Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Saturday, January 25, 2014

இனபடுகொலை

ர் இன மக்களை பூண்டோடு அழிப்பது மட்டும் இனபடுகொலை என்றாகாது. இனத்தின் மொழி, சடங்குகள், பழக்கவழக்கங்கள் என அவ்வினத்தின் அடையாளங்கள், அவ்வினம் இவ்வுலகிற்கு ஈட்டித்தந்த கண்டுப்பிடுப்புகள் என ஒட்டுமொத்தத்தையும் ஏதும் இன்றி செய்து அவ்வின மக்களை உயிரோடு விடுவதும் இனபடுகொலையே.

பதினெட்டாம் நுற்றாண்டுற்கு முன்பு இந்தியாவில் எங்கும் பல்கலைக்கழகங்கள் உண்டோ? அதற்க்கு முன்பு இந்த படிப்பறிவு இல்லாமல் தான் வானவியல் சாத்திரங்கள் வந்தது, இரும்பு கிரேக்கம் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது (இப்போது இருப்பது போன்று இல்லாது இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக இருந்தது).

எல்லா வணிகமும் நல்ல முறையில் நடந்து செழிப்பாக இருந்த அந்த காலக்கட்டத்தில் இங்கு இருந்தவர்களுக்கு முக்கியமாக இன்று இன்றியமையாததாக கருதப்படும் ஆங்கிலம் என்ற மொழி தெரிந்திருக்கவில்லை.

சீனாவின் மிக சிறந்த அறிஞர் லின் யுதங் தன் நூலான தி விஸ்டம் ஆப் சீனா அண்ட் இந்தியாவில் (The Wisdom of China and India) கணித குறியீடு, கணித சமன்பாடுகள் இலக்கணம் புராதன கதைகள், சதுரங்கம் ஆகியவற்றை, இந்தியாவிடம் இருந்து தான் இந்த உலகம் கற்றுக் கொண்டது என்கிறார்.

இங்கே கலை, கணிதம், அறிவியல், வானவியல், வரலாறு, மொழி என இப்போது பிள்ளைகள் தனித்தனியே படிப்பது எல்லாம் ஆன்மிகம் என்ற ஒன்றில் தான் இருந்தது. கோவில்கள் அன்றைய தினத்தில் வழிப்பாட்டு தளங்காலக மட்டும் இல்லாமால் அறிவை போதிக்கும் பாடசாலைகளாகவும் இருந்தது.

உதாரணம், வழிப்பாடு தளங்களில் உள்ள நவ கிரகங்கள் (9 planets), இவற்றை கண்டறிந்தது யார் என கேட்டால் இப்போது உள்ள பிள்ளைகள் சொல்லும் பெயர் கலிலியோ, பதினைந்தாம் நூற்றாண்டிற்கு பின் வாழ்தவர். இந்த நவகிரக வழிபாடு என்பது நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு இருந்து வந்துள்ளது. ஆனால் அறிவியலின் தந்தை என அழைக்கபடும், இதை உரைத்தவரான கலிலியோ பிறந்தது ஆறு நூற்றாண்டிற்கு முன்.

பகுத்தறிவு என்பது அறிவுக்கும் அடுத்த நிலை. நடக்கும் ஒன்று நல்லதாயினும் தீயதாயினும் அவற்றில் உள்ள நன்மை தீமைகளை பகுத்து அறிந்து நல்லதை மட்டும் எடுத்து வாழ்வாதாரத்தின் மேன்பாட்டுக்கு பயன்தருமாறு இருத்தல்.

ஆனால் இங்கு பகுத்தறிவாளிகள் என கூறிக் கொள்வோர் கடவுள் இல்லை என்ற பேச்சால் ஆன்மிகம் சார்த்து இருந்த எல்லா வாழ்வாதார மேன்பாட்டு சடங்குகளையும் தீயிட்டு கொளுத்தினர் செய்வோர் அனைவரையும் மதிகெட்டோர் என்றனர்.

பல நூற்றாண்டாக மாட்டின் சாணம் கொண்டு வாசல் தெளித்து கோலம் இட்டவர்களை கழிவில் இறைவி லட்சுமியா என இழித்து பேசியவர்கள். இன்று அறுவியல் சாணத்தில் கிருமி நாசினிகள் உண்டு என சொன்னா போது ஏதும் பேசவில்லை. இன்னமும் வளராத அறுவியல் சொல்வதை நம்பும் இவர்கள்,  நூற்றாண்டுகளாக வந்த பழக்கங்களை அதின் ஆள் அர்த்தத்தை அறியாதவர்கள், பகுக்க தெரியாதவர்கள் பகுத்தறிவாளிகள்.

நேர்மாறான கூற்று இடாலியில் (பைசா) நடந்தது, கலிலியோ தான் எழுதிய "டையலாக் கண்செர்நிங் தெ டூ சீப் வேர்ல்ட் சிஸ்டம்சில்" என்ற நூல்லில் சூரியன் உலகை சுற்றவில்லை உலகம் தான் சூரியனை சுற்றுகிறது என்ற தன் சூரியமைய கொள்கைக்கு நிறைய ஆதாரங்கள் அளித்தார் . ஆனால் அது போப் அர்பன் VIIIஐ தாக்குவது போல் தோன்றியதால், அவர் புலன் விசாரிக்கப்பட்டு வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார். இது வேறு கதை.

இங்கு பகுத்தறிவாளிகள் செய்திருக்க வேண்டியது, அன்று சில வகுப்பினர் மட்டும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப் படவில்லை. ஆதலால் அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. அவர்களும் கோவிலினுள் சென்று பயில வழி செய்திருக்க வேண்டும். கோவில்களில் உள்ள கல் வெட்டுக்கள் தெரியா வண்ணம் கற்பூரம் ஏற்றுபவர்களை தடுத்தல். அவர்களுக்கு கோவிலின் உண்மையான அர்த்தத்தை புரியவெய்தல் இது எல்லாம் செய்திருந்தால் பகுத்தறிவாளிகள்.

ஆள்பவர்கள் கையாண்டது இரண்டு வழிகளை. முதல் வழி ஆங்கிலயேர் கையாண்ட வழி பிரித்து ஆளுதல் (Divide & Rule) மொழியின் பெயரால் மக்களாட்சி வந்த நேரத்தில் தேசிய மொழியயை எதிர்த்து ஏதோ தமிழுக்கு பங்கம் வருவதாய் காட்டி ஓட்டு சேர்த்தனர். ஒட்டு மொத்த மக்களையும் தேசிய மொழியாக இருக்கும் இந்தி மொழிக்கு எதிராக நிறுத்தினர்.
பல குறுநில மன்னர்கள் ராஜியங்கலாக, வேறுபட்ட பழக்கவழக்கங்களை கொண்டு, வெவ்வேறு மொழிகள் பேசி இருந்த சிறு நிலங்களை ஒரு நாடாக இனைத்து அதற்க்கான ஒரு பொது தேசிய  மொழியாக இந்தி அருவிக்கப்பட்டது. அதனை கற்க விடாமல் தமிழ் மக்களை தனிமைபட செய்து. மத்திய அரசாங்கம், பிற மாநில மக்களுடன் நல் உறவு இல்லாமல் போனதருக்கு காரணமாய் இருந்தது இந்தி எதிர்ப்பு போராட்டம்.

இப்போது அன்று இருந்த தமிழும் இல்லை, தேசிய மொழியும் இல்லை இங்கு. அந்நிய மொழியாம் ஆங்கிலம் தெரிந்தவர்களே அறிவாளியாக சித்தரிக்க படுகிறார்கள்.
இந்தி ஆதிக்கம் செய்யாமல் தடுத்து, தமிழையும் கல்வி மொழியாக தந்திருந்தால் பகுத்து அறிந்து செயல் பட்ட பகுதரிவாளிகளாய் கொண்டாடலாம். இந்தியை எதிர்த்தவர்கள் ஆங்கிலத்தை பள்ளிகளில் மேலோங்க விட்டது எதனால்.

வெளிநாட்டவரின் யோசனைகளை கண்டு வியக்கும் இவர்கள், வேதம் எல்லாம் பொய் என பொதுவாய் தூக்கி எறிந்த இவர்களுக்கு தெரியுமோ இனி வரும் சமுதாயத்திற்கு தெரியுமோ இல்லையோ, அணுகுண்டு எனப்படும் மிக மோசமான கண்டுபிடுப்பு, வெடித்த நாளில் இருந்து பல நுற்றாண்டு காலம் வெடித்த சுற்றளவில் உயிரினம் வாழ விடாது செய்யும் மிக கொடியதும் சக்திவாய்ந்ததுமான இவற்றின் தந்தை என அறியப்படும் ஜெ. ராபர்ட் ஒப்பென்ஐமர் (J Robert Oppenheimer) ஜப்பானில் இரு குண்டுகள் வெடித்த பின் சொன்னா வார்த்தைகள்,

In battle, in the forest, at the precipice in the mountains,
On the dark great sea, in the midst of javelins and arrows,
In sleep, in confusion, in the depths of shame,
The good deeds a man has done before defend him

பகவத் கீதையில் இருந்து.

மற்றொரு வழி, நம் நீண்ட நாள் நம்பிக்கையை பொய் என உரைப்பின், அதற்க்கு நம்பத்தகும் சான்றுகள் கேட்குமிடத்தில் கவனம் குவியும். அப்படி கடவுள் இல்லை என்ற கோசம் உயர்த்தப்பட்டது.


இதனால் திருமூலரின் திரு மந்திரம் (தமிழ் நூல்) பல விஞ்ஞான மெய்ஞான கூற்றுகள் நிறைந்த நூல் ஒதுக்கப்பட்டது.

“அணுவின் அணுவினை ஆதிப்பிரானை
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே
"


இன்று அணுவின் கூறுகளை அன்றே சிவன் மேல் பாடாலாய் பாடியிருந்தார் திருமூலர்.  இவர் வாழ்த்த காலம் ஐந்து முதல் எட்டாம் நுற்றாண்டு முடிய மூவாயிரம் வருடங்கள் வாழ்ந்தவர். தொலைநோக்கி நுண்ணோக்கி போன்றவை வராத காலம், இவை இரண்டும் வந்தது பதினாறாம் நூற்றாண்டுக்கு பின்னரே. இந்த கூற்றை பகுத்து அறிய முடியாத பகுத்தறிவாளிகள் சொன்னது தான் கடவுள் இல்லை என்ற கூற்று.

Monday, November 11, 2013

பிழைக்க வழி

சொந்த மண்ணில் பிழைக்க வழியில்லாமல்
என்றோ மனைவியை மீட்க கடந்த அந்த கடல் கடந்து
ஆண்டுகள் நூத்துக்கு மேல் அங்கு  வேர் ஊன்றி
உரிமைக்காக ஏங்கி
உறவை இழந்து
உரிமைக்காக ஆயுதம் ஏந்தியவர்கள்
ஒவ்வொருவராக மடிய
போராடியவர்கள் போர் குற்றவாளிகளாக
அவர்களுக்கு உரிய உரிமையும் இல்லாமல்
இழிவாகக் கொல்லப்பட்டு
மிஞ்சிய மக்கள்
இன்று சொந்த மண்ணிலும் திறந்தவெளிச் சிறையில்
இன்னமும் வாழ வழியில்லாமல்
காலம் கழிக்கும் அவர்களுக்கு
தமிழ் தமிழ் என முழங்கி ஆட்சி பிடித்தவர்கள்
மத்தியில் கிடைத்த பங்கிற்கு விலை போய்
மொழிக்கு ரயில் மறியல் செய்தவர்கள்
அம்மொழி பேசும் மக்கள் மானம் இழந்த போது
மொழியை செம்மொழியாக்கி மார்தட்டியவர்களா
நியாயம் பேசுவார்கள்?
ஆள்பவர்கள் ஆளுக்கு ஒரு தொலைக்காட்சி நிலையம் வைத்திருந்தும்
தம் மக்கள் அவலம் ஏதும் சொல்லாமல்
தீபாவளி பொங்கலுக்கு சிறப்பு படங்கள் மட்டும் நிறுத்தாது போடவர்களா
நியாயம் பேசுவார்கள்?
அவலங்கள் பதித்த குருந்தகுடுகள் வெளி வராது
வெளியிட்டவர்களை தண்டித்து
போராடியவர்களை கைதி செய்து
தம் மக்களை எரித்தவர்களின் கொடியை எரித்தது குற்றம் என்றனர்.
தமிழ் பேசி கட்சி வளர்த்த இவர்கள் மறைக்க நினைத்த
ஒவ்வொரு காட்சியையும் உலகிற்கு காட்டி விட்டது
ஆங்கிலம் பேசும் தொலைக்காட்சி!
தமிழை டமில் என்று உச்சரிபவர்கள் தான் இன்று குரல் கொடுக்கின்றனர்
தமிழர்களுக்காக..
புலம்பெயர்ந்தவர்களை கொல்ல ஆயுதமும் ஆட்களையும்
தந்து தந்து உதவியவர்களா போர் முறை தவறியவர்களை தண்டிப்பார்கள்?
தன் மண்ணில் பிழைக்க வழியில்லாமல் சென்ற
சொந்த மகள்களை பலாத்காரம் செய்ய பயிற்சி அழித்தவர்களா
நியாயம் பேசுவார்கள்?
சுதந்திரத்தின் போது கொடுத்த அத்துணை வாக்கையும்
ஆண்டுகள் உருண்டோடியும் தலைகள் பல உருண்டும்
சொந்த மண்ணிலேயே கைதிகளாய்
எந்த நடத்தைக்கும் சந்தேகத்துக்கு உரியவர்களாய்
தினம் தினம் சொந்த கஷ்மீர் மக்களையே ஏமாற்றி வரும்
இந்த இந்தியாவா புலம்பெயர்ந்தவர்களுக்கு பிழைக்க வழி சொல்லிவிடும்?





Saturday, July 21, 2012

எதையும் நம்பிடேன்


வனே இல்லை எனில் என் தமிழ் வளர்ந்தது எவ்வண்ணம்
அவனை பரிகாசம் செய்யின்.,
திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும் ஏற்றிய பாடல் கூற்று என்ன?
திருமூலர் சொன்னா திருமந்திரம் பொய்யென கொள்வேனோ?
இவன் பேச்சில் பெரிய புராணம் புதைந்துவிடின் என் தமிழ் என்னவாவது?
இன்னமும் கரம் பிடித்து தடுமாறி நடக்கும் – அறுவியல்
சொல்லும் நாள் வரை அவனை எண்ணாது இருக்குமோ என் மனம்
எல்லாம் அவன் என்றும்
அவன் என்னுள்ளும் என்ற பின்
இன்னும் தெருவில் தேடுவேனோ?
ஆனால் கையில் விதை இருக்க நிழல் கிட்டிடுமோ?
எடுத்து எரிந்து விட்டால் வளர்திடுமோ?
மூலவர் அவர் மந்திரமும்  இதுவன்றோ
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே.
எம் பசுவும் பால் சொரியும்
வெறி ஐந்தும் அடக்கிட முடியும்
என்னை நான் மேய்ப்பேன்!
என்னை என்னுள் கண்ட பிறகு தெரியும் அவன் யார் என்பது
அதுவரை நம்பிடேன் யவர் கூற்றும்!
சொல்லும் சொல் வண்ணமே கேட்கையில் சிலிர்த்திடும் என் மனமே
நம்பிடாதே நம்பி நின்றிடாதே
கேட்கையில் கிட்டிடும் சிலிர்ப்பை காட்டிலும் பெரியது காண்போம்
மெய்யாய் நாம் உணரும் போது!
அதனால் நம்பிடேன் யவர் கூற்றும்!





--சித்ரன்