Showing posts with label ரயில். Show all posts
Showing posts with label ரயில். Show all posts

Tuesday, March 13, 2012

தாயுமானவன் நான்

யிலில் 
என் எதிரில் அமர்ந்து இருக்கும் குழந்தை 
கையை சன்னல் வழி வெளி நீட்ட
அதன் தாயானவள் அதட்டி கை இரண்டை கட்ட வைத்தாள்..
அது கண்டு ரசித்து புன்னகையுடன் தலை திருப்பின்
எதற்கோ அழுகின்ற அந்த குண்டு குழந்தையை 
துக்கி போட்டு, வயிறில் வாய் வைத்து ஊதி
தந்தை சிரிக்க வைக்க போராடிக்கொண்டிருந்தார்..
நானும் இப்படி தான்
திசை மாறி போகும் என் மனதை அதட்டி
அடக்குகிறேன் சில நேரம் தாயாய்
இழந்ததை நினைத்து அழும் பொழுது
தேற்றுகிறேன் தந்தையாய்!
என் மனதிற்கு தாயுமானவனாய் நான்!!!





Saturday, November 5, 2011

குறுக்கு சிறுத்தவள்!


லை கொதிப்பு போல் இவள் இயக்கம் இருக்கும்,
போட்டுத்தந்த பாதையில் மட்டுமே
இவள் பயணம் இருக்கும்,
அதிகம் ஒடிந்து போகமாட்டாள்,
அதிகம் உழைப்பில் களைக்கமாட்டாள்,
அதிகம் சுமப்பாள்,
யார் குருக்கிடினும்
இவள் கூர் வேகம் குறையாது,
இவள் பாதை இவளுக்கு மட்டுமே.
இப்படியும் ஒருத்தி வந்திருக்கிறாள்,
அதுவும் எப்போது என்பதை
எண்ணுதல் ஆச்சரியம் கூடும்.
எந்த பாதையிலும் சென்று,
வருவோர் போவோருக்கு வளைந்து கொடுத்து,
இப்படியாக இருந்தவர்கள் வாழ்த்த காலத்தில்
இவளும் வந்திருக்கிறாள் எனில்
இவளை பெற்றவனை என்னவென்று வைதிருப்பர்!
பலர் சிலாகித்திருந்தாலும்
சிலராயினும் சீன்டியிருக்கலாம்!
ஆனால் இன்று,
அவள் இடுப்பை வளைத்து செல்லும்
அழகை பார்க்கமாட்டார் இல்லை,
தினம் தினம் பார்பவருக்கும்
பரவசம் குறையவில்லை
யாருக்கும் குறையாத அவள் கூர் வேகம் போல்,
விழியில் பிரமிப்பு போகவில்லை
அவளோடு பல முறை பயணம் செய்தும்.
நன்றி மீண்டும் வருக என இரு கரம் கூப்பி
சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறாள்
அவளோடு பயணம் முடித்து
அவரவர் பாதை பார்த்து போவோருக்கு இன்று!
எப்போதோ எவனோ கொஞ்சம் மாத்தி யோசித்திருக்கிறேன்
மண்டைக்காரன் அவன்!

--சித்ரன்

Sunday, March 27, 2011

நீண்ட இரயில் பயணத்தில் ஒரு சிறு காதல்!

நீண்ட இரயில் பயணம்,
சற்றுத் தள்ளி சன்னல் பக்கம் அவள்.
சிறிது தூரம் வரை மோதிக்கொல்லத்தான்வில்லை,
எங்கள் இரு விழிகள்!
யாரோ ஏதோ சொல்லக் கேட்டு நானும் சிரிக்க,
அவளும் என்னோடு கண் கலக்க,
இருவரும் ஒருவர் பால் ஒருவர் ஈர்க்க,
தொடர்ந்தது பயணம் மோதிக்கொண்டு!
கொஞ்சம் கொஞ்சமாய் விலகி நின்றேன்,
நண்பர்கள் அரட்டையில் இருந்து!
அவளும் கொஞ்சம் சிரிப்புமாய்,
கொஞ்சும் பார்வையுமாய்,
தோழிகளையும் என்னையும் பார்த்துக் கொண்டாள்,
அவை அடக்கமாக!
பேச்சுக்கள் வெட்டி வெட்டி போடப்பட்டன,
காற்றில் கலையாத முடியை
எனோ கைகள் சரி செய்து கொண்டே இருந்தன!
பேச்சிலே சேராத அவள், தூங்குவோம் என்றதும்,
இன்னும் கொஞ்சம் பேசுவோம் என்ன கெஞ்சினாள்!
ஒவ்வொரு முறை அவள் பார்வை என் மீது போர்த்தும் போதும்,
ஏதோ என்னிடமே தேடிப்பார்த்துக் கொண்டேன்!
கொஞ்ச நேரம் சன்னல் பக்கம் பார்வை போயினும்,
எதோ தொலைத்தவன் போல் பதறிப் போய் அவள் பக்கம் தேடினேன்!
தோழிகளின் தோள்களுக்கு இடையே இருந்து,
நடக்கும் வழியில் விழியால் நடந்து,
என் கண் வீடு அடைவாள் ஒவ்வொரு முறையும்!
வருவது தான் தொலைவு போல,
போவது சட்டென போய் சேர்த்து விடுவாள்,
யாரேனும் அவள் பேர் சொன்னாள்!
வந்து வந்து போய்கொண்டு இருந்ததில்,
நேரம் என்ன நொண்டியா..?
வேகமாக ஓடியது,
உறங்க போனோம் ஒன்றாக,
இரு குழுவும் தனித்தனியாக,
வேகமாக ஓடிய நேரம் எனோ நொண்டித்தான் நகர்ந்தது! 
விடுந்தும் விடியாமலும் எழுந்து
கதவோரம் காற்று வாங்கும் சாக்கில் நகர்ந்தால்
அங்கும் வரும் அசட்டு நண்பர்கள்!
தலை கொஞ்சம் மறைந்ததும்,
மறு கதவோரும் வந்து நின்று பார்வை போர்துவாள்...
என நான் நிற்க,
முடுச்சுகளோடு புடை சூழ இறங்கி நடந்தாள்,
அவள் பயணம் முடித்து!
இதுவும் காதல் தானே,
அவள் கடந்து போனதும்,
அவள் கொலுசு சத்தம் போல்
கனமில்லாமல் காற்றில் கசிந்து கரைந்து மறைந்து போனது,
அவள் பெயர் கூட நினைவில் நிற்க்காமல்!