Sunday, October 2, 2011

என்னவள்!

லையில் விழும் நீரானது -
அங்கத்தோடு தழுவி அங்கங்கே தங்கிச் செல்வது போல்,
என் சிந்தையோடு தழுவி என்றும் தங்கிடுதல் அவள் ஆகுமோ!
பார்த்ததும் விழச் செய்திடும் அழகான அகண்ட கண்கள்
அதன் மேல்சீரான புருவமும், கூரான நாசியும் கொண்டு,
தாரான கூந்தல் முதுகு தாண்டி தொட்டிட்டால் அவள் ஆகுமோ..?
அதன் முன்புறம் அவள் அழகு கூட்டினல்
அவள் நகைக்க, இதழ் நினைக்க என் தொண்டை வற்ற செயல் அவளேன்றாகுமோ?
அடிமேல் அடி வைத்து அவள் நடக்க
என் காலம் நின்றுவிட்டால் அவளேன்றாகுமோ?
என் தவறினை ரசித்துத் திருத்திட்டால் தெரிந்திடுமோ அவள் என்று!?
இது எல்லாமோ நான் பார்ப்பேன்,
கோவம் கொள்ளும் வேளையில் என்னை போ எனச் சொல்லி,
மார்போடு சாய்ந்து அழும் அவளுக்கென்ன!
வர வேண்டாம் என சொல்லி எனக்காகக் காத்திருக்கும் அவளுக்கென்ன!
சிரித்தாலே மறைத்திடும் விழியானாலும்
எங்கிருந்தும் என்னை குத்திடும் அவளுக்கென்ன!
என்னை போல் என் மேல் காதல் கொள்ளுதல் போதாது
அவள் என்னவள் என நான் உணர்ந்திட!