Saturday, December 29, 2012

காதல் போல்

னவுகள் எல்லாம் தாண்டி
காலை கண்கள் விழித்தெழுந்து
கதிரவன் அவன் கதிர்கள் தேடி வான் நோக்கின்
கார் மேகம் சூழ்ந்த வானில் இருந்து அசைந்தாடி
காற்றோடு கை கோர்த்து மனதோடு வரும்
காதல் போல் விழுகிறதா என்ற ஐயம் எழுப்பி விழும் துளிகள்
கனம் தாங்கிய மனதின் பாரம் குறைக்கிறது!





Thursday, December 20, 2012

நோக்கெதிர் நோக்குதல்

ரு மாதம் முன்னர், ஒரு வாரக்கடைசியில் நானும் என் நண்பனும்  தி-நகர் சென்று கொண்டிருந்தோம், வழக்கம் போல தலை கவசம் இல்லை. ஒரு காவல் அதிகாரி வண்டியை  நிறுத்தி அவர்கள் வழக்கத்தை  கேட்டார்,

“வா வா இப்டி ஓரமா போடு வா... ஹெல்மெட் இல்ல.. வண்டி நம்பர் ப்ளேட் வேற உங்க இஷ்டத்துக்கு இருக்கு. ஹ்ம்ம்”

friend ஓட வண்டி சார்”

“ஆனா நீ தானே ஒட்டு வந்தே... ஹெல்மெட்க்கு இருநூறு, நம்பர் ப்ளேட்கு நூறு.. சரி தானே”

“சார் எல்லாத்தையும் பார்த்தா எப்டி.. கொஞ்சோ பாத்து சொல்லுங்க”

“சனிக்கிழம நீங்க சரக்கு அடிக்க போவீங்க நாங்க என்ன செய்யறது?” னு ஒரு கேள்வி கேட்டுட்டு கலகலனு ஒரு சிரிப்பு வேற

“இல்ல சார்.. சரகெள்ளா அடிக்கரதில்ல”

“அஹ! சரக்கு இல்லையா..?” என ஆச்சர்ய பட்டவர் வேற ஒரு நல்ல கொக்கி போட்டாரு..

“உங்கள மாறி கொஞ்சோ கலர இருந்தா பரவால.. எதாவது மடியும்.. என்ன பாரு.. எதாவது வாங்கி பூசனும்ல அப்போ தான் உங்க அளவு இல்லைனாலும் எனக்கும் எதாவது மடங்கும்”

“நீங்க வேற.. அதுவே பெரும் குழப்பத்துல இருக்கு” என சொல்லி ஒரு நூறு ரூபாயை கட்டி விட்டு நகர்தோம்.

சரி... அவர் சொன்னது பற்றிய யோசனை தொடங்கியது போய் வரும் வழி நெடுகிலும்,

ஒரு ஆணுக்கு ஒரு விஷயம் இருந்தால் அவன் தன் வாழ்கையின் அடுத்த தேவைகளை நோக்கி வேகமாய் ஓடாத் துவங்குவான். அந்த விஷயம் தான் பெண். தன்னை பற்றி தன்னை காட்டிலும் அதிகம் சிந்திக்கும் ஒருத்தி. சதா தன்னை சுற்றியே வரும் ஒருத்தி. எங்கே யாரிடம் நின்று பேசினாலும் ஒரு பார்வையில் தன் அருகே இழுக்கும் ஒருத்தி. அவள் ஒருத்தி தான் வேண்டும்.

இவனுக்கு காதல் எப்படி வரும் எனில்,

காணும் பெண் இடத்திலெல்லாம் வந்திடாது காதல்.
யவர் கண் நோக்கும் கால் - தன் கண்
விழித்திருப்பது மறந்து - அவள் விழி
இவன் வயிறு வரை பாய்கிறதோ – அதுவே
காதல் என கொள்வான் அவன்!

அந்த ஒருத்திக்கு என்ன வேண்டும். அவள் தன்னை நோக்க இவன் என்ன செய்ய வேண்டும்? மிருக இனத்தை பொறுத்தமட்டில் தன் ஆண்மை பலம் நிரூபித்தால் போதும். ஆதியில் மனிதனும் அப்படி ஆரம்பித்தது தான். பலம் பொருந்தியவன் தான் காட்டில் பிற மிருகங்களிடமிருந்து தன்னை காத்து, வேட்டையாடி தனக்கும் தன் சந்திதியினருக்கும் உணவளிக்க முடியும் என நம்பினாள் அவள்.

அனால் இன்று கதை வேறு... நிறம் முக்கியமா? அவள் நிறம் பார்த்தா  காதல் வயப்படுகிறாள்?

முத்தம் தரும்பொழுதிலே ஆண் அவள் கண்கள் நோக்கி அவளை நோக்கி இருப்பான், அவளோ அதை கண்கள் முடியே உணர்வாள். அவள் உணர்வுகளால் ரசிக்கத் தெரிந்தவள். நிறம் கண்டு போபவள் அல்ல.

அவள் கனவுகளை மதிக்க வேண்டும் அதன் பின்னரே அவள் அவனின் சொற்களுக்கு செவி சாய்ப்பால். அதே கனவிற்கு சரியாக வண்ணமிட்டு அழகு படுத்தி அவள் முன் நிறுத்தினால் போதும் அவள் அவனை நம்பி வந்து அவன் மார்போடு தலை சாய்ப்பால்.
எந்த ஒரு தருணத்திலும் ஏது ஒரு செய்கையும் அவள் அல்லாது ஒரு உலகம் தன்னை மகிழ்விக்கும் என ஆண் இருந்தால் பின் அவளோடு கொண்ட பந்தம் விட்டுப்போக அவளே வழி செய்வாள். காரணம் அவளுக்கு அவன் மட்டுமே உலகம் என்று ஆகி இருக்கும். இருவர் வாழ அவள் ஓர் உலகம் செய்வாள், அவளை மதித்தால் போதும், அவள் சொல்லுக்கு மதிப்பளிதால் போதும்.

வள்ளுவர் சொல்வது இதனை விட பெரியது,

பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு1311

பெண்ணாக பிறந்த எல்லோரையும் பொதுவாக எண்ணி கண்களால் உண்பதால் கற்ப்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பை பாவை நான் தழுவ மாட்டேன் என கொபம்கொல்லுவாள். பார்தவே இப்படி ஆகும் என்கிறார் வள்ளுவர்.

Thursday, December 6, 2012

காதலின் அடையாளம்

ன் கண்கள் கலங்கி
நீ நிற்க எதுவும் காரணமாக இருக்கட்டும்,
அந்த உதட்டின் ஓரம் வரும் சிறு புன்னகையாயினும் அதற்க்கு
நான் மட்டுமே காரணமாக இருக்க வேண்டும் என்ற
என் பிடிவாதத்திற்கு யார் என்ன பெயர் வைத்து அழைத்தாலும்,
நீ அதை  நான் உன் மேல் கொண்ட காதலின் அடையாளமாக கொள்ளவேண்டும்..!

Monday, October 8, 2012

நட்போடு காதல் செய்வீர்!

ராத்திரி ஒரு ஒன்பது பத்து மணிக்கு துணிகளை துவச்சுக்கிட்டே வானொலியில ஏதோ பாட்டு நல்லா இருக்கேன்னு கேட்டுகிட்டு இருந்தேன். பாட்டுக்கு இடையில பயபுள்ள ஏதோ கேட்டுச்சு, திருமணத்திற்கு பின்பு நடப்பை தொடர முடியாமல் போவதற்கு காரணம் என்ன? அப்டின்னு. கேள்வி கேட்டுட்டு பாட்டு போடுவான்னு நம்பி கேட்டா உடனே ஒரு கல்யாணம் ஆன பொண்ணு.. அதுவும் காதல் கல்யாணம் செஞ்ச பொண்ணு ஏதோ அவங்களுக்கு ஒரு நண்பனா.. இப்போ கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அவன் கூட பேச முடியலயா, முன்னாடியெல்லாம் எதுவானாலும் அவன் கூட தான் பகிர்துக்குமா. இப்போ கல்யாணத்துக்கு அப்புறம் முடியலைன்னு ரொம்ப சங்கடம பேசுச்சு. சரி இப்போவாவது பாட்டு போடுவானு பார்த்தா இல்ல, இந்த பக்கம் தொகுப்பாளர் ஏன் இப்படி நடப்பை புருஞ்சிக்க மாட்டேன்கிறாங்க அப்டி இப்டின்னு இவர் பேசி ஒரு வழியா பாட்ட போட்டாங்க.


இத்தன பேச்சு கேட்டதுக்கு அப்புறம் நமக்கு பாட்டு எங்கே கேட்க்கும், யோசிக்க ஆரம்பிச்சாச்சு .

இப்போ அந்த கணவர்கள் எல்லா அவங்க மனைவிகளை தங்கள் நடப்பை (ஆணோ பெண்ணோ) தொடர விடுறாங்க. இவங்களும் எல்லா பிரச்சன, சந்தோசம், சோகம், சண்டை எல்லாம் அந்த நண்பர்கள் கூட பகிர்த்துகிட்டா இந்த பக்கம் இவரு எதுக்கு?

அட, இது ரெண்டு பக்கமும் தான், கணவர்களை தங்கள் பிரச்சன. சோகம் எல்லா நல்ல நண்பர்கள் கிட்ட சொல்றதுக்கு இந்தப்பக்கம் எதுக்கு கல்யாணம் பண்ணனும், வெறும் குழந்தைக்குனு சொன்னா அப்போ இச்சைக்கு அப்டின்னு ஆகிடாது.

வள்ளுவர் வாக்கின் படி பார்த்தால்,
உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு” – 1122

உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து இல்லாதது போல் இவளோடு நான் கொண்ட நட்பு அப்டின்றாறு. எந்த அதிகாரம்னா, ‘காதற் சிறப்புரைத்தல்’.

காதல் அதிகாரத்துல மடந்தையொடு கொண்ட காதல்னு சொல்லாம நட்புன்னு ஏன் சொல்லணும்?

காதல் தெரிவது புணர்தலில், நட்பு தொடர்வது பகிர்தலில். கல்யாணம் நீண்ட நெடு பயணம் என தொடர காதலோடு நட்ப்பும் தேவை என உணர்தலின் வெளிப்பாடாகவே இந்த குறளை நான் காண்கிறேன்.

நம் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள நண்பன் ஒருவன் வேண்டும் எனில், கட்டிலை மட்டும் பகிர்ந்துகொள்ள கல்யாணம் செய்து வாழ்க்கை துணை என கொள்ள வேண்டிய அவசியம் என்ன.

நல்ல நண்பன் என தெரிந்த பின் வேறு துணை தேடி அழைவதேன்? தெரியாத ஒருவரை தெரிந்து கொள்ளுதல் நட்பின் ஆரம்பம். தெரிந்தவரை புரிந்து கொள்ளுதல் நட்பு. புரிந்து கொண்டவர் கை கோர்த்து நடக்கும் நெடு பயணம், வாழ்க்கை.

நல்ல நண்பனை கல்யாணம் செய்து கொண்டால் இந்த சங்கடங்களுக்கு வழியே இல்லையே. அதை செய்யாது வேறு சில காரணங்கள், சௌகரியங்கள் பார்த்து நாம் செய்யும் தவறுக்கு நம் துணையை இப்படி வானொலியில் வசை பாடுவது எதற்கு?

காதலனோ காதலியோ, காதலை கடந்து நட்பு பாராட்டி காதல் செய்யின், வேறு உறவுகளோடு பகிர்தல் மிக அவசியப்படாது. அவசியம் இருப்பினும் தடைகள் சொல்லாது. காதல் அழகானது, நட்போடு இருப்பின் அதுவே ஆழமானது. நட்போடு காதல் செய்வீர்.


Saturday, September 29, 2012

நம்மோடு நாம்!

சுவர் இல்லா அறையின் கதவுகளை தாளிட்டு உன்னை
நான் நெருங்கும் போதும்,
கதவை திறப்பது போல் உன் சிறு விழிகள் நம்
இடையேயான இடைவெளியை அளக்கும்!
அருகில் வந்து உன்னை தீண்டும் முன்பே
போக விடு என பொய் சொல்லும் உன் சிவந்த உதடு!
கரம் பற்றியவுடன் மார்பில் சாய்ந்து
தொல்லை செய்யாதே என முத்தம் கேட்க்கும்
என் மேல் நீ கொண்ட நான் காணாத காதல்!
முத்தம் தீர்ந்தவுடன்
எச்சி பன்னிட்டஎன சட்டையோடு என்னை தள்ளிவிட்டு
மார்போடு சாய்ந்துக்கொள்ளும் தருணம் நீ கேட்டுணர்வாய்
உன்னோடு நான் கொண்ட காதல்!




Sunday, September 16, 2012

மீண்டும் கண்டுனர்ந்தேன்!

ந்தி கடந்து வந்த  இருள்
அடிவானத்தில் மின்னல்
காலின் கீழ் கடல் அலை
தலை எல்லாம் மழை தூறல்
அங்கு கனம் கூடாது என
என் காதுமடல் கண் மூக்கு வழி
வழிந்தோடி ஒலியலை செய்யும் கடலோடு கலக்கும் நொடி
ஊரெல்லாம் என் உடன் இருப்பினும்
யாரெல்லாமோ என்னுடன் நடப்பினும்
ஆண் என்ற கர்வம் தலையில் இருப்பினும்
என் கரம் நீ பற்றி நடக்கையில்
என் எல்லா கர்வமும் உருகி
நான் இருந்த உலகம் என் பார்வையில் இருந்து விலகி
உன் விழியில் நம் உலகம் பார்த்த தருணம் மீண்டும் கண்டேன்
இன்னும் மீளவில்லை என்பதனை இன்றும் உணர்ந்தேன்!



Wednesday, August 15, 2012

இந்தியன் அல்ல நான்!!!


ந்த அண்டத்தின் அழகுகளில் ஒன்றென இருக்கும் இடம்
அறுபத்தி ஆறு ஆண்டுகளுக்கு மேல் இன்னமும் குண்டுகள் தெறிக்க வாழுமிடம்
இன்னமும் சுதந்திரம் என்ற ஒன்றை முழுமையாக காணாத இடம்
சொந்த நாடென மிக நேசித்தது சகாக்களின் வாழ்வை சவமாக்கியும்
இன்னமும் அவ்விடத்தை கொண்டு என்ன செய்ய உத்தேசம்
என் தேசம் உரைத்தது இதுவல்லவே
இந்தியன் என்ற ஒரு சொல் தான் – அவர்கள்
கஷ்மீரில் வாழ இன்னமும் தடையாக இருப்பின்
அதை துறந்துவிடுகிறேன்!




Sunday, July 29, 2012

வேண்டுகோள்

கோபத்தையும், மகிழ்ச்சியையும் கண்ணாடிபோல் காட்டிய இம்முகம் வெளிறிப்போய்,
ஓடி ஆடிய கால்கள் ஓய்ந்து
எட்டி எட்டி பிடிக்க முயன்ற கைகள் விறைத்து
என் ஆவி பிரிந்து
இவ்வுடல் மட்டும் ஏதேனும் ஒரு தெருவில் –
கேட்பார் அற்று கிடக்குமாயின்,
அதன் அருகில் பதுங்கு குழிகள் இருக்கக் கூடும்
அதில் போட்டு போவோர் ஒவ்வொருவரும் ஒரு கை மண் தெளித்து போங்கள்
அருகில் கடல் இருப்பின் அதில் வீசிவிட்டு போங்கள்
காடெனில் விட்டு விட்டு போங்கள் இரையாகிப்போவேன்.
என்னோடு வந்தவர்களை வெற்றி வேகமாய் அழைத்திருக்கக்கூடும்
இல்லையேல் கொடுங்கைகள் அவர்களை நின்று நிதானிக்க விடாது விரட்டி இருக்கக்கூடும்.
காரணம் எதுவாயினும் இன்னும் முடிந்து விடவில்லை
ஒவ்வொரு விடியலும் புது ஆரம்பமே!
உணவுக்காக வரும் கூட்டம் நீங்கள் எனில்
என்னை உண்டு விடுங்கள்
சீரணம் ஆகும் போது உங்கள் குடல் வழி வண்டல் என வர மாட்டேன்
ரத்த நாளங்களில் புது ரத்தம் என பாய்ந்து வருவேன்
முன்னேரிச்செல்வோம்!



Saturday, July 21, 2012

எதையும் நம்பிடேன்


வனே இல்லை எனில் என் தமிழ் வளர்ந்தது எவ்வண்ணம்
அவனை பரிகாசம் செய்யின்.,
திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும் ஏற்றிய பாடல் கூற்று என்ன?
திருமூலர் சொன்னா திருமந்திரம் பொய்யென கொள்வேனோ?
இவன் பேச்சில் பெரிய புராணம் புதைந்துவிடின் என் தமிழ் என்னவாவது?
இன்னமும் கரம் பிடித்து தடுமாறி நடக்கும் – அறுவியல்
சொல்லும் நாள் வரை அவனை எண்ணாது இருக்குமோ என் மனம்
எல்லாம் அவன் என்றும்
அவன் என்னுள்ளும் என்ற பின்
இன்னும் தெருவில் தேடுவேனோ?
ஆனால் கையில் விதை இருக்க நிழல் கிட்டிடுமோ?
எடுத்து எரிந்து விட்டால் வளர்திடுமோ?
மூலவர் அவர் மந்திரமும்  இதுவன்றோ
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே.
எம் பசுவும் பால் சொரியும்
வெறி ஐந்தும் அடக்கிட முடியும்
என்னை நான் மேய்ப்பேன்!
என்னை என்னுள் கண்ட பிறகு தெரியும் அவன் யார் என்பது
அதுவரை நம்பிடேன் யவர் கூற்றும்!
சொல்லும் சொல் வண்ணமே கேட்கையில் சிலிர்த்திடும் என் மனமே
நம்பிடாதே நம்பி நின்றிடாதே
கேட்கையில் கிட்டிடும் சிலிர்ப்பை காட்டிலும் பெரியது காண்போம்
மெய்யாய் நாம் உணரும் போது!
அதனால் நம்பிடேன் யவர் கூற்றும்!





--சித்ரன்

Saturday, June 23, 2012

குரு

யாதுமானவன்
யாதும் அவன்
என்னுள் எனதை தேடிக்கொள்ள
கற்றுத்தருபவன் - அவன்
எல்லாம் என்னவென்ற கேள்விக்கும்
எல்லாவற்றிலும் நான் யார் என்ற கேள்விக்கும் 
விடை தேட வழி சொல்பவன்  அவன்
மூன்றில் என்னை முதன்மை படுத்தி
உணர்ந்திட உதவுபவன்  அவன்
கட்டுண்டு கிடப்பவன் அன்றே அவன்
கட்டுண்டு இருப்பின் என் கட்டை அவிழ்ப்பது எவ்வாறோ?
சுதந்திரமானவன்
சூத்திரங்கள் உமிழ்பவன்
கர்மம் அறுத்தவன்
தர்மம் அறிந்தவன்  அவன்
கோடியில் ஒருவன் அல்ல என் குரு
கோடிக்கணக்கானோர் என் குரு.




Saturday, June 16, 2012

என் ஜீவன் நீ!

நெருப்பென நான் இருப்பின்
காற்றென நீ வருவாய்
உன்னை உண்டு நான் ஜீவிப்பேன்
என் ஜீவனில் நீ மீண்டும் பிறப்பாய்
என் ஜீவன் அன்றோ நீ!



Friday, May 4, 2012

உன்னோடு நான்!!!

ன் அலாதி அன்பில் நினைந்து
நானும் ஒரு துளி என்று ஆனேன்
உன் மழையில் இன்னும் எத்துனையோ உறவுகள்
தாய் என்று தந்தை என்று
தமக்கை என்று தமையன் என்று
ஒவ்வொரு துளியும் நம் உறவின் தூரம் அதிகரிக்க காரணம்
நீ ஆதரிக்காத துளி என்று நம் உறவு இன்று
யாரும் கேட்காத சந்தம்
உறவில்லா உறவோடு நான் கொண்ட பந்தம்!
உன்னோடு நகரும் என் நாளுக்கு தெரியாது 
நீ என்னோடு இல்லை என்று!
நீ இல்லாமல் உன்னோடு நான்!!!








Monday, April 16, 2012

இராவணன் என வருவேன்

நீயின்றி வாழ்வது இவ்வளவு கடினம் என்று உணர்ந்திருந்தால்
அன்றே இராவணனாய் உன்னை கடத்தி கொண்டுவந்திருப்பேன்...
மிகவும் நல்லவனாய் உன்னை போ என்று சொல்லிவிட்டு
இன்று உன்னை நினைத்து
உன்னையே சாடுகிறேன்!
இன்னும் ஒருமுறை என் முன் வந்துவிடாதே
முதல் முறை பயத்தில்
காதல் சொல்வதற்கு முன்பே கடத்தி கொண்டுபோய்விடுவேன்!
என் சூரியன் மறையும் வழி
நீ கிழித்த உச்சந்தலை வகுடு வழி
உன் மூக்கின் நுனியில் வியர்வை வடியும் தருணம்
என் உயிர் விட்டு விலகுமடி
காது மடல் எல்லாம் தொட்டு சிலிர்க்கும் நேரம்
என் வாழ்நாள் சாபம் விலகுமடி
கண்கள் சாய
கைகள் இரண்டும் தலைக்கு வைத்து உறங்க முற்படும் நேரம்
நீ என் மார்மோடு அணைத்து
அதில் தலை வைத்து உறங்கும் உஷ்ணம் தரும் உறக்கம்
மரணனித்து இறப்பை வென்று வரும் என் கர்மம!
விடியும் பொழுது எல்லாம் பொய்யென்று உணரும் நேரம்
மீண்டும் ராவனண்ணாக துடிக்கிறேன்!




Thursday, March 29, 2012

என்னோடு என்னைக்கொல்லும் துரோகி



கண்கள் விழிக்கவே வெறுப்பாக இருந்தது. இருத்தும் விழித்து விட்டத்தை பார்த்தவாறே படுத்திருந்தான். கண்கள் கலங்கின. வெறுப்போடு அதை துடைத்து எறிந்தான். முகம் முழுக்க வெறுப்பு தொற்றிக்கொண்டு இருந்தது.

அப்போது தான் வந்தான் உள்ளே அவன். இன்னும் அதிக நிசப்தம் அந்த அறையில் நிலவியது. வந்தவன் முகத்தை பார்க்கக் கூட விரும்பாதவனாய் மறு புறம் திருப்பிக் கொண்டான்.

சில நிமிடங்கள் நிசப்தத்தோடே நகர்ந்தது. இன்னும் வெறுப்பு ஏறி முகம் சிவக்க அவனை பார்த்து கத்தினான்..

எங்க டா வந்தே?? உன்ன எல்லா.. இச்ச. பாரு இப்போ தினமும் என் முஞ்சி மாறுது. முன்னாடி எல்லாம் சொல்லுவியே கண்ணாடியே பார்த்து தல சீவிவிட்டு வான்னு. அப்போ எல்லாம் அதை பார்த்ததே இல்ல. ஆனா இப்போ தினம் தினம் .. ஒரு நாளிக்கே பல தடவ பார்க்கறே.. அப்டியே தா..

சொல்லி முடிக்கும் முன்னரே குரல் தழுதழுத்தது. கொஞ்சம் ஆசுவாசம் படுத்திக்கொண்டு மூக்கை துடைத்துக் கொண்டு தொடர்ந்தான்

அப்டியே தான் இருகேனானு... தலைய கோதின கையில அவ்ளோ முடி சின்ன புன்னகைக்கு பின் தொடந்தான் இந்த இதுக்கு எத்தன கடை ஏறி.. எந்த எந்த சலூன்.. கிரீன் இட்டிரேன்ஸ்...இச்ச...

தலையில் அடித்துக் கொண்டு தொடர்ந்தான்.. கண்கள் கலங்கிய படி..

வாயால சாப்பிட்டு எத்தன நாள் ஆச்சு தெரியுமா? காலைல சரியா பாத் ரூம் கூட போக முடியல.

இடைமறிக்க முயன்றவனை பார்த்து, கண்களை வேகமாக துடைத்துக் கொண்டு எழுந்து உட்கார்த்து

டேய் பேசாத சாவடுச்சுடுவேன்

 கைகள் உதற ஆரம்பித்தன, மேல் மூச்சு வாங்கியது. மீண்டும் மீண்டும் கண்ணில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே இருந்தான். வந்தவனுக்கு ஏது சொல்வது என்று தெரியாமல், வெளியே போகவும் தோணாமல் பேச்சு வாங்கியப்படி நின்றிருந்தான்.

எங்கே வலிக்குதுனே தெரியாது. ரொம்ப நேரம் தூங்கினா எங்கே செத்து போய்டேனோனு தூக்கத்திலயே பயமா இருக்கு. சொல்லிக்கொண்டே வெறுப்போடு அவனை ஒரு பார்வை பார்த்தான். வந்தவனுக்கு கைகள் விறைத்து போய்விட்டிருந்தது. வந்தவன் முகத்தை பார்க்க பார்க்க இவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. கத்ததத் துவங்கினான்.

எப்டி டா உனக்கு எல்லா ஒன்னும் ஆகல.. நல்லா இருக்க.. ஏன்டா இப்டி எல்லாரையும் சாகடிக்கறீங்க. தூ.. இதே மாதிரி எத்தன பேரை சாகடிச்சிருப்ப.. உன்ன மாறி ஆளுங்கள கொன்னா என்ன?”

சத்தம் கதவுகளை தாண்ட, வெளிய அமர்ந்து இருந்த செவிலி உள்ளே ஓடி வந்து அவனை அமைதியாக்கினாள். வந்தவனை அந்த அறையை விட்டு வெளியே கூட்டிச் சென்றாள்.

நீங்க தான் அவர் ரூம்மெட்டா?”

ம்ம்

சிகரெட் பழக்கம் இருக்கா?”

ஆமா, ஆன..

அவர் சும்மா செக் அப் வந்தப்ப டாக்டர் அவருக்கு பழக்கம் இல்லை அப்டிங்கரத நம்பவே இல்ல. போக போக தான் தெருஞ்சது பெசிவ் ஸ்மொகர் அப்டினு. மத்த புகை எல்லாம் ஒரு பக்கம்ன.. இது வேற மாதிரி சார். நீங்க இழுத்து வெளியே விட்டுருவீங்க ஆனா பெசிவ் ஸ்மொகர்ஸ் அத உள்ள இழுகரதொட சரி வெளிய வராது. புரியுதுங்களா?”

மேற்கொண்டு அவனால் ஒன்றும் கேட்க முடியவில்லை. முகத்தை மறைத்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வேகமாக வெளியே நடந்தான். வழியில் யாரோ ஒருவர் புகைதுக்கொண்டு இருக்க அருகில் நின்றிருந்த கர்பஸ்திரியையும் ஒரு நொடி நின்று பார்த்து நடந்தான்.

Thursday, March 22, 2012

நான் கேட்பதெல்லாம்

ங்களிடம் புது சட்டை கேட்கவில்லை
கிழிந்த என் சட்டையை தைக்க கற்றுக்கொடுங்கள் என கேட்டு நிற்கிறேன்
உங்கள் கரம் பிடித்து நடக்க வேண்டாம்
என் பாதையை விட்டு நீங்கள் விலகி நடத்தால் போதும் என்கிறேன்
உங்கள் அறிவுரைகளை நான் கேட்பதில்லை
என் அறிவு பசிக்கு தீனி கேட்கிறேன்
உங்களின் உபதேசம் தேவையில்லை
கலந்துரையாடி அறிவு பெற எண்ணுகிறேன்
தோள் கொடுத்து தூக்கிவிட வேண்டாம்
என் கால்களை இடராது இருங்கள்
நாங்கள் வளர்ந்து கொள்வோம்
எங்கள் எண்ணங்களை கொல்லாது இருந்தால் போதும்
உங்கள் ரசனைக்கு என்னை தீனியாக்காதீர்கள்
எனக்கென்று ரசனைகள் உண்டு, மதிப்பு கொடுங்கள் போதும்
உங்கள் கனவுகளுக்கு என்னை செயலாக்கம் செய்யாதீர்கள்
நீங்கள் இடறிய பாதையில் என் பயணத்தை தடுக்காதீர்கள்
தானாய் இடறி விழுந்தால் நானாய் எழ கற்றுக்கொள்வேன்

என்னை விட்டு விடுங்கள்!