Wednesday, May 22, 2019

ஊர் இரண்டு பட்டால்

கோட்சே 1948க்கு பின்  மீண்டும் அதிகம் உச்சரிக்கப் படுகிறது ஆனால் இதுவும் எய்தவனை விடுத்து அம்பை குற்றம் சொல்லும் செயல். கோட்சேவோடு குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் கோல்வாக்கர், விநாயக் தாமோதர் சாவர்கர்.

கோல்வாக்கர் அன்றைய ஆர்.ஸ்.ஸ் தலைவர். 1948'ல் தடைசெய்யப்பட்டது இக்கட்சி ஆனால் இன்று 3000 கோடியில் நர்மதா ஆற்றங்கரையில் நிற்கும் அன்றைய உள்துறை அமைச்சர் பட்டேலுடனான கடித வாதப்பிரதிவாதத்தில் தனக்கும் கட்சிக்கும் கோட்சேவோடு எந்த தொடர்பும் இல்லை என சொல்லி தடை நீக்கப்பட்டது. ஆர்.ஸ்.ஸோடு தொடர்பு இல்லாத கோட்சேவின் அஸ்தி அகண்ட பாரதத்தில் கரைய வேண்டி அதன் தலை அலுவலகத்தில் தான் இருக்கிறது இன்றும்.

சாவர்கர் - அந்தமான் சிறையில் சிலை, பெயரில் விமான நிலையம். இவர் சாதித்தது - Indian House என்ற இங்கிலாந்தில் இருந்த மாணவர்களுக்கான தங்கும் விடுதியில் இந்திய சுதந்திரத்திற்க்கு செயல்பட்டவர்களில் ஒருவர். அதற்க்காக கைதி செய்யப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். பின் இவர் ஆங்கில அரசுக்கு எழுதிய கருணை மனுவில் 'இனி ஒருபோதும் அரசுக்கு எதிராக செயல்பட மாட்டேன். உங்கள் காலனி ஆதிக்கத்திற்கு அடங்கியே இனி என் செயல்பாடுகள் இருக்கும்' என எழுதி 1924'ல் விடுதலை அடைந்து காந்தியை விமர்சிக்க ஆரம்பித்தார். 1937ல் இந்து மகாசபை தலைவரானார். இன்று 2019ல் இதன் தேசிய செயலாளர் பூஜா பாண்டே காந்தியின் நினைவு நாளில் அவரின் உருவ பொம்பையை சுட்டு ஆதரவாளர்களோடு கொண்டாடுகிறார்.

இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவில் ஒத்துழையாமை இயக்கம் துவங்கி இருந்தது. அதனை எதிர்த்து  இந்துக்களே ஒன்று கூடுங்கள் ஆங்கில  அரசோடு இணைத்து  போர்புரிவோம் என்ற வீரர் இவர். அந்த போரில் ஆங்கில அரசு எதிர்த்தது ஜெர்மனியின் நாசி படைகளை. இதற்க்கு முன்னர் ஹிட்லரின் கொள்கைகளை விமர்சித்த நேருவை 'பண்டிதர் நேருவை விட ஜெர்மனிக்கு எது தேவை என ஹிட்லருக்கு தெரியும்' என அவரின் கொள்கைகளை ஆதரித்தவரும் இவரே.

இவர்களுக்கு முன்னோடி 1906'ல்  துவங்கிய அகில இந்திய முஸ்லீம்  லீக். இந்து முஸ்லீம் இடையேயான மோதல் 1671 அவ்ரங்கஜிபின் மதம் சார்ந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது துவங்கி தொடர்ந்து வருகிறது. இந்த வெறுப்பை ஆதாயமாக்க எண்ணியவர்கள் பலர். கலவரங்கள் பெருகிய காலத்தில் இந்தியாவை இரு துண்டாக்கக் கேட்டவர் ஜின்னா. அதற்க்கு ஒத்திசைத்தவர் பட்டேல் அதை எதிர்த்தவர் காந்தி.

இறுதியாக பிரிவினை என முடிவு செய்த போது காந்தி சொன்னது இந்தியா இந்துக்களுக்கானாது மட்டும் அல்ல பாக்கிஸ்தான் முஸ்லீம்களுக்கு மட்டும் ஆனது அல்ல என்றே கூறினார். கலவரங்கள் முடிய உண்ணா நோன்பு இருந்தார்.  கலவரம் ஓய்ந்தபாடில்லை காந்தியின் உடலும் மோசமானது. நெடிய வாதத்திற்கு பின் யாரும் மதம் சார்த்த எந்த கலவரத்திலும் ஈடுபடமாட்டோம் என கையெழுத்து வாங்கச் சொன்னார் காந்தி. அதில் சாவர்க்கரின் இந்து மகாசபை கையெழுத்து இடவில்லை.

இந்த இரு பெரும் ஹிந்துத்துவதின் பிள்ளை தான் இன்றைய பாஜக. கோட்சே ஒரு தேச பக்தன் என்கிறார் சத்வி பிரக்யா அதை மன்னிக்கக்கூட மாட்டேன் என்கிறார் மோதி. ஆனால் பாஜக சார்பாக அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இடுகிறார்.

பிரிந்து சென்ற பாகிஸ்தானிலில் இந்துக்கள் கொல்லப்பட்டால் அவர்களை காப்பாற்ற இந்து பாதுகாவலர்கள் பாகிஸ்தான் செல்லாது இங்கு இருக்கும் முஸ்லீம்களை கொல்வது என்னை ஒருவன் அடித்து விட்டான் அவன் மொட்டை தலையுடன் இருந்தான் ஆகா மொட்டை அடித்த அனைவரையும் அடிப்பது இல்லை கிடைப்பவனை மொட்டை அடித்து வெளுப்பது. இதே தான் ஒவ்வொரு முறையும் காவேரியில் தண்ணீர் கேட்க்கும் போதும் அதன் கொள்ளளவு, மொத்த தேவை என்ன என ஏதும் அறியாது அரசியல் கட்சிகளின் தூண்டுதலின் பேரில் கன்னட தமிழர் கலவரம் ஆண்டு தோறும் நடந்தேறுகிறது.

எங்கெல்லாம் இரு குழுக்கள் மோதல் இருக்கிறதோ அதை சாதகமாக்கிக் கொள்ள ஒரு சந்தர்ப்பவாதி இருப்பான். அதில் பலியாவது கோட்சேகள் மட்டும் அல்ல வாக்கு செலுத்தினால் எல்லாம் மாறும் என்று நம்பியே வாழும் மக்களும் தான்.

Sunday, May 5, 2019

இயற்கை!

ருட்டிலேயே இருந்து விட்டால் - வெளிச்சம்

போய் வந்தால் கவலை இல்லையே!

இறக்கும் வரை இருந்து விட்டால் - அதுவே

ஒரு சரித்திரம் என்று யாரும் உணர வில்லையே!

பல கோடிகளை கொன்று விட்டு வந்து சேர்ந்தது நீயும் நானும்

இன்னும் இங்கே எதை சேர இத்தனை ஓட்டம்?

சிந்தனை என்பதை நிறுத்திவிட்டால் காடே வீடுதானடி

நாம் அங்கு இருந்தவரையிலே எந்த புலியும் சாகவில்லையே

புலி பசிக்கு மான் தான்

எந்த புலியும் மானின் வம்சம் அழித்ததில்லையே

என்னை உன்னை சாகடிக்கும் ஏதும் இன்று இல்லையே

நானும் நீயும் தின்று ருசிக்கும் கோழி நம்மை வீட கூடவே

நம்மை அழிக்கும் எந்த உயிரும் அத்தனை இன்று இல்லையே

இனி நீயும் நானும் அடித்து கொண்டால் - மீதி

அந்த கடவுள் மட்டுமே!



Sunday, January 6, 2019

அமெரிக்க கனவு


முப்பது வயதை கடந்த எல்லோரும் எதிர்க்கொள்ளும் பொதுவான கேள்வி ‘எப்போ தான் கல்யாண சாப்பாடு போடுவே?’ என்பது போன்று இப்போது வேலை கிடைத்தவுடன் எதிர்கொள்ளும் கேள்வி ‘வெளி நாடு போக ஏதும் வாய்ப்பு இருக்குமா?’ பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எல்லாம் வெளி நாடு என்றாலே அமெரிக்கா தான் என இருந்தது இன்னமும் தென் அமெரிக்க நாடுகளுக்கு இந்த கனவு உண்டு.
அப்படி எந்த கனவும் இல்லாத எனக்கு அது நினைவானது. அதற்க்கான முதல் வேலை, விசா

விசா :
‘சாமி நான் எல்லா உங்க வீட்டு உள்ள  வர கூடாதுங்க’ என ஒரு சமூகத்தினரையே சொல்ல வைத்த சாதிய கொடுமை போன்றது இந்த அமெரிக்க விசா வாங்குவது. நடை பாதை நடப்பதற்கே என்று சொல்லி வியாபாரிகளை, அங்கேயே குடும்பம் நடத்தும் நாடோடிகளை விரட்டும் அரசாங்காம் அண்ணா மேம்பாலம் அருகில் செம்மொழி பூங்கா எதிர் புறம் இருக்கும் நடை பாதையில் எவரையுமே நடக்க விடாது. அங்கே தான் இந்த விசா வாங்க வரிசையில் நிற்க வேண்டும். கைபேசி, earphone, headphone, கார் சாவி (அதில் ஏதும் ஒலி, ஒளி வருமானால்) என எதுவும் உள்ளே அனுமதி கிடையாது. மற்றதை எல்லாம் காரில் போட்டுவிட்டு உள்ளே போகலாம், அந்த கார் சாவி? அதை 500 ரூபாய்க்கு பாதுகாக்கும் ஒரு இடமும் அங்கு உண்டு, அது பஞ்சர் ஒட்டும் கடை. அங்கே இதை எல்லாம் குடுத்துவிட்டு தான் உள்ளே போக வேண்டும்.

கை கடிகாரம் கூட கையில் கட்டி இருக்க கூடாது. இப்படி மொத்தத்தையும் கொடுத்துவிட்டு நடை பாதையில் வரிசையில் நின்றால் உள்ளே செல்ல ஒரு மணி நேரம் ஆகும். அந்த வருசையில் எனக்கு முன் ஒரு தம்பதி நின்றிருந்தார்கள். அரை அரை அடி நகர்ந்து தூதரகம் உள்ளே போனால் அங்கே உட்கார அனுமதி இல்லை. கோவில்களில் பண்டிகையின் போது வளைந்து வளைந்து மூங்கில் கட்டிவிட்டு மொத்த கூட்டத்தையும் வரிசையில் நிற்க வைப்பது போன்று நிற்க வைத்தனர். நீண்ட நேரம் நின்ற களைப்பில் ஓரமாய் இருந்த திண்டில் அமர்தார் எனக்கு முன்னால் இருந்த பெண்மணி, உடனே ‘madam you should not sit please stand in the line’ என பின்னால் இருந்து சத்தம் கேட்டது. சட்டென ‘so do we need to kneel down in front of the interviewer?’ என கேட்க வாய் வந்தது ஆனால் இந்த விசா எனக்கு கிடைக்க வில்லை என்றால் ஒன்ருமிலை இதனால் அவர்களுக்கும் வாய்ப்பு போனால் இன்னொரு முறை சில ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டும்.. அடக்கிக்கொண்டேன்.

சர்வதேச முனையம்:
விமானத்தில் கழுவ தண்ணீர் தர மாட்டார்களே எப்படியும் 23 மணி நேர பயணம் இதையும்  அடக்க வேண்டுமோ என்ற சிந்தையோடே விமான நிலையம் வந்தடைந்தேன். என்னோடு இன்னும் மூன்று பேர் உடன் வேலை பார்ப்பவர்கள் அவர்களுக்கு அமெரிக்காவில் சாப்பாடு எப்படி இருக்குமோ என்ற சிந்தனை.

உள்ளே சென்றவுடன் போர்டிங் பாஸ் வாங்க வேண்டும் அதிலும் நம் ஊர் கோவில்களில் 500 ருபாய் டிக்கெட் வாங்கினால் சாமி அருகில் அமர்ந்து தரிசனமும் மாலையும் தர்ம தரிசனம் போகும் போது அப்படியே எட்டி கும்பிடு போட்டுவிட்டு போக வேண்டுமே அதே முறை தான், பிசினஸ் இக்ளாஸ், எகானமி இக்ளாஸ் தனி தனி வரிசை. பிசினஸ் இக்ளாஸ் மக்களுக்கு விமானம் புறப்படும் வரை காத்திருக்க தனி அறை, சாப்பாடு, சரக்கு என சகல வசதிகளும் உண்டு. விமானம் வந்தவுடன் முதலில் பிசினஸ் இக்ளாஸ் மக்கள் தான் ஏற வேண்டும் அடுத்து தான் எகானமி இக்ளாஸ்.

ஆகாயத்தில் பூகம்பம்:
எகானமி இக்ளாசில் நான்கு பேர் அமரும் இடத்தில் பிசினஸ் இக்ளாசில் நான் ஒருவன் மட்டும் அமர்ந்திருந்தேன். இப்பொது எல்லாம் விமான பயணம் அறிய ஒரு செயல் இல்லை தான் ஆனால் சொந்த ஊருக்கு சென்னையில் இருந்து செல்வது போல் இல்லை இந்த பிசினஸ் இக்ளாஸ். அதிகமாக படத்தில் கூட பார்த்திராத ஆடம்பரம் (YouTube’ல் பிசினஸ் இக்ளாஸ் விமான பயணத்தை பற்றியும் விமர்சனம் உண்டு தெரியாதவர்கள் தேடி பார்க்கவும்)

https://www.youtube.com/watch?v=_yhZDsctiZg
முதலில் தோஹா வரை ஒரு விமானம், ஐந்து ஆறு மணி நேர பயணம். அந்த பிசினஸ் இக்ளாசில் அருகில் இருப்பவர் முகம் பார்க்க முடியாத அளவுக்கு மறைப்பதற்கு வசதி உண்டு. ஆனால் அந்த வசதி எதற்கு என இதுவரை விளங்கவில்லை. இருக்கையை சாய்ப்பதற்கு, நகர்த்துவதற்கு, நீடுவதற்கு தனி தனி பொத்தான்கள். அடுத்து பதினாறு மணி நேர பயணம் அதில் தனி அறை போல இருந்தது. ஏறி அமர்ந்தவுடன் வெது வெதுப்பான நீரில் நினந்த துண்டு முகம் துடைக்க, குடிக்க பானம், பாதாம், பிஸ்த்த என ஏக போக கவனிப்பு. உறங்கும் போது அனிய தனி உடை, செருப்பு, சிறு பெட்டியில் முகத்திற்கு பூச ஒரு க்ரீம், ஸ்ப்ரே, கை கால்களுக்கு என தனி தனி க்ரீம்கள், கை வைக்க இடம், கால்கள் நீட்ட இடம் என ஏக போக வசதிகள் தான் ஆனால் உணவு மட்டும் சகிக்காது, பொங்கல் வடைக்கு சோயா சாசும், ஆலிவ் ஆயிலும் வேண்டுமா என்ன விசாரிக்கும் அளவு தான் அங்கு வேலை செய்பவர்களின் இந்திய உணவு பற்றிய அறிவு.

பிசினஸ் இக்ளசில் எகானமியை வீட சரி பாதிக்கும் குறைவான பயணிகளே ஆனால் இவர்களுக்கு நான்கு கழிவறைகள் அங்கு இரண்டு தான். ஒரே ஒற்றுமை எதிலும் கழுவ தண்ணீர் கிடையாது.

விமானம் புறப்பாடு பற்றி சொல்லி முடித்ததும் ஆப்ரிக்க மக்களை படிக்க வைக்க உதவுமாறு வேறு கேட்டார்கள். இவர்கள் தந்த இக்ரீம்கள், அதை போட்டு வைத்திருந்த டப்பா, சட்டை, பேன்ட், செருப்பு என மொத்தமும் இருபது இருபத்தி ஐந்து டாலர் இருக்கும். இருபத்தி மூன்று நேர பயணத்திற்கு போர்வையும் தலையனையும் தான் எடுத்து வர முடியாது மத்ததெல்லாம் அவ்வுளவு அவசியமா? அதை மிச்ச பிடித்தாலே போதுமே.

ஜார்ஜ் புஷ் இன்டர்கான்டிநென்டல் ஏர்போர்ட்
‘என்ன சார் இது நம்ம ஊர் ஏர்போர்டே பரவல போலயே. தோஹா ஏர்போர்ட் எப்படி இருந்துது’

‘எதுக்கு இங்கே வர்றே, எவ்ளோ நாள் இருப்பேனு கேட்டுட்டு தான் உள்ள விடறான் அதுக்கே இவ்ளோ பேர் வந்து காத்து கிடக்கறோம் அப்புறம் எதுக்கு அலங்காரம் செஞ்சு வைக்கணும்? என்றேன்.

ஆம் அங்கே அவ்வுளவு பேர் தான் வருசையில் நின்றிருந்தோம். விசா வாங்கும் போது கேட்ட அதே கேள்விகள் மேலும் பிசினஸ் மீட்டிங்க்கு எதுக்கு ஒரு மாதம் தங்க வேண்டும் என்ற கேள்வி வேறு. அதை எல்லாம் சமாளித்து ஒரு ஸ்டாம்ப் அந்த பாஸ்போர்டில் வாங்கினால் தான் அமெரிக்கக் காற்றை சுவாசிக்க முடியும்.

அந்த அமெரிக்க சுவாசம் பற்றிய கதை அடுத்த பதிவில் ...


Thursday, June 14, 2018

சிகரெட் அரசியலும் மக்கள் நீதி மைய்யமும்


டம் பார்க்க போனா கூட யாருனே தெரியாத  முகேஷ்ல இருந்து நம்ம ராகுல் டிராவிட் வரைக்கும் எல்லாரும் புகை பழக்கத நிறுத்த சொல்றாங்க. நம்ம அரசாங்கம் ஆண்டு தோறும் நிதிநிலை அறிக்கை (என்னமோன்னு நினைக்க வேண்டாம் பட்ஜெட் தான் தமிழ்ல சொல்லிருக்கு) தாக்கல் செஞ்சா விலை கூடிட்டே தான் போகுது  ஆனாலும் புகை பழக்கம் மட்டும் குறைந்த பாடில்லை. புகை பழக்கத நிறுத்த வைக்க விலையை கூடக்கூடாது குறைக்கனும்.

புரியலையா? வரியை குறைக்காமல் சிகரெட் விலையை அரசாங்கம் தீர்மானித்தால், அதாவது திரையரங்கு கட்டணம் 120னு சொல்லிட்டு கேளிக்கை வரியை மாட்டும் உயர்துனான்களே அப்படி (ஆனா அந்த மிச்ச காச பாப்கார்ன்லயும், பார்கிங் டிக்கெட்லயும் வாங்கிடாங்க). இதை செஞ்சா வரியை சிகரெட் தயாரிப்பு நிறுவனம் செலுத்த வேண்டிய நிலை வரும் அவங்களே தயாரிப்ப நிறுத்திடுவாங்க.

இப்படி நிறுவனங்களை மூடினா அங்க வேலை செய்யற தொழிலார்கள் கதி என்னவாகும்னு இப்போ துத்துக்குடி ஸ்டேர்லைட் ஆலைக்கு கவலைபட்ட மாறி சில பக்தாள் கேட்கலாம், அங்கேயே மொத்தம் 1500 பேர் தான் வேலை செஞ்சாங்க. சிகரெட் எல்லா கைல சுத்தி பஞ்சு வெச்சு அடச்சு போட்டில  போட்டு விக்கற கதை இல்லை, எல்லாம் இயந்திர மையம். அப்படியே அங்கே வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வேறு உதவிகள் செய்யலாம், அது காச நோயிக்கும், புற்றுநோயிர்க்கும் அரசாங்க மருத்துவமனையில் தரும் சிகுச்சை செலவிலும் குறைவாகவே வரும்.

இதுக்கு தான் மக்கள் நீதி மைய்யம் அரம்பிச்சிருக்காரு நம்மவர்னு சொல்ற நம்மவர் பக்தாளுக்கும் முன்னாடி சொன்ன சிகரெட் கணக்கே தான். கேளிக்கை வரி அதிகம்னு போராட்டம் செஞ்சு 120 ருபாய்ல இருந்து இப்போ 165.78 ஆக்கி மக்கள் தலைல போட்ட கூடத்துல இந்த நம்மவரும், அந்த தலைவரும் ஒருத்தர் தான்.

இதற்க்கு பதிலா இந்த கதாநாயகன், நாயகி சம்பளத்தை குறைச்சிருந்தாவே படத்தோட மொத்த செலவு குறைந்து வரி குறைந்து (ஏன்னா வரி என்பது சதவீதம் தான்) விநியோகம் செய்யும் விலையும் குறைந்து, திரையரங்குக்கு வரும் போது 120 ரூபாயில் (இல்லை அதற்கும் குறைவாகவே கூட) மக்களுக்கும் திரையரங்க உரிமையாளருக்கும் லாபவம் கிடைத்திருக்கும்.

அதையேல்லா விட்டுட்டு சாட்டிலைட் உரிமை, Netflix, Amazon prime அப்படின்னு பன்னாட்டு நிறுவனங்களுக்கு தான் இன்றைய அரசியல்வாதிகளை போலவே தாரை வார்த்தனர். நடிக்கும் போதே இவர்களை வாழவைக்கும் ரசிகனை பற்றிய சித்தனை இல்லாதவன் இப்போ நமக்கு என்னத்த செஞ்சிட போறாரு?

ஆமா இவனுகளும் இப்படி தான் நாம தான் காசு வாங்காம ஓட்டு போடணும், மாற்றம் நம்ம கிட்ட இருந்து ஆரம்பிக்கணும்னு சொல்ற ஆளுங்களுக்கு ஒன்னு இருக்கு, அவங்க பணம் கொடுக்கறது அவங்களுக்கு ஓட்டு போடணும்னு மட்டும் இல்லை நாம ஓட்டுன்னு ஒன்னு போட்டவே போதும் அவங்க பிழைச்சுப்பாங்க.

ஏன்னா இது அப்படி ஒரு தொழில். வேலைக்கு போனாலும் இல்லை தொழில் செய்தாலும் அதை சரியா செய்யலைன்னா வேலை போய்டும், போட்ட பணம் போய்டும். ஆனா இந்த அரசியல் தொழில் அப்படி இல்லை.

லஞ்சம் ஊழல் பத்தி எல்லா வேண்டாம், ஒரு நாலு ஆண்டுகள் தமிழகம் எல்லாம் சென்னைய தவிற எட்டு மணி நேரத்துக்கும் குறைவான மின்சாரமே இருந்தது, இதற்கும் மின் துறைக்குன்னு ஒரு அமைச்சர் இருந்தார் அவருக்கும், அவர்  சார்ந்த கட்சியும் என்ன நடந்தது 98 உருப்பினர்களோடு எதிர் கட்சியாக தான் இருக்கிறது இன்றும். அவர்கள் வருமானம் குறையவில்லை.

புரியற மாறி சொல்லனும்னா ஸ்டேர்லைட் போன்று இன்னும் எத்தனையோ நிறுவனம் இங்கே மட்டும் இல்லை உலக முழுவதிலும் இருக்கு. அப்படி அந்த மண்ணை மலடாக்கி, நீரையும் காற்றையும் நச்சாக்கும் நிறுவனம் வரும்போது அதற்க்கு பல கெடுபிடி சட்டங்களை  வளைத்து உள்ளே விட ஆளும் கட்சிக்கும், எதிர் கட்சிக்கும் ‘நன்கொடை’ தரப்படும். அதனால தான் அதிமுக இது திமுக கொண்டு வந்துதுன்னும் பாஜக காங்கிரஸ் கொண்டுவந்ததுன்னு இப்போ மக்கள் எழுச்சிக்கு அப்பறம் அவங்கள கைய காட்டி இவங்க நழுவராங்க, அப்பவும் இவங்க உயிரோட ஆட்சில தானே இருந்தாங்க ஏன் வர்ற விட்டாங்க?

புது ரூபாய்களை கூட தயார் செய்யாது ஒட்டுமொத்த இந்திய மக்களின் கைகளில் இருந்த பணத்தை எல்லாம் மொத்தமாக செல்லாது என ஒரு சில நொடிகளில் சொல்லி திண்டாட விட்டுட்டு, ஆண்டுகள் இரண்டாகியும் கிடைத்த கருப்புப்பணம் எவ்வுளவு என ஒரு விவரமும் சொல்லாமல் அது ஒரு பெரிய சாதனையை போலவே சித்தரிக்கும் இவர்களை கேள்வி கேட்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடமோ, நீதித்துறை இடமோ ஏன் மக்களிடமோ கூட இல்லை. அப்படியும் மீறி கேள்வி கேட்க ஒன்று கூடினால் காவல் துறை அடிக்கும், சுடும், சமூக விரோதிகள் என சொல்லி கைது செய்வார்கள்.

இவர்கள் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை செய்யாததற்கு தண்டனையை வீட கேள்வி கூட கேட்க முடியாது நம்மால் அப்புறம் என்ன இதுக்கு இந்த உரிமை?
சரி யாருமே வாக்கே செலுத்தவில்லை என்றால் என்னவாகும்? (சங்கர் படம் போல் ஒன்றுமில்லாத பிரம்மாண்டம் போல தான் இருக்கும் இனி வருவது) ஜனாதிபதியின் கீழ் ஆளுநரின்  ஆட்சி வரும். அவர்களும் மத்திய அரசு ஆட்கள் தானே என்றால். இது இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் எல்லாம் நடந்தால், உலக பார்வையில் வரும் அரசியல்வாதிகளை கேள்வி கேட்க்கும் ஒரு துறையும், அதற்க்கான சட்டங்களும் இயற்றப்படும். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாத கட்சிகள் அடுத்த தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும். கட்சியின் தலைவர் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றால் கட்சியே கலைக்கப்படும் சட்டம் வேண்டும்.

இப்படி நடந்தால் இனி மக்களின் பணத்தில் தெர்மாகோல் விடும், கோடிக்கணக்கில் சமோசாவும், டீயும் குடிக்கும்  அமைச்சர்கள் வரமாட்டார்கள். தாயின் முந்தானையை பிடித்தே வளர்த்த எந்த பிள்ளையும் பிரதமராகும் ஆசையில் வாய் திறக்காது. வெளி நாட்டுடன் நல் உறவுக்கும், வெளிநாட்டு மூதலீட்டை கொண்டுவர மாதந்தோறும் மக்கள் பணத்தில் பறக்கும் பிரதமர்கள் இருக்கமாட்டார்கள். வாக்களித்தால் கருப்புப்பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15லட்சம் போடப்படும் என்ற பொய் வாக்குறிதியோடு யாரும் வரமாட்டார்கள்.

அறுவது வயது வரை சம்பாதித்துவிட்டு காலம் போன காலத்தில் நாட்டை திருத்தும் நம்மவர்கள் வரமாட்டார்கள். கடவுள் மறுப்பாளர் பெரியாரை அன்று தலைவனாகவும் இன்று முருகனின், உத்திர பிரதேசத்தில் பிறந்த கண்ணனின் கொள்ளு பேரன்களும் வர மாட்டார்கள்.

(‘தலைவர’ சொல்லவே இல்லைன்னு யாரும் கோவப்பட வேண்டாம் இன்னு கட்சிக்கு பேர் கூட வைக்கலை, எப்படியும் வர மாட்டார் என்ற நம்பிக்கையில் இந்த பட்டியலில் அவர் இடம்பெறவில்லை)



Monday, May 28, 2018

#BanSterlite

ஏதோ ஒரு கூட்டத்தில் யாரோ ஒருத்தன் செருப்பு எரிஞ்சா, அந்த செருப்பு தயாரித்த நாள் முதல், நிறுவனம் வரை போய் விலாவரியா அலசும் ஊடகங்கள் தூத்துக்குடி Sterlite நிறுவனம் என மட்டுமே மேம்போக்காக பேசிவிட்டு வேதாந்தா என்ற பெயரை கூட சொல்லாது ஒதுங்கிக்கொள்வதற்க்கு அவர்களின் பங்கு விலை சரிய கூடாது என்ற அக்கறையோ? இவர்களுக்கு ஏன் அந்த அக்கறை?




x

வேலை வாய்ப்பு என்ற பெயரில் உள்ளே வந்த வேதாந்தா நான்கு லட்சம் மக்கள் வாழும் துத்துக்குடியில் 1500 பேர், குடுபத்திற்கு நான்கு என்றாலும் 0.015% பேர் பலனடையே 1993ல் காங்கிரஸ் ஆட்சியில் நரசிமராவ் அடிக்கல் நாட்டி துவங்கியது.

2013 வரையில் 82 முறை விஷவாயுக் கசிவு ஏற்பட்டுதாக தமிழக அரசு (ஜெயலலிதா) குற்றம் சாட்டி சென்னை உயர் நீதி மன்றம் இதனை மூட உத்தரவிட்டது. அதே ஆண்டில் உச்ச நீதி மன்றம் அக்குற்றங்களுக்காக மூடுவது என்பது பொதுநலனுக்கு உகந்தது அல்ல என்று கூறி 100 கோடி அபராதம் விதித்து மீண்டும் இயங்க அனுமதி கொடுத்தது.

இந்த நிலையில் 3 star appreciation என்ற விருதை 2014ல்சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தந்து கௌரவித்தது. 2015ல் Green Manufacturing Unit என்ற விருதை பெற்றது (பஜக ஆட்சி). இதை தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டதில் சில மாற்றங்கள் கொண்டுவர பட்டது, அதில் சுற்றுச்சூழல் மாசு தொடர்ந்தாலும் சம்பத்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துவதில் இருந்து விலக்கு அளித்தனர் மேலும் அபராத தொகை 5-10கிமி வரை பாதிப்பு இருந்தால் 5 கோடி என்ற அபராதம்  10 கோடி வரை என மாற்றப்பட்டதே தவிர நடக்கும் அசம்பாவிததிற்கு ஏற்ப கணக்கிட்டு கேட்க்கும் படி இல்லை.

இப்படி ஒவ்வொரு கட்சியும் இவர்களுக்கு குடை பிடிக்க இப்போது 144 தடை உத்தரவை ஒரு தனியார் நிறுவனம் நீதிமன்றத்திடம் கேட்டு பெற்று தூத்துக்குடியில் ஒரு வெறியாட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது.

அப்படிபட்ட வேதாந்த குழுமம் யார் என தேடினால் Sterlite Tech என்ற நிறுவனம் வந்து நிற்கிறது, இது தூத்துக்குடியை உலுக்கும் sterlite Copper நிறுவனம் அல்ல ஆனால் இதுவும் அதே அனில் அகர்வால் நிறுவனமே. இது பக்தாள் எல்லாம் பெருமையாக பேசும் ஸ்மார்ட் சிட்டி, டிஜிட்டல் இந்தியா போன்ற அரசு சார் திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவில் காப்புரிமைகள் மீறல் வழக்கு, இந்தியாவில் 2002ல் சுங்க வரி எய்ப்பு வழக்கு என பல குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம். இந்த நிறுவனத்தோடு தான் இன்றைய பிரதமர் மோடியும் கூட்டு வைத்து smart சிட்டி, டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கப்போகிறார். இப்படிபட்ட அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமத்தை பற்றி எந்த ஊடகம் விவாதிக்கும்? 144 மட்டுமென்ன அவசர காலம் பிரகடனம் செய்துகூட இந்த ஆலை தொடரந்தாலும் ஆச்சர்யமில்லை.

இங்கு நடக்கும் எந்த தீங்கிற்கும் அந்த கட்சி இந்த கட்சி என பாகுபாடே பார்க்க தேவையில்லை மத்திய மாநில கட்சிகள் எல்லோரும் ஒன்று சேர்த்தே நமக்கு குழி பரித்திருப்பர். இனியேனும் பக்தாள் யாரும் இது திமுக துவங்கியது, காங்கிரஸ் அடிக்கல் நாட்டியது என பிரித்து பேச வேண்டாம்.

2017 ல் உச்ச நீதிமன்றமே வெளி நாட்டு நச்சு கழிவுகளை இங்கு கொண்டு வந்து கொட்டுவதற்கு இந்தியா குப்பை தொட்டி அல்ல. இந்த கழிவுகளால் வருமானம் இருந்தாலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு இதை நிறுத்த உத்தரவிட்டது. எனவே முற்போக்கு கழகங்களோ, காங்கிரசோ, பாஜகாவோ மொத்த இந்தியாவையும் கூருபோட்டோ குப்பையாக்கியோ விற்கவே இருக்கிறார்கள்.

இதனை எல்லாம் எதிர்த்து போராடினால் அந்நிய கைக்கூலியாகவும், தேச துரோகியாகவுமே நாம் சித்தரிக்கப்படுவோம்.


Sunday, January 14, 2018

கார்பரேட் களவாணிகள்

த்தனை வாரஇறுதி நாட்களில் வேலை செய்யும் நிறுவனம் அழைத்தது என்று மராத்தான் ஓட, மரம் நட சென்றிருகிறீர்கள்.  இப்படி விழுந்து விழுந்து அடுத்த நாட்டுக்கு நன்மை செய்பவர்கள் அவர்களின் சொந்த நாடுகளில் வேலையில் இருந்தவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தான் இங்கு கடை திறந்திருகிறார்கள் என்பதை மறந்து விடகூடாது.

அவர்கள் தேவை பாதி ஊதியத்தில் வேலை நடக்க வேண்டும் அதற்கான இடம் இந்தியா. அது போக வேலை வாய்பை காரணம் காட்டி உள்நுழைந்து இடம், மின்சாரம், தண்ணீர் என அடிப்படை வசதிகளை சலுகைகளில் பெறலாம். வரி ஏய்ப்பும் இங்கு சுலபம். இது எல்லாவற்றிட்கும் மேல் இப்படி இவர்களையே ஓடவும், செடிகள் நட வைத்து நல்ல பெயர் எடுத்து  தயாரித்த பொருட்களை இங்கேயே விற்றும் விடலாம். அப்படி எனில் அங்கு என்ன வேலையில் இருந்தாலும் அதற்க்கு மார்கெடிங்கும் செய்திருக்கிறீர்கள்.

சால சிறந்த உதாரணம் ITC, இவர்கள் தாயரித்து விற்கும் நோட்டுக்களை வாங்கினால் அதில் ஒரு ரூபாய் ஏழை குழந்தையின் படிப்பிற்கும் போகும். அப்படி எதனை விற்றனர், என்ன பங்கு படிப்பிற்கு போனது, எதனை குழந்தைகள் படித்து வந்தனர் யாருக்கு தெரியும். ஆனால் நல்ல பெயார் கிடைத்து விட்டது. ITC என்றால் Indian Tobacco Company, இதன் பிரதான விற்பனை புகையிலை. 1910 முதல் 1970 வரை Imperial Tobacco Company அதன் பின்னரே ‘I India என மாறியது.

எது எப்படியோ வேலைவாய்ப்பு கிடைகிறதே என எண்ணினால் அதற்க்கு ஒரு கணக்கு, ITCயில் பணியாற்றும் தொழிலாளர்கள் 25,959. இந்தியாவில் 19 வயதிற்கு மேல் 58வயதிற்குள் இருப்பவர்கள் எண்ணிக்கை 60, 95, 45,570 பேர். 0.004% பேருக்கு வேலை தந்துவிட்டு இவர்கள் பெரும் சலுகைகள் எத்தனை? தமிழகமே சுமார் நான்கு ஆண்டுகள் மின்சாரம் இல்லாமல் இருந்த போதும் சென்னைக்கு மட்டும் தினம் வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே தடை என இருந்தது இந்த .௦௦4 சதவீதத்திற்காக.


2017 துவக்கத்தில் நடந்த அற்புதமான அறப்போராட்டம் சல்லிக்கட்டை மீண்டும் கொண்டு வந்து தந்தது. இதை முன்னின்று நடத்தியது இளைஞர்கள் என்று பொதுவாய் சொல்வதை காட்டிலும் மாணவர்கள் என்று சொல்வதே நிதர்சனம். IT corridorல் வேலை பார்க்கும் எத்தனை பேர் அந்த மொத்த ஏழு நாட்களும் செல்ல முடிந்தது? இப்படி ஒரு போராட்டம் இங்கு வேலை செய்பவர்களால் சாத்தியமே இல்லை. காரணம் கடன், பிள்ளை படிப்பு.

அரபு நாடுகளில் ஐந்து ஆண்டுகள் தான், அமெரிக்காவில் வட்டி விகிதம்  நான்கு சதவீதர்த்திர்க்கும் குறைவு ஆனால் இந்தியாவில் வீட்டு கடன் கட்ட 15 – 20 ஆண்டுகள் ஆகிறது அதாவது 25 வயதில் கடன் வாங்கினால் கட்டி முடிப்பதற்குள் 40 50 வயது ஆகிவிடும். அப்படி தான் இங்கு ஊதியமும் கட்டுமான செலவுகளும் சரியாக வைக்கபடிருக்கிறது. அது போக குழந்தை படிப்பு, மருத்துவம், தீபாவளிகள், பொங்கல்கள், சடங்குகள் என எல்லாம் வந்து போகும். இதில் அனைத்திலும் இந்த நிறுவனங்களே தான் இருக்கிறது. மருத்துவம் விலை நிர்னினைப்பது, படிப்பு, கடன் வட்டி  விகிதம் என எல்லாம்.

இதில் எல்லாம் தப்பி பிழைத்து வந்தால் ஏன் எதற்கு என்றே சொல்லாமல் ஆயிரக்கணக்கானோர் வேலையிலிருந்து தூக்கிஎறியப்படுவார். எட்டு, பத்து என ஆண்டாண்டு காலம் அந்த நிறுவனங்களுக்காக உழைத்தவர்கள் ஏதேதோ காரணம் சொல்லி வெளியே அனுப்புவர். அந்த கதறல்கள் வாட்ஸ் எப்பில் கேட்டிருக்கலாம். அதன் பின்னர் இருக்கும் கணக்கு இது தான், ஒருவருக்கு ஆண்டுக்கு 10% என ஊதியம் உயர்ந்திருந்தால் முதல் மாதம் துடங்கி பத்து ஆண்டு முடிவில் அது 236% வளர்ந்திருக்கும். ஆனால் அதில் பாதியை தந்தாலே போதும் என அந்த ஆண்டு படிப்பு முடித்து வந்தவர்கள் இருப்பார்கள். இது தான் இவர்கள் தரும் வேலை வாய்ப்பு.

நாமே தயாரித்து, அதற்க்கு மார்கெட்டிங்கும் செய்து, அதையே வாங்கி தின்று தீர்த்து, அதற்கு அவர்களிடமே மருந்தும் வாங்கி விழுங்கி போராடவும் முடியாமல் கடனை  கட்டிக்கொண்டு இன்னும் என்ன என பார்த்தால் இப்போது டெல்லி வாகன புகையால் மூச்சு திணறுகிறது இதற்கான மாற்று வழி மின்சார வாகனம். இது கண்டு பிடிக்கப்பட்டது 1828ல் ஹங்கேரியில்.

அதன் வேகம் அதிக பட்சம் 32km/h எனவே இதன் மீது இருந்த மோகம் குறைந்து எரிபொருள் வாகனகளே சந்தையில் கொடி நாட்டின. இரண்டாம் உலக யுத்தத்தின் போது  ஐரோப்பாவில் நிலவிய எரிபொருள் தட்டுப்பாடு மீண்டும் அவர்கள் கவனம் மின்சார வாகனம் மீது திரும்பியது. இன்று மின்சாரம் கொண்டு தொடர்வண்டி இயக்க முடிந்த விஞ்ஞானத்தினால் இதர வாகனம் இயக்கம் பற்றி ஆராய நேரம் இல்லாமல் போனது எரிபொருள் வியாபாரத்தில் ஏற்கனவே முதலீடு செய்த நிறுவனங்கள் விரும்பாமல் இருந்திருக்கலாம். காலையில் அவசரமாய் ஓடிப்போய் வாங்கும் பச்சை மிளகாய் முதல் தினம் குடிக்கும் பால் விலை மாற்றத்தில் இந்த எரிபொருளின் பங்கு கனிசமானது.

எங்கோ இருக்கும் நிலவில் என்ன இருக்கிறது என்று பார்பதை விடுத்தது எரிபொருளுக்கு மாற்று கண்டறிந்தால் சாமானியனின் வரி பணத்தில் அவனுக்கு தேவையானது கிடைத்திருக்கும். விண்ணில் மிதக்கும் செயற்கை கோள் விழுங்கியது எல்லாம் நம் வரி பணம் அது ஏனோ நமக்கு பயன் தருவதாக இல்லை.

இது மட்டுமில்லை இனி சுய தொழில் என்பதே சாத்தியமில்லா நிலையை நோக்கி தான் சென்றுகொண்டிருக்கிறோம். உதாரணம் சொந்தமாக ஆட்டோ வைத்திருக்கலாம் ஆனால் தொழில் செய்ய ஒரு பெரு நிறுவனதில் அதை இனைக்க வேண்டும் - ‘Ola’. நிலம் பண்ணையார்களுடையது விவசாயி தினமும் கூலிக்கு வேலை செய்வான், இந்த நிலையை தான் நிறுவனங்கள் இங்கு நிறுவிவருகின்றனர்.

1757லில் கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவை ஆழ துவங்கி 1874லில் பிரிடிசாரின் ஆளுகைக்குள் வந்து 1947லில் சுதந்திரம் பெற்றுவிட்டோம் இனி எந்த நிறுவனதிற்கும் அடிமை இல்லை என எண்ணி இருந்தால் ஒரே ஒரு செய்தி.

சிறுவர்களை குறி வைத்து தான் இங்கு அது விற்பனைக்கு வந்தது - Maggi. 2014 மார்ச் மாதத்தில் உத்திர பிரதேசத்தில் வழக்கமான சோதனைகளின் போது MSG அல்லாத உணவு பொருள் என்று அச்சடிக்கப்படிருந்த அந்த மஞ்சள் பைகளில் MSG இருந்தது. அதை தொடர்ந்து மத்திய உணவு ஆய்வகத்திற்கு அனுப்ப ஏப்ரல் 2015ல் தான் அவர்களின் அறிக்கை வருகிறது. அதுவரை குழந்தைகளுக்கு ஊட்டபட்டுக்கொண்டு தான் இருந்தது. அவ்வறிக்கையில் வந்த அளவானது Nestle நிறுவனம் சொன்ன அளவை வீட சுமார் ஆயிரம் மடங்கு அதிகம். ஆனால் மே மாதம் வரையில் அது ஒரு பெட்டி செய்தியாக தான் இருந்தது. வழக்கம் போல் ‘India wants to know’ என ஊடகங்கள் உறக்கத்தில் இருந்து எழுந்து கதற துவங்க செப்டம்பர் இறுதியில் 38,000 டன் maggi திரும்பபெரப்பட்டு அழிக்கப்பட்டது.

அதாவது இந்த தவறு கண்டறியப்பட்டு சுமார் ஒன்றரை வருடங்கள் தாண்டி. அதற்க்கு nestle கட்டிய அபராதம் மூன்று லட்சம் ரூபாய். ஓராண்டு கால இடைவெளியில் என்ன பேரம் பேசப்பட்டது என யாரரிவர்? எந்தனை சிறார்கள் இதை உண்டு ஒவ்வாமைக்கு ஆளானார்கள் யார் கணக்கு பார்த்தனர்? எது எப்படியோ அடுத்த ஒரே ஆண்டில் திரும்பவும் விற்பனைக்கு வந்து விட்டது.

ஒரு சிறு குறிப்பு, MSG -   mono-sodium glutamate – உணவின் சுவை எப்படி இருந்தாலும் அது நல்ல சுவையான உணவு தான் என நம் மூளையை ஏமாற்றும் ஒரு ரசாயினம். இது இயற்கை பழங்கள் காய்களிலும் இருக்கும். ஆனால் அளவானது மீறினால் கெட்டுப்போன பண்டமே ஆனாலும் நம்மக்கு நல்ல சுவையாக தான் தெரியும்.

இது மாட்டிக்கொண்ட மேகியின் கதை மட்டும் தான், இன்னமும் Cola, Pepsi, KFC, McDonald, தினமும் குடிக்கும் டீ, திரையரங்குகளில் இருட்டில் உண்ணும் பாப்கார்ன் என எதில் என்ன இருக்கிறதோ?


இன்னமும் கிழக்கிந்திய நிறுவனத்திடமிருந்து நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம் என நினைத்து கொண்டிருந்தால் தாய் பாலும் நஞ்சாகும்.


Sunday, September 17, 2017

புத்தரின் இனவெறி

னிதா – தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதுவும் பரிச்சயமான பெயர். அவளின் மரணத்திற்கு பின் இருக்கும் அரசியலை தாண்டி, நீட்டை தாண்டி நம்மோடு நம் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை நேற்று வரை பங்கிட்டுக் கொண்டிருந்த ஒருத்தி இன்று இல்லையே என்ற ஆதங்கம் தான் இன்று பலரை உலுக்கியது.

அந்த ஆதங்கம் ரோகிந்திய இன மக்கள் மீது இந்திய அரசாங்கத்திற்கு இல்லாமல் போனது மிக வருத்தம்.

யார் இவர்கள், இசுலாமியர்கள் என்ற ஒற்றை வார்த்தையால் இன்று அண்ட நாடில்லாமல் ஒவ்வொரு நாட்டின் எல்லையிலும் நிற்கும் நாடோடியானவர்கள்.

உலகப் போரில் அமெரிக்கா சப்பானில் வீசிய அணுகுண்டின் வீச்சு இன்னமும் இருப்பதை போல இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியுற்ற போது இந்துக்களுக்கும் முசுலீம்களுக்கும் இடையே பிரிவினையை உண்டாக்கி பிரித்து சுதந்திர வேட்க்கையை நீர்த்து போக செய்த சூழ்ச்சி இன்றும் காச்மீரில் நம் மக்களை இழந்து கொண்டிருகிறோம். அது போல தான் மியான்மர் பர்மாவாக இந்தியாவோடு கிழக்கு இந்திய கம்பெனியின் ஆதிக்கத்தில் இருந்த போது பர்மா மக்கள் எதற்கும் லாயக்கு அற்றவர்கள் என்று ஒதுக்கி இந்தியர்களுக்கும், ரோகிந்திய இன மக்களுக்கும் அன்றைய முன்னுரிமை வழங்கியது.


அந்த வெறுப்பு சுதந்திரம் அடைந்து இராணுவ ஆட்சியில் 1982ல் அவர்களின் குடியுரிமை பறிக்கம் அளவு வளர்த்திருந்தது. திருமணம், கல்வி, வழிபாட்டு தளம் என அனைத்தும் மறுக்கப்பட்டன.

8/8 /1988ல் எழும்பும் 8888 (8888 uprising) என மாணவர்களால் ஏற்ப்பட்ட புரட்சியில் ஆங் சங் சுகி அடையாளம் காணப்பட்டார். ஒரு அகிம்சைவாதியாக தன்னை பிரகடனப் படுத்திக்கொண்டார். அந்த புரட்சிக்கு பின்னும் ரோகிந்திய இன மக்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் சுகி இராணுவ ஆட்சியை வெறுத்த இராணுவ அதிகாரிகளை கொண்டு கட்சி ஒன்றை துவங்கி 2015ல் ஆட்சி அமைத்தார். அதன் பின் ரோகிந்திய மக்களின் நிலை இன்னமும் மோசமாது. இதற்க்கு இடையில் 3/9/2014ல் அல் காயிதா அமைப்பு வெளியிட்ட கானொளியில் மியான்மர் முசுலீம்களை நாங்கள் மறக்கவில்லை. அவர்களை காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம் என்றது. அதற்கு அங்கிருந்த முசுலீம் குழுக்கள் எங்கள் தாய்நாட்டிற்கு எந்த அச்சுறுத்தல்களையும் ஏற்க்க மாட்டோம் என்று அறிக்கை வெளியிட்டது.

ஆனால் இன்று ‘மியான்மருக்கு திரும்புவதை வீட இந்தியாவில் மடிவதே மேல்’ என்ற ஒரு ரோகிந்திய அகதியின் வார்த்தை உணர்த்தும் அவர்கள் நிலையை.

பெளத்த சமயத்தை பிரதானமாக கொண்ட இலங்கையில் நடந்த கொடுமையின் நீட்சியே அதே பௌத்தத்தை கொண்ட மியான்மரில் அரங்கேறி வருகிறது.

துன்பத்துக்கான காரணம் பற்று என்ற புத்தரின் வழிவந்தவர்கள் மியான்மரை தங்கள் நாடு என சொந்தம் கொண்டாடி இவர்களின் குடியிரிமைகளை பறித்து விரட்டும் போது தென்னகத்தில் உள்ளவர்களை கீழ் பிறப்பாகவும், சமணர்களை கழுவேற்றிக் கொன்று தங்கள் சைவ சமயத்தை நிலை நிறுத்திய இந்தியா இவர்களால் தீவிரவாத அச்சுறுத்தல் வரும் என்று தடுப்பதில் எந்த முரணுமில்லை.

அல்லாவின் பெயரை சொன்னதற்காக ஒடுக்கப்பட்ட போது படை திரட்டி போரிட்ட முகமது நபியின் அந்த ஒரு சித்தாந்தத்தை மட்டுமே தவறாக புரிந்து கொண்டு இன்று சில குழுக்கள் அல்லாவின் பெயரை சொல்லி செய்யும் கொடுமைகள் இன்று அனைத்து முசுலிம்களையும் பயங்கரவாதிகளாய் பார்க்க வைக்கிறது.

இங்கு இனம், மொழி, நாடு என்று சொல்லி தினம் பல கொடூரங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் எல்லாம் தனியாக அடையாளப்படுதப்படுவதில்லை. குல்லாவும் தாடியும் வைதிருப்பாதால் இவர்களும் பயங்கரவாதிகள் என சொல்வது நம்மிடையே பகுத்தறிவு குறைவதையே நிருபிக்கிறது.


ஜெர்மனியில் தான் யூதன் என்றால் உடனே விசாரணைக்கு எடுத்து சென்று விடுவர், தான் ஜெர்மானியன் என்றால் தானில்லாது முன்னர் வாழ்த்த மூன்று தலைமுறையினரும் ஜெர்மானியர்கள் தான் என நிருபிக்க வேண்டும் தவறினால் விசாரணை கைதி தான், இது ஹிட்லர் கால நடை முறை. இன்று நாமும் அதையே தான் செய்து கொண்டிருக்கிறோம் ஹிட்லரை மட்டும் மனித மிருகம் என திட்டி தீர்த்து கொண்டு.