Wednesday, April 13, 2011

கோடி மக்களும் 234 திருடர்களும்!

யார் எதற்கு என்று தெரியாதோர்,
தேர்தெடுக்கும் திலகம் வந்து தலை மேல் அமரும்!
ஒவ்வொரு பைசாவாக சேர்த்துக் கொடுத்து,
ஏதேனும் செய் என்றால், அவனவன் வீட்டிற்கு கட்டி கொண்டு போவான்-
தன் மானத் தலைவன்!
தாய் மொழி, பேய் மொழி என பாகம் பிரித்து,
மக்களை கோபத் தீயிலே நிற்க வைத்துவிட்டு,
ஓடிப் போய் இவன் மட்டும் ஒட்டிக்கொள்ளும்-
அஞ்ச நெஞ்சரும் இந்த 234-ல் உண்டு!
ஊழல் என்ற சொல் கேட்கும் போது மட்டும்,
ஈழம் சென்று திரும்பும் கண் கொண்ட-
மறவர்கள் இந்த 234-ல் உண்டு!
தான் செய்தது ஏதும் சொல்ல இல்லை என்றே,
அடுத்தவர் குறை மட்டும் கூறிடும்-
நெடு நாள் குமரிகளும் இந்த 234-ல் உண்டு!
தனியாக நிற்க துணிவில்லாமல்,
யாரோடும் சாய்ந்தே நிற்கும்-
சிவப்புத் துணி ஏந்திய சிங்கங்களும் இந்த 234-ல் உண்டு!
சாதிகள் இல்லை என்ன சத்தமிட்டுக் கொண்டே,
சாதி பெயரை மாட்டும் வைத்து வயிறு வளர்க்கும்
வைத்தியர்களிடம் கை கோர்த்திடும்-
சில்லறை பொறுக்கிகள் அதிகம் இந்த 234-ல்!
இவர்கள் வளர்வதற்கே தாய் மொழியும், தெய்வமும் தேவைப்பட்டது!
ஒன்றை தலையில் தூக்கி வைத்துக் கொண்டனர்,
மற்றதை காரணம் ஏதும் பார்க்காமல் தூக்கி எரிந்து மிதித்தனர்!
இனாம் இனாம் என இடுப்பில்-
கோவணமும் பறிப்பதை மறந்து கை நீட்டப் பழக்கிவர்
தன்மானத் தலைவர் என்பது தகுமோ! 
மாறி மாறி பொத்தான் அழுத்தியவன்,
அலுத்துப்போய் 49 'கேட்டானேயாயின்..
அதுவும் இல்லை இருப்பதில் குத்திவிட்டு போ என்பர்,
என் மக்கள் கண்ட ஜனநாயகம் இதுதானே!