Showing posts with label திருமணம். Show all posts
Showing posts with label திருமணம். Show all posts

Sunday, August 25, 2013

ஒரு பெண்ணாக

நான் மறந்துவிட்டேன்
உன் கரத்தில் புதைந்த என் கரத்தை
சாலை ஓரம் நடக்கையில்
யாரும் இல்லா இடம் வரும் போது
உன் கரம் தேடி பிடித்த என் சந்தோசம்
நான் மறந்துவிட்டேன்
யாரோடு நீ பேசினாலும்
யாது வேலை எனக்கு இருந்த போதும்
கண்கொட்டாமல் உன்னை பார்த்த நொடிகள்
நான் மறந்துவிட்டேன்
ஊரே கேட்க
உன்னை நான் கேலி செய்து சிரித்த சிரிப்புகள்
நான் மறந்துவிட்டேன்
உன் குறுஞ்செய்தியின் வருகைக்கு காத்திருந்து
கடந்து போன நொடிகளை ஏமாற்றி மீண்டும்
காத்துக்கிடந்த காலங்கள் யாவையும்
நான் மறந்துவிட்டேன்
எனக்காக நீ அழுத அழகை யாவையும்
உன் அழகான பொய்கள் கேட்க நான் பூண்ட பொய் கோபம் யாவையும்
என் சோகம் தீர்க்க நீ சொன்னா வார்த்தைகள் யாவையும்
உன் கண்ணில் என்னை நான் கண்டு வெட்கப்பட்ட நேரம் யாவையும்
என் முகம் எங்கும் பரவிய உன் மூச்சு காற்றையும்
நான் மறந்துவிட்டேன்
என் தந்தைக்கு மகளாய்!
என்றைக்கும் சுமையென சுகமான உன் நினைவுகள்
கண்ணீரால் சூடாக்கும் என் தலையனையை...
ஒரு பெண்ணாக அது வழிந்திட வழி கொடுப்பேன்!







Thursday, December 20, 2012

நோக்கெதிர் நோக்குதல்

ரு மாதம் முன்னர், ஒரு வாரக்கடைசியில் நானும் என் நண்பனும்  தி-நகர் சென்று கொண்டிருந்தோம், வழக்கம் போல தலை கவசம் இல்லை. ஒரு காவல் அதிகாரி வண்டியை  நிறுத்தி அவர்கள் வழக்கத்தை  கேட்டார்,

“வா வா இப்டி ஓரமா போடு வா... ஹெல்மெட் இல்ல.. வண்டி நம்பர் ப்ளேட் வேற உங்க இஷ்டத்துக்கு இருக்கு. ஹ்ம்ம்”

friend ஓட வண்டி சார்”

“ஆனா நீ தானே ஒட்டு வந்தே... ஹெல்மெட்க்கு இருநூறு, நம்பர் ப்ளேட்கு நூறு.. சரி தானே”

“சார் எல்லாத்தையும் பார்த்தா எப்டி.. கொஞ்சோ பாத்து சொல்லுங்க”

“சனிக்கிழம நீங்க சரக்கு அடிக்க போவீங்க நாங்க என்ன செய்யறது?” னு ஒரு கேள்வி கேட்டுட்டு கலகலனு ஒரு சிரிப்பு வேற

“இல்ல சார்.. சரகெள்ளா அடிக்கரதில்ல”

“அஹ! சரக்கு இல்லையா..?” என ஆச்சர்ய பட்டவர் வேற ஒரு நல்ல கொக்கி போட்டாரு..

“உங்கள மாறி கொஞ்சோ கலர இருந்தா பரவால.. எதாவது மடியும்.. என்ன பாரு.. எதாவது வாங்கி பூசனும்ல அப்போ தான் உங்க அளவு இல்லைனாலும் எனக்கும் எதாவது மடங்கும்”

“நீங்க வேற.. அதுவே பெரும் குழப்பத்துல இருக்கு” என சொல்லி ஒரு நூறு ரூபாயை கட்டி விட்டு நகர்தோம்.

சரி... அவர் சொன்னது பற்றிய யோசனை தொடங்கியது போய் வரும் வழி நெடுகிலும்,

ஒரு ஆணுக்கு ஒரு விஷயம் இருந்தால் அவன் தன் வாழ்கையின் அடுத்த தேவைகளை நோக்கி வேகமாய் ஓடாத் துவங்குவான். அந்த விஷயம் தான் பெண். தன்னை பற்றி தன்னை காட்டிலும் அதிகம் சிந்திக்கும் ஒருத்தி. சதா தன்னை சுற்றியே வரும் ஒருத்தி. எங்கே யாரிடம் நின்று பேசினாலும் ஒரு பார்வையில் தன் அருகே இழுக்கும் ஒருத்தி. அவள் ஒருத்தி தான் வேண்டும்.

இவனுக்கு காதல் எப்படி வரும் எனில்,

காணும் பெண் இடத்திலெல்லாம் வந்திடாது காதல்.
யவர் கண் நோக்கும் கால் - தன் கண்
விழித்திருப்பது மறந்து - அவள் விழி
இவன் வயிறு வரை பாய்கிறதோ – அதுவே
காதல் என கொள்வான் அவன்!

அந்த ஒருத்திக்கு என்ன வேண்டும். அவள் தன்னை நோக்க இவன் என்ன செய்ய வேண்டும்? மிருக இனத்தை பொறுத்தமட்டில் தன் ஆண்மை பலம் நிரூபித்தால் போதும். ஆதியில் மனிதனும் அப்படி ஆரம்பித்தது தான். பலம் பொருந்தியவன் தான் காட்டில் பிற மிருகங்களிடமிருந்து தன்னை காத்து, வேட்டையாடி தனக்கும் தன் சந்திதியினருக்கும் உணவளிக்க முடியும் என நம்பினாள் அவள்.

அனால் இன்று கதை வேறு... நிறம் முக்கியமா? அவள் நிறம் பார்த்தா  காதல் வயப்படுகிறாள்?

முத்தம் தரும்பொழுதிலே ஆண் அவள் கண்கள் நோக்கி அவளை நோக்கி இருப்பான், அவளோ அதை கண்கள் முடியே உணர்வாள். அவள் உணர்வுகளால் ரசிக்கத் தெரிந்தவள். நிறம் கண்டு போபவள் அல்ல.

அவள் கனவுகளை மதிக்க வேண்டும் அதன் பின்னரே அவள் அவனின் சொற்களுக்கு செவி சாய்ப்பால். அதே கனவிற்கு சரியாக வண்ணமிட்டு அழகு படுத்தி அவள் முன் நிறுத்தினால் போதும் அவள் அவனை நம்பி வந்து அவன் மார்போடு தலை சாய்ப்பால்.
எந்த ஒரு தருணத்திலும் ஏது ஒரு செய்கையும் அவள் அல்லாது ஒரு உலகம் தன்னை மகிழ்விக்கும் என ஆண் இருந்தால் பின் அவளோடு கொண்ட பந்தம் விட்டுப்போக அவளே வழி செய்வாள். காரணம் அவளுக்கு அவன் மட்டுமே உலகம் என்று ஆகி இருக்கும். இருவர் வாழ அவள் ஓர் உலகம் செய்வாள், அவளை மதித்தால் போதும், அவள் சொல்லுக்கு மதிப்பளிதால் போதும்.

வள்ளுவர் சொல்வது இதனை விட பெரியது,

பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு1311

பெண்ணாக பிறந்த எல்லோரையும் பொதுவாக எண்ணி கண்களால் உண்பதால் கற்ப்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பை பாவை நான் தழுவ மாட்டேன் என கொபம்கொல்லுவாள். பார்தவே இப்படி ஆகும் என்கிறார் வள்ளுவர்.

Monday, October 8, 2012

நட்போடு காதல் செய்வீர்!

ராத்திரி ஒரு ஒன்பது பத்து மணிக்கு துணிகளை துவச்சுக்கிட்டே வானொலியில ஏதோ பாட்டு நல்லா இருக்கேன்னு கேட்டுகிட்டு இருந்தேன். பாட்டுக்கு இடையில பயபுள்ள ஏதோ கேட்டுச்சு, திருமணத்திற்கு பின்பு நடப்பை தொடர முடியாமல் போவதற்கு காரணம் என்ன? அப்டின்னு. கேள்வி கேட்டுட்டு பாட்டு போடுவான்னு நம்பி கேட்டா உடனே ஒரு கல்யாணம் ஆன பொண்ணு.. அதுவும் காதல் கல்யாணம் செஞ்ச பொண்ணு ஏதோ அவங்களுக்கு ஒரு நண்பனா.. இப்போ கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அவன் கூட பேச முடியலயா, முன்னாடியெல்லாம் எதுவானாலும் அவன் கூட தான் பகிர்துக்குமா. இப்போ கல்யாணத்துக்கு அப்புறம் முடியலைன்னு ரொம்ப சங்கடம பேசுச்சு. சரி இப்போவாவது பாட்டு போடுவானு பார்த்தா இல்ல, இந்த பக்கம் தொகுப்பாளர் ஏன் இப்படி நடப்பை புருஞ்சிக்க மாட்டேன்கிறாங்க அப்டி இப்டின்னு இவர் பேசி ஒரு வழியா பாட்ட போட்டாங்க.


இத்தன பேச்சு கேட்டதுக்கு அப்புறம் நமக்கு பாட்டு எங்கே கேட்க்கும், யோசிக்க ஆரம்பிச்சாச்சு .

இப்போ அந்த கணவர்கள் எல்லா அவங்க மனைவிகளை தங்கள் நடப்பை (ஆணோ பெண்ணோ) தொடர விடுறாங்க. இவங்களும் எல்லா பிரச்சன, சந்தோசம், சோகம், சண்டை எல்லாம் அந்த நண்பர்கள் கூட பகிர்த்துகிட்டா இந்த பக்கம் இவரு எதுக்கு?

அட, இது ரெண்டு பக்கமும் தான், கணவர்களை தங்கள் பிரச்சன. சோகம் எல்லா நல்ல நண்பர்கள் கிட்ட சொல்றதுக்கு இந்தப்பக்கம் எதுக்கு கல்யாணம் பண்ணனும், வெறும் குழந்தைக்குனு சொன்னா அப்போ இச்சைக்கு அப்டின்னு ஆகிடாது.

வள்ளுவர் வாக்கின் படி பார்த்தால்,
உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு” – 1122

உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து இல்லாதது போல் இவளோடு நான் கொண்ட நட்பு அப்டின்றாறு. எந்த அதிகாரம்னா, ‘காதற் சிறப்புரைத்தல்’.

காதல் அதிகாரத்துல மடந்தையொடு கொண்ட காதல்னு சொல்லாம நட்புன்னு ஏன் சொல்லணும்?

காதல் தெரிவது புணர்தலில், நட்பு தொடர்வது பகிர்தலில். கல்யாணம் நீண்ட நெடு பயணம் என தொடர காதலோடு நட்ப்பும் தேவை என உணர்தலின் வெளிப்பாடாகவே இந்த குறளை நான் காண்கிறேன்.

நம் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள நண்பன் ஒருவன் வேண்டும் எனில், கட்டிலை மட்டும் பகிர்ந்துகொள்ள கல்யாணம் செய்து வாழ்க்கை துணை என கொள்ள வேண்டிய அவசியம் என்ன.

நல்ல நண்பன் என தெரிந்த பின் வேறு துணை தேடி அழைவதேன்? தெரியாத ஒருவரை தெரிந்து கொள்ளுதல் நட்பின் ஆரம்பம். தெரிந்தவரை புரிந்து கொள்ளுதல் நட்பு. புரிந்து கொண்டவர் கை கோர்த்து நடக்கும் நெடு பயணம், வாழ்க்கை.

நல்ல நண்பனை கல்யாணம் செய்து கொண்டால் இந்த சங்கடங்களுக்கு வழியே இல்லையே. அதை செய்யாது வேறு சில காரணங்கள், சௌகரியங்கள் பார்த்து நாம் செய்யும் தவறுக்கு நம் துணையை இப்படி வானொலியில் வசை பாடுவது எதற்கு?

காதலனோ காதலியோ, காதலை கடந்து நட்பு பாராட்டி காதல் செய்யின், வேறு உறவுகளோடு பகிர்தல் மிக அவசியப்படாது. அவசியம் இருப்பினும் தடைகள் சொல்லாது. காதல் அழகானது, நட்போடு இருப்பின் அதுவே ஆழமானது. நட்போடு காதல் செய்வீர்.