Wednesday, February 24, 2016

சின்னஞ்சிறு ரகசியமே!

என் பதியே என்னில் பாதியையா தந்தேன்
என்னோடு நீ கலந்ததில் தானே நானே முழுமையானேன்
உன் பாதை தேடி ஓடிவர - மோதிரம் தந்து
அனுமனை அனுப்பிவைக்க உன்னை தீக்குளிக்க வைக்கும் ராமனல்லவே நான்
பொழுதொன்று போனதும் களையும் ஆசையா கொண்டேன்
யார் விதைத்ததுவோ என்னுள் வளர்ந்தொங்கிய,
ஒவ்வொரு தேவையாய் கொன்ற பின்னும்
மிச்சமாய் நீயே நிற்கிறாய்!