Wednesday, October 16, 2013

நிலாவொளி நிழல்

நிலாவொளி நிழலோடு நான் நடக்கையில்
உன்னோடு நடந்த அந்த ஞாபகம் எல்லா தெறிக்க
எட்டாத அன்னிலவில் உன் முகம் கண்டு என் பாதை நான் மறக்க
நீ இப்போ என்னோடு இல்லையே என்ற எண்ணம் நான் மறக்கவோ
பிறை என்றாலும் உன் சிரிப்பை காணமல் போவேனோ...
கருசக்காட்டு பக்கம் வானத்தில் மேகம் ஏதும் கூடாம
மண்ணெல்லாம் ஈரம் காஞ்சு கிடப்பது போல
இனி விழ துளி இல்லைனு கண் காஞ்சு நிக்க
உன் பேர் கேட்கும் போது எல்லா அடி வயித்தில் புளி கரைக்க
ஏமாற போறேன்னு தெருஞ்சே
உதிர்ந்த பட்டாம்பபூச்சி இறகா ஓசை வந்த திசை திரும்பி
சீனி தின்ன வந்து, ஊதின காற்றில் பறந்து விழும் எறும்பா ஏமாந்து நிப்பேன்
ஊரெல்லாம் அடங்கி ஏத்தின விளக்கு திரி கருகி போக
இன்னும் என் மனசுல நடக்கும் போர் முடியல
முடுச்சு வெக்க நீ இல்ல
முடுச்சு போட உன் கழுத்தும் இல்ல
கண்ணு தூங்க போனாலு கொடுக்கர தெய்வம் தான் கூரை பிரிக்கறதா
வீட்டு கூரையையே கொட்ட கொட்ட பார்த்து போகுது இந்த ரா பொழுது
எங்கே கிடந்தாலு நீ வந்து மிதிக்கவே விட்டம் பார்த்து கிடக்கும் நெஞ்சு
நஞ்சு எடுத்து குடுச்சாலு கண்ணுறக்கம் வரதில்லையே
நீ வந்து முடி கோதி உன் மடி கொடுத்து செத்து போனு சொல்லு
ஏதும் சொல்லாம போகும் இந்த உசுரு...