Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sunday, August 11, 2019

Unity vs. Uniformity

மிழ் நாட்டுக்கு இங்கே இருக்கற காவேரியே வராது காஷ்மீர் பிரச்சனையா வந்திட போகுது. ஆனாலும் நம்ம ஆளுங்க அடுச்சு விடறாங்க, போன வாரம் வேலையின் போது வேலை ஏதும் செய்யாம article 370 நீக்குனது செம அது இதுனு  ஐநா சபை அதிபர் மாறி பேசுனாங்க. காஸ்மீர்ல இதுவரைக்கும் பாக்கிஸ்தான் நியூஸ் மட்டும் தான் வருமாம் அதுனால தான் இவ்ளோ பிரச்சனையாம் இனி அப்படி இருக்காதாம்.

ஏதோ தனியாக கிடந்த காஷ்மீரை இன்று இந்தியாவோடு இணைத்து பாஜக போல தான் பேச்சுகள் பரவுகிறது ஆனால் உண்மை, இந்திய சுதந்திரத்தின் போது தனி தனி மாகாணங்களை தனி நாடாகலாம், இல்லை இந்தியா அல்லது பாகிஸ்தானோடு இணையலாம்மென இங்கிலாந்து சொன்னது அப்போது அவசரப்பட பாகிஸ்தான் காஷ்மீரை பிடிக்க  கொரில்லா தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவத்தின் உதவியோடு பாகிஸ்தானை எதிர்த்தது காஷ்மீர். பின்னர் இந்தியாவோடு இனைய  சலுகைகள் அளிக்கப்பட்டது அது ராணுவம், வெளியுறவு துறை, தகவல்தொடர்பு  மூன்றை மட்டுமே இந்திய அரசு காஷ்மீரில் நிர்வகிக்க முடியும் மற்ற துறை, அது சார்ந்த சட்டங்கள் காஷ்மீர் மக்கள் பிரதிநிதிகளால்  இயற்றிக்கொள்ளப்படும். இது தான் அந்த article 370. இதில் பல ஆண்டுகளாகவே மாற்றங்கள் செய்யப்பட்ட வந்திருக்கிறது.

இப்போ யோகியின் பாஜக அந்த 370'ஐ தான் நீக்கிருக்காங்க. அதுவும் அந்த ஊரில் இருக்கிற மொத்த தொலை தொடர்பையும் நிறுத்திவிட்டு. மொபைல் மட்டுமில்லை லேண்ட் லைன் கூட கிடையாது. ஒட்டு மொத்த மக்களையும் அடக்கி வீட்டில் பூட்டிவிட்டு இதை செய்ய வேண்டிய கட்டாயம் என்ன? இப்படி மொத்த காஷ்மீரையும் சில நாட்களில் தன் கட்டுப்பாடில் கொண்டு வர முடிகின்ற அரசால் புல்வாமாவில் வந்த வெடி குண்டை ஏன் கோட்டை விட்டது?

இப்போதும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரை மீட்போம் என்று மட்டுமே சொல்லி வருகிறது ஆளும் பாஜக, சு.சாமி உட்பட. எம்.ஜி.ஆர் தலையை போல இருந்த காஷ்மீர் பல ஆண்டுகளாக ஸ்பைக் வைத்தது போல் மாறிவிட்டது. ஒரு புறம் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு மறுபுறம் சீனா ஆக்ரமிப்பு. மீட்பது எனில் இரண்டையும் மீட்க வேண்டும் ஆனால் இந்தியா இங்கிலாந்து கிரிக்கெடை வீட இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெடில்  தான் நம் தேச பற்று அதிகம் பீறிட்டு வெளிவரும். அந்த காரணமோ என்னவோ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை மட்டுமே பேசி வருகிறார் 56" பிரதமர்.

மொத்த இந்தியாவுக்கும் ஒரே ரேசன் அட்டை என்பது போல் ஒரே மொழி, கல்வி, மதம், தலைவன் என மாற்றவே இது நடப்பதாக தெரிகிறது. இந்த போக்கு சர்ச்சிலின் வார்த்தையை உண்மையாக்கிவிடும்.  இதை இந்திய அரசியல் அமைப்பு 42ம் திருத்தமான மதசார்பற்ற நாடு என்பதை முதலில் மாற்றிவிட்டு மற்ற அரபு நாடுகள் போல இதை இந்து நாடு என அறிவித்துவிட்டு செய்யலாம், பொருத்தமாகவும் இருக்கும், அப்போது கேள்விக்கு இடமிருக்காது. Unity is different from uniform ...


Sunday, July 7, 2019

தக்கன பிழைத்து வாழ்தல்

புறநானுறில் இருந்து சில வார்த்தைகள் இப்போ மொத்த பட்ஜெட்டும் அழகா தெரியுது. ஓட்டு வாங்காமா அமைச்சர் ஆனதுக்கு என்ன செய்யமுடியுமா செமயா செஞ்சுட்டமா. தமிழகத்தில் தாமரை மலர என்ன செய்யனுமோ அதை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். எங்க பார்த்தாலும் wow, செம, தமிழ் வாழ்க தான்..

ஆனா உண்மை, 2014ல கச்சா எண்ணெய் $80 - $90 அப்போ இங்கே பெட்ரோல் 70-₹80 .. இப்போ கச்சா எண்ணெய் $40 - $ 50 பெட்ரோல் அதே 70 - ₹80 சில நாள் அதுக்கு மேல. 2014 வரைக்கும் மானியம் தந்து பெட்ரோல் விலைய கட்டுப்பாடுல வெச்சிருந்தாங்க. மோடி வந்ததுல இருந்து அது தேவையில்லாம இருந்துது. இப்போ இத்தனை வரிகளும் போதாதுன்னு மேல 1 ஏத்திருக்காங்க.


கடந்த ஐந்தாண்டுகளில் பெட்ரோல் விலை மாற்றத்தால் விலைவாசி ஏறவில்லைனு கூப்பாடு போடறாங்க. ஆனா உண்மை ஏறின விலைவாசியை பத்தி எந்த ஊடகமும் பேசவில்லை அதனால விலைவாசி ஏறலைன்னு அர்த்தமில்லை. உதாரணம் கார் விற்பனை சரிவு. பொதுவாக மாதாந்திர செலவுகள், சொந்த வீடு என எல்லாம் நிறைவுறும் போது மக்கள் சிந்திக்கும் செலவு கார். இதன் விற்பனை சரிவை மொத்த விலை வாசி ஏற்றத்தை பிரதிபலிப்பதை காட்டுகிறது.


அடுத்து, அந்நிய முதலீடு இதை தான் அதிகமா பேசினாங்க மோடி ஒவ்வொரு முறை விமானம் ஏறும்போதும். இப்போதும் சில்லறை வர்த்தகத்தில் தாராளம் காட்டியுள்ளது. இப்படி அந்நிய முதலீடு என்ன செய்யும்னு தெரியணும்னா Thums up குடிக்கணும். 1977ல் Coke இந்தியாவை விட்டு வெளியேறியது. அந்த காரணமும் சுவாரசியமானது. அப்போதைய சட்டம் coke தயாரிப்பு முறையை கோரியது மேலும் அதனின் 60% பங்கை இந்திய நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்றும் சொன்னது. அதனால் இந்தியாவை விட்டு வெளியேறியது Coke.


1977ல் Thums Up அறிமுகமானது. அப்போது Gold Spot, Limca,  Campa Cola, Double Seven, Dukes போன்றவையும் இருந்தன. 1991ல் உலகமயம், பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் கதவுகள் திறக்கப்பட்டது Pepsi வந்தது. அதை தொடர்ந்து வந்த Coke அன்றைய 77% சந்தையை கையில் வைத்திருந்த Thums Up'ஐ மொத்தமாக வாங்கி விழுக்கியது. இருந்தும் Thums Up வாங்குபவர்கள் Pepsi பக்கம் போய்விட கூடாது என்பதற்காக மீண்டும் அதை சந்தைப்  படுத்தியது. 


Start Up - புது தொழில் முனைவு.. இதற்கு சில திட்டங்களை சொல்லிவிட்டு சில்லறை வர்தகத்தில் அந்நிய முதலீட்டை தாராளம் செய்தால் 77% சந்தையை கொண்ட Thums Up'ஐ வாங்கி விழுங்கியவர்களுக்கு Start Up எம்மாத்திரம். மொத்தமாக இந்தியர்கள் வெளி நாட்டு முதலாளிக்கு வேலை செய்ய வேண்டும் அதற்க்கு பெரும் ஊதியத்தில் அதே வெளி நாட்டுகள் விற்கும் பொருட்களை வாங்க வேண்டும்.



'தக்கன பிழைத்து வாழ்தல்' இது சட்டுனு புரியாது இதையே தான் 'survival of the fittest'னு புரியற மாறி சொல்லுவாங்க. இந்த அந்நிய முதலீடுகளுக்கு முட்டு கொடுக்க இதை சொல்லலாம். அப்படி எடுத்துக்கொண்டால் தெருவில் தாலி ஆறுப்பவன், வீடு புகுந்து கொள்ளை அடிப்பவன் இப்படி எல்லாவற்றையும் குறை சொல்லி கைது செய்யக்கூடாது. They are the Fittest.

சீக்கிரம் படிச்சு பட்டம் வாங்கிடணும், சீக்கிரம் நிறைய சாம்பாதிக்கணும், சீக்கிரம் செத்தர்னும். ரெண்டு மணிநேரதுக்கு 10,000 கோடி சேலம் - சென்னை 8 வழி பசுமை சாலை. இந்த காசுல எத்தனை ஏரி, குலங்களை தூர் வாரியிருக்கலாம்? கடல் நீரை குடி நீராக்க பயன் படுத்தலாம். தண்ணீர், உணவு இதை அடுத்து தான் எந்த வளர்ச்சியும்.


நேரடி வரி, மறைமுக வரி: இந்த நேரடி வரியை அதிகப்படுத்தி மறைமுக வரியை குறைக்க வேண்டும் அது தான் வளர்ச்சி. தனி நபர் நேரடி வரியை குறைக்க வில்லை ஆனால் பெருநிறுவனங்களுக்கு வரியை குறைந்திருக்கிறது. 250 கோடி வரை விற்றுமுதல் (Turnover) செய்யும் நிறுவனம் 30% அல்லாது 25% வரி செலுத்தினால் போதும் என்பதை 400 கோடியாக உயர்த்தி உள்ளது. இதனால் 99.3% நிறுவனங்கள் பயனடையும்.  அதாவது 0.7% தான் டாடா, அம்பானி, அதானி போன்ற பெரிய முதலைகள்.


மறைமுக வரி என்பது GST. கூலி தொழிலாளியும், அந்த 0.7% உள்ள பெரு முதலைகள் இந்த GST கட்டியே ஆக வேண்டும். உதாரணம் இப்போது பெட்ரோலுக்கான ₹1 வரி இது TVS 50 வைத்திருப்பவருக்கும், Maserati வைத்திருப்பவரும் கட்டியே தீரவேண்டும். இதை குறைத்து பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் பயனடைய கோடிகளில் லாபம் ஈட்டும் நபர்களிடம் அதிக நேரடி வரி வாங்கி சமம் செய்ய வேண்டும்.

இந்த வகை வரி விதிப்புகள் ஏதும் இல்லாததனால் இதுவும் வழக்கமான கார்பொரேட் பட்ஜெட் தான்.


Sunday, January 6, 2019

அமெரிக்க கனவு


முப்பது வயதை கடந்த எல்லோரும் எதிர்க்கொள்ளும் பொதுவான கேள்வி ‘எப்போ தான் கல்யாண சாப்பாடு போடுவே?’ என்பது போன்று இப்போது வேலை கிடைத்தவுடன் எதிர்கொள்ளும் கேள்வி ‘வெளி நாடு போக ஏதும் வாய்ப்பு இருக்குமா?’ பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எல்லாம் வெளி நாடு என்றாலே அமெரிக்கா தான் என இருந்தது இன்னமும் தென் அமெரிக்க நாடுகளுக்கு இந்த கனவு உண்டு.
அப்படி எந்த கனவும் இல்லாத எனக்கு அது நினைவானது. அதற்க்கான முதல் வேலை, விசா

விசா :
‘சாமி நான் எல்லா உங்க வீட்டு உள்ள  வர கூடாதுங்க’ என ஒரு சமூகத்தினரையே சொல்ல வைத்த சாதிய கொடுமை போன்றது இந்த அமெரிக்க விசா வாங்குவது. நடை பாதை நடப்பதற்கே என்று சொல்லி வியாபாரிகளை, அங்கேயே குடும்பம் நடத்தும் நாடோடிகளை விரட்டும் அரசாங்காம் அண்ணா மேம்பாலம் அருகில் செம்மொழி பூங்கா எதிர் புறம் இருக்கும் நடை பாதையில் எவரையுமே நடக்க விடாது. அங்கே தான் இந்த விசா வாங்க வரிசையில் நிற்க வேண்டும். கைபேசி, earphone, headphone, கார் சாவி (அதில் ஏதும் ஒலி, ஒளி வருமானால்) என எதுவும் உள்ளே அனுமதி கிடையாது. மற்றதை எல்லாம் காரில் போட்டுவிட்டு உள்ளே போகலாம், அந்த கார் சாவி? அதை 500 ரூபாய்க்கு பாதுகாக்கும் ஒரு இடமும் அங்கு உண்டு, அது பஞ்சர் ஒட்டும் கடை. அங்கே இதை எல்லாம் குடுத்துவிட்டு தான் உள்ளே போக வேண்டும்.

கை கடிகாரம் கூட கையில் கட்டி இருக்க கூடாது. இப்படி மொத்தத்தையும் கொடுத்துவிட்டு நடை பாதையில் வரிசையில் நின்றால் உள்ளே செல்ல ஒரு மணி நேரம் ஆகும். அந்த வருசையில் எனக்கு முன் ஒரு தம்பதி நின்றிருந்தார்கள். அரை அரை அடி நகர்ந்து தூதரகம் உள்ளே போனால் அங்கே உட்கார அனுமதி இல்லை. கோவில்களில் பண்டிகையின் போது வளைந்து வளைந்து மூங்கில் கட்டிவிட்டு மொத்த கூட்டத்தையும் வரிசையில் நிற்க வைப்பது போன்று நிற்க வைத்தனர். நீண்ட நேரம் நின்ற களைப்பில் ஓரமாய் இருந்த திண்டில் அமர்தார் எனக்கு முன்னால் இருந்த பெண்மணி, உடனே ‘madam you should not sit please stand in the line’ என பின்னால் இருந்து சத்தம் கேட்டது. சட்டென ‘so do we need to kneel down in front of the interviewer?’ என கேட்க வாய் வந்தது ஆனால் இந்த விசா எனக்கு கிடைக்க வில்லை என்றால் ஒன்ருமிலை இதனால் அவர்களுக்கும் வாய்ப்பு போனால் இன்னொரு முறை சில ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டும்.. அடக்கிக்கொண்டேன்.

சர்வதேச முனையம்:
விமானத்தில் கழுவ தண்ணீர் தர மாட்டார்களே எப்படியும் 23 மணி நேர பயணம் இதையும்  அடக்க வேண்டுமோ என்ற சிந்தையோடே விமான நிலையம் வந்தடைந்தேன். என்னோடு இன்னும் மூன்று பேர் உடன் வேலை பார்ப்பவர்கள் அவர்களுக்கு அமெரிக்காவில் சாப்பாடு எப்படி இருக்குமோ என்ற சிந்தனை.

உள்ளே சென்றவுடன் போர்டிங் பாஸ் வாங்க வேண்டும் அதிலும் நம் ஊர் கோவில்களில் 500 ருபாய் டிக்கெட் வாங்கினால் சாமி அருகில் அமர்ந்து தரிசனமும் மாலையும் தர்ம தரிசனம் போகும் போது அப்படியே எட்டி கும்பிடு போட்டுவிட்டு போக வேண்டுமே அதே முறை தான், பிசினஸ் இக்ளாஸ், எகானமி இக்ளாஸ் தனி தனி வரிசை. பிசினஸ் இக்ளாஸ் மக்களுக்கு விமானம் புறப்படும் வரை காத்திருக்க தனி அறை, சாப்பாடு, சரக்கு என சகல வசதிகளும் உண்டு. விமானம் வந்தவுடன் முதலில் பிசினஸ் இக்ளாஸ் மக்கள் தான் ஏற வேண்டும் அடுத்து தான் எகானமி இக்ளாஸ்.

ஆகாயத்தில் பூகம்பம்:
எகானமி இக்ளாசில் நான்கு பேர் அமரும் இடத்தில் பிசினஸ் இக்ளாசில் நான் ஒருவன் மட்டும் அமர்ந்திருந்தேன். இப்பொது எல்லாம் விமான பயணம் அறிய ஒரு செயல் இல்லை தான் ஆனால் சொந்த ஊருக்கு சென்னையில் இருந்து செல்வது போல் இல்லை இந்த பிசினஸ் இக்ளாஸ். அதிகமாக படத்தில் கூட பார்த்திராத ஆடம்பரம் (YouTube’ல் பிசினஸ் இக்ளாஸ் விமான பயணத்தை பற்றியும் விமர்சனம் உண்டு தெரியாதவர்கள் தேடி பார்க்கவும்)

https://www.youtube.com/watch?v=_yhZDsctiZg
முதலில் தோஹா வரை ஒரு விமானம், ஐந்து ஆறு மணி நேர பயணம். அந்த பிசினஸ் இக்ளாசில் அருகில் இருப்பவர் முகம் பார்க்க முடியாத அளவுக்கு மறைப்பதற்கு வசதி உண்டு. ஆனால் அந்த வசதி எதற்கு என இதுவரை விளங்கவில்லை. இருக்கையை சாய்ப்பதற்கு, நகர்த்துவதற்கு, நீடுவதற்கு தனி தனி பொத்தான்கள். அடுத்து பதினாறு மணி நேர பயணம் அதில் தனி அறை போல இருந்தது. ஏறி அமர்ந்தவுடன் வெது வெதுப்பான நீரில் நினந்த துண்டு முகம் துடைக்க, குடிக்க பானம், பாதாம், பிஸ்த்த என ஏக போக கவனிப்பு. உறங்கும் போது அனிய தனி உடை, செருப்பு, சிறு பெட்டியில் முகத்திற்கு பூச ஒரு க்ரீம், ஸ்ப்ரே, கை கால்களுக்கு என தனி தனி க்ரீம்கள், கை வைக்க இடம், கால்கள் நீட்ட இடம் என ஏக போக வசதிகள் தான் ஆனால் உணவு மட்டும் சகிக்காது, பொங்கல் வடைக்கு சோயா சாசும், ஆலிவ் ஆயிலும் வேண்டுமா என்ன விசாரிக்கும் அளவு தான் அங்கு வேலை செய்பவர்களின் இந்திய உணவு பற்றிய அறிவு.

பிசினஸ் இக்ளசில் எகானமியை வீட சரி பாதிக்கும் குறைவான பயணிகளே ஆனால் இவர்களுக்கு நான்கு கழிவறைகள் அங்கு இரண்டு தான். ஒரே ஒற்றுமை எதிலும் கழுவ தண்ணீர் கிடையாது.

விமானம் புறப்பாடு பற்றி சொல்லி முடித்ததும் ஆப்ரிக்க மக்களை படிக்க வைக்க உதவுமாறு வேறு கேட்டார்கள். இவர்கள் தந்த இக்ரீம்கள், அதை போட்டு வைத்திருந்த டப்பா, சட்டை, பேன்ட், செருப்பு என மொத்தமும் இருபது இருபத்தி ஐந்து டாலர் இருக்கும். இருபத்தி மூன்று நேர பயணத்திற்கு போர்வையும் தலையனையும் தான் எடுத்து வர முடியாது மத்ததெல்லாம் அவ்வுளவு அவசியமா? அதை மிச்ச பிடித்தாலே போதுமே.

ஜார்ஜ் புஷ் இன்டர்கான்டிநென்டல் ஏர்போர்ட்
‘என்ன சார் இது நம்ம ஊர் ஏர்போர்டே பரவல போலயே. தோஹா ஏர்போர்ட் எப்படி இருந்துது’

‘எதுக்கு இங்கே வர்றே, எவ்ளோ நாள் இருப்பேனு கேட்டுட்டு தான் உள்ள விடறான் அதுக்கே இவ்ளோ பேர் வந்து காத்து கிடக்கறோம் அப்புறம் எதுக்கு அலங்காரம் செஞ்சு வைக்கணும்? என்றேன்.

ஆம் அங்கே அவ்வுளவு பேர் தான் வருசையில் நின்றிருந்தோம். விசா வாங்கும் போது கேட்ட அதே கேள்விகள் மேலும் பிசினஸ் மீட்டிங்க்கு எதுக்கு ஒரு மாதம் தங்க வேண்டும் என்ற கேள்வி வேறு. அதை எல்லாம் சமாளித்து ஒரு ஸ்டாம்ப் அந்த பாஸ்போர்டில் வாங்கினால் தான் அமெரிக்கக் காற்றை சுவாசிக்க முடியும்.

அந்த அமெரிக்க சுவாசம் பற்றிய கதை அடுத்த பதிவில் ...


Thursday, June 14, 2018

சிகரெட் அரசியலும் மக்கள் நீதி மைய்யமும்


டம் பார்க்க போனா கூட யாருனே தெரியாத  முகேஷ்ல இருந்து நம்ம ராகுல் டிராவிட் வரைக்கும் எல்லாரும் புகை பழக்கத நிறுத்த சொல்றாங்க. நம்ம அரசாங்கம் ஆண்டு தோறும் நிதிநிலை அறிக்கை (என்னமோன்னு நினைக்க வேண்டாம் பட்ஜெட் தான் தமிழ்ல சொல்லிருக்கு) தாக்கல் செஞ்சா விலை கூடிட்டே தான் போகுது  ஆனாலும் புகை பழக்கம் மட்டும் குறைந்த பாடில்லை. புகை பழக்கத நிறுத்த வைக்க விலையை கூடக்கூடாது குறைக்கனும்.

புரியலையா? வரியை குறைக்காமல் சிகரெட் விலையை அரசாங்கம் தீர்மானித்தால், அதாவது திரையரங்கு கட்டணம் 120னு சொல்லிட்டு கேளிக்கை வரியை மாட்டும் உயர்துனான்களே அப்படி (ஆனா அந்த மிச்ச காச பாப்கார்ன்லயும், பார்கிங் டிக்கெட்லயும் வாங்கிடாங்க). இதை செஞ்சா வரியை சிகரெட் தயாரிப்பு நிறுவனம் செலுத்த வேண்டிய நிலை வரும் அவங்களே தயாரிப்ப நிறுத்திடுவாங்க.

இப்படி நிறுவனங்களை மூடினா அங்க வேலை செய்யற தொழிலார்கள் கதி என்னவாகும்னு இப்போ துத்துக்குடி ஸ்டேர்லைட் ஆலைக்கு கவலைபட்ட மாறி சில பக்தாள் கேட்கலாம், அங்கேயே மொத்தம் 1500 பேர் தான் வேலை செஞ்சாங்க. சிகரெட் எல்லா கைல சுத்தி பஞ்சு வெச்சு அடச்சு போட்டில  போட்டு விக்கற கதை இல்லை, எல்லாம் இயந்திர மையம். அப்படியே அங்கே வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வேறு உதவிகள் செய்யலாம், அது காச நோயிக்கும், புற்றுநோயிர்க்கும் அரசாங்க மருத்துவமனையில் தரும் சிகுச்சை செலவிலும் குறைவாகவே வரும்.

இதுக்கு தான் மக்கள் நீதி மைய்யம் அரம்பிச்சிருக்காரு நம்மவர்னு சொல்ற நம்மவர் பக்தாளுக்கும் முன்னாடி சொன்ன சிகரெட் கணக்கே தான். கேளிக்கை வரி அதிகம்னு போராட்டம் செஞ்சு 120 ருபாய்ல இருந்து இப்போ 165.78 ஆக்கி மக்கள் தலைல போட்ட கூடத்துல இந்த நம்மவரும், அந்த தலைவரும் ஒருத்தர் தான்.

இதற்க்கு பதிலா இந்த கதாநாயகன், நாயகி சம்பளத்தை குறைச்சிருந்தாவே படத்தோட மொத்த செலவு குறைந்து வரி குறைந்து (ஏன்னா வரி என்பது சதவீதம் தான்) விநியோகம் செய்யும் விலையும் குறைந்து, திரையரங்குக்கு வரும் போது 120 ரூபாயில் (இல்லை அதற்கும் குறைவாகவே கூட) மக்களுக்கும் திரையரங்க உரிமையாளருக்கும் லாபவம் கிடைத்திருக்கும்.

அதையேல்லா விட்டுட்டு சாட்டிலைட் உரிமை, Netflix, Amazon prime அப்படின்னு பன்னாட்டு நிறுவனங்களுக்கு தான் இன்றைய அரசியல்வாதிகளை போலவே தாரை வார்த்தனர். நடிக்கும் போதே இவர்களை வாழவைக்கும் ரசிகனை பற்றிய சித்தனை இல்லாதவன் இப்போ நமக்கு என்னத்த செஞ்சிட போறாரு?

ஆமா இவனுகளும் இப்படி தான் நாம தான் காசு வாங்காம ஓட்டு போடணும், மாற்றம் நம்ம கிட்ட இருந்து ஆரம்பிக்கணும்னு சொல்ற ஆளுங்களுக்கு ஒன்னு இருக்கு, அவங்க பணம் கொடுக்கறது அவங்களுக்கு ஓட்டு போடணும்னு மட்டும் இல்லை நாம ஓட்டுன்னு ஒன்னு போட்டவே போதும் அவங்க பிழைச்சுப்பாங்க.

ஏன்னா இது அப்படி ஒரு தொழில். வேலைக்கு போனாலும் இல்லை தொழில் செய்தாலும் அதை சரியா செய்யலைன்னா வேலை போய்டும், போட்ட பணம் போய்டும். ஆனா இந்த அரசியல் தொழில் அப்படி இல்லை.

லஞ்சம் ஊழல் பத்தி எல்லா வேண்டாம், ஒரு நாலு ஆண்டுகள் தமிழகம் எல்லாம் சென்னைய தவிற எட்டு மணி நேரத்துக்கும் குறைவான மின்சாரமே இருந்தது, இதற்கும் மின் துறைக்குன்னு ஒரு அமைச்சர் இருந்தார் அவருக்கும், அவர்  சார்ந்த கட்சியும் என்ன நடந்தது 98 உருப்பினர்களோடு எதிர் கட்சியாக தான் இருக்கிறது இன்றும். அவர்கள் வருமானம் குறையவில்லை.

புரியற மாறி சொல்லனும்னா ஸ்டேர்லைட் போன்று இன்னும் எத்தனையோ நிறுவனம் இங்கே மட்டும் இல்லை உலக முழுவதிலும் இருக்கு. அப்படி அந்த மண்ணை மலடாக்கி, நீரையும் காற்றையும் நச்சாக்கும் நிறுவனம் வரும்போது அதற்க்கு பல கெடுபிடி சட்டங்களை  வளைத்து உள்ளே விட ஆளும் கட்சிக்கும், எதிர் கட்சிக்கும் ‘நன்கொடை’ தரப்படும். அதனால தான் அதிமுக இது திமுக கொண்டு வந்துதுன்னும் பாஜக காங்கிரஸ் கொண்டுவந்ததுன்னு இப்போ மக்கள் எழுச்சிக்கு அப்பறம் அவங்கள கைய காட்டி இவங்க நழுவராங்க, அப்பவும் இவங்க உயிரோட ஆட்சில தானே இருந்தாங்க ஏன் வர்ற விட்டாங்க?

புது ரூபாய்களை கூட தயார் செய்யாது ஒட்டுமொத்த இந்திய மக்களின் கைகளில் இருந்த பணத்தை எல்லாம் மொத்தமாக செல்லாது என ஒரு சில நொடிகளில் சொல்லி திண்டாட விட்டுட்டு, ஆண்டுகள் இரண்டாகியும் கிடைத்த கருப்புப்பணம் எவ்வுளவு என ஒரு விவரமும் சொல்லாமல் அது ஒரு பெரிய சாதனையை போலவே சித்தரிக்கும் இவர்களை கேள்வி கேட்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடமோ, நீதித்துறை இடமோ ஏன் மக்களிடமோ கூட இல்லை. அப்படியும் மீறி கேள்வி கேட்க ஒன்று கூடினால் காவல் துறை அடிக்கும், சுடும், சமூக விரோதிகள் என சொல்லி கைது செய்வார்கள்.

இவர்கள் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை செய்யாததற்கு தண்டனையை வீட கேள்வி கூட கேட்க முடியாது நம்மால் அப்புறம் என்ன இதுக்கு இந்த உரிமை?
சரி யாருமே வாக்கே செலுத்தவில்லை என்றால் என்னவாகும்? (சங்கர் படம் போல் ஒன்றுமில்லாத பிரம்மாண்டம் போல தான் இருக்கும் இனி வருவது) ஜனாதிபதியின் கீழ் ஆளுநரின்  ஆட்சி வரும். அவர்களும் மத்திய அரசு ஆட்கள் தானே என்றால். இது இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் எல்லாம் நடந்தால், உலக பார்வையில் வரும் அரசியல்வாதிகளை கேள்வி கேட்க்கும் ஒரு துறையும், அதற்க்கான சட்டங்களும் இயற்றப்படும். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாத கட்சிகள் அடுத்த தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும். கட்சியின் தலைவர் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றால் கட்சியே கலைக்கப்படும் சட்டம் வேண்டும்.

இப்படி நடந்தால் இனி மக்களின் பணத்தில் தெர்மாகோல் விடும், கோடிக்கணக்கில் சமோசாவும், டீயும் குடிக்கும்  அமைச்சர்கள் வரமாட்டார்கள். தாயின் முந்தானையை பிடித்தே வளர்த்த எந்த பிள்ளையும் பிரதமராகும் ஆசையில் வாய் திறக்காது. வெளி நாட்டுடன் நல் உறவுக்கும், வெளிநாட்டு மூதலீட்டை கொண்டுவர மாதந்தோறும் மக்கள் பணத்தில் பறக்கும் பிரதமர்கள் இருக்கமாட்டார்கள். வாக்களித்தால் கருப்புப்பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15லட்சம் போடப்படும் என்ற பொய் வாக்குறிதியோடு யாரும் வரமாட்டார்கள்.

அறுவது வயது வரை சம்பாதித்துவிட்டு காலம் போன காலத்தில் நாட்டை திருத்தும் நம்மவர்கள் வரமாட்டார்கள். கடவுள் மறுப்பாளர் பெரியாரை அன்று தலைவனாகவும் இன்று முருகனின், உத்திர பிரதேசத்தில் பிறந்த கண்ணனின் கொள்ளு பேரன்களும் வர மாட்டார்கள்.

(‘தலைவர’ சொல்லவே இல்லைன்னு யாரும் கோவப்பட வேண்டாம் இன்னு கட்சிக்கு பேர் கூட வைக்கலை, எப்படியும் வர மாட்டார் என்ற நம்பிக்கையில் இந்த பட்டியலில் அவர் இடம்பெறவில்லை)



Sunday, September 17, 2017

புத்தரின் இனவெறி

னிதா – தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதுவும் பரிச்சயமான பெயர். அவளின் மரணத்திற்கு பின் இருக்கும் அரசியலை தாண்டி, நீட்டை தாண்டி நம்மோடு நம் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை நேற்று வரை பங்கிட்டுக் கொண்டிருந்த ஒருத்தி இன்று இல்லையே என்ற ஆதங்கம் தான் இன்று பலரை உலுக்கியது.

அந்த ஆதங்கம் ரோகிந்திய இன மக்கள் மீது இந்திய அரசாங்கத்திற்கு இல்லாமல் போனது மிக வருத்தம்.

யார் இவர்கள், இசுலாமியர்கள் என்ற ஒற்றை வார்த்தையால் இன்று அண்ட நாடில்லாமல் ஒவ்வொரு நாட்டின் எல்லையிலும் நிற்கும் நாடோடியானவர்கள்.

உலகப் போரில் அமெரிக்கா சப்பானில் வீசிய அணுகுண்டின் வீச்சு இன்னமும் இருப்பதை போல இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியுற்ற போது இந்துக்களுக்கும் முசுலீம்களுக்கும் இடையே பிரிவினையை உண்டாக்கி பிரித்து சுதந்திர வேட்க்கையை நீர்த்து போக செய்த சூழ்ச்சி இன்றும் காச்மீரில் நம் மக்களை இழந்து கொண்டிருகிறோம். அது போல தான் மியான்மர் பர்மாவாக இந்தியாவோடு கிழக்கு இந்திய கம்பெனியின் ஆதிக்கத்தில் இருந்த போது பர்மா மக்கள் எதற்கும் லாயக்கு அற்றவர்கள் என்று ஒதுக்கி இந்தியர்களுக்கும், ரோகிந்திய இன மக்களுக்கும் அன்றைய முன்னுரிமை வழங்கியது.


அந்த வெறுப்பு சுதந்திரம் அடைந்து இராணுவ ஆட்சியில் 1982ல் அவர்களின் குடியுரிமை பறிக்கம் அளவு வளர்த்திருந்தது. திருமணம், கல்வி, வழிபாட்டு தளம் என அனைத்தும் மறுக்கப்பட்டன.

8/8 /1988ல் எழும்பும் 8888 (8888 uprising) என மாணவர்களால் ஏற்ப்பட்ட புரட்சியில் ஆங் சங் சுகி அடையாளம் காணப்பட்டார். ஒரு அகிம்சைவாதியாக தன்னை பிரகடனப் படுத்திக்கொண்டார். அந்த புரட்சிக்கு பின்னும் ரோகிந்திய இன மக்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் சுகி இராணுவ ஆட்சியை வெறுத்த இராணுவ அதிகாரிகளை கொண்டு கட்சி ஒன்றை துவங்கி 2015ல் ஆட்சி அமைத்தார். அதன் பின் ரோகிந்திய மக்களின் நிலை இன்னமும் மோசமாது. இதற்க்கு இடையில் 3/9/2014ல் அல் காயிதா அமைப்பு வெளியிட்ட கானொளியில் மியான்மர் முசுலீம்களை நாங்கள் மறக்கவில்லை. அவர்களை காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம் என்றது. அதற்கு அங்கிருந்த முசுலீம் குழுக்கள் எங்கள் தாய்நாட்டிற்கு எந்த அச்சுறுத்தல்களையும் ஏற்க்க மாட்டோம் என்று அறிக்கை வெளியிட்டது.

ஆனால் இன்று ‘மியான்மருக்கு திரும்புவதை வீட இந்தியாவில் மடிவதே மேல்’ என்ற ஒரு ரோகிந்திய அகதியின் வார்த்தை உணர்த்தும் அவர்கள் நிலையை.

பெளத்த சமயத்தை பிரதானமாக கொண்ட இலங்கையில் நடந்த கொடுமையின் நீட்சியே அதே பௌத்தத்தை கொண்ட மியான்மரில் அரங்கேறி வருகிறது.

துன்பத்துக்கான காரணம் பற்று என்ற புத்தரின் வழிவந்தவர்கள் மியான்மரை தங்கள் நாடு என சொந்தம் கொண்டாடி இவர்களின் குடியிரிமைகளை பறித்து விரட்டும் போது தென்னகத்தில் உள்ளவர்களை கீழ் பிறப்பாகவும், சமணர்களை கழுவேற்றிக் கொன்று தங்கள் சைவ சமயத்தை நிலை நிறுத்திய இந்தியா இவர்களால் தீவிரவாத அச்சுறுத்தல் வரும் என்று தடுப்பதில் எந்த முரணுமில்லை.

அல்லாவின் பெயரை சொன்னதற்காக ஒடுக்கப்பட்ட போது படை திரட்டி போரிட்ட முகமது நபியின் அந்த ஒரு சித்தாந்தத்தை மட்டுமே தவறாக புரிந்து கொண்டு இன்று சில குழுக்கள் அல்லாவின் பெயரை சொல்லி செய்யும் கொடுமைகள் இன்று அனைத்து முசுலிம்களையும் பயங்கரவாதிகளாய் பார்க்க வைக்கிறது.

இங்கு இனம், மொழி, நாடு என்று சொல்லி தினம் பல கொடூரங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் எல்லாம் தனியாக அடையாளப்படுதப்படுவதில்லை. குல்லாவும் தாடியும் வைதிருப்பாதால் இவர்களும் பயங்கரவாதிகள் என சொல்வது நம்மிடையே பகுத்தறிவு குறைவதையே நிருபிக்கிறது.


ஜெர்மனியில் தான் யூதன் என்றால் உடனே விசாரணைக்கு எடுத்து சென்று விடுவர், தான் ஜெர்மானியன் என்றால் தானில்லாது முன்னர் வாழ்த்த மூன்று தலைமுறையினரும் ஜெர்மானியர்கள் தான் என நிருபிக்க வேண்டும் தவறினால் விசாரணை கைதி தான், இது ஹிட்லர் கால நடை முறை. இன்று நாமும் அதையே தான் செய்து கொண்டிருக்கிறோம் ஹிட்லரை மட்டும் மனித மிருகம் என திட்டி தீர்த்து கொண்டு.


Tuesday, August 15, 2017

கும்பகோணத்திலிருந்து கோரக்பூர்

கோரக்பூர் – 70 மழலைகள் இறந்து விட்டனர். இதற்கு இடையில் சுதந்திர கொண்டாட்டம் அவசியமா என்ற கேள்வி எழுவது தவிற்க இயலாதது. கொண்டாட்டம் தேவை இல்லை ஆனால் கேள்வி கேட்க்கும் சுதந்திரம் பெற்றுத்தந்தவர்களை நினைவு கூற இந்த நாள் அவசியம். சரி இந்த கோர சம்பவம் யாருடைய தவறு யார் அலட்சியம், யோகியா, அந்த பிராணவாயு  தருவதற்கு மறுத்த புஷ்பா சேல்ஸ் நிறுவனமா?

இந்த கேள்விகளை சற்று ஒதுக்கி வைத்து விட்டு கும்பகோணம்  ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தை நினைவுகொள்வோம். 2004 சூலை 16 அன்று நடந்தது அந்த கோரா விபத்து(!?)

இதனை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி சம்பத் ஆணைக்குழு 2006 ஆம் ஆண்டு சமர்பித்த அறிக்கையின்படி, இரண்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.

அதில் வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய மாணவர்களின் பெற்றோர்கள் 5 பேர் கொண்ட குழுவாக ஒவ்வொரு வாரமும் பள்ளியில் ஆய்வு செய்யலாம். என்று சொல்லப்பட்டதை இன்று நடைமுறை படுத்துவது எந்த அளவு சாத்தியம். பள்ளிகளில் இடம் கிடைப்பதற்கே தவமாய் கிடக்கும் இவர்கள் ஆய்வு செய்வார்களா? இந்த சிந்தனை ஏன் அந்த நீதி அரசர்களுக்கு வரவில்லை. நமக்கு நம்மை நம் உரிமைகளை காக்க சட்டம் உள்ளது ஆனால் அதை எடுத்து கையாள தான் இங்கு நமக்கு தெம்பு இல்லை.

சரி இதன் பின் பள்ளி விபத்துக்கள் நடக்கவில்லையா, பள்ளி பேருந்துகள் விபதுக்குல்லாகவில்லையா?

மீண்டும் கோரக்பூர் – வியாபாரத்தில் கொடுத்த பொருளுக்கு பணம் சரிவர கட்ட தவறினால் மேற்கொண்டு பொருள் தந்து நிலுவை தொகையை ஏற்றிக்கொண்டு போனால் புஷ்பா சேல்ஸ் எப்படி வியாபாரம் செய்ய முடியும், இது தர்மம் தானே, என இன்று சுதந்திர தின கொண்டாட்டத்தை வெறுப்பவர்களும் அடுத்த 10 வருட விசாரனையில் இப்படி பேசக்கூடும்.


ஒரு மூன்று மாதம் பின்னோக்கி செல்வோம் போர்பஸ் பத்திரிக்கை உலகின் பணக்காரர்கள் பட்டியல் வெளியிட்டது, முதல் நாள் ஒரு பெயர் அடுத்த நாள் மீண்டும் பில் கேட்ஸ் தான் என நம் சட்டமன்ற தேர்தல் நிலவரம் போல் மாறியது. அதில் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் குழப்பமேதும் இன்றி முதலிடம் அம்பானி தான். ஆனால் அதில் முதல் நூறு பேர் யார், அவர்கள் செய்து வரும் தொழில் என்ன என்று அலசியபோது அதில் முதல் ஐந்து தொழில்கள், ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், கட்டுமானம் என முதல் இடத்தில ஒய்யாரமாக இருப்பது மருந்தும் அது சார்த்த தொழில்களும் தான்.

இம்பெரியல் பேங்க் (Imperial Bank of India) ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) என 1959ல் பொதுவுடைமையாக்கி இந்திய அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வந்து இதர வங்கிகளை வாரி அனைத்துக் கொண்டது போல, பர்மா ஆயில் பாரத் பெற்றோலியம் என  1976ல் தேசியமயமாகி இன்று வரை பொது மக்களுக்கு சேவை செய்வது போல இந்த பள்ளிகள், மருத்துவம், மருத்துவம் சார்ந்த தொழில்கள் எல்லாம் பொதுவுடைமையாக்க அரசாங்கம் முன் வரலாமே. இதனை விடுத்தது ஒவ்வொரு முறையும் ஆணைக்குழு அமைத்து அரசானை பிறப்பித்து அதை நடைமுறை படுத்த ஒரு குழுவை அமைத்து இப்படி குழு குழுவாக அமைப்பது தவிர்க்கலாமே.

தமிழ் நாட்டில் சாராயக்கடையை அரசாங்கம் அதன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல இந்த மருத்துவத்தையும், கல்வியையும் அரசாங்கம் தன் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் இத்தகைய வியாபார நோக்கில் நடக்கும் போக்கு மாறி இத்தகைய நிகழ்வுகளை தடுக்கலாமே. ஆனால் ஆள்பவர்கள் அதை குடும்பத் தொழிலாகவே செய்து வரும்போது இது எப்படி சாத்தியம்.

இந்தகைய சிந்தனை அவர்களுக்கு வராது காரணம் நம் பிரதமரை சுற்றி அமர்ந்திருப்பது வியாபாரிகள், இவர் ஆலோசனை நடத்துவதும் வியாபாரிகளோடு தான். அதனால் தான் இப்படி நாடு போய்கொண்டு இருக்க இன்னும் அரசாங்கத்திடம் இருப்பதையும் தனியாரிடம் ஒப்படைக்கவே நேரம் பார்த்து வருகிறார், சேலம் இரும்பாலை, ஏர்  இந்தியா என போகிறது அரசின் திட்டங்கள்.

எழுபதாம் முதல் சுதந்திர தின வாழ்த்துக்கள்!

Saturday, July 8, 2017

வேற்றுமை கொல்

ன்று சமூக வலைதளங்களில் ஒரு படம் பகிரபட்டு வருகிறது. அது அமெரிக்கா இந்தியாவை பார்த்து இங்கு இடஒதுக்கீடு இருக்கும் வரை தங்கள் நாடு வளம்பெருமாம். அதாவது ஒதுக்கீடால் ‘அறிவாளிகள்(!??)’ இங்கு வேலை செய்யாமல் கடல் தாண்டி அங்கு செல்வதாக ஒரு கூற்று பரப்பப்பட்டு வருகிறது. அப்படி பார்த்தல் கல்வியில் இட ஒதுக்கீட்டால் மேல் குடியினர் (forward/general caste) கல்வி கற்க முடியாமல் போகிறது என்ற கூற்று பொய். இது போக எதோ பிற்படுத்தப்பட்டோருக்கும் பழங்குடியினருக்கும் (SC/ST - Scheduled Castes & Scheduled Tribes) மட்டும் தான் இந்த ஒதுக்கீடு இருப்பது போல் ஒரு தோற்றம் கொண்டு வரப்படுகிறது.


இந்திய அளவில் கல்வியில் 1954ல் கல்வி அமைச்சகம் 20% இட ஒதிக்கீட்டை பிற்படுத்தப்பட்டோருக்கும் பழங்குடியினருக்கும் (SC/ST) வழங்கியது. அதை தொடர்ந்து 1982ல் அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்வி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் 7.5% (அ) 15% இவர்களுக்கு ஒதுக்க உத்தரவிட்டது.

இதன்படி இவர்களுக்கு கல்விக் கதவுகள் திறந்தே 60 ஆண்டுகள் தான் ஆகிறது ஆனால் அதற்குள் ஐநூறு ஆண்டுகளாக ஏதோ இவர்கள் பரம்பரையே எளிதாக படித்துக்கொண்டு இருப்பது போல் ஒரு கூற்று காட்ட முயல்கின்றனர். இதனால் முன்னேறிய வகுப்பினர் (forward caste) எல்லாம் பின்தங்கி போய்விட்டது போலும் ஒரு பிம்பம் காட்டப்படுகிறது. அவர்கள் அப்படி பின்தங்கி எங்கும் மலம் அள்ளவோ, செருப்பு தெய்க்கவோ, சவரம் செய்யவோ, தெரு தெருவாக குப்பை பொறுக்கவோ இல்லை. வேதம் சொன்னதற்கு ஒரு பிராயாசித்தம் செய்துவிட்டு கடல் கடந்து மாட்டுக் கறியை விரும்பி உண்ணும் நாடுகளில் சம்பாதித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து
பாழியந்தோளுடை பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.”

இது ஆண்டாளின் நான்காவது திருப்பாவை இதில் மழையானது எப்படி பொழிகிறது என்றும் அதை பெருமாளோடு ஒப்பிட்டும் பாடப்படுகிறது. இப்படி பல்வேறு பாடல்களில் இன்று காணும் அறிவியல், மருத்துவம் என எல்லாம் இருக்கிறது.

ஒரு கையில் ஆராத்தி எடுப்பதும் இன்னொரு கையில் மணி அடிப்பது அந்தணர்கள் அன்றாடம் செய்யும் செயல். இப்படி இரு கரங்களில் இரு வேறு செயல்கள் செய்வது மூளையை ஒருங்கிணைந்து செயல்பட உதவும். இன்று மூளையின் செயல் திறன் அதிகரிக்க இப்படி சில வழிமுறைகள் சொல்லித்தறப்படுகிறது.

இவற்றை எல்லாம் ஒரு சமூகத்தினரே வைத்துக்கொண்டு மற்றவர்கள் கற்க விடவில்லை. ரிக் வேதத்தில் உள்ள வர்ண கோட்பாடை காட்டி வர்ணம் மாறுதல் தவறு என்ற பிம்பத்தை உண்டாக்கி, சவரம் செய்பவனை, செருப்பு தெய்பவனை, மலம் அள்ளுபவனையும் அவன் பரம்பரையையும் அப்படியே இருக்க வைத்தனர்.

கல்வி கற்பிப்பவன் அந்தணன், அவன் கற்பித்தது கோவில்களில், அங்கு எல்லோருக்கும் இடம் கிடையாது. ஒரு சில வகுப்பினர் மட்டுமே செல்ல முடியும் அவர்களிடம் கல்வி கற்க்கவும் முடியும்.இந்த நிலை மாற யாரும் எதுவும் கற்க வழி செய்யவே கொண்டுவரப்பட்டது ஒதுக்கீடு. இந்த தொழில் செய்பவர்கள் இன்ன குலம் இன்ன குலத்தோர் எல்லாம் இன்ன சாதி. இந்த சாதியில் பிறந்தவர்கள் அதே தொழில் தான் செய்ய வேண்டும் என்ற முறையில் தாழ்த்தப்பட்டோராக, தீண்டத்தகாதவராக பல சமூகங்கள் ஒதிக்கி வைக்கப்படுவதை தடுக்கவே ஒதுக்கீடு தேவைப்பட்டது.

சுதந்திரம் அடைந்து எழுவது ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில் இன்னும் எதற்கு இந்த ஒதுக்கீடு என்ற கூப்பாடு கேட்கத்துவங்கிவிட்டது. படிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் சாதியம் சார்த்த ஒதிக்கீடு தவறு என்ற சத்தம் வலுப்பெறுகிறது. அன்று சாதியின் பெயரால் பல சமூகத்திற்கு கல்வி மறுக்கப்பட்டது. இன்று அந்த சமூகத்திற்கு வழி செய்தால் சாதியம் வழியில் எதுவும் வழங்கப்படக் கூடாது என மீண்டும் தடுக்கப்படுகிறது. உண்மையில் இன்னமும் நீதித்துறையில், மத்திய மாநிலங்களில் அதிகாரம் கொண்ட அரசு துறைகளில் இன்னமும் முன்னேறிய வகுப்பினர் (forward caste) தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ISROவில் இருக்கும் விஞ்ஞானிகளின் பெயர்களே சொல்லும் அவர்கள் எந்த குடி என்று.

மேலும் இப்படி ‘எளிதாக’ இடம் கிடைத்து படிப்பவர்கலால் தரம் குறையத்துவங்கி உள்ளதாக ஒரு பேச்சும் பரவுகிறது. முதலில் எளிதாக எதுவும் வழங்கப்படவில்லை, ஒதுக்கீட்டில் இடம் கிடைத்து அதில் படிக்கும் மாணவர்களை மற்ற குடி மாணவர்கள் பார்க்கும் விதம் போதும், நரி குரவர் இனத்தை சேர்ந்த முதல் பட்டதாரியான ஒரு பெண்னின் வார்த்தைகள் சொல்லும் அந்த ‘எளிதான’ என்ற வார்த்தைக்கு பொருள். தரம் குறைய காரணம் யாதெனில்,1948ல் ராணுவதிற்க்காக சீப் (Jeep) வாங்கியதில் நெறிமுறைகளை மீறி செயல் பட்டார் வி.கே. கிருஷ்ணா மேனன் - இந்தியன் பிரிடன் உயர் ஆணையாளர் (மேனன் என்பது நாயர் வகுப்பின் உட்பிரிவு – நாயர் என்பது சத்திரிய குலம் பிராமணர்களாகிய நம்பூதிரிகளுக்கு அடுத்தது). இவர் எந்த ‘எளிய’ முறையில் இடம் கிடைத்து படித்தவர் அல்லவே. இவர் மீது நடந்த வழக்கில் அரசு நாட்டம் காட்டாததால் தள்ளுபடி செய்து இவரை விடுவித்தது நீதி மன்றம் – குற்றமற்றவர் என்று விடுதலை ஆகவில்லை. அவரே நேருவின் மந்திரி சபையில் பாதுகாப்புத் துறை மந்திரியானார். தரம் குறைய காரணம் இத்தகைய நெறிமுறை தவறுதலும், அவரே மீண்டும் ஆட்சி அதிகாரம் பெறுதலும் மட்டுமே அன்றி ஒதுக்கீடு இல்லை.


மருத்துவம் படித்த அந்த மருத்துவ தொழில் செய்பவர் ஸ்டெதாஸ்கோப் (stethoscope) அணிவர் பெயருக்கு முன் Dr எனவும் இருக்கும். அது அந்த தொழிலுக்கு அவசியம். இறை சேவை செய்தும், கற்பித்தும் வந்தவன் அந்தணன் என்னும் போது அவன் பூணூல் அணிவது ஒரு முறையாக இருந்தது ஆனால் இன்று  அந்த தொழில், அந்த வர்ணம் சார்ந்த எதையும் செய்யாது வியாபாரம், கணக்கு, அறிவியல், நடிப்பு, நாடகம் சார்ந்த தொழில் செய்யும் போதும் இன்னமும் இன்ன வகுப்பு இப்படி தான் நூல் அணிய வேண்டும், திருநாமம், பட்டை, குடுமி என திரிவதும், சத்திரியன் தொழில் நாடாள்வது போர் புரிவது, தேவர், கவுண்டர், நாயர் யாரும் ராணுவத்தில் சேராது பெயரின் பின்னால் மட்டும் சேர்பது என்ன மாறினாலும் நான் உயர் குடி என்றும் வர்ணம் பிறப்பினால் மட்டுமே வரும் வளர்போ, கல்வியோ தராது என்பதை காட்ட தானே தவிற வேறில்லை.


Monday, May 1, 2017

ஒதுக்குப்புறம்

ன் பள்ளி பருவத்தில் எங்கள் ஊரில் இருந்தது ஐந்து திரையரங்குகள். அதில் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்திருந்த ஒன்றில் தான் ரஜினி படம் வெளியாகும். அடுத்த இரண்டில் வேறு புது படங்கள் வெளியாகும். மற்ற இரண்டில் எப்போதும் பழைய படமும் ‘A’ படம் மட்டுமே வெளியாகும்.


அந்த ‘A’ பட சுவரொட்டிகள் ஒட்டப்படிருக்கும் பக்கம் பார்ப்பதே ஏதோ பெரியா குற்றம் என்பது போலவே கடந்து போவேன். என் அப்பா Speed , MIB போன்ற படங்களுக்கு என்னை அழைத்து போவார் அப்படி தான் ஒரு நாள் Titanic போவோம் என்றார். பின்னர் பள்ளி நண்பர்கள் மூலம் அந்த படத்தில் கதாநாயகியின் நிர்வாண காட்சி மட்டுமே சுமார் பதினைந்து நிமிடங்கள் வருவதாக அறிந்து என் அப்பாவின் அறியாமையை கடிந்து கொண்ட காலமும் உண்டு.

ஆனால் இன்று அதை வீட ‘நல்ல’ படங்கள் கைகளில் ஓடுகிறது. ‘எனக்கு போன் வாங்கி தரலைனா அடுத்த எக்சாம்ல பெயில் ஆகிடுவேன்’ என மிரட்டி கைபேசி வாங்குகின்றனர் பள்ளி மாணவர்கள்.

அப்பாவுக்கு புகை பழக்கம் இருந்தது ஆனால் அந்த சிகரெட்டே பாக்கெடை எப்போதும் என் கைக்கு எட்டதா இடத்தில் தான் வைப்பார். வெளியே சென்று வீடு திரும்பியதும் சட்டை பையிலிருந்து எடுத்து எட்டாத இடத்தில் வைத்து விடுவார். அதுவும் நான் இன்று புகைக்காததர்க்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

அதே போல் அன்று மது கடைகள் ஊருக்கு அப்பால் இறைச்சி வெட்டும் இடங்களுக்கு அருகில் இருந்தது ஆனால் இன்று ஊர் எல்லையிலேயே வரவேற்கிறது முதல் கடை. தெருவுக்கு ஒன்றாய் கடை விரித்து விட்டு ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என திரைப்படத்தில் மட்டும் கட்டாயமாக எழுத்து போடுவது என்ன மக்கள் நலனோ?

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னரை காட்டிலும் இன்று பாலியல் குற்றங்கள் அதிகரித்திருக்க மேல் சொன்ன இரண்டும் முக்கிய காரணங்களாக கருதுகிறேன். யாரும் எந்த நேரத்திலும் எதுவும் பார்த்திட உதவும் கை பேசி, அதில் வக்கிர படங்களை பார்க்கும் ஒருவர் கிடைக்கும் யாரிடமும் அந்த இச்சைய தனிக்க முற்படுவதே இந்தகைய குற்றங்கள் அதிகரிக்க காரணம். சென்னையில் முகலிவாக்கத்தில் நடந்த ஒரு சிறுமியும் படுகொலை ஒரு உதாரணம். பெரும்பான்மையாக இத்தகைய குற்றத்தில் பிடிபடுவோர் யாரும் இதே குற்ற பின்னணியோ அல்லது வேறு எந்த தவறுக்கான பின்புலம் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். இப்படி வக்கிர படங்களை பார்த்து வெறி ஏறினவர்கள் தனிமையில் பார்க்கும் பெண்களிடத்திலோ, குழந்தைகள் இடத்திலோ தங்கள் இச்சையை தீர்க்க பார்ப்பது தான் இத்தகைய குற்றத்திற்கான காரணம்.

இது மட்டுமின்றி இப்படியான தவறுகளின் போது அரசியல் தலைவர்கள் பெண்கள் உடுத்தும் உடைகள் மீதே அந்த குற்றத்தை சுமத்தும் போது அடுத்து தவறு செய்வோருக்கு அது ஒரு நியாயம் கற்பித்துவிடுகிறது.

இதில் இன்னமும் எண்ணை விடுவது போல் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே மது வந்து சேரும் சேவையை துவங்கி இருக்கின்றனர். மது கடைக்கு செல்ல கூச்சப்படுவோருக்கும் விடும் அழைப்பே இது. மது அருந்தியவர்கள் வெட்கமும் மானமும் மறந்து குருட்டு தைரியத்தில் கத்துவது போல் இனி குற்றங்களும் அதிகரிக்கும்.

இதில் இன்னுமொரு உளவியல் சார்த்த ஒரு அணுகுமுறை குறைபாடு உள்ளது. அது ஆண்களுக்கான அறிவுரையில்லாது போனது. பெண் வயதுக்கு வந்தவுடன் அம்மா, சித்தி, அத்தை, பக்கத்து வீட்டு பெரியம்மா என அனைவரும் பல அறிவுரைகள் சொல்லியே வளர்க்கின்றனர். ஆனால் ஒரு ஆண் வயதுக்கு வந்ததே அவனுக்கு மட்டுமே தெரிகிறது. உணர்சிகளை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும். இனி எப்படியான மனோரீதியான மாற்றங்கள் நிகழும் அதற்க்கு எப்போது எப்படி நடந்து கொள்வது என்று சொல்லும் பழக்கம் எங்கேயோ தொலைத்து விட்டோம்.

விரதம் அனுசரிப்பது, அதிகாலையில் குளிர் நீரில் குளிப்பது, சில காலங்களில் சில உணவுகளை கட்டாயம் தவிர்ப்பது போன்றவற்றை மொத்தமும் ஒதுக்கி ஆத்திகம் பேசியதும் சற்று தடம் மாற்றி விட்டது. உண்மையில் இதகையே நடைமுறையும் கூட ஒரு வகுப்பினருக்கு மட்டுமே சார்த்து சாதி பேதம் பார்த்தே வழக்கமாக வைத்து இன்னொரு பிரிவினரை குற்றம் பரம்பரையாகவே இருக்க வைத்திருக்க வேண்டும்.


இப்படி உளவியல் ரீதியாக அணுக வேண்டியவற்றை வெறும் சட்டம் கொண்டு மட்டும் கொரூர தண்டனைகள் மூலம் தீர்வு காண முடியாது.


Saturday, January 14, 2017

தடைகளை தகர்க்க ..

தீபாவளி நேரம் இரவு பத்து மணிக்கு ஊருக்கு கிளம்பினேன், ஆட்டோ எதுவும் கிடைக்க வில்லை. தீபாவளி கூட்டம் இருக்கும் திரும்ப முடியாது என மறுத்தனர். சில நிமிட அலைச்சலுக்கு பின் ஒரு வழியாக கிட்டியது. பத்து வாரத்துக்கு பின் இந்த வழியாக வருவதாக சொன்னார் ஓட்டுநர். இதற்கும் அவர் சேர் ஆட்டோ ஓட்டுபவர், ‘ரெண்டு பக்கமும் திறந்து வெச்சிருக்கானுங்க சார். காலைல இருந்து சம்பாதிக்கறது எதுவும் வீட்டுக்கு எடுத்துட்டு போக முடியல’ என்றார். நல்லது பத்து மணிக்கு மேல் தான் அவரை அழைத்து வந்திருக்கிறேன் நிம்மதியாக ஊருக்கு போய் சேர்ந்தேன்.

கள்ளுண்ணாமை என சொல்லி கள் இரக்குதல் தடை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கள்ளச்சாராயம் வீதிக்கு வந்தது, அதனால் உயிர் பலிகள் அதிகரித்தது. இதை சரி செய்ய என மதுபான கடைகள் அரசாங்க அனுமதியோடு வந்து இன்று அதை அரசே பொறுப்பேற்று தெருவுக்கு ஒன்றாய் நடத்தியும் வருகிறது.

கள்ளு, கள்ள சாராயம், மேற்க்கத்திய மது பானங்கள் எல்லாமுமே போதை தரும். ஆனால் அது உடலில் செயல்படும் முறை வெவ்வேறு மாதிரி இருக்கும்.

கள், தென்னை மற்றும் பனை என மரங்களில் இருந்து இரக்கப்படுகிறது. உடல் சூட்டை நீக்கக் கூடியது. மேற்க்கத்திய மது பானங்கள் உடல் சூட்டை அதிகரிக்கும். அவர்கள் நாட்டின் தட்பவெட்ப நிலைக்கு அது உகந்ததாக அவர்கள் பாரம்பரியத்தோடு விழாக்களில், திருமணங்களில் கூட இருக்கும்.இப்படி சூட்டை கிளப்பும் மதுவை நம் ஊர் தட்பவெட்ப நிலைக்கு குடிக்க உடல் கெட்டுவிடுகிறது.

கள்ளைத் தொடர்ந்து சேவ சண்டை தடை செய்யப்பட்டது. கோழி வளர்த்தால் முட்டை காசு கொடுக்கும், கோழியும் ஒரு வயதில் கறியாகி காசாகும். சேவல் சண்டைக்கு என வளர்க்கப்பட்டு, அது கோழிகளோடு கூடி நாட்டு கோழி முட்டையிட்டு வந்தது. சேவ சண்டை முற்றிலும் தடை செய்யப்பட நாளடைவில் நாம்  ப்ராயிளர் கோழிக்கு மாறி விட்டோம். வியாதிகளும் பெற்று விட்டோம். நாட்டு கோழி வளர்த்தவர்கள் நிலை மறந்து விட்டோம்.

இன்று சல்லிக்கட்டு தடை செய்யப்பட்டுள்ளது. நாளையே காளைகள் அடி மாடுகளாகாது. பசுவுக்கு கருவூட்ட சினைகள் விற்கும் நிறுவனங்கள் பெருகும். அடுத்த தலைமுறை இனி காளை எதற்கு வளர்க்க வேண்டும் கருவூட்ட சினைகள் ஊசியில் ஏற்றப்படும் போது என கணக்கிட்டு காளைகள் வளர்ப்பு நிறுத்தப்படும். நாட்டு மாடுகள் வெளி நாட்டு காளையின் கன்றுகளை ஈன்று எடுக்கும். இப்படி நாட்டு மாடுகள் மெல்ல மெல்ல வெளி நாட்டு மாடுகளாக மாறிவிடும்.

வெளி நாட்டு உணவு என்பது தீங்கு இல்லை, ஆனால் உடல் உறுப்புகள் நாம் வாழும் இடத்திற்கு ஏற்ப அதன் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றார் போல் மாறுபட்டிருக்கும். எனவே நாம் வாழும் மண்ணில் ஏறத்தாள 400 மையில் சுற்று வட்டாரத்தில் விளையும் உணவுகள் நம் உடலுக்கு ஏற்றதாக இருக்கும். மேற்க்கத்திய உணவுகள் தீங்கானவை இல்லை அது நம் உடலுக்கு ஒவ்வாதவை.

எனவே கள்ளை முற்றிலும் தடை செய்யாது அரசே கள்ளுக்கடைகளை இப்போது மேற்கத்திய மது பானங்கள் விற்பது போல் நடத்தி இருக்கலாம், பனை மரங்கள் மிஞ்சி இருக்கும். சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் என கணக்கிடப்பட்டு உள்ளது. மேலும் அமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆசுதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு அந்நியச் செலாவணி அதிகரித்திருக்கும். 1985 – 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது.

இன்று இவர்களை வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளி நாம் அந்நிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்றிருக்கிறோம் என்பது நிதர்சனம். அந்நிய முதலீடு நாட்டின் வளர்ச்சி இல்லை வீழ்ச்சி தான். கிழக்கிந்திய நிறுவனம் பதினேழாம் நூற்றாண்டில் முதலீடு செய்ததின் பலன் சும்மார் 200 ஆண்டுகள் அடிமை இந்தியா. இது இன்னும்மொரு படை எடுப்பே வளர்ச்சி இல்லை.

பாரம்பரியம் முற்றிலும் தடை செய்யப்படும் போது அதன் விளைவுகள் கட்டாய மாற்றமாக இருக்கும். எந்த மாற்றம் நிகழும் போதும் அழிவுகள் அதிகம் இருக்கும். அதில் மிஞ்சியவையே மாற்றத்திற்கு உட்பட்டு வளரத் துவங்கும். இப்போது தேவை இல்லாத மாற்றத்தினால் அழிவுக்கு கட்டாயமாக தள்ளப்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.

இத்தகைய நிலையை தடுக்க, கள்ளுக்கடை, சல்லிக்கட்டு போன்றவை தகுந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு தொடரப் படவேண்டும். அதை விடுத்தது முற்றிலும் தடை என்பது அறிவுள்ளவன் செய்யும் செயல் இல்லை.