Saturday, May 31, 2014

யவன் பாடுவான் இனி கீதம்

வனோ என் தெய்வம்
எவன் துஷ்டன் அவனை கண்டு பொருக்காமல்
அவன் தலை கொய்வானோ அவனென்று ஆகாதோ
தவறுகள் கண்டு துடித்து எழுந்து
முடிந்தவரை முட்டி நான் மாண்டால்
என் பின் எவன் எழுந்து தவறுகள் களைய வருவானோ
அவன் என் குல சாமி ஆகானோ
பலனுக்கென்று பாராமல்
யாவருக்கும் தான் கொண்டது கணக்கிடாது
ஈய்து வாழ்பவன் அன்றோ
பின் இறக்காமல் இருந்துகொண்டே இருப்பவனா இறைவன்
இருக்கும் காலம் தொட்டு
வந்ததின் காரணம் உணர்ந்து கடமை முடிப்பவன் வேறு யாரோ
காணும் உயிரெல்லாம் நானே என்று
களத்தில் காண்டிபம் ஏந்தியவனுக்கு
பாடிய கீதம் தானே நான் மேல் சொன்ன தெய்வம் யாவும்
சொன்னது உணராது சொன்னவன் நாமம் சொல்லி மட்டும் இட்டு
இனம் கண்டு குணம் மறந்து
ஈனமாய் வாழும் இவர் மதி உரைக்க
இனி யார் பாடுவர் எந்த கீதம்?