Showing posts with label எம் சிந்தை. Show all posts
Showing posts with label எம் சிந்தை. Show all posts

Sunday, May 5, 2019

இயற்கை!

ருட்டிலேயே இருந்து விட்டால் - வெளிச்சம்

போய் வந்தால் கவலை இல்லையே!

இறக்கும் வரை இருந்து விட்டால் - அதுவே

ஒரு சரித்திரம் என்று யாரும் உணர வில்லையே!

பல கோடிகளை கொன்று விட்டு வந்து சேர்ந்தது நீயும் நானும்

இன்னும் இங்கே எதை சேர இத்தனை ஓட்டம்?

சிந்தனை என்பதை நிறுத்திவிட்டால் காடே வீடுதானடி

நாம் அங்கு இருந்தவரையிலே எந்த புலியும் சாகவில்லையே

புலி பசிக்கு மான் தான்

எந்த புலியும் மானின் வம்சம் அழித்ததில்லையே

என்னை உன்னை சாகடிக்கும் ஏதும் இன்று இல்லையே

நானும் நீயும் தின்று ருசிக்கும் கோழி நம்மை வீட கூடவே

நம்மை அழிக்கும் எந்த உயிரும் அத்தனை இன்று இல்லையே

இனி நீயும் நானும் அடித்து கொண்டால் - மீதி

அந்த கடவுள் மட்டுமே!



Thursday, June 14, 2018

சிகரெட் அரசியலும் மக்கள் நீதி மைய்யமும்


டம் பார்க்க போனா கூட யாருனே தெரியாத  முகேஷ்ல இருந்து நம்ம ராகுல் டிராவிட் வரைக்கும் எல்லாரும் புகை பழக்கத நிறுத்த சொல்றாங்க. நம்ம அரசாங்கம் ஆண்டு தோறும் நிதிநிலை அறிக்கை (என்னமோன்னு நினைக்க வேண்டாம் பட்ஜெட் தான் தமிழ்ல சொல்லிருக்கு) தாக்கல் செஞ்சா விலை கூடிட்டே தான் போகுது  ஆனாலும் புகை பழக்கம் மட்டும் குறைந்த பாடில்லை. புகை பழக்கத நிறுத்த வைக்க விலையை கூடக்கூடாது குறைக்கனும்.

புரியலையா? வரியை குறைக்காமல் சிகரெட் விலையை அரசாங்கம் தீர்மானித்தால், அதாவது திரையரங்கு கட்டணம் 120னு சொல்லிட்டு கேளிக்கை வரியை மாட்டும் உயர்துனான்களே அப்படி (ஆனா அந்த மிச்ச காச பாப்கார்ன்லயும், பார்கிங் டிக்கெட்லயும் வாங்கிடாங்க). இதை செஞ்சா வரியை சிகரெட் தயாரிப்பு நிறுவனம் செலுத்த வேண்டிய நிலை வரும் அவங்களே தயாரிப்ப நிறுத்திடுவாங்க.

இப்படி நிறுவனங்களை மூடினா அங்க வேலை செய்யற தொழிலார்கள் கதி என்னவாகும்னு இப்போ துத்துக்குடி ஸ்டேர்லைட் ஆலைக்கு கவலைபட்ட மாறி சில பக்தாள் கேட்கலாம், அங்கேயே மொத்தம் 1500 பேர் தான் வேலை செஞ்சாங்க. சிகரெட் எல்லா கைல சுத்தி பஞ்சு வெச்சு அடச்சு போட்டில  போட்டு விக்கற கதை இல்லை, எல்லாம் இயந்திர மையம். அப்படியே அங்கே வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வேறு உதவிகள் செய்யலாம், அது காச நோயிக்கும், புற்றுநோயிர்க்கும் அரசாங்க மருத்துவமனையில் தரும் சிகுச்சை செலவிலும் குறைவாகவே வரும்.

இதுக்கு தான் மக்கள் நீதி மைய்யம் அரம்பிச்சிருக்காரு நம்மவர்னு சொல்ற நம்மவர் பக்தாளுக்கும் முன்னாடி சொன்ன சிகரெட் கணக்கே தான். கேளிக்கை வரி அதிகம்னு போராட்டம் செஞ்சு 120 ருபாய்ல இருந்து இப்போ 165.78 ஆக்கி மக்கள் தலைல போட்ட கூடத்துல இந்த நம்மவரும், அந்த தலைவரும் ஒருத்தர் தான்.

இதற்க்கு பதிலா இந்த கதாநாயகன், நாயகி சம்பளத்தை குறைச்சிருந்தாவே படத்தோட மொத்த செலவு குறைந்து வரி குறைந்து (ஏன்னா வரி என்பது சதவீதம் தான்) விநியோகம் செய்யும் விலையும் குறைந்து, திரையரங்குக்கு வரும் போது 120 ரூபாயில் (இல்லை அதற்கும் குறைவாகவே கூட) மக்களுக்கும் திரையரங்க உரிமையாளருக்கும் லாபவம் கிடைத்திருக்கும்.

அதையேல்லா விட்டுட்டு சாட்டிலைட் உரிமை, Netflix, Amazon prime அப்படின்னு பன்னாட்டு நிறுவனங்களுக்கு தான் இன்றைய அரசியல்வாதிகளை போலவே தாரை வார்த்தனர். நடிக்கும் போதே இவர்களை வாழவைக்கும் ரசிகனை பற்றிய சித்தனை இல்லாதவன் இப்போ நமக்கு என்னத்த செஞ்சிட போறாரு?

ஆமா இவனுகளும் இப்படி தான் நாம தான் காசு வாங்காம ஓட்டு போடணும், மாற்றம் நம்ம கிட்ட இருந்து ஆரம்பிக்கணும்னு சொல்ற ஆளுங்களுக்கு ஒன்னு இருக்கு, அவங்க பணம் கொடுக்கறது அவங்களுக்கு ஓட்டு போடணும்னு மட்டும் இல்லை நாம ஓட்டுன்னு ஒன்னு போட்டவே போதும் அவங்க பிழைச்சுப்பாங்க.

ஏன்னா இது அப்படி ஒரு தொழில். வேலைக்கு போனாலும் இல்லை தொழில் செய்தாலும் அதை சரியா செய்யலைன்னா வேலை போய்டும், போட்ட பணம் போய்டும். ஆனா இந்த அரசியல் தொழில் அப்படி இல்லை.

லஞ்சம் ஊழல் பத்தி எல்லா வேண்டாம், ஒரு நாலு ஆண்டுகள் தமிழகம் எல்லாம் சென்னைய தவிற எட்டு மணி நேரத்துக்கும் குறைவான மின்சாரமே இருந்தது, இதற்கும் மின் துறைக்குன்னு ஒரு அமைச்சர் இருந்தார் அவருக்கும், அவர்  சார்ந்த கட்சியும் என்ன நடந்தது 98 உருப்பினர்களோடு எதிர் கட்சியாக தான் இருக்கிறது இன்றும். அவர்கள் வருமானம் குறையவில்லை.

புரியற மாறி சொல்லனும்னா ஸ்டேர்லைட் போன்று இன்னும் எத்தனையோ நிறுவனம் இங்கே மட்டும் இல்லை உலக முழுவதிலும் இருக்கு. அப்படி அந்த மண்ணை மலடாக்கி, நீரையும் காற்றையும் நச்சாக்கும் நிறுவனம் வரும்போது அதற்க்கு பல கெடுபிடி சட்டங்களை  வளைத்து உள்ளே விட ஆளும் கட்சிக்கும், எதிர் கட்சிக்கும் ‘நன்கொடை’ தரப்படும். அதனால தான் அதிமுக இது திமுக கொண்டு வந்துதுன்னும் பாஜக காங்கிரஸ் கொண்டுவந்ததுன்னு இப்போ மக்கள் எழுச்சிக்கு அப்பறம் அவங்கள கைய காட்டி இவங்க நழுவராங்க, அப்பவும் இவங்க உயிரோட ஆட்சில தானே இருந்தாங்க ஏன் வர்ற விட்டாங்க?

புது ரூபாய்களை கூட தயார் செய்யாது ஒட்டுமொத்த இந்திய மக்களின் கைகளில் இருந்த பணத்தை எல்லாம் மொத்தமாக செல்லாது என ஒரு சில நொடிகளில் சொல்லி திண்டாட விட்டுட்டு, ஆண்டுகள் இரண்டாகியும் கிடைத்த கருப்புப்பணம் எவ்வுளவு என ஒரு விவரமும் சொல்லாமல் அது ஒரு பெரிய சாதனையை போலவே சித்தரிக்கும் இவர்களை கேள்வி கேட்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடமோ, நீதித்துறை இடமோ ஏன் மக்களிடமோ கூட இல்லை. அப்படியும் மீறி கேள்வி கேட்க ஒன்று கூடினால் காவல் துறை அடிக்கும், சுடும், சமூக விரோதிகள் என சொல்லி கைது செய்வார்கள்.

இவர்கள் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை செய்யாததற்கு தண்டனையை வீட கேள்வி கூட கேட்க முடியாது நம்மால் அப்புறம் என்ன இதுக்கு இந்த உரிமை?
சரி யாருமே வாக்கே செலுத்தவில்லை என்றால் என்னவாகும்? (சங்கர் படம் போல் ஒன்றுமில்லாத பிரம்மாண்டம் போல தான் இருக்கும் இனி வருவது) ஜனாதிபதியின் கீழ் ஆளுநரின்  ஆட்சி வரும். அவர்களும் மத்திய அரசு ஆட்கள் தானே என்றால். இது இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் எல்லாம் நடந்தால், உலக பார்வையில் வரும் அரசியல்வாதிகளை கேள்வி கேட்க்கும் ஒரு துறையும், அதற்க்கான சட்டங்களும் இயற்றப்படும். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாத கட்சிகள் அடுத்த தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும். கட்சியின் தலைவர் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றால் கட்சியே கலைக்கப்படும் சட்டம் வேண்டும்.

இப்படி நடந்தால் இனி மக்களின் பணத்தில் தெர்மாகோல் விடும், கோடிக்கணக்கில் சமோசாவும், டீயும் குடிக்கும்  அமைச்சர்கள் வரமாட்டார்கள். தாயின் முந்தானையை பிடித்தே வளர்த்த எந்த பிள்ளையும் பிரதமராகும் ஆசையில் வாய் திறக்காது. வெளி நாட்டுடன் நல் உறவுக்கும், வெளிநாட்டு மூதலீட்டை கொண்டுவர மாதந்தோறும் மக்கள் பணத்தில் பறக்கும் பிரதமர்கள் இருக்கமாட்டார்கள். வாக்களித்தால் கருப்புப்பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15லட்சம் போடப்படும் என்ற பொய் வாக்குறிதியோடு யாரும் வரமாட்டார்கள்.

அறுவது வயது வரை சம்பாதித்துவிட்டு காலம் போன காலத்தில் நாட்டை திருத்தும் நம்மவர்கள் வரமாட்டார்கள். கடவுள் மறுப்பாளர் பெரியாரை அன்று தலைவனாகவும் இன்று முருகனின், உத்திர பிரதேசத்தில் பிறந்த கண்ணனின் கொள்ளு பேரன்களும் வர மாட்டார்கள்.

(‘தலைவர’ சொல்லவே இல்லைன்னு யாரும் கோவப்பட வேண்டாம் இன்னு கட்சிக்கு பேர் கூட வைக்கலை, எப்படியும் வர மாட்டார் என்ற நம்பிக்கையில் இந்த பட்டியலில் அவர் இடம்பெறவில்லை)



Tuesday, August 15, 2017

கும்பகோணத்திலிருந்து கோரக்பூர்

கோரக்பூர் – 70 மழலைகள் இறந்து விட்டனர். இதற்கு இடையில் சுதந்திர கொண்டாட்டம் அவசியமா என்ற கேள்வி எழுவது தவிற்க இயலாதது. கொண்டாட்டம் தேவை இல்லை ஆனால் கேள்வி கேட்க்கும் சுதந்திரம் பெற்றுத்தந்தவர்களை நினைவு கூற இந்த நாள் அவசியம். சரி இந்த கோர சம்பவம் யாருடைய தவறு யார் அலட்சியம், யோகியா, அந்த பிராணவாயு  தருவதற்கு மறுத்த புஷ்பா சேல்ஸ் நிறுவனமா?

இந்த கேள்விகளை சற்று ஒதுக்கி வைத்து விட்டு கும்பகோணம்  ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தை நினைவுகொள்வோம். 2004 சூலை 16 அன்று நடந்தது அந்த கோரா விபத்து(!?)

இதனை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி சம்பத் ஆணைக்குழு 2006 ஆம் ஆண்டு சமர்பித்த அறிக்கையின்படி, இரண்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.

அதில் வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய மாணவர்களின் பெற்றோர்கள் 5 பேர் கொண்ட குழுவாக ஒவ்வொரு வாரமும் பள்ளியில் ஆய்வு செய்யலாம். என்று சொல்லப்பட்டதை இன்று நடைமுறை படுத்துவது எந்த அளவு சாத்தியம். பள்ளிகளில் இடம் கிடைப்பதற்கே தவமாய் கிடக்கும் இவர்கள் ஆய்வு செய்வார்களா? இந்த சிந்தனை ஏன் அந்த நீதி அரசர்களுக்கு வரவில்லை. நமக்கு நம்மை நம் உரிமைகளை காக்க சட்டம் உள்ளது ஆனால் அதை எடுத்து கையாள தான் இங்கு நமக்கு தெம்பு இல்லை.

சரி இதன் பின் பள்ளி விபத்துக்கள் நடக்கவில்லையா, பள்ளி பேருந்துகள் விபதுக்குல்லாகவில்லையா?

மீண்டும் கோரக்பூர் – வியாபாரத்தில் கொடுத்த பொருளுக்கு பணம் சரிவர கட்ட தவறினால் மேற்கொண்டு பொருள் தந்து நிலுவை தொகையை ஏற்றிக்கொண்டு போனால் புஷ்பா சேல்ஸ் எப்படி வியாபாரம் செய்ய முடியும், இது தர்மம் தானே, என இன்று சுதந்திர தின கொண்டாட்டத்தை வெறுப்பவர்களும் அடுத்த 10 வருட விசாரனையில் இப்படி பேசக்கூடும்.


ஒரு மூன்று மாதம் பின்னோக்கி செல்வோம் போர்பஸ் பத்திரிக்கை உலகின் பணக்காரர்கள் பட்டியல் வெளியிட்டது, முதல் நாள் ஒரு பெயர் அடுத்த நாள் மீண்டும் பில் கேட்ஸ் தான் என நம் சட்டமன்ற தேர்தல் நிலவரம் போல் மாறியது. அதில் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் குழப்பமேதும் இன்றி முதலிடம் அம்பானி தான். ஆனால் அதில் முதல் நூறு பேர் யார், அவர்கள் செய்து வரும் தொழில் என்ன என்று அலசியபோது அதில் முதல் ஐந்து தொழில்கள், ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், கட்டுமானம் என முதல் இடத்தில ஒய்யாரமாக இருப்பது மருந்தும் அது சார்த்த தொழில்களும் தான்.

இம்பெரியல் பேங்க் (Imperial Bank of India) ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) என 1959ல் பொதுவுடைமையாக்கி இந்திய அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வந்து இதர வங்கிகளை வாரி அனைத்துக் கொண்டது போல, பர்மா ஆயில் பாரத் பெற்றோலியம் என  1976ல் தேசியமயமாகி இன்று வரை பொது மக்களுக்கு சேவை செய்வது போல இந்த பள்ளிகள், மருத்துவம், மருத்துவம் சார்ந்த தொழில்கள் எல்லாம் பொதுவுடைமையாக்க அரசாங்கம் முன் வரலாமே. இதனை விடுத்தது ஒவ்வொரு முறையும் ஆணைக்குழு அமைத்து அரசானை பிறப்பித்து அதை நடைமுறை படுத்த ஒரு குழுவை அமைத்து இப்படி குழு குழுவாக அமைப்பது தவிர்க்கலாமே.

தமிழ் நாட்டில் சாராயக்கடையை அரசாங்கம் அதன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல இந்த மருத்துவத்தையும், கல்வியையும் அரசாங்கம் தன் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் இத்தகைய வியாபார நோக்கில் நடக்கும் போக்கு மாறி இத்தகைய நிகழ்வுகளை தடுக்கலாமே. ஆனால் ஆள்பவர்கள் அதை குடும்பத் தொழிலாகவே செய்து வரும்போது இது எப்படி சாத்தியம்.

இந்தகைய சிந்தனை அவர்களுக்கு வராது காரணம் நம் பிரதமரை சுற்றி அமர்ந்திருப்பது வியாபாரிகள், இவர் ஆலோசனை நடத்துவதும் வியாபாரிகளோடு தான். அதனால் தான் இப்படி நாடு போய்கொண்டு இருக்க இன்னும் அரசாங்கத்திடம் இருப்பதையும் தனியாரிடம் ஒப்படைக்கவே நேரம் பார்த்து வருகிறார், சேலம் இரும்பாலை, ஏர்  இந்தியா என போகிறது அரசின் திட்டங்கள்.

எழுபதாம் முதல் சுதந்திர தின வாழ்த்துக்கள்!

Monday, May 1, 2017

ஒதுக்குப்புறம்

ன் பள்ளி பருவத்தில் எங்கள் ஊரில் இருந்தது ஐந்து திரையரங்குகள். அதில் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்திருந்த ஒன்றில் தான் ரஜினி படம் வெளியாகும். அடுத்த இரண்டில் வேறு புது படங்கள் வெளியாகும். மற்ற இரண்டில் எப்போதும் பழைய படமும் ‘A’ படம் மட்டுமே வெளியாகும்.


அந்த ‘A’ பட சுவரொட்டிகள் ஒட்டப்படிருக்கும் பக்கம் பார்ப்பதே ஏதோ பெரியா குற்றம் என்பது போலவே கடந்து போவேன். என் அப்பா Speed , MIB போன்ற படங்களுக்கு என்னை அழைத்து போவார் அப்படி தான் ஒரு நாள் Titanic போவோம் என்றார். பின்னர் பள்ளி நண்பர்கள் மூலம் அந்த படத்தில் கதாநாயகியின் நிர்வாண காட்சி மட்டுமே சுமார் பதினைந்து நிமிடங்கள் வருவதாக அறிந்து என் அப்பாவின் அறியாமையை கடிந்து கொண்ட காலமும் உண்டு.

ஆனால் இன்று அதை வீட ‘நல்ல’ படங்கள் கைகளில் ஓடுகிறது. ‘எனக்கு போன் வாங்கி தரலைனா அடுத்த எக்சாம்ல பெயில் ஆகிடுவேன்’ என மிரட்டி கைபேசி வாங்குகின்றனர் பள்ளி மாணவர்கள்.

அப்பாவுக்கு புகை பழக்கம் இருந்தது ஆனால் அந்த சிகரெட்டே பாக்கெடை எப்போதும் என் கைக்கு எட்டதா இடத்தில் தான் வைப்பார். வெளியே சென்று வீடு திரும்பியதும் சட்டை பையிலிருந்து எடுத்து எட்டாத இடத்தில் வைத்து விடுவார். அதுவும் நான் இன்று புகைக்காததர்க்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

அதே போல் அன்று மது கடைகள் ஊருக்கு அப்பால் இறைச்சி வெட்டும் இடங்களுக்கு அருகில் இருந்தது ஆனால் இன்று ஊர் எல்லையிலேயே வரவேற்கிறது முதல் கடை. தெருவுக்கு ஒன்றாய் கடை விரித்து விட்டு ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என திரைப்படத்தில் மட்டும் கட்டாயமாக எழுத்து போடுவது என்ன மக்கள் நலனோ?

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னரை காட்டிலும் இன்று பாலியல் குற்றங்கள் அதிகரித்திருக்க மேல் சொன்ன இரண்டும் முக்கிய காரணங்களாக கருதுகிறேன். யாரும் எந்த நேரத்திலும் எதுவும் பார்த்திட உதவும் கை பேசி, அதில் வக்கிர படங்களை பார்க்கும் ஒருவர் கிடைக்கும் யாரிடமும் அந்த இச்சைய தனிக்க முற்படுவதே இந்தகைய குற்றங்கள் அதிகரிக்க காரணம். சென்னையில் முகலிவாக்கத்தில் நடந்த ஒரு சிறுமியும் படுகொலை ஒரு உதாரணம். பெரும்பான்மையாக இத்தகைய குற்றத்தில் பிடிபடுவோர் யாரும் இதே குற்ற பின்னணியோ அல்லது வேறு எந்த தவறுக்கான பின்புலம் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். இப்படி வக்கிர படங்களை பார்த்து வெறி ஏறினவர்கள் தனிமையில் பார்க்கும் பெண்களிடத்திலோ, குழந்தைகள் இடத்திலோ தங்கள் இச்சையை தீர்க்க பார்ப்பது தான் இத்தகைய குற்றத்திற்கான காரணம்.

இது மட்டுமின்றி இப்படியான தவறுகளின் போது அரசியல் தலைவர்கள் பெண்கள் உடுத்தும் உடைகள் மீதே அந்த குற்றத்தை சுமத்தும் போது அடுத்து தவறு செய்வோருக்கு அது ஒரு நியாயம் கற்பித்துவிடுகிறது.

இதில் இன்னமும் எண்ணை விடுவது போல் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே மது வந்து சேரும் சேவையை துவங்கி இருக்கின்றனர். மது கடைக்கு செல்ல கூச்சப்படுவோருக்கும் விடும் அழைப்பே இது. மது அருந்தியவர்கள் வெட்கமும் மானமும் மறந்து குருட்டு தைரியத்தில் கத்துவது போல் இனி குற்றங்களும் அதிகரிக்கும்.

இதில் இன்னுமொரு உளவியல் சார்த்த ஒரு அணுகுமுறை குறைபாடு உள்ளது. அது ஆண்களுக்கான அறிவுரையில்லாது போனது. பெண் வயதுக்கு வந்தவுடன் அம்மா, சித்தி, அத்தை, பக்கத்து வீட்டு பெரியம்மா என அனைவரும் பல அறிவுரைகள் சொல்லியே வளர்க்கின்றனர். ஆனால் ஒரு ஆண் வயதுக்கு வந்ததே அவனுக்கு மட்டுமே தெரிகிறது. உணர்சிகளை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும். இனி எப்படியான மனோரீதியான மாற்றங்கள் நிகழும் அதற்க்கு எப்போது எப்படி நடந்து கொள்வது என்று சொல்லும் பழக்கம் எங்கேயோ தொலைத்து விட்டோம்.

விரதம் அனுசரிப்பது, அதிகாலையில் குளிர் நீரில் குளிப்பது, சில காலங்களில் சில உணவுகளை கட்டாயம் தவிர்ப்பது போன்றவற்றை மொத்தமும் ஒதுக்கி ஆத்திகம் பேசியதும் சற்று தடம் மாற்றி விட்டது. உண்மையில் இதகையே நடைமுறையும் கூட ஒரு வகுப்பினருக்கு மட்டுமே சார்த்து சாதி பேதம் பார்த்தே வழக்கமாக வைத்து இன்னொரு பிரிவினரை குற்றம் பரம்பரையாகவே இருக்க வைத்திருக்க வேண்டும்.


இப்படி உளவியல் ரீதியாக அணுக வேண்டியவற்றை வெறும் சட்டம் கொண்டு மட்டும் கொரூர தண்டனைகள் மூலம் தீர்வு காண முடியாது.


Sunday, January 8, 2017

புத்தரின் மனையாள்

லகில் இனம், மதம் என எல்லாவற்றிக்கும் முன்னரே தீண்டாமையைச் சந்தித்தவள் இவள். மாதவிடாய் காலத்தில் வரும் இரத்தம் தீட்டு என ஒதிக்கி வைக்கப்பட்டாள். அந்த நாட்களில் தொடுவதற்கே ஏற்றவளல்ல என புனித சடங்குகளில் இருந்த ஒதுக்கியே வைக்கப்பட்டிருக்கிறாள்.

தங்கள் பேரரசில் சூரியன் மறைவதே இல்லை என்று பெருமை பட்டுக்கொண்ட, இன்று ஒரு பெண் அரசியை கொண்ட இங்கிலாத்தில் 1918ல் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. முதல் பொதுத் தேர்தல் 1708ல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் கறுப்பின மக்கள் என ஒடுக்கப்படவர்களுக்கு வாக்குரிமை 1870ல் வழங்கப்பட்ட போது கூட பெண்களுக்கு இல்லை, அவள் 1920ல் தான் பெற்றாள்.

இவள் இன்ன உடை தான் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள், இவள் அங்கம் தெரிந்தால் அவன் உணர்சிகள் தூண்டப்படும் என்று ஒரு ஆணின் கண்ணோட்டத்தில் சொல்லப்படுகிறதே தவிற பொது சித்தனை இல்லை. முறுக்கிய மீசை, பரந்த மார்பு என திரியும் ஆணைக்கண்டு அவள் உணர்சிகள் பொங்கக் கூடும் என்று ஆணை போர்த்திக்கொள்ள சொல்லும் மதங்கள் இங்கு இல்லை. உண்மையில் அவள் ஒரு மணி நேரத்தில் பல முறை உச்சம் அடைய முடியும், அப்படி பார்த்தல் அவள் உணர்சிகள் தூண்டப்பட்டால் பல கொலைகள் அன்றாடம் நடக்கும்.

கட்டிய மனைவியை விட்டு நாட்டியக்காரியிடம் சென்றவனை தலைவனாகக் கொண்ட சிலப்பதிகாரத்தை ஏற்றுக்கொள்பவர்கள் கூட மகாபாரதத்தை விமர்சிக்கும் போது திருமணதிற்கு மும்பு பிள்ளை பெற்றவள், ஐவரை திருமணம் செய்யும் பெண் நாயகியாக சொல்லும் கீழ்த்தரமான காவியம் என்று ஒரு பெண்ணின் நெறியை தொட்டே இடித்துரைப்பர்.

Prince Siddhattha & Princess Yasodhara's marriage
இப்படியாக அவள் கட்டுப்பாடுகளுக்குள் தான் இன்றும் தினிக்கப்பட்டிருக்கிறாள். பாற்கடலில் ஆதிசேசன் மேல் விஷ்ணுவின் திருவடிகளை பற்றியவாறு தான் லட்சுமி இருக்கிறாள். இங்கு குழந்தை இடை கூடுதலாக இருந்ததால் உறுப்பை கீறி அவள் பிரசவிக்கிறாள், பின்னர் எட்டு தையல்கள் போடப்பட்டு பிழைத்து வருகிறாள். அதை உணர்ந்த அவள் பெற்றோர் அவளை தாங்குகிறார்கள் அதற்க்கு பேரன் பிறந்ததில் மகிழ்ச்சி இல்லையோ உன்னை மட்டுமே தாங்குகிறார்கள் என்று உரும்பும் கணவர்களோடும் அவள் வாழ்கிறாள்.

நான் பார்த்தவரையில் என் தந்தை எந்த வீட்டு வேலையும் செய்தது இல்லை. என் அன்னை வீடிற்கு எதுவும் சம்பாதித்ததும் இல்லை. இப்போது காதலித்து மணமுடித்த கணவன் தான் சம்பாதிப்பதில் பாதி சம்பாத்தியமே பெற்றாலும் அகம்பாவம் இல்லாது இல்லறம் நடத்துகிறாள். அவள் காலையில் தூங்கும் கணவனுக்கு, அவன் பெற்றோருக்கு, மத்தியம் அவளுக்கும் சமைத்து கட்டி எடுத்துக்கொண்டு இனி ராத்திரி திரும்பி என்ன சமைக்க என்ற சிந்தனையோடே வேலைக்கும் ஓடி ஒரு பதவி உயர்வு பெற்றுவிட்டால் அவள் பல முறை தீக்குளிக்க வேண்டி இருக்கும். அவள் வேலை செய்யும் இடத்தில் அத்துனை ராவணன்கள், துட்சாதனங்கள், துரியோதனன்கள் உண்டு.

வேலைக்கு போகும் அவளை ஏன் வீட்டு வேலை வாங்குகிறீர்கள் என்று கேட்டால் சட்டென பெருமிதமாய் வரும் பதில் ‘என்ன சொன்னாலும் நானே செய்யறேன்றா’. இதையே தன் மகன் சொல்லி சரி என கால் நீட்டி அமர்ந்து கிடக்கும் தாயை நான் கண்டதில்லை. ஆனால் அதே வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருந்தால் அவள் பள்ளிப் பருவம் தொட்டே துவைக்கவில்லை என்றாலும் துணிகளை மடிக்க கற்றுக்கொடுக்கப் பட்டிருப்பாள். சமைக்கவில்லை என்றாலும் பாத்திரம் தேய்க்க கற்றுக்கொடுக்கப் பட்டிருப்பாள். இவன் தான் உண்ட தட்டை கூட கழுவாமல் வளர்க்கப்படிருப்பான்.

இனி அவளுக்கு சமமாக இவன் இருக்க பெற்றோர்கள் இனி இவனுக்கு வீட்டு வேலை செய்ய கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும். அவள் இன்று சம்பாதிக்கவும் செய்கிறாள் இவனுக்கு மேலாகவே.


இப்படி மாற வேண்டியது அவளை சுற்றி இருப்பவர்கள் தான் அன்றி அவளில்லை. அவள் விருப்பம் போல் உடை அணிந்து, விம்பிய நேரத்தில் விரும்பிய இடத்திற்கு செல்ல பாதுகாப்பு இல்லை என்றால் அது அந்த நாட்டிற்க்கு கேவலமே அன்றி அவளின் விருப்பங்களின் பிழை இல்லை. இதை உணராதோர் ஆளும் நாட்டில் பெண்ணியம் ஏட்டுச் சுரைக்காயாக தான் இருக்கும். இவள் தான் பாதிக்கப்பட்டும் குற்றத்திற்கு காரணமாக பழியையும் சுமக்கிறாள். இது கேவலமான நாடு தான்.

Saturday, November 12, 2016

நரிகளுக்கான பொறி


ந்த புது ரூபாய் மாற்றமானது அம்பானி, மல்லையாவை குறிவைத்து அல்ல அவர்கள் பணம் இந்தியாவில் அவர்கள் படுக்கையின் கீழ், கழிவறையில் பதுக்கி வைக்கப்படவில்லை. அது வெளிநாடுகளிலும், நம் நாட்டிலும் என்றோ வெள்ளை பணமாக உலா வந்துக்கொண்டு தான் இருக்கிறது.

இந்தியாவில் வெளிநாட்டு முதலீடு செய்துள்ள நாடுகளின் பட்டியலில் முதலில் நிர்ப்பது மொரிசியச், அமெரிக்க டாலர் மதிப்பில் 900 கோடி அவர்கள் இந்தியாவில் 2015ல் மட்டும் செய்த முதலீடு. அதாவது 2040 கிமீ மொத்த பரப்பளவு கொண்ட சிறு தீவு 3,287,263 கிமீ பரப்பளவு கொண்ட இந்தியாவில் செய்துள்ள தொகை இந்திய மதிப்பில் ரூ58,500 கோடி. அதற்க்கு காரணம் DTAA (Double Taxation Avoidance Agreement ) அதாவது அங்கிருந்து செய்யப்படும் முதலீட்டுக்கோ, அதனால் பெறும் லாபதிற்க்கோ இந்திய அரசாங்கம் எந்த ஒரு வரியையும் விதிக்காது. மேலும் ஏதொரு மொரிசியசின் குடிமகன் இந்திய நிறுவனத்தை கையகப்படுதினாலும் வரி இல்லை என்ற ஒப்பந்தம் இரு நாட்டிற்க்கு இடைய உள்ளது. இங்கு மறைக்கப்படு வரி செலுத்தாமல் அந்த தீவுக்கு கருப்பாக சென்று வரி ஏதும் இல்லாமல் இங்கேயே வந்து மீண்டும் வரி இல்லாமல் குட்டியும் போடுகிறது (ஆனால் சமீபத்தில் இந்த ஒப்பந்தத்திலும் சில மாற்றங்கள் செய்யாப்பட்டு உள்ளது).
  

மொரிசியசு - Mauritius

இது பெரும் முதலைகள் போகும் வழி. சிறு நரிகளுக்கான பொறி தான் இந்த 500, 1000 மாற்றம். நேற்று என் வீட்டு அருகில் இருக்கும் கடைக்கு சென்றிருந்தேன், அந்த கடைக்கு பால் விநியோகம் செய்யும் நபரிடம் வாக்கு வாதத்தில் இருந்தார் கடைக்காரர். இவர் இருக்கும் பழைய ஆயரம் ருபாய் தாளை பெற்று கணக்கை முடிக்கச் சொல்கிறார். அதை வாங்க மறுத்து அந்த நபர் சொன்னது ‘உங்க கிட்ட வாங்கி அவங்க பேங்ல போட்ட, டாக்ஸ் அவர் கட்டனும். இந்த ஒரு தடவ வாங்கிக்க சொல்றார். அடுத்த வாரம் புது நோட்டுன்னா தான்’. யாரும் தான் சம்பாதிக்கும் பணத்தை வங்கியில் போடுவது இல்லை. வங்கியில் செலுத்தினால் வருமானத்திற்கு கணக்கு காட்ட வேண்டும். அந்த வருமானத்திற்கு வரி கட்ட வேண்டும்.

இப்படி அடகு கடைக்காரர், மள்ளிகை கடைக்காரர் என தினம் தினம் போகும் கடைக்காரர்கள் வீட்டில் தூங்குகிறது இந்த கருப்பு பணம். வக்கீல்கள், வைத்தியர்கள் என நீளும் இந்த பட்டியல். இவர்கள் வீடுகளில் அவ்வளவா இருந்து விடும் என்ற கேள்விக்கு நீங்கள் உங்கள் தெருவை தாண்டி, தாலுக்கவை, நகரத்தை, மாவட்டத்தை, மாநிலத்தை தாண்டி மொத்தம் இருக்கும் இந்திய மாநிலங்களோடு இவர்களின் எண்ணிக்கையை பெருக்கிப் பார்த்தல் தெரியும் இந்த மாற்றம் அவசியமா இல்லையா என்று. பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்களில் (MNC) வேலை செய்யும் நாம் வீட்டு வாடகை (rent receipt) என்று பொய்யாக போட்டு வரி எய்ப்பு செய்வது போல இங்கு வணிகம் செய்வோர் பலர் சேர்த்து வைத்திருக்கும் தொகைகளை வெளியே எடுக்கும் முயற்சி தான் இது.

இலவசமாக (திமுக)/ விலை இல்லா (அதிமுக) தரும் டிவி, மிக்சி, பேன்க்கு இவர்கள் எல்லா கடைகளிலும் இந்த swipe machine கொடுத்திட்டு, அதை பயன்படுத்துவதற்க்கான வரி/கட்டணத்தை அரசு ஏற்றுக்கொண்டு இதன் பயன்பாட்டை கட்டாயம் ஆகினால் போதும். இந்த நிலை மாற.

ங்கியிலும், ATM மையங்களிலும் கூட்டம் அலைமோதக் காரணம் நமக்கு யோசிக்கும் திறம் இல்லை என்பதே. ATM கார்டு வைத்திருப்பவர்கள் தினசரி பொருட்களை பல்பொருள் அங்காடியில் (departmental store) வாங்கலாம். அங்கேயே, கருவேப்பிள்ளை கொத்தமல்லி, பச்சை மிளகாய் உட்பட சகலமும் கிடைக்கிறது. மருந்து வாங்க பல கடைகளில் ATM கார்டுகள் பயன்படுத்தலாம் (MedPlus, Apollo). ஒரு வாரம் மட்டுமே இந்த நிலைமை என்பது உணர்ந்தால் பதட்டம் இல்லாமல் இந்த நாட்களை கடக்கலாம். ராகுல் காந்தி ரூ.4000 வாங்க வங்கி வாசலில் நிர்ப்பது எவ்வளவு அபத்தமோ அப்படி தான் debit/credit card வைத்திருப்போர் நிற்பதும்.

நம் பதற்றத்திலும் இந்த மாற்றத்திலும் மாட்டித் தவிப்பது என்னவோ அன்றாடம் கூலி வேலை செய்வோர் தான். கூலி வேலை செய்து சேர்த்த ஆயிரங்கள் செல்லாது என சொன்ன பதற்றத்தை பயன்படுத்தி பலர் ஆயிரம் தாளுக்கு 800 ரூபாய் எனவும், 500ரூபாய் தாளுக்கு 400 ரூபாய் எனவும் ஏமாற்றப்படுகின்றனர். ஏமாற்றுபவர்கள் அம்பானியோ, மல்லையவோ இல்லை அதே தெருவில் ஆட்டோ ஓட்டுபவர், கடை வைத்திருப்பவர்கள் தான். மாற்றம் நம்மில் இருந்து துவங்க வேண்டும்.

நம் பதற்றத்தையும் இந்த அன்றாடம் காட்சிகள் படும் பயத்தையும் தான் இப்போது எதிர் கட்சிகளும், மாநில கட்சிகளும் பேசி பேசி இந்த மாற்றத்தால் பயன் இல்லை என்று கூப்பாடு போடுகிறது. அடுத்த முறையேனும் இவர்கள் வெற்றி பெற வழி தேடுகிறார்களே ஒழிய வேறு கூற்று இல்லை இவர்கள் பேச்சில்.


Sunday, September 11, 2016

முத்திரை குத்தப்பட்டவர்கள்

தோ ஒரு கோபத்தில் ஒருவர் செய்யும் கொடூரத்தைக்காட்டிலும் கொடியது அதை நாம் கையாளும் விதம். கொடுஞ்செயல் புரிந்தவனின் மொத்த இனத்தையே நாம் கொடூரராக பார்க்கத் துவங்குவோம். இந்த பார்வையானது இன்று நேற்று வந்ததல்ல, பரசுராமன் ஒரு மன்னன் மேல் இருந்த கோபத்தில் ஒட்டு மொத்த சத்திரிய இனத்தையே அளிக்கக் கிளம்பினார் என்கிறது இதிகாசம். இன்று நம் பார்வையும் இப்படியே இனம், நிறம், மொழி, எல்லை என விரிந்து பிரிந்து கிடக்கிறோம்.

இந்த பார்வையானது இராமாயணதில் துவங்கியது என்பதைவிடவும் இந்த இதிகாசங்களின் மீது சரியான பார்வையும் புரிதலும் இல்லாததே காரணம் என்பது நிதர்சனம். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என தாயின் தலை கொய்தவரும், சிவனின் அருள் பெற்றவரமான பரசுராமன் சத்திரியரான ராமனிடமே தோற்று மனம் மாறுவாதாக கூறப்படுகிறது. ஆக நாம் கொண்ட கொரூர எண்ணம் கொல்ல மீண்டும் ராமன் வரேவேண்டும் என்றால் இன்னுமொரு சீதை தீக்குளிக்க வேண்டுமே. இத்தகைய இதிகாசங்கள் சொல்லும் கருவை காணாது நுனிப்புல் மேய்ந்து ஒவ்வொருவரையும் அவதாரமாக்கி விழுந்து தொழுது பிரிந்து திரிகிறோம்.


ஏதோ ஒரு குழு தவறான புரிதலில் கடவுளின் பெயரால் செய்யும் கொலைகளுக்கு நம்மோடு வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் இனமக்களை ஒரு வித குற்றப் பார்வையில் பார்ப்பது மதம் என்ற முத்திரையோடு பார்க்கும் ஒரு கொடூரம். ஐயப்ப பக்தர்கள் கூட்டமாக செல்லும்போதும், ஆடி மாதம் ஒவ்வொரு தெருவிலும் பாட்டு கூத்து என அமக்களப்படும் போது இல்லாத சலசலப்பு இந்த விநாயகர் ஊர்வலத்தில் வருவதன் காரணம் இந்த முத்திரையோடு பார்க்கும் பார்வையை அரசியலாக்க பார்க்கும் கயவர்களின் வேலை. எல்லா பண்டிகைகளும் மக்கள் கொண்டாடும் போது சச்சரவு வருவதில்லை அதில் அரசியல் நுழையும் போதே மதம், மொழி, சாதி என்ற முத்திரையோடு காட்டப்படுகிறது.

 நாம் அறியாமல் நாம்மில் ஒட்டியிருக்கும் முத்திரையை பயன்படுத்தி ஆதாயம் தேடுகின்றனர். ‘தலித்’ பெண் கொலை, ‘முஸ்லிம்’ தீவிரவாதிகள் வெரிச்செயல், ‘பார்பனனின்’ சூழ்ச்சி போன்ற சொற்றொடர்கள் அர்த்தமற்றதாக வேண்டும்.
http://www.ndtv.com/tamil-nadu-news/tamil-nadu-woman-21-kills-herself-over-morphed-facebook-photos-1424358

நம்மை அறியாமலே நாம் ஒரு முத்திரை பார்வை தான் பார்க்கிறோம். சமூக வலைதளங்களில் பெண்களின் புகை படம் பதியவேண்டாம் சில கயவர்கள் அதை தவறான காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள் என்ற செய்தி இத்தளங்களை உலா வருவோர் எப்படியும் ஒருமுறையேனும் பார்த்திருக்கலாம். அப்படி தவறாக பயன்படுத்துதல் அல்ல அவளுக்கு பிரச்சனை அதை நாம் பெண் என்ற முத்திரையோடு அந்த முத்திரைக்கு பின்னால் கற்பு, அடக்கம் என்ற பொருளோடு கையாளும் விதமே அந்த பெண்ணுக்கு பிரச்சனை.

இந்த மொழி பேசுபவன் இப்படிப்பட்டவனாக தான் இருப்பான் என்ற மொழி முத்திரை. இது தான் திராவிட அரசியல், மொழியால் பிரித்து ஆளுவது. கயத்தாரில் ஆங்கிலேயரால் தூக்கிலடப்பட்ட தெலுங்கு நாயக்கர் வம்சமான வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயருக்கு காட்டிக் கொடுத்தவன் தமிழன். தன் சொந்த பணத்தில் கப்பல் வாங்கி சுதேசி கப்பல் விட்டு செக்கிழுத்து செல்வம் இழந்து வறுமையில் இறந்த வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்மும் (வ.உ.சி) தமிழர் தான். பிறப்பும், இனமும், பேசும் மொழியும் ஏதும் தந்திடாது செய்யும் செயலும், எண்ணமுமே வாழ்வு. மேய்வது வனமனாலும் சேர்வது இனமாக இருக்கட்டும் என்று சொல்வதுண்டு, இனத்தோடு இருப்பது தவறல்ல மற்ற இனத்தை வேறு மாதிரி பார்க்கும் போது தான் பிரச்சனை.

Family only, Brahmins only, vegetarians only, இந்தகைய கொடூர வார்த்தைகள் வாடகைக்கு வீடு தேடி அலையும் போது பார்த்திருக்கலாம். குடும்பம் அல்லாதவர்கள் இப்படி தான் இருப்பாகள் என்ற பார்வை, சைவம் இல்லாதவர்கள் வீட்டை சுத்தாமாக வைத்திருக்க மாட்டார்கள் என்ற ஒரு பார்வை. வீடுகள் தோறும் மாற வேண்டிய பார்வை.

இந்த பார்வை மாற நாம் கர்வமாக சுமக்கும் முத்திரைகள் களைய வேண்டும். நான் வெள்ளையாக, அழகாக, இன்ன சாதியில், இந்த வசதிகளோடு, இந்த ஊரில் என பெருமை பொங்க சுமக்கும் முத்திரைகளை களைந்தால் தான் பிறரை எந்த முத்திரை இன்றியும் பார்க்க முடியும். தான் வெள்ளையாக இருப்பதில் பெருமை கொண்டதால் தான் ஆப்ரிக்கா கண்டத்தை இழிவாக பார்க்கப்பட்டது. தாங்கள் நாகரிகம் அறிந்தவர்கள் என்ற கர்வம் தான் அமெரிக்க பூர்வீகர்கலான செவ்விந்தியர்களை அடிமைப் படுத்ததி அந்த இனம் அழியக் காரணமாக இருந்தது.


மனிதன் என்ற இறுமாப்பு முத்திரை தான் புலியை இன்று வெறும் ஆயிரம் எண்ணிகையில் இருக்க வைத்திருக்கிறது. இன்னும் ஒரு இனம் அழிவதற்குள் களைவோம் இந்த முத்திரைகளை.


Sunday, May 22, 2016

எதிநியன் சனநாயகம்

மூன்று பக்கமும் நீர் சூழ்ந்த ஒரு சிறு நகரம் அதில் அடிக்கடி களவு நடக்க இதற்கென்று ஒரு காவல் ஆள் நியமிக்க முடிவு செய்யப்படுகிறது. அவருக்கு சாப்பாடு தங்கும் இடம் என எல்லா சௌகரியங்களும் செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்படியான வசதிகள் செய்ய அந்நகர மக்களிடம் மாதம் இன்ன தொகை வசூலிக்கவும் முடிவு எடுத்தனர்.

இப்படி அந்நகர மக்களின் பணம் கொண்டு செய்யப்படுவதால் இந்த வேலைக்கு பலர் முன்வந்தால் அதில் ஒருவரை தேர்ந்தெடுப்பதில் மக்களின் பங்கும் அவசியம் என கருதி வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்தனர்.

எண்ணியது போலவே போட்டியிட பலர் முன் வந்தனர். இறுதியில் மூன்று பேர் மட்டுமே அதிக வாக்குகள் பெற்றனர். முதலில் அந்நகரில் கூத்தாடுபவன் அடுத்து அதில் அந்த நகரத்தில் இருக்கும் பெரும்பான்மையான சமூகத்தை சேர்த்தவன், மூன்றாவதாக மிக யோகியன் என்று பெயரெடுத்தவன். கூத்துக்காரன் பதவி ஏற்ற நாளில் இருந்து களவு குறையத்துவங்கியது. பாராட்டுக்கள் குவிந்தன.

தடீரென யோகியன் ஊர் கூட்டத்தை கூட்டினான். கூத்துக்காரன் பதவி ஏற்ற நாளில் இருந்து களவு என்னவோ குறைந்து தான் இருக்கிறது ஆனால் களவு போன பொருட்களின் மதிப்பு என்னவோ கூடி இருக்கிறதே என்று குற்றம் சாட்டினான். அந்நகரத்தின் ஒரு பிரிவினர் இவன் பொறாமையால் பேசுகிறான் என்றனர். மற்றவர் களவு போன கணக்கு சொல்வது போல் அதிகமாகவே இருக்கிறதே என்றனர். கூதுக்கரனால் சரி வர காரணம் ஏதும் சொல்ல முடியவில்லை. புதியதாய் ஒருவரை தேர்ந்தெடுக்க மீண்டும் வாக்கெடுப்பு நடந்தது.

அதில் திரும்பவும் கூத்துக்காரனும் நின்றான். இம்முறை பெரும்பான்மையான  சமூகத்தை சேர்த்த சாதியக்காரன் வென்றான் பதவியேற்றான். நாட்கள் கடந்தது களவும் குறைவாக தொடர்ந்தது. காவல் ஆளுக்காக வசூலிக்கப்படும் தொகையும் கூடிகொண்டே போனது. மக்கள் கேள்வி எழுப்பத் துவங்கினர் களவு ஏன் இன்னும் தொடர்கிறது என்று. இந்த கேள்விகள் தொகை கூடியதால் வந்தது என கருதினர் இருப்பினும் கேள்வி சரியே என்பதால் இது குற்றச்சாட்டாக கருதி பதிலளிக்க சாதியக்காரனை அழைத்தனர்.

கூட்டத்தில் பெரும் வாக்கு வாதம் நடந்தது அவன் சாதிக்காரர்கள் அவனுக்கு இணக்கமாக பேச மற்றவர்கள் எதிர்க்கவும் வாக்கு வாதம் சூடேறியது. இப்படி குற்றம் சாட்டுபவர்களே ஏன் வந்து இரவு எல்லாம் கண் விழித்து காவல் காக்கக் கூடாது என்றான் சாதியக்காரன். சலசலப்பு ஓய்ந்தது சத்தமே வரவில்லை.

“அந்த வக்கு எங்களுக்கு இல்லாததை உணர்ந்ததால் தான் நாங்கள் வாக்கு மட்டும் செலுத்துகிறோம். அது இருக்கு என்று முன் வந்து எங்கள் பணத்தில் நீ உண்பதால் தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம்” என்றான் ஒருவன். இம்முறை சாதியக்காரனிடம் பதில் இல்லை.

கூட்டம் இந்த தனி ஒருவன் சொல்வது சரி என இவன் பக்கம் சாயத்துவங்கினர். அந்த ஒருவன் தொடர்ந்தான், “நாம் எப்படி வாக்களித்தோம்? இந்த வேலைக்கு தகுதியானவன் ஒரு வலியவன். அப்படி ஒருவனை அடையலாம் கண்டா வாக்களித்தோம். கூத்துக்கரனை நகரம் முழுவதும் தெரியும் அதனால் அவன் முதல் முறை அதிக வாக்குகள் பெற்று வென்றான். அடுத்து வென்றவனின் சமூகம் இங்கு அதிகம் போக கூதுக்காரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சடால் கூடுதல் வாக்குகள் பெற்றான். யார் சரியானவன் என்பதை விடுத்து யார் தெரிந்தவன் என்பதை கருத்தில் கொண்டு தானே வாக்களித்தோம்.”

மூன்று பக்கமும் கடல் சூழ்த்த நாடு இந்தியா, 1948ல் நெறிமுறைகளை மீறி செயல் பட்ட வி.கே. கிருஷ்ணா மேனன் நேருவின் மந்திரி சபையில் பாதுகாப்புத் துறை மந்திரியானார். இன்று வரை குற்றப் பின்னணி உள்ளவர்கள் நாட்டை ஆளும் அவலம் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

காரணம் இங்கு இருக்கும் பழம்பெரும் கட்சிகளுக்கு பிரதானா வாக்காளர்கள் இருக்கிறார்கள் நல்லதோ கேட்டதோ அவர்கள் அதே கட்சிகளுக்கு தான் வாக்களிப்பார்கள் சராசரியாக நாற்பது சதவீதம். இது போக கட்சிசாரா மக்களின் முடிவே தலைவர் யார் என்பதை நிர்னைக்கும், அது மீதம் உள்ள அறுவது சதவீதம் அதில் இருப்பவர்களில் அதீதமானவர்கள் இன்று நான் வாக்களித்தால் நாளை எனக்கு என்ன கிடைக்கும் என்ற குறுகிய எண்ணத்தோடு  வாக்களிப்பதால் மாற்றம் வர வாய்பில்லை.

Source: https://data.gov.in/catalog/number-students 
2014 தேர்தல் கணக்கின் படி மொத்தம் 81.14 கோடி வாக்களர்கள். இதில் அறுவது சதவீதம் என்பது 48.8 கோடி. அத்தனை போரையும் மெருகேற்றி யோசிக்க செய்ய அடிப்படை கல்வியில் அரசியலை கொண்டு சேர்திருக்க வேண்டும். அரசியலின் முக்கியத்துவம், வாக்களிக்கும்போது கணக்கில் கொள்ள வேண்டிய பிரதான உண்மைகள், நாட்டின் வளர்ச்சி விகிதத்தில் தேர்தல் நேர வாக்குறுதிகள் என்ன பங்கு ஆற்றும் என்பதை கணக்கிடும் பக்குவம் என எல்லாமும் இருக்கும்படியான ஒரு கல்வி முறை இன்று வந்தால் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளில் மாற்றம் வரலாம். நாற்பது ஆண்டுகள் என்பதும் படித்து முடித்து வரும் இளைய சமுதாயத்தை கருத்தில் கொண்டு சொல்லப்படும் கணக்கே.

இத்தகைய குறுகிய என்னமுடையவர்களை கருத்தில் கொண்டே கிரேக்கத்தில் எதிநியன் சனநாயகம் உருவாக்கப்பட்டபோது பிளாடோ எதிர்த்தார். இன்றும் கட்சிசாரா வாக்காளர்கள் தெரிந்த சின்னத்தில் தான் வாக்களிக்கின்றனர் வேறு எந்த ஒரு எண்ணம் கொண்டும் இல்லை. இதற்க்கு சரியான உதாரணம் இன்று காணும் விளம்பரங்கள், சச்சினுக்கும் எழுதுகோலுக்கும், காற்றடிக்கும் என்ன சம்மந்தம் ஆனால் அவர் அந்த விளம்பரத்தில் வருகிறார். தெரிந்த முகம் ஒன்று தேவைப்படுகிறது கவனம் ஈர்க்க. இதை தான் அரசியல் கட்சிகளும் கையாளுகின்றன.

கல்வியில் மட்டும் இல்லாமல் மாற்றம் சநனாயக கூற்றிலும் தேவை. இன்று ஆட்சி செய்பவர்கள் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை கொண்டு அவர்களின் செயல் பாடுகள் அளவிட்டு அடுத்த தேர்தலை சந்திக்க அனுமதி அளிக்கவேண்டும். தேர்தல் அறிக்கைகளும் சரி பார்த்து அதனின் சாத்தியங்கள் கணக்கிட்டே வெளியிட வேண்டும் இவைகளை கையாள தேர்தல் ஆணையம் போல் அரசு சாரா துறை ஒன்று கொண்டுவரப்பட வேண்டும். இத்துறையில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் அறிவு சார்தவர்களே இருத்தல் வேண்டும். இதனால் வெறும் வாக்குறுதிகள் மட்டும் தந்து செயல் பாடாதவர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருக்காது. ஏமாற்று வாக்குறுதிகள் தவிர்க்கப்படும்.

இவ்வாறு செய்யப்படின் ஆளுமை உள்ளவர்களில் மக்கள் செல்வாக்கு மிக்கவர் ஆட்சி அமைக்க முடியும். இப்போது உள்ள கூற்றின் படி செல்வாக்கு மிக்கவரும் வாக்குறுதிகள் அளிப்பவருமே மீண்டும் மீண்டும் ஆட்சி அமைப்பர். ஆனால் இதை ஒரு பொருட்டாக விவாதத்திற்காக கூட எந்த ஒரு கட்சியும் எடுக்காது என்பது நிதர்சனம். அளவீடு இல்லாது இருப்பதே இன்று நாம் இந்த நிலையிலேயே இருக்கக் காரணம்.


Monday, May 9, 2016

Enough Is Enough

Everyone needs money n would have seen Italian Job, Ocean 11, 12 & 13 but no one dare to attempt because we are all in fear of getting caught and most with a thought of running rest of our lives with that shame. Then with what trend a girl is being sexually abused by her own relations and strangers. In other way accused can be categorised as known person, VIP and strangers. Way to get rid of a crime is to understand why it is happening because some crime cannot be stopped by punishment alone.

If accused is known person (like her own relatives or school teacher or own cab driver or neighbour) they would’ve done this with a thought like a girl will not shout about this in the name of culture because they know her family and they can threaten the victim. As most of such cases victims are minor. They may not even know the difference between the fields called sex in application and sexual intercourse. So they use their ignorance or fear on society for their pleasure.

In case of VIPs (like politicians or millionaires or big shot’s heirs) they have good value to do that as they have power and money to cover it up so they may not think about any consequences.

If we take 2012 Delhi rape case (as we all heard often without any option) all the accused were strangers and more particularly she died only after 13 days so which means she was alive at the time they threw her out of bus they didn’t try to kill her and cause of death is brutality. Then importantly they didn’t even bother about a boy who came along with her. So in which means they didn’t even think they can get caught as they don’t even have any strong background. This raises too many questions on many cases.

National Crime Records Bureau data (as at 2015) show out of 100 registered cases in India the accused is known to the victim 86 times. So if we teach our princess about difference between good touch and bad touch we can more or less avoid 86% but not that easy as I say. In other way 86% criminals are very well known faces and not anonymous. Notable point is as at 2013 it is 98%

Not able to get the split for remaining 14%, where it’d be better if they maintain as VIP and stranger.

As mentioned earlier if accused is VIP like politician or millionaire’s heir they must be punished without any mercy as they do it because of the power they have and money they own. When it comes to strangers it should be properly investigated as even there are chances of VIPs get involved in such crime, intention of the investigation should be in finding the hidden faces and not letting the accused free.

But amendment made after 2012 Delhi Rape case mostly about the act of penetration of
penis and the word rape has been changed to sexual assault. In case of punishment it still says not less than 20 years but which may extend to imprisonment for life, which means life imprisonment is the last option and no word for capital punishment. Verma committee’s recommendation was not completely taken into consideration but Government stand is like suggestions were not rejected but changes can be made after proper discussion. So until the discussion gets over please be prepared and not sure whether it has been started.

In other hand media took some cases especially brutal one for their TRP and creates a wrong perspective as India is no safe for women. NCRB reports actual rate is 2 per 100,000 people tracked by United Nations and main intention to say this is such a fear should not kill her freedom.


Sunday, March 22, 2015

யாதெனக் கொள்வேன்

கொண்டது யாவும் – யாரும்
கொள் கொள் என தந்தது இல்லை
தா தா என யாசித்து பெற்றதும் இல்லை
கேட்டு பெற வரமொன்றும் இல்லை
இது வாழ்கை!
துச்சாதனன் என துகில் உரிய முற்படும் நேரம்
மறு முனையில் கண்ணன் என்றே வந்து துகில் தருவேன்
இரணியன் என்று ஆர்பரிக்கும் பொருட்டு
பொறுக்காமல் தூண் உடைத்து நரசிமம் பூண்டு
என் அகந்தையை நானே கீறி உருவி உண்டு செரிப்பேன்
தன்னை தானே கொன்று உண்ணும்
நான் என்னை யாதெனக் கொள்வேன்?
நண்பன் அவன் பின் நான் அமர்ந்து
சிரித்து நீண்ட பாதையில் மகிழ்ந்து – உந்தி
வந்த ஊர்தி முன் சென்றதன் பின் மோத
நீத்தான் நண்பன், மீண்டு வந்தேன் நான்
எனக்கு உயிர் தர அவன் முன் அமர்ந்து சென்றானோ
அவனை கொல்ல நான் பின் அமர்ந்து எழுந்து வந்தேனோ
யாதெனக் கொள்வேன்?
சொல்லாதீர் பாவம் வந்து சேரும்
உமக்கு!

Saturday, May 31, 2014

யவன் பாடுவான் இனி கீதம்

வனோ என் தெய்வம்
எவன் துஷ்டன் அவனை கண்டு பொருக்காமல்
அவன் தலை கொய்வானோ அவனென்று ஆகாதோ
தவறுகள் கண்டு துடித்து எழுந்து
முடிந்தவரை முட்டி நான் மாண்டால்
என் பின் எவன் எழுந்து தவறுகள் களைய வருவானோ
அவன் என் குல சாமி ஆகானோ
பலனுக்கென்று பாராமல்
யாவருக்கும் தான் கொண்டது கணக்கிடாது
ஈய்து வாழ்பவன் அன்றோ
பின் இறக்காமல் இருந்துகொண்டே இருப்பவனா இறைவன்
இருக்கும் காலம் தொட்டு
வந்ததின் காரணம் உணர்ந்து கடமை முடிப்பவன் வேறு யாரோ
காணும் உயிரெல்லாம் நானே என்று
களத்தில் காண்டிபம் ஏந்தியவனுக்கு
பாடிய கீதம் தானே நான் மேல் சொன்ன தெய்வம் யாவும்
சொன்னது உணராது சொன்னவன் நாமம் சொல்லி மட்டும் இட்டு
இனம் கண்டு குணம் மறந்து
ஈனமாய் வாழும் இவர் மதி உரைக்க
இனி யார் பாடுவர் எந்த கீதம்?



Saturday, January 25, 2014

இனபடுகொலை

ர் இன மக்களை பூண்டோடு அழிப்பது மட்டும் இனபடுகொலை என்றாகாது. இனத்தின் மொழி, சடங்குகள், பழக்கவழக்கங்கள் என அவ்வினத்தின் அடையாளங்கள், அவ்வினம் இவ்வுலகிற்கு ஈட்டித்தந்த கண்டுப்பிடுப்புகள் என ஒட்டுமொத்தத்தையும் ஏதும் இன்றி செய்து அவ்வின மக்களை உயிரோடு விடுவதும் இனபடுகொலையே.

பதினெட்டாம் நுற்றாண்டுற்கு முன்பு இந்தியாவில் எங்கும் பல்கலைக்கழகங்கள் உண்டோ? அதற்க்கு முன்பு இந்த படிப்பறிவு இல்லாமல் தான் வானவியல் சாத்திரங்கள் வந்தது, இரும்பு கிரேக்கம் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது (இப்போது இருப்பது போன்று இல்லாது இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக இருந்தது).

எல்லா வணிகமும் நல்ல முறையில் நடந்து செழிப்பாக இருந்த அந்த காலக்கட்டத்தில் இங்கு இருந்தவர்களுக்கு முக்கியமாக இன்று இன்றியமையாததாக கருதப்படும் ஆங்கிலம் என்ற மொழி தெரிந்திருக்கவில்லை.

சீனாவின் மிக சிறந்த அறிஞர் லின் யுதங் தன் நூலான தி விஸ்டம் ஆப் சீனா அண்ட் இந்தியாவில் (The Wisdom of China and India) கணித குறியீடு, கணித சமன்பாடுகள் இலக்கணம் புராதன கதைகள், சதுரங்கம் ஆகியவற்றை, இந்தியாவிடம் இருந்து தான் இந்த உலகம் கற்றுக் கொண்டது என்கிறார்.

இங்கே கலை, கணிதம், அறிவியல், வானவியல், வரலாறு, மொழி என இப்போது பிள்ளைகள் தனித்தனியே படிப்பது எல்லாம் ஆன்மிகம் என்ற ஒன்றில் தான் இருந்தது. கோவில்கள் அன்றைய தினத்தில் வழிப்பாட்டு தளங்காலக மட்டும் இல்லாமால் அறிவை போதிக்கும் பாடசாலைகளாகவும் இருந்தது.

உதாரணம், வழிப்பாடு தளங்களில் உள்ள நவ கிரகங்கள் (9 planets), இவற்றை கண்டறிந்தது யார் என கேட்டால் இப்போது உள்ள பிள்ளைகள் சொல்லும் பெயர் கலிலியோ, பதினைந்தாம் நூற்றாண்டிற்கு பின் வாழ்தவர். இந்த நவகிரக வழிபாடு என்பது நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு இருந்து வந்துள்ளது. ஆனால் அறிவியலின் தந்தை என அழைக்கபடும், இதை உரைத்தவரான கலிலியோ பிறந்தது ஆறு நூற்றாண்டிற்கு முன்.

பகுத்தறிவு என்பது அறிவுக்கும் அடுத்த நிலை. நடக்கும் ஒன்று நல்லதாயினும் தீயதாயினும் அவற்றில் உள்ள நன்மை தீமைகளை பகுத்து அறிந்து நல்லதை மட்டும் எடுத்து வாழ்வாதாரத்தின் மேன்பாட்டுக்கு பயன்தருமாறு இருத்தல்.

ஆனால் இங்கு பகுத்தறிவாளிகள் என கூறிக் கொள்வோர் கடவுள் இல்லை என்ற பேச்சால் ஆன்மிகம் சார்த்து இருந்த எல்லா வாழ்வாதார மேன்பாட்டு சடங்குகளையும் தீயிட்டு கொளுத்தினர் செய்வோர் அனைவரையும் மதிகெட்டோர் என்றனர்.

பல நூற்றாண்டாக மாட்டின் சாணம் கொண்டு வாசல் தெளித்து கோலம் இட்டவர்களை கழிவில் இறைவி லட்சுமியா என இழித்து பேசியவர்கள். இன்று அறுவியல் சாணத்தில் கிருமி நாசினிகள் உண்டு என சொன்னா போது ஏதும் பேசவில்லை. இன்னமும் வளராத அறுவியல் சொல்வதை நம்பும் இவர்கள்,  நூற்றாண்டுகளாக வந்த பழக்கங்களை அதின் ஆள் அர்த்தத்தை அறியாதவர்கள், பகுக்க தெரியாதவர்கள் பகுத்தறிவாளிகள்.

நேர்மாறான கூற்று இடாலியில் (பைசா) நடந்தது, கலிலியோ தான் எழுதிய "டையலாக் கண்செர்நிங் தெ டூ சீப் வேர்ல்ட் சிஸ்டம்சில்" என்ற நூல்லில் சூரியன் உலகை சுற்றவில்லை உலகம் தான் சூரியனை சுற்றுகிறது என்ற தன் சூரியமைய கொள்கைக்கு நிறைய ஆதாரங்கள் அளித்தார் . ஆனால் அது போப் அர்பன் VIIIஐ தாக்குவது போல் தோன்றியதால், அவர் புலன் விசாரிக்கப்பட்டு வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார். இது வேறு கதை.

இங்கு பகுத்தறிவாளிகள் செய்திருக்க வேண்டியது, அன்று சில வகுப்பினர் மட்டும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப் படவில்லை. ஆதலால் அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. அவர்களும் கோவிலினுள் சென்று பயில வழி செய்திருக்க வேண்டும். கோவில்களில் உள்ள கல் வெட்டுக்கள் தெரியா வண்ணம் கற்பூரம் ஏற்றுபவர்களை தடுத்தல். அவர்களுக்கு கோவிலின் உண்மையான அர்த்தத்தை புரியவெய்தல் இது எல்லாம் செய்திருந்தால் பகுத்தறிவாளிகள்.

ஆள்பவர்கள் கையாண்டது இரண்டு வழிகளை. முதல் வழி ஆங்கிலயேர் கையாண்ட வழி பிரித்து ஆளுதல் (Divide & Rule) மொழியின் பெயரால் மக்களாட்சி வந்த நேரத்தில் தேசிய மொழியயை எதிர்த்து ஏதோ தமிழுக்கு பங்கம் வருவதாய் காட்டி ஓட்டு சேர்த்தனர். ஒட்டு மொத்த மக்களையும் தேசிய மொழியாக இருக்கும் இந்தி மொழிக்கு எதிராக நிறுத்தினர்.
பல குறுநில மன்னர்கள் ராஜியங்கலாக, வேறுபட்ட பழக்கவழக்கங்களை கொண்டு, வெவ்வேறு மொழிகள் பேசி இருந்த சிறு நிலங்களை ஒரு நாடாக இனைத்து அதற்க்கான ஒரு பொது தேசிய  மொழியாக இந்தி அருவிக்கப்பட்டது. அதனை கற்க விடாமல் தமிழ் மக்களை தனிமைபட செய்து. மத்திய அரசாங்கம், பிற மாநில மக்களுடன் நல் உறவு இல்லாமல் போனதருக்கு காரணமாய் இருந்தது இந்தி எதிர்ப்பு போராட்டம்.

இப்போது அன்று இருந்த தமிழும் இல்லை, தேசிய மொழியும் இல்லை இங்கு. அந்நிய மொழியாம் ஆங்கிலம் தெரிந்தவர்களே அறிவாளியாக சித்தரிக்க படுகிறார்கள்.
இந்தி ஆதிக்கம் செய்யாமல் தடுத்து, தமிழையும் கல்வி மொழியாக தந்திருந்தால் பகுத்து அறிந்து செயல் பட்ட பகுதரிவாளிகளாய் கொண்டாடலாம். இந்தியை எதிர்த்தவர்கள் ஆங்கிலத்தை பள்ளிகளில் மேலோங்க விட்டது எதனால்.

வெளிநாட்டவரின் யோசனைகளை கண்டு வியக்கும் இவர்கள், வேதம் எல்லாம் பொய் என பொதுவாய் தூக்கி எறிந்த இவர்களுக்கு தெரியுமோ இனி வரும் சமுதாயத்திற்கு தெரியுமோ இல்லையோ, அணுகுண்டு எனப்படும் மிக மோசமான கண்டுபிடுப்பு, வெடித்த நாளில் இருந்து பல நுற்றாண்டு காலம் வெடித்த சுற்றளவில் உயிரினம் வாழ விடாது செய்யும் மிக கொடியதும் சக்திவாய்ந்ததுமான இவற்றின் தந்தை என அறியப்படும் ஜெ. ராபர்ட் ஒப்பென்ஐமர் (J Robert Oppenheimer) ஜப்பானில் இரு குண்டுகள் வெடித்த பின் சொன்னா வார்த்தைகள்,

In battle, in the forest, at the precipice in the mountains,
On the dark great sea, in the midst of javelins and arrows,
In sleep, in confusion, in the depths of shame,
The good deeds a man has done before defend him

பகவத் கீதையில் இருந்து.

மற்றொரு வழி, நம் நீண்ட நாள் நம்பிக்கையை பொய் என உரைப்பின், அதற்க்கு நம்பத்தகும் சான்றுகள் கேட்குமிடத்தில் கவனம் குவியும். அப்படி கடவுள் இல்லை என்ற கோசம் உயர்த்தப்பட்டது.


இதனால் திருமூலரின் திரு மந்திரம் (தமிழ் நூல்) பல விஞ்ஞான மெய்ஞான கூற்றுகள் நிறைந்த நூல் ஒதுக்கப்பட்டது.

“அணுவின் அணுவினை ஆதிப்பிரானை
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே
"


இன்று அணுவின் கூறுகளை அன்றே சிவன் மேல் பாடாலாய் பாடியிருந்தார் திருமூலர்.  இவர் வாழ்த்த காலம் ஐந்து முதல் எட்டாம் நுற்றாண்டு முடிய மூவாயிரம் வருடங்கள் வாழ்ந்தவர். தொலைநோக்கி நுண்ணோக்கி போன்றவை வராத காலம், இவை இரண்டும் வந்தது பதினாறாம் நூற்றாண்டுக்கு பின்னரே. இந்த கூற்றை பகுத்து அறிய முடியாத பகுத்தறிவாளிகள் சொன்னது தான் கடவுள் இல்லை என்ற கூற்று.