Thursday, October 16, 2014

யாதாக்குவாயோ!

த்தனை முறை தான் சிரித்திட முடியும்
கண்ணில் பொங்கிடும் அழுகையை அடக்கி
நீ நான் எனபது எல்லாம் போக நாம் என்று ஆனபின்
மீண்டும் நான் ..
நீ விட்டு போவாயானால்
பத்து தலை இராவணன் என உனை கொண்டுவருவேன்
உன் தேவை எதுவாயினும் அதை நிவர்த்தி செய்திட
பத்து அவதாரமேனும் எடுப்பேன்
என்னில் உறங்கிக்கிடக்கும் தெய்வத்தை தட்டி எழுப்பி
ஊன் கொடுத்து வாழவைப்பதும்
வெளியே தெரியும் மிருகத்தை சீண்டி விட்டு ரசிப்பதும்
உன் இதழ் பேசும் மொழியன்றோ
இன்னும் என்னை யாதாகி ரசிக்கப்போகிறாயோ!