Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Thursday, March 29, 2012

என்னோடு என்னைக்கொல்லும் துரோகி



கண்கள் விழிக்கவே வெறுப்பாக இருந்தது. இருத்தும் விழித்து விட்டத்தை பார்த்தவாறே படுத்திருந்தான். கண்கள் கலங்கின. வெறுப்போடு அதை துடைத்து எறிந்தான். முகம் முழுக்க வெறுப்பு தொற்றிக்கொண்டு இருந்தது.

அப்போது தான் வந்தான் உள்ளே அவன். இன்னும் அதிக நிசப்தம் அந்த அறையில் நிலவியது. வந்தவன் முகத்தை பார்க்கக் கூட விரும்பாதவனாய் மறு புறம் திருப்பிக் கொண்டான்.

சில நிமிடங்கள் நிசப்தத்தோடே நகர்ந்தது. இன்னும் வெறுப்பு ஏறி முகம் சிவக்க அவனை பார்த்து கத்தினான்..

எங்க டா வந்தே?? உன்ன எல்லா.. இச்ச. பாரு இப்போ தினமும் என் முஞ்சி மாறுது. முன்னாடி எல்லாம் சொல்லுவியே கண்ணாடியே பார்த்து தல சீவிவிட்டு வான்னு. அப்போ எல்லாம் அதை பார்த்ததே இல்ல. ஆனா இப்போ தினம் தினம் .. ஒரு நாளிக்கே பல தடவ பார்க்கறே.. அப்டியே தா..

சொல்லி முடிக்கும் முன்னரே குரல் தழுதழுத்தது. கொஞ்சம் ஆசுவாசம் படுத்திக்கொண்டு மூக்கை துடைத்துக் கொண்டு தொடர்ந்தான்

அப்டியே தான் இருகேனானு... தலைய கோதின கையில அவ்ளோ முடி சின்ன புன்னகைக்கு பின் தொடந்தான் இந்த இதுக்கு எத்தன கடை ஏறி.. எந்த எந்த சலூன்.. கிரீன் இட்டிரேன்ஸ்...இச்ச...

தலையில் அடித்துக் கொண்டு தொடர்ந்தான்.. கண்கள் கலங்கிய படி..

வாயால சாப்பிட்டு எத்தன நாள் ஆச்சு தெரியுமா? காலைல சரியா பாத் ரூம் கூட போக முடியல.

இடைமறிக்க முயன்றவனை பார்த்து, கண்களை வேகமாக துடைத்துக் கொண்டு எழுந்து உட்கார்த்து

டேய் பேசாத சாவடுச்சுடுவேன்

 கைகள் உதற ஆரம்பித்தன, மேல் மூச்சு வாங்கியது. மீண்டும் மீண்டும் கண்ணில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே இருந்தான். வந்தவனுக்கு ஏது சொல்வது என்று தெரியாமல், வெளியே போகவும் தோணாமல் பேச்சு வாங்கியப்படி நின்றிருந்தான்.

எங்கே வலிக்குதுனே தெரியாது. ரொம்ப நேரம் தூங்கினா எங்கே செத்து போய்டேனோனு தூக்கத்திலயே பயமா இருக்கு. சொல்லிக்கொண்டே வெறுப்போடு அவனை ஒரு பார்வை பார்த்தான். வந்தவனுக்கு கைகள் விறைத்து போய்விட்டிருந்தது. வந்தவன் முகத்தை பார்க்க பார்க்க இவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. கத்ததத் துவங்கினான்.

எப்டி டா உனக்கு எல்லா ஒன்னும் ஆகல.. நல்லா இருக்க.. ஏன்டா இப்டி எல்லாரையும் சாகடிக்கறீங்க. தூ.. இதே மாதிரி எத்தன பேரை சாகடிச்சிருப்ப.. உன்ன மாறி ஆளுங்கள கொன்னா என்ன?”

சத்தம் கதவுகளை தாண்ட, வெளிய அமர்ந்து இருந்த செவிலி உள்ளே ஓடி வந்து அவனை அமைதியாக்கினாள். வந்தவனை அந்த அறையை விட்டு வெளியே கூட்டிச் சென்றாள்.

நீங்க தான் அவர் ரூம்மெட்டா?”

ம்ம்

சிகரெட் பழக்கம் இருக்கா?”

ஆமா, ஆன..

அவர் சும்மா செக் அப் வந்தப்ப டாக்டர் அவருக்கு பழக்கம் இல்லை அப்டிங்கரத நம்பவே இல்ல. போக போக தான் தெருஞ்சது பெசிவ் ஸ்மொகர் அப்டினு. மத்த புகை எல்லாம் ஒரு பக்கம்ன.. இது வேற மாதிரி சார். நீங்க இழுத்து வெளியே விட்டுருவீங்க ஆனா பெசிவ் ஸ்மொகர்ஸ் அத உள்ள இழுகரதொட சரி வெளிய வராது. புரியுதுங்களா?”

மேற்கொண்டு அவனால் ஒன்றும் கேட்க முடியவில்லை. முகத்தை மறைத்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வேகமாக வெளியே நடந்தான். வழியில் யாரோ ஒருவர் புகைதுக்கொண்டு இருக்க அருகில் நின்றிருந்த கர்பஸ்திரியையும் ஒரு நொடி நின்று பார்த்து நடந்தான்.

Saturday, January 21, 2012

உடைந்து விழும் முதுகெலும்புகள்

ன்றரை ஏக்கர் நிலம், நாலு மாத உழைப்பு... மொத்த வருமானம் ஒன்பதாயிரம். இது உண்மை சம்பவத்தின் தழுவல் அல்ல, உண்மை.

சனிக்கிழமை மதியம் மணி மூன்று முப்பத்தி ஐந்து கை பேசி அழைப்பு மணி ஒலிக்கத் துவங்கியது. எடுக்க போகும் அவன், சேலம் அருகே பெயர் சொன்னால் தெரியாத ஒரு சிறு கிராமத்தில் பிறந்து தமிழகத்தின் தலைநகரில் தன் குடும்பம் தலைக்க எங்கோ உலகின் வேறு ஒரு கோடியில் இருக்கும் ஒரு நிறுவனத்திற்கு இங்கு அமர்ந்து வேலை பார்க்கும் பொறியியல் பட்டதாரி.

சாமி சாப்டியா? ஒரு தாயின் வழக்கமான கேள்வி, அவளுக்கு ஹலோ எல்லாம் தெரியாது.

ம்ம்ம், நீ மா..?

ஆச்சு பா

சொல்லு மா

அது ஒன்னும் இல்ல, இந்த தடவ நடவு ஒன்னும் செரியாவரலையா... இரு நொடி இடைவெளி விட்டு தொடர்ந்தாள்.
அது ஏதோ கடைசிய மிசின் வெச்சு அறுத்ததால ஒரு ஒம்பதாயிரம் நின்னுருக்கு.

எ.. ஒம்பதாயிரம் தானா, என்ன ஆச்சு.. ஏ..?

போன தடவ வந்தப்ப சொன்னா இல்ல, இங்கிலீஷ் பூச்சி மருந்து எல்லாம் வேணாம். எதோ தெருஞ்சவங்க ஏழு வயசு புள்ளைக்கு இரத்தத்துல கான்சரு, இந்த நடவுல கண்ட மருந்தெல்லாம் வேணாம்னு.

ஆமா

புறவு எல்லாம் நம்ம மஞ்சலு, வேப்ப கோட்டை தான் போட்டது. ஆனா சுத்துபாட்டுல பாரு எல்லாரும் அந்த இங்கிலீஷ் மருந்துதானே தெளிக்கராவுக. பின்ன எல்லா பூச்சியும் நம்ம நெல்ல கடுச்சு புடுச்சு. அதுனாலத்தா பா

இப்ச்

இரு உங்க உங்க அப்பா பேசுறாரு.. மாமா இந்தாங்க

என்னடா, இனி எல்லா நடவு நிறுத்திடலாமா... ம்ம்ம்?

என்ன பதில் சொல்ல என யோசித்த வாரே உதடு கடித்தான்.



இவன் பதில் எதிர்பாராமல் தொடர்ந்தார் நடவு செலவு, மோட்டாரு, கரண்டு அது இதுன்னு பதினஞ்சு ஆச்சு மொத்தம், நாலு மாசத்துக்கு. பின்ன வந்தது அப்டினா இருவத்தி நாலு. அதுதா அறுவடைக்கு ஆள் விடாம மிசின் வேச்சதால பதினஞ்சு ஆச்சு இல்ல இந்த ஒம்போது வந்திருக்காது

ம்ம்ம்ம்
ஆளுக்கு இருநூத்து ஐம்பது கேட்கரானுங்க. அதுவும் சரி தான் பஸ், பால் கண்டது கலிதுனு விலை ஏறிடுச்சு இல்ல. உனக்கு அங்க பரவால இல்ல. நல்ல இருக்க இல்ல நீ?

ம்ம்ம்.. நல்லா இருகேனுங்க பா

பேசி முடித்ததும் அந்த பதில் தெரியாத கேள்வி தான் ஓடியது அவன் காதுகளில்.

என்னடா, இனி எல்லா நடவு நிறுத்திடலாமா... ம்ம்ம்?
நவதுவாரங்கள் இருந்தும் அது அவன் மனதில் மோதி மோதி எதிரொலித்தது.

தான் படிக்காது விவசாயத்தில் இருந்திருந்தால் இன்று?

நாலு மாத வருமானம் ஒன்பது ஆயிரம் தான் என்றால் இன்று என்ன சாப்பிட்டிருக்க 
முடியும்?

இப்படி நடவு நிறுத்தினால்.. நாளை விவசாயம் என்ன ஆகும்?

ஒரு மனிதனை கொன்றால் தான் இன்னொருவன் வாழ முடியும் என்கிற  நிலை ஏன்?
உலக நாடுகள் எல்லாம் தடை செய்த பூச்சி மருந்தை. இந்தியாவில் கேரளா மாநில விவசாய்கள் போராடி வேண்டாம் என்ற மருந்தை தானும் வேண்டாம் என்றதன் விளைவா இது?

ஒவ்வொரு விவசாயி இறக்கும் போதும், இப்படியாக விவசாயம் நிறுத்தப்படும் போதும் நம் வாழ்நாளில் ஒவ்வொரு வேலை உணவு குறைகிறது என்பதை நாம் உணர வேண்டிய நாள் கடந்து பல வருடம் ஆகியும் இன்னும் இதை பெரியதாய் கருதாதது ஏன்?

மேலும், இன்றையில் இருந்து ஒன்பது வருடங்களுக்கு முன்பு வரை தொழில்’ (occupation) என்ற கேள்விக்கு விவசாயம் (agriculture) என்றே இருந்தது நான் பூர்த்தி செய்த படிவங்களில் எல்லாம். ஆனால் அப்பா இறந்த பின்பு, இன்று மாறிப் போய் இருக்கிறது தனியார் (Private) என்று.

--சித்ரன்