததன் நோக்கம் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 திரும்பப் பெற வேண்டும் என்பது இதற்க்கு இடையில் கருணாநிதி ஈழம் மலர உண்ணாவிரதம் இருந்தார், ரஜினி உடல் நிலை தேற ரசிகர்கள் உண்ணாவிரதம் இருந்தனர், ஜெயலிதா விடுதலை அடைய தமிழகமே(!!??) உண்ணாவிரதம் இருந்தது.

வடகிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள அந்த சட்டம் ஆயுதப்படைக்கு தரும் அதிகராம் யாதெனில் போராளி என சந்தேகிக்கும் எவரையும் காலவரையின்றி காவலில் வைக்ககாலம் சுட்டும் கொல்லலாம். மும்பையை அலறச் செய்த தீவிரவாதிக்கு தனி சிறை தனி நீதிமன்றம் அமைக்கத் தெரிந்த அரசிற்கு கிழக்கில் உள்ள போராளிகளின் கோரிக்கைக்கு செவி கொடுக்க ஏனோ வலிக்கிறது.

இன்னமும் அந்த சட்டம் அமலில் உள்ளது அவரினவரின் அடுத்த அடி மணிப்பூர் முதல்வர் இபோபி சிங்கிற்கு எதிராக சுஎத்சியாக தேர்தலில் போட்டியிடப்போவது

வரும் 15ம் தேதி வாய்கிழிய அகிம்சை போராட்டம் மூலம் கிட்டிய சுதந்திரம் என மார்தட்டும் போது நினைவில் கொள்ளவேண்டிய நிகழ்வு, உண்ணா போராட்டம் கைவிடப்பட்டவுடன் இம்பால் மாஜிஸ்திரேட் கோர்ட் தலைமை நீதிபதியிடம் ரூபாய்10ஆயிரத்திற்கான பத்திரத்தை அளித்து தற்கொலைக்கு முயல்கிறார் என அவர் மீது உள்ள வழக்கு தொடர்பான விசாரணை வருகிற 23ம் தேதிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டே பிணையத்தில் விடுவிக்கபட்டார் ஐரோம் சர்மிளா. கோட்சே அன்றே காந்தியை சுட்டது காந்திக்கு நல்லது என இன்று நீதித்துறை இன்று நிருபித்துக் காட்டியது.


Thursday, July 7, 2016

ஒழுங்கீனம்!

அவள் பொதுவாழ்வில் இல்லை
பொது சொத்துக்களை களவாடவில்லை
பொது இடத்தில் கொலை செய்யப்பட்டதால்
அவளை தீக்குளித்துக் காட்டச்சொல்ல – இங்கு
ராமன் எவனும் இல்லை!
ஓங்கி ஒரு கல் எரிய துப்பில்லாதவன்
துப்பு தரவும் துப்பில்லாதவன்
அதற்க்கு ஓராயிரம் காரணங்கள்
இவனுடன் நடக்க எவரும் வருவரோ
உடன் வருவோர் தடுக்கி விழுந்தாலே
ஐயோ என இவன் அலறி ஒதுங்குவான்
இனியும் எத்தனை காலம் காரணம் தேடுவோம்
தைரியம் இல்லை என்பதை மறைக்க!

Sunday, May 22, 2016

எதிநியன் சனநாயகம்

மூன்று பக்கமும் நீர் சூழ்ந்த ஒரு சிறு நகரம் அதில் அடிக்கடி களவு நடக்க இதற்கென்று ஒரு காவல் ஆள் நியமிக்க முடிவு செய்யப்படுகிறது. அவருக்கு சாப்பாடு தங்கும் இடம் என எல்லா சௌகரியங்களும் செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்படியான வசதிகள் செய்ய அந்நகர மக்களிடம் மாதம் இன்ன தொகை வசூலிக்கவும் முடிவு எடுத்தனர்.

இப்படி அந்நகர மக்களின் பணம் கொண்டு செய்யப்படுவதால் இந்த வேலைக்கு பலர் முன்வந்தால் அதில் ஒருவரை தேர்ந்தெடுப்பதில் மக்களின் பங்கும் அவசியம் என கருதி வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்தனர்.

எண்ணியது போலவே போட்டியிட பலர் முன் வந்தனர். இறுதியில் மூன்று பேர் மட்டுமே அதிக வாக்குகள் பெற்றனர். முதலில் அந்நகரில் கூத்தாடுபவன் அடுத்து அதில் அந்த நகரத்தில் இருக்கும் பெரும்பான்மையான சமூகத்தை சேர்த்தவன், மூன்றாவதாக மிக யோகியன் என்று பெயரெடுத்தவன். கூத்துக்காரன் பதவி ஏற்ற நாளில் இருந்து களவு குறையத்துவங்கியது. பாராட்டுக்கள் குவிந்தன.

தடீரென யோகியன் ஊர் கூட்டத்தை கூட்டினான். கூத்துக்காரன் பதவி ஏற்ற நாளில் இருந்து களவு என்னவோ குறைந்து தான் இருக்கிறது ஆனால் களவு போன பொருட்களின் மதிப்பு என்னவோ கூடி இருக்கிறதே என்று குற்றம் சாட்டினான். அந்நகரத்தின் ஒரு பிரிவினர் இவன் பொறாமையால் பேசுகிறான் என்றனர். மற்றவர் களவு போன கணக்கு சொல்வது போல் அதிகமாகவே இருக்கிறதே என்றனர். கூதுக்கரனால் சரி வர காரணம் ஏதும் சொல்ல முடியவில்லை. புதியதாய் ஒருவரை தேர்ந்தெடுக்க மீண்டும் வாக்கெடுப்பு நடந்தது.

அதில் திரும்பவும் கூத்துக்காரனும் நின்றான். இம்முறை பெரும்பான்மையான  சமூகத்தை சேர்த்த சாதியக்காரன் வென்றான் பதவியேற்றான். நாட்கள் கடந்தது களவும் குறைவாக தொடர்ந்தது. காவல் ஆளுக்காக வசூலிக்கப்படும் தொகையும் கூடிகொண்டே போனது. மக்கள் கேள்வி எழுப்பத் துவங்கினர் களவு ஏன் இன்னும் தொடர்கிறது என்று. இந்த கேள்விகள் தொகை கூடியதால் வந்தது என கருதினர் இருப்பினும் கேள்வி சரியே என்பதால் இது குற்றச்சாட்டாக கருதி பதிலளிக்க சாதியக்காரனை அழைத்தனர்.

கூட்டத்தில் பெரும் வாக்கு வாதம் நடந்தது அவன் சாதிக்காரர்கள் அவனுக்கு இணக்கமாக பேச மற்றவர்கள் எதிர்க்கவும் வாக்கு வாதம் சூடேறியது. இப்படி குற்றம் சாட்டுபவர்களே ஏன் வந்து இரவு எல்லாம் கண் விழித்து காவல் காக்கக் கூடாது என்றான் சாதியக்காரன். சலசலப்பு ஓய்ந்தது சத்தமே வரவில்லை.

“அந்த வக்கு எங்களுக்கு இல்லாததை உணர்ந்ததால் தான் நாங்கள் வாக்கு மட்டும் செலுத்துகிறோம். அது இருக்கு என்று முன் வந்து எங்கள் பணத்தில் நீ உண்பதால் தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம்” என்றான் ஒருவன். இம்முறை சாதியக்காரனிடம் பதில் இல்லை.

கூட்டம் இந்த தனி ஒருவன் சொல்வது சரி என இவன் பக்கம் சாயத்துவங்கினர். அந்த ஒருவன் தொடர்ந்தான், “நாம் எப்படி வாக்களித்தோம்? இந்த வேலைக்கு தகுதியானவன் ஒரு வலியவன். அப்படி ஒருவனை அடையலாம் கண்டா வாக்களித்தோம். கூத்துக்கரனை நகரம் முழுவதும் தெரியும் அதனால் அவன் முதல் முறை அதிக வாக்குகள் பெற்று வென்றான். அடுத்து வென்றவனின் சமூகம் இங்கு அதிகம் போக கூதுக்காரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சடால் கூடுதல் வாக்குகள் பெற்றான். யார் சரியானவன் என்பதை விடுத்து யார் தெரிந்தவன் என்பதை கருத்தில் கொண்டு தானே வாக்களித்தோம்.”

மூன்று பக்கமும் கடல் சூழ்த்த நாடு இந்தியா, 1948ல் நெறிமுறைகளை மீறி செயல் பட்ட வி.கே. கிருஷ்ணா மேனன் நேருவின் மந்திரி சபையில் பாதுகாப்புத் துறை மந்திரியானார். இன்று வரை குற்றப் பின்னணி உள்ளவர்கள் நாட்டை ஆளும் அவலம் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

காரணம் இங்கு இருக்கும் பழம்பெரும் கட்சிகளுக்கு பிரதானா வாக்காளர்கள் இருக்கிறார்கள் நல்லதோ கேட்டதோ அவர்கள் அதே கட்சிகளுக்கு தான் வாக்களிப்பார்கள் சராசரியாக நாற்பது சதவீதம். இது போக கட்சிசாரா மக்களின் முடிவே தலைவர் யார் என்பதை நிர்னைக்கும், அது மீதம் உள்ள அறுவது சதவீதம் அதில் இருப்பவர்களில் அதீதமானவர்கள் இன்று நான் வாக்களித்தால் நாளை எனக்கு என்ன கிடைக்கும் என்ற குறுகிய எண்ணத்தோடு  வாக்களிப்பதால் மாற்றம் வர வாய்பில்லை.

Source: https://data.gov.in/catalog/number-students 
2014 தேர்தல் கணக்கின் படி மொத்தம் 81.14 கோடி வாக்களர்கள். இதில் அறுவது சதவீதம் என்பது 48.8 கோடி. அத்தனை போரையும் மெருகேற்றி யோசிக்க செய்ய அடிப்படை கல்வியில் அரசியலை கொண்டு சேர்திருக்க வேண்டும். அரசியலின் முக்கியத்துவம், வாக்களிக்கும்போது கணக்கில் கொள்ள வேண்டிய பிரதான உண்மைகள், நாட்டின் வளர்ச்சி விகிதத்தில் தேர்தல் நேர வாக்குறுதிகள் என்ன பங்கு ஆற்றும் என்பதை கணக்கிடும் பக்குவம் என எல்லாமும் இருக்கும்படியான ஒரு கல்வி முறை இன்று வந்தால் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளில் மாற்றம் வரலாம். நாற்பது ஆண்டுகள் என்பதும் படித்து முடித்து வரும் இளைய சமுதாயத்தை கருத்தில் கொண்டு சொல்லப்படும் கணக்கே.

இத்தகைய குறுகிய என்னமுடையவர்களை கருத்தில் கொண்டே கிரேக்கத்தில் எதிநியன் சனநாயகம் உருவாக்கப்பட்டபோது பிளாடோ எதிர்த்தார். இன்றும் கட்சிசாரா வாக்காளர்கள் தெரிந்த சின்னத்தில் தான் வாக்களிக்கின்றனர் வேறு எந்த ஒரு எண்ணம் கொண்டும் இல்லை. இதற்க்கு சரியான உதாரணம் இன்று காணும் விளம்பரங்கள், சச்சினுக்கும் எழுதுகோலுக்கும், காற்றடிக்கும் என்ன சம்மந்தம் ஆனால் அவர் அந்த விளம்பரத்தில் வருகிறார். தெரிந்த முகம் ஒன்று தேவைப்படுகிறது கவனம் ஈர்க்க. இதை தான் அரசியல் கட்சிகளும் கையாளுகின்றன.

கல்வியில் மட்டும் இல்லாமல் மாற்றம் சநனாயக கூற்றிலும் தேவை. இன்று ஆட்சி செய்பவர்கள் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை கொண்டு அவர்களின் செயல் பாடுகள் அளவிட்டு அடுத்த தேர்தலை சந்திக்க அனுமதி அளிக்கவேண்டும். தேர்தல் அறிக்கைகளும் சரி பார்த்து அதனின் சாத்தியங்கள் கணக்கிட்டே வெளியிட வேண்டும் இவைகளை கையாள தேர்தல் ஆணையம் போல் அரசு சாரா துறை ஒன்று கொண்டுவரப்பட வேண்டும். இத்துறையில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் அறிவு சார்தவர்களே இருத்தல் வேண்டும். இதனால் வெறும் வாக்குறுதிகள் மட்டும் தந்து செயல் பாடாதவர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருக்காது. ஏமாற்று வாக்குறுதிகள் தவிர்க்கப்படும்.

இவ்வாறு செய்யப்படின் ஆளுமை உள்ளவர்களில் மக்கள் செல்வாக்கு மிக்கவர் ஆட்சி அமைக்க முடியும். இப்போது உள்ள கூற்றின் படி செல்வாக்கு மிக்கவரும் வாக்குறுதிகள் அளிப்பவருமே மீண்டும் மீண்டும் ஆட்சி அமைப்பர். ஆனால் இதை ஒரு பொருட்டாக விவாதத்திற்காக கூட எந்த ஒரு கட்சியும் எடுக்காது என்பது நிதர்சனம். அளவீடு இல்லாது இருப்பதே இன்று நாம் இந்த நிலையிலேயே இருக்கக் காரணம்.


Monday, May 9, 2016

Enough Is Enough

Everyone needs money n would have seen Italian Job, Ocean 11, 12 & 13 but no one dare to attempt because we are all in fear of getting caught and most with a thought of running rest of our lives with that shame. Then with what trend a girl is being sexually abused by her own relations and strangers. In other way accused can be categorised as known person, VIP and strangers. Way to get rid of a crime is to understand why it is happening because some crime cannot be stopped by punishment alone.

If accused is known person (like her own relatives or school teacher or own cab driver or neighbour) they would’ve done this with a thought like a girl will not shout about this in the name of culture because they know her family and they can threaten the victim. As most of such cases victims are minor. They may not even know the difference between the fields called sex in application and sexual intercourse. So they use their ignorance or fear on society for their pleasure.

In case of VIPs (like politicians or millionaires or big shot’s heirs) they have good value to do that as they have power and money to cover it up so they may not think about any consequences.

If we take 2012 Delhi rape case (as we all heard often without any option) all the accused were strangers and more particularly she died only after 13 days so which means she was alive at the time they threw her out of bus they didn’t try to kill her and cause of death is brutality. Then importantly they didn’t even bother about a boy who came along with her. So in which means they didn’t even think they can get caught as they don’t even have any strong background. This raises too many questions on many cases.

National Crime Records Bureau data (as at 2015) show out of 100 registered cases in India the accused is known to the victim 86 times. So if we teach our princess about difference between good touch and bad touch we can more or less avoid 86% but not that easy as I say. In other way 86% criminals are very well known faces and not anonymous. Notable point is as at 2013 it is 98%

Not able to get the split for remaining 14%, where it’d be better if they maintain as VIP and stranger.

As mentioned earlier if accused is VIP like politician or millionaire’s heir they must be punished without any mercy as they do it because of the power they have and money they own. When it comes to strangers it should be properly investigated as even there are chances of VIPs get involved in such crime, intention of the investigation should be in finding the hidden faces and not letting the accused free.

But amendment made after 2012 Delhi Rape case mostly about the act of penetration of
penis and the word rape has been changed to sexual assault. In case of punishment it still says not less than 20 years but which may extend to imprisonment for life, which means life imprisonment is the last option and no word for capital punishment. Verma committee’s recommendation was not completely taken into consideration but Government stand is like suggestions were not rejected but changes can be made after proper discussion. So until the discussion gets over please be prepared and not sure whether it has been started.

In other hand media took some cases especially brutal one for their TRP and creates a wrong perspective as India is no safe for women. NCRB reports actual rate is 2 per 100,000 people tracked by United Nations and main intention to say this is such a fear should not kill her freedom.


Friday, May 6, 2016

ஓட்டு சரியா தவறா


ஓட்டு என்பது தமிழா? இதற்கு ஆம் என்ற தவறான பதிலோ இல்லை என்ற சரியான பதிலோ யோசிக்கும் நேரம் பசியோடு யாரேனும் ஒருவர் ஒரு வாய் உணவுக்காக காத்திருக்கலாம். ஏதோ ஒரு கிரகம் மாறுவதால் யாரோ ஒருவர் உங்களை ஒரு ஏழைக்கு ஒரு வேளை உணவு தானம் செய்ய சொல்லி அது முடியாமல் போகுமேயானால் அன்று உண்மையான மக்கள் ஆட்சி நடைபெற்றதற்கான சான்றாக இருக்கும்.

வாக்குப் பதிவு செய்தல் நம் உரிமை என்றும் நூறு சதவீத  வாக்கு பதிவிற்கு கமல், சூர்யா என நடிகர்கள் கதறுவதையும் கேட்க்கும் போது எங்கள் உரிமைகளை நினைவூட்டுவதை விட்டுவிட்டு நடிப்பதை மாட்டும் பாருங்கள் என சொல்லத் தோன்றுகிறது.
இந்த நினைவூடலில் மக்களாட்சி என்பது என்ன என நினைவுக்கு வந்தது. மக்களால் மக்களுக்காக மக்களிலில் இருந்து என இருக்க வேண்டும்.

மக்களில் இருந்து

இது என்றோ வழக்கொழிந்து போய் விட்டது. ஒருமுறை ஒருவர் தலைவரானால் அவர் பிள்ளை, மருமகன், மாமன், மச்சான், இவர் ஏதேனும் புகரில் சிறை சென்றால் அவர் துணைவியார் என யார் யாரோ பதவிவகிக்கலாம் ஆனால் அவர் பரம்பரையாக இருக்க வேண்டும்.

மக்களுக்காக...

அப்படி ஒரு ஆட்சி சுதந்திரம் அடைந்ததில் இருந்து... இல்லை இந்தியா என்ற ஒரு தேசம் ஒருங்கிணைக்கப்பட்டதிலிருந்து நடந்திருந்தால் நேதாஜி அவர்கள் இந்திய தேசிய ராணுவதிற்காக சேர்த்த நூறு பலுக்கல் (KG) தங்கத்தில் வெறும் பதினோரு மட்டும் டெல்லி தேசிய அருங்காட்சியகதில் இருக்காது மற்றும் அது சம்மந்தமான ஆவணங்கள் வெளியிடக்கூடாது என்ற குறிப்போடு பிரதமர் அலுவலகத்தில் பத்திரப்படுத்தி இன்றுவரை உறங்கிக்கொண்டே இருக்காது. அந்த தங்கங்களை எடுத்தவர்கலாவது யார் என்று எ.கே.டார் (A.K.Dar) டோக்யோ தூதர் 1956ல் எழுதிய கடிதத்துக்கும் பதில் போகாமல் இருந்திருக்காது.

நேதாஜியின் தனிப்பட்ட சொத்து அல்ல அது இந்திய தேசிய ராணுவம் அமைய இந்தியாவில் வாழ்வோர் மட்டுமல்லாது மலேசிய, பர்மா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் இந்திய விடுதலைக்காக கொடுத்தது.

ஆக இன்று நாம் காடும் வரி பணம் மட்டும் அல்ல அன்று விடுதலைக்கு கொடுத்த பணத்திற்கும் கணக்கு காட்டவில்லை எனபது நிதர்சனம்.

மக்களுக்காக நடக்கும் ஆட்சி எனில் 1948ல் ராணுவதிற்க்காக சீப் (Jeep) வாங்கியதில் நெறிமுறைகளை மீறி செயல் பட்ட வி.கே. கிருஷ்ணா மேனன் (இந்தியன் பிரிடன் உயர் ஆணையாளர்) மீதான விசாரணையை, ‘இந்திய அரசாங்கமே இந்த வழக்கை கைவிட என்னும் போது இதை தொடர்ந்து விசாரிப்பதில் பயனில்லை, இதை எதிர் தரப்பு ஏற்க்காவிட்டால் தேர்தல் பிரச்சனையாக கையாளலாம்’ என சொல்லி அனந்தசயனம் ஐய்யங்கார் நிருதியிருக்க மாட்டார். வி.கே. கிருஷ்ணா மேனன் நேருவின் மந்திரி சபையில் பாதுகாப்புத் துறை மந்திரியாகி இருக்க மாட்டார்.

மக்களால் ...

விதைக்க மட்டுமே உரிமை எனில் அறுக்க ஐந்தாண்டுகள் பொறுத்தே ஆகவேண்டும் என்பது என்ன தூரமான ஒரு உரிமை. வாக்களிபவர்கள் அளித்த வாக்கை திரும்பப்பெறும் நிலை வருமே எனில் அதுவே முழு உரிமை. இது வர பல அடுக்கு கேள்விகள், ஆராய்சிகள் தாண்ட வேண்டும்.

நேரு... கிருஷ்ணா மேனன்
இது இல்லாவிடினும் அவர் சொல்லும் வாய் சவடால்களை நம்பி எம்முரிமைக் கொண்டு ஒருவரை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தி அவர் சொன்னதேதும் செய்யாமல் போனாலும் மீண்டும் வேறு சவடால் விட்டு எம்மிடத்தே வருவது யாதொரு முறையாகும்.

அதுவே தேர்தல் அறிக்கைகளைக் கொண்டு அவர் ஆட்சி செய்த திறத்தை அளவிட்டு அடுத்த தேர்தலில் போட்டியிட அனுமதித்தால் என்ன? அவை நடைமுறை படுத்திய விதம், பயனீட்டாளர்களின் விகிதம், துறை சார்ந்த அமைச்சர்களின் செயல்பாடுகள் எல்லாம் ஆராய்ந்தே அடுத்த தேர்தல் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதை தேர்தல் ஆணையம் ஏற்று நடத்த வேண்டும். இது சார்ந்த விளக்கம் எல்லா ஊடகங்களிலும் வர வேண்டும். இதில் பொய்யோ பித்தலாடமோ நடந்தால் அந்த ஆணையர் மற்றும் அவரின் இரத்த பந்தங்கள் எல்லோருக்கும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

அப்படி ஒரு நிலை இருந்தால் அந்த கிருஷ்ணா மேனனோ இல்லை தமிழகம் நான்கு ஆண்டுகளாக இருளில் இருக்க காரணமான தி.மு.க இன்று நம் தெருவில் வந்து முடியட்டும் விடியட்டும் என்று சொல்ல முடியுமா இல்லை இரண்டு லட்சத்தி பதினோரு ஆயிரத்தி நானூத்தி எம்பதி மூன்று கோடி கடனை தலையில் வைத்துவிட்டு ஒளிரும் நிகழ்காலம் மிளிரும் வருங்காலம்னு இந்தம்மா தான் வாய்திறக்க முடியுமா?


சரியா தவறா.. வாக்கு!

Saturday, April 9, 2016

இந்திய பிரதமரின் பயணக்கட்டுரை

அமெரிக்க டாலருக்கு நிகராக அந்நாட்டின் பண மதிப்பு 20 லட்சத்தை தாண்டி சென்றது. அந்நாட்டின் அரசாங்கத்திற்கு எதிராக கட்சி துவங்கி போர் படையும் திரட்டி போரிட்டான் அந்நாட்டின் குடிமகன். அதில் தோற்று கைதானாவனுக்கு ஐந்தாண்டுகள் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது அதுவும் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யவும் வாய்ப்பு தரப்பட்டு வெறும் இரண்டு ஆண்டுகளில் விடுதலை அடைந்தான். அந்த இரண்டு ஆண்டுகளில் அவன் எழுதிய சுயசரிதை எனது யுத்தம்’ என்ற தலைப்பில் வெளியானது. அதிலிருந்து அந்நாட்டு மக்களின் புரட்சி தலைவனென்றானான். அடுத்த ஒன்பது ஆண்டுகளில் 240,000 பிரதிகள் விற்பனையானது அவனது கட்சி மாபெரும் வெற்றியும் பெற்றது.

அடுத்த ஆறு ஆண்டுகளில் அண்டை நாட்டை கைப்பற்றும் எண்ணத்துடன் போர் புரிய துவங்கினான். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் உலக யுத்தர்திற்கு காரணமானான். இருந்தும் அவன் பதவி ஏற்ற நாளில் இருந்து ஒரு வருடதிர்குள்ளாக வேலை இல்லாதோர் எண்ணிக்கை ஆறு மடங்கு குறைந்தது. பொருளாதாரம் வலுபெற்றது.

ஒரு இனத்தை கொன்றது, உலக அமைதிக்கு ஊரு விளைவித்தது போன்ற பல குற்றச்சாட்டுகள் இருந்த போதும் பொருளாதரத்தில் தத்தளித்த தன் நாட்டை அதன் வளம் கொண்டே மீட்டவன் அவன், அடால்ஃப் இட்லர்.

அவன் எந்த நாட்டுக்கும் பயணிக்கவில்லை, வெளி நாட்டு முதலீடுகள் கொண்டு வரவில்லை. உள்நாட்டின் திறம் மேன்படுதப்பட்து நீர் அணைகள், போக்குவரத்து சாலைகள், தொழிற்சாலைகள் (உள்ளூர் தொழிற்சாலைகள்) நிறுவப்பட்டன. வேலை நேரம் நீடிக்கப்பட்டது. ஆனால் நாம் இன்றும் வெளிநாட்டு முதலீட்டுக்காக காத்திருக்கிறோம்.

வெளிநாட்டு வியாபாரிகள் இங்கு இந்தியாவில் கடை போடவும் தொழிற்சாலைகள் அமைக்கவும் வரி விலக்கு தரப்படுகிறது. இதில் அரசாங்க வருமானம் போகும். ஆனால் வேலை வாய்ப்பு கிட்டும் என சொல்லப்படுகிறது. மேலும் தடை இல்லா மின்சாரம் வழங்கப்படுகிறது இதில் மின் உற்பத்தியில் எந்த முன்னேர்படும் செய்யப்படுவதில்லை. எனவே பிற மாவட்டங்களில் மின் தடை செய்யப்பட்டு இவர்களுக்கு தடை இல்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் உள்ளூர் தொழிற்சாலைகள், சிறு வியாபாரிகள், நெசவு தொழில், அச்சு தொழில் என பல்வேறு தொழில்கள் முடங்கி சுய தொழில் செய்வோர் வேலை இழக்கின்றனர். மொத்தத்தில் சுய தொழில் செய்வோர் வேலை இழந்து தான் நாம் இன்று வெளி நாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறோம். எனவே வேலை வாய்ப்பு என்பதும் ஒரு போலித்தனமான பிம்பம்.

இது மட்டும் அல்ல நல்லுறவு மேன்படுகிறது என்றும் ஒரு பிம்பம் உருவாக்குகின்றனர். அப்படி எனில் இலங்கை ராணுவம் இந்திய மீனார்கள் (தேசிய ஊடக மொழியில் தமிழக மீனவர்கள்) மீதான தாக்குதல் நின்றிருக்க வேண்டும் அது இன்றும் தொடர் கதையாகவே உள்ளது. சீனாவின் தரமில்லா சந்தைகள் சங்கடம் இல்லாமல் இன்னும் கடை விரித்துக்கொண்டேதான் இருக்கின்றன.

பசி என்று கதறுபவனுக்கு தாளிக்கும் வாசம் வந்திருந்தாலும் பொருத்திருப்பான். நம் பிரதமர் மளிகை சாமான்கள் வாங்கி வருவதாக சொல்லி தெரு முனையில் சிகரெட் பிடித்துக்கொண்டிருக்கிறார்.

அன்றாடம் வாங்கும் காய் கறிகள், பால், பருப்பு போன்றவற்றின் விலை நிர்ணயத்தில் கணிசமான பங்கு போக்குவரத்துக்கு உண்டு. கச்சா எண்ணையின் விலை பாதாளத்தில் சென்ற போதும் சிறு ஆட்டம் காணாத நம் உள்ளூர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் மாதம் இருமுறை ஏற்றம் காண்கிறது. அதில் அக்கறை காட்டவில்லை வெளிநாடு பயணம் செய்யும் பிரதமர்.

source: http://www.mycarhelpline.com/
கருப்பு பணம் மொத்தமும் வரும் வரி இருக்காது என ஓட்டு கேட்டவர் இன்று நாட்டை தூய்மை படுத்த ஒரு புது வரி (Swachh Bharat cess at the rate of 0.5% on all taxable services on November 6 to be effective from November 15). கச்சா எண்ணை விலை குறைந்ததில்  சுமத்த பட்ட வரிகளில் இருந்து எடுத்திருக்கலாமே?

மாட்டிறைச்சி காரணம் சொல்லி ஒரு முதியவரை அவ்வூராரே அடித்து கொன்ற போதும், தலித் சிறுவகள் கொல்ல பட்டபோதும், ஒரு பல்கலைக்கழகம் தீவிரவாதிகள் கூடாரமாக சித்தரிக்க பட்டு கேலிக்கூத்தான போதும், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அவர்களுக்கு எதிராக பேசியவர்களின் தலைகளுக்கு விலை வைத்த போதும் மௌனமே காத்தார் வெளிநாடு பயணம் செய்யும் பிரதமர். ஏதோ ஒரு மாநிலத்தில் நடக்கும் சில தவறுகளுக்கு எல்லாம் பிரதமர் பேச முடியாது எனில் யாரோ பதினோரு பேர் கொண்ட குழு மட்டையில் பந்தை அடித்து வெற்றி பெற்றதற்கு மாட்டும் வாழ்த்து சொல்ல நேரம் இருக்கிறதே வெளிநாடு பயணம் செய்யும் பிரதமர்க்கு.

அவர் நல்ல சூத்திரதாரி வாய் திறந்தால் தான் அது ஒரு செய்தியாகும் இவர் ஏதும் சொல்லாத போது இந்த ஊடகங்கள் அதை பற்றி பேசபோவது இல்லை. இவர்கள் பேசாத போது மக்கள் அதை பற்றி சிந்திக்க போவதும் இல்லை. எனவே வாருங்கள் அமைதியாய் கண்களை மூடி வெளி நாட்டு முதலீடு வருவதை உணர்வோம் எல்லோரும் யோகா தினம் கொண்டாடுவோம்.


(குறிப்பு: இதனால் இதற்க்கு முந்தைய காங்கிரச் ஆட்சி தேவலாம் என்று பொருள் கொள்ள வேண்டாம்.)

Wednesday, February 24, 2016

சின்னஞ்சிறு ரகசியமே!

என் பதியே என்னில் பாதியையா தந்தேன்
என்னோடு நீ கலந்ததில் தானே நானே முழுமையானேன்
உன் பாதை தேடி ஓடிவர - மோதிரம் தந்து
அனுமனை அனுப்பிவைக்க உன்னை தீக்குளிக்க வைக்கும் ராமனல்லவே நான்
பொழுதொன்று போனதும் களையும் ஆசையா கொண்டேன்
யார் விதைத்ததுவோ என்னுள் வளர்ந்தொங்கிய,
ஒவ்வொரு தேவையாய் கொன்ற பின்னும்
மிச்சமாய் நீயே நிற்கிறாய்!