Saturday, November 16, 2013

வா!

ன் அழகை என் கர்வத்தில்
கணக்கிட்டு கொள்ளும் தனித்துவமான என் அழகே
நீண்ட தூரம் நீ சென்று விட்ட போதும்
பேசாமல் நாட்கள் கடந்து போகின்ற போதும்
இன்னும் என் கண்கள் உன்னை காண்கிறதே
என் செவியில் உன் சிரிப்பின் இசை ஒலிக்கிறதே
இரவுகள் கலைந்தாலும்
கண்களில் கனவுகள் உரைகிரதே
யாரென்னை அழைத்த போதும் திரும்பவில்லை நான்
உன் பெயர் வரும் திசை திரும்ப மறக்கவில்லை
யாவரும் தேடும்படி
என்னை நான் துலைத்துவிட்டேன்
உன் கண்கள் என்னை துளைத்தவுடன்
மீண்டும் எய்துவிடதே உன் பார்வையை
இப்போதே இரண்டாக உணர்கிறேன் நான்
இன்னும் என்னை உடைக்காதே
உன்னை அள்ளி அணைக்கையில் ஒட்டிக்கொள்வேன்
வெட்க்க அணையை உடைத்துவிட்டு வா
நீல வானத்தில் மேகம் அள்ளி தெளிப்பேன்
இந்நாள் வரை உன் முகம் காட்டிய
அந்நிலவை கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்வேன்
நீண்ட நிலத்தில்
அடர்ந்த காடுகள் தேடி புற்கள் பறித்துப்பரப்பிவிடுவேன்
உன்னோடு கிடந்து அந்த வானத்தில் மேகம் கலைத்து விளையாடிட
வா!


Monday, November 11, 2013

மிருகம்

சி இருக்கு
சாப்பிட சோறும் இருக்கு
ஆனா சாப்பிட தோனல
நல்லா தூக்கம் வருது
போய் கிடந்து படுத்தா பாதி ராவுல தூக்கம் களையுது
எல்லா சரியா இருக்கு
ஆனா ஏதோ குறையற மாறி இருக்கு
நல்ல பாட்டு கேட்டு
நல்ல நண்பன்கிட்ட பேசி நாள் கலியுது
இன்னு என்னவோ விட்ட மாறியே இருக்கு
இது காதல்னு சொன்னாங்க
ஆனா அது இல்ல ..
முடிக்க வேண்டியது ஒன்னு மிச்சம் இருக்கு
எவனோ ஆரம்பிச்சு வெச்சது இன்னு தலையில கிடக்கு
குரோதம் உள்ள இருக்கு
எல்லா விட்டு போக நானின்னு போதி மரம் பக்கம் போகல
மனுசனா பாக்க தெரிஞ்சாலு ஆதி மிருகம் தானே
இன்னிக்கு கடவுள் மனுசனா வந்து மன்னிக்க கத்துக்கொடுத்தாலு
ஆதில கத்து கொடுத்தது இந்த மிருகம் தானே
அடுச்சது தலைல இல்ல எல்லா மறந்து போக
முதுகுல குத்தினது மருந்து போட கைகூட எட்டல
மூணு தலைமுறை முன்னாடி கடந்த பாதைய கூட மறக்காது
குத்தினவன் முகம் மறக்குமா...




பிழைக்க வழி

சொந்த மண்ணில் பிழைக்க வழியில்லாமல்
என்றோ மனைவியை மீட்க கடந்த அந்த கடல் கடந்து
ஆண்டுகள் நூத்துக்கு மேல் அங்கு  வேர் ஊன்றி
உரிமைக்காக ஏங்கி
உறவை இழந்து
உரிமைக்காக ஆயுதம் ஏந்தியவர்கள்
ஒவ்வொருவராக மடிய
போராடியவர்கள் போர் குற்றவாளிகளாக
அவர்களுக்கு உரிய உரிமையும் இல்லாமல்
இழிவாகக் கொல்லப்பட்டு
மிஞ்சிய மக்கள்
இன்று சொந்த மண்ணிலும் திறந்தவெளிச் சிறையில்
இன்னமும் வாழ வழியில்லாமல்
காலம் கழிக்கும் அவர்களுக்கு
தமிழ் தமிழ் என முழங்கி ஆட்சி பிடித்தவர்கள்
மத்தியில் கிடைத்த பங்கிற்கு விலை போய்
மொழிக்கு ரயில் மறியல் செய்தவர்கள்
அம்மொழி பேசும் மக்கள் மானம் இழந்த போது
மொழியை செம்மொழியாக்கி மார்தட்டியவர்களா
நியாயம் பேசுவார்கள்?
ஆள்பவர்கள் ஆளுக்கு ஒரு தொலைக்காட்சி நிலையம் வைத்திருந்தும்
தம் மக்கள் அவலம் ஏதும் சொல்லாமல்
தீபாவளி பொங்கலுக்கு சிறப்பு படங்கள் மட்டும் நிறுத்தாது போடவர்களா
நியாயம் பேசுவார்கள்?
அவலங்கள் பதித்த குருந்தகுடுகள் வெளி வராது
வெளியிட்டவர்களை தண்டித்து
போராடியவர்களை கைதி செய்து
தம் மக்களை எரித்தவர்களின் கொடியை எரித்தது குற்றம் என்றனர்.
தமிழ் பேசி கட்சி வளர்த்த இவர்கள் மறைக்க நினைத்த
ஒவ்வொரு காட்சியையும் உலகிற்கு காட்டி விட்டது
ஆங்கிலம் பேசும் தொலைக்காட்சி!
தமிழை டமில் என்று உச்சரிபவர்கள் தான் இன்று குரல் கொடுக்கின்றனர்
தமிழர்களுக்காக..
புலம்பெயர்ந்தவர்களை கொல்ல ஆயுதமும் ஆட்களையும்
தந்து தந்து உதவியவர்களா போர் முறை தவறியவர்களை தண்டிப்பார்கள்?
தன் மண்ணில் பிழைக்க வழியில்லாமல் சென்ற
சொந்த மகள்களை பலாத்காரம் செய்ய பயிற்சி அழித்தவர்களா
நியாயம் பேசுவார்கள்?
சுதந்திரத்தின் போது கொடுத்த அத்துணை வாக்கையும்
ஆண்டுகள் உருண்டோடியும் தலைகள் பல உருண்டும்
சொந்த மண்ணிலேயே கைதிகளாய்
எந்த நடத்தைக்கும் சந்தேகத்துக்கு உரியவர்களாய்
தினம் தினம் சொந்த கஷ்மீர் மக்களையே ஏமாற்றி வரும்
இந்த இந்தியாவா புலம்பெயர்ந்தவர்களுக்கு பிழைக்க வழி சொல்லிவிடும்?