Sunday, December 25, 2011

சுயநலம்


பேருந்தில் நின்றிருந்த அம்மாவுக்கு
எழுந்து இருக்கை தருகிறேன்!
சாலையில் கால் இடறி
விழுந்த அம்மாவுக்கு கை கொடுத்து தூக்கி விடுகிறேன்,
அவர் பால் பொருட்களை பொறுக்கி தருகிறேன்!
வேகமாய் செல்லும் போதும் -
யாரும் வழி கேட்டல் நின்று பதில் சொல்கிறேன்!
கண் பார்க்க முடியாது -
வரும் பேருந்து எண் என்ன வென்று கேட்கும் அம்மாவுக்கு
நான் கடுப்பில் இருந்த போதும் நிதானமாய் பார்த்து சொல்கிறேன்!
எங்கோ நான் இல்லாது
தனியாய் பேருந்தில் போகும்,
தினம் சாலையை கடக்கும்
என் அம்மாவுக்கு யாரேனும்
இது போல் உதவி செய்வர் என்ற சுயநலத்தோடு!

-- சித்ரன்




Saturday, December 17, 2011

என் கண்ணில்...

ரே செய்தி ஒரு பக்கம் மரணம் தரும் ரணமும்,
மறுபக்கம் வாழ்நாள் ஆனந்தமும் தரும் எனில்
என் கண்கள் வழி வழியும் நீர்
ஆனந்த கண்ணீரோ அல்ல என்னை எரிக்கும் வெண்ணீரோ??
அது எதுவாயினும்
என்னை தலை குப்பற செய்யும் செய்தி
உன்னை பற்றியது என்பது மட்டும் புரிகிறது, என் வாழ்வே!
உனக்கு எதுவும் கேட்க வேண்டாம் எனவே
வாய் மூடி சிரித்தவாறே அழுகிறேன் நானே அறியாது!






Monday, December 12, 2011

உன் மனை புகா இனம்


டையறினம் அவன் கண்ணன் -
உன் மனை புகுவான் எனில்,
நான் இடையர் இனம் அல்ல.
காடு திரியும் சிவன்
அவன் இனமும் அல்ல.
இனம் கண்டு,
அவர் கொண்ட பணம் கண்டு
கணக்கு போட்டு அனுமதிக்கப்படும்
உன் மனை புகா இனம்!
இப்படி உள்ளவர் எவரையும் சகா எனவும்
காட்டிக்கொள்ளா இனம்!


தெரியல!

ன் கால் மேலே ஏறி நின்னுருக்கா,
முத்தொ கொடுத்தா,
அவ உதட்ட கடுச்சுறுக்கெ,
கட்டி புடுச்சிருக்கோ,
ஒன்னா  அழுதிருக்கோ,
ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதல் சொல்லிருக்கோம்,
என்னென்னமோ பேசிருக்கொ,
கைய புடுச்சுகிட்டு நடந்திருக்கொ,
இப்போ, ஒன்னு இல்ல,
எதுவும் வேண்டான்னு சொன்னா..?
செத்து கீழ விழுந்திட்ட மாதிரி இருந்தது,
என்னமோ..
அவ எப்பவு என் கூடதா இருப்பானு இருந்தது
அவ அப்படிதா நினைக்க வெச்சா..
ஆனா நா எதோ விட்டுட்டேன் போல,
அவளுக்கு ஏனோ நம்பிக்கை இருந்தது
எப்படியும் அவ போனப்புறம்
வேற ஒருத்தியோட என் வாழ்க்கை நல்ல இருக்கும்னு!
தெரியல!




Friday, November 25, 2011

பகு கூட்டல் அறிதல்



என் ஆண்டவனுக்கு இன்னமும் அஞ்ஞாதவாசம்,
அதனால் தான் அவனுக்கு இன்று இத்துணை வேசம்!
யாரெவர் எப்பெயரில் வேண்டினாலும்,
தருவதும் வருவதும் அவன்
அவனிடத்தில் இருந்து தான்!
வனால் பிரிவினையாம்,
அவனால் மதமாம்,
மதத்தால் ஜாதியம்,
ஜாதியால் ஏற்றத்தாழ்வாம்,
இவையால் வெறியாம்,
வெறியால் உயிர் பலியாம்!
இத்துணைக்கும் காரணம் அவன் என அவன் மேல் பழி யாம்,
அவன் இல்லை என்று சொன்னால் பலி நின்றுடுமாம்!
பெரிய பகுத்தறிவாளிகளின் பலர்  முறையே சொல்லும் கதை இது.
தண்ணீரும், இந்த தமிழ்லும் பிரச்சினைகள் கொண்டுவந்திடுதலால்
தள்ளி வைப்பது என்ன முறை!!?
ஜாதகம் ஜோசியம் பஞ்சாங்கம் எல்லாம்
பழைய கிழவியின் அர்த்தமற்ற திண்ணை படைப்பாம்,
இது தான் இந்த கருப்பின் கூற்று!
நீண்ட பாதை செல்ல
வழி நெடுகிலும் பலகைகள் பல உண்டு
விபத்துகள் நேரிடும் பகுதி என எச்சரிக்கை அதில் கண்டு
திரும்பிப் போகும் அறிஞரிடத்தும்,
காணாது போகும் பகுத்தறிவாளரிடதும்
உள்ளது என்பேன் மூட நம்பிக்கை!
இவர்கள் யாவரும் பேசுவது எது வரை,
வெளியே பிச்சையிட்டு
உள்ளே உன்னிடத்தில் பிச்சை கேட்ப்போரின் உரை வரை!
தூது சொல்ல வந்தவர்கள்
நாடாள்வது என்ன முறை..?
நீயே கேட்பாய் இவர் குறை.
எத்தனையோ தோஷக்காலங்கள் உனக்கு உண்டு
அதில் கடந்து போகும் பகுக்க தெரிய கருப்பு துண்டு!
எத்தனையோ பெயரில் உன்னை தொளுததுண்டு,
இது உன்னை இல்லை என்று சொல்லும் மதம்,
இந்நாட்டு அரசியலுக்கு துணையாய் நீயும்
தமிழும் உண்டு!

--சித்ரன்


Tuesday, November 22, 2011

எனக்கென ஒருத்தி..

நான் எழுதுகையில் – மற்றொரு
கையில் ஏந்திக்கொள்ள சிணுங்கும் ஒருத்தி!
வேலைக்கு கிளம்பும் அவசரத்தில்,
முத்தம் தந்து மறையும் முகம் அவளுடையது!
என் முத்தத்தை எச்சை என துடைத்துக் கொண்டே,
இன்னொன்று எதிர் பார்க்கும் – அணைக்கும்
பார்வை அவளுடையது!
நடை பழகுபவள் போல் – எப்போதும்
என் கரம் பற்றி நடக்கும் – என்னை
வீழ்ந்துவிடாது காக்கும் கரம் அவளுடையது!
ஆண் பெண் பேதம் அறிந்தது முதல்-
நான் உணர்ந்த முதல் வாசம் அவளுடையது!
என் இதழை நினைத்த மறு இதழ் அவளுடையது!
என் மேல் புரண்ட – நான்
புரட்டி கற்றறிந்த புத்தகம் அவள் தேகம்!
எனக்காக கண்ணீரும் சுரந்து ,
என்னை தடுமாறியும் விழ செய்யும் சிறு கண்கள் அவளுடையது!
என் கைகள் கசக்க பூ சுடும் கூந்தல் அவளுடையது!
என் மகிழ்ச்சியாய் வந்த அவள்என்றும்
எனக்கான எனக்கென ஒருத்தி!




Saturday, November 19, 2011

இழப்பதில்தான் இன்பம்!

நாம் பெற்றவை எல்லாம் ஒன்றை இழந்து தான்,
ஆனால் யாரும் இழக்க தயாராய் இல்லை.
பெற எப்போதும் தயங்குவது இல்லை.
இதை இழக்க மட்டும் ஏனோ துடிக்கிறோம்,
ஊரை கூட்டி நேரம் கேட்கிறோம்,
இதை இழந்ததை நிரூபிக்கவே
கோயிலை சுற்றுகிறோம்.
ஆணாகட்டும் பெண்ணாகட்டும்,
கற்பை இழப்பதற்கே சேர்கிறோம்.
பெண்ணானவள் செல்வியை இழந்து திருமதி ஆகிறாள்,
ஆண் என்பவன் பிரமச்சரியத்தை இழக்கிறான்,
இன்பம் இல்லையேல்
இயற்றமாட்டார் இத்திருமணச்சடங்கை!




Monday, November 14, 2011

எதுவோ நிரந்தரம்!?

நானும் நீயும் நிரந்தரமோ..?
நானே போனபின் நீயிருன்தென்ன அவனிருந்துஎன்ன,
பரமனவன் இருந்தும் என்னக்கென்ன.
யாரோ சொல்லக் கேட்ட நிரந்தரம் என்ற வார்த்தை
நிரந்தரம் என்பதில் நிதர்சனம் ஏதும் இல்லை.
மாறி மாறி போன மொழியை பற்றி
வேள்வி நடத்தி,
மக்களை போட்டு எரித்து அரசியலும் செய்வர்,
எம் மொழி நிரந்தரமோ..?
மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டால் நிரந்தரமென்றாககுமோ,
மாறிப்போனால் நிரந்தரமெங்கே ஆவது.
எதுவோ நிரந்தரம்..?
உணர்ச்சிகளேனும் நிரந்திரமோ..?
இச்சைகளேனும் நிரந்திரமோ..?
நிரந்திரமாயின் பலர் பரத்தையர் சேரியிலேயே குடிகொண்டிருப்பர்,
மாறி மாறி மாற்றங்கள் கண்டு மக்கும்
பூத உடலே நிரந்திரமற்று இருக்கும் போது
அது மேல் கொள்ளும் இச்சை நிரந்தரமென்றாககுமோ..?
காதல் நிரந்தரமோ..?
கல்யாணத்திற்கு பிறகு பிறர்பால் வருவது
கள்ளக்காதல் எனில்,
யாரையோ காதலித்து விட்டு யாரையோ கை பிடிப்பது
கள்ளக்கல்யானம் ஆகாதோ..?
இப்படி கள்ளம் இருப்பது நிரந்திரமாகுமோ..?
கள்ளமேனும் நிரந்திரமோ..?
பழகியதை மாற்ற முடியுமோ,
மனம் போனதையாவது சொல்ல முடியுமோ..?
இந்த பாசமேனும் நிரந்திரமோ..?
பிறகு எதற்கு இத்துனை குழந்தைகள் அநாதை என்ற மதத்தில்..?
பற்றின்றி வாழ்வது வாழ்வு என்றவன் புத்தனவன்,
யாரும் பற்றோடு இராதீர் என்ற
பற்றை  மறந்தும் விடாமல் பற்றி இருந்தவன்,
அவன் பற்று நிரந்தரமோ..?
இதோ என் தேடல்
என் நாள் முடியும் வரை விடை காணாது இருந்தால்,
அதுவரை என் தேடல் நிரந்தம்!

--சித்ரன்


Sunday, November 13, 2011

எ மக!

ன் பிரணாப் பெருங்கனலால்
என் இனயவள் உதிர்த்த
வியர்வையின் உன்னதம் நீ!
உன்னை நுட்பமாய் தொட்டு ரசித்து சொல்லும்போது
எதுவும் புரியாமலேயே அவளோடு சிரிப்பேன்!
நீ நடக்கும்வரை நானும் உன்னோடு தவழ்வேன்,
அந்த வெயிலின் வெப்பத்தால் மட்டும்மல்ல -
என் உள்ளங்கையின் வெப்பத்தால் வளர்பவள் நீ,
என் கை பிடித்து நடக்கும் என் அன்னை நீ,
என் மார்பில் தூங்கும் என் அன்னை நீ,
சாப்பிட மறுத்து என் முகத்தில் உமிழ்ம் என் அன்னை நீ,
பள்ளி செல்ல அடம் பிடிக்கும் என் அன்னை,
என் தோளில் சாய்ந்து அழும் என் அன்னை நீ,
தாவணி போட ஊர் பார்க்க
வெட்கத்தில் என் பின்னல் ஓடிப்போய் ஒளியும் என் அன்னை நீ,
அடுத்தவன் கைபிடித்து உன்னை தாரைவாற்கும்போது -
கண்ணீர் துடைக்கும் என் அன்னை நீ,
நான் வளர்க்கும் என் அன்னை நீ,
என் வாழ்வின் ஆதாரம் நீ,
எங்கள் காதலின் அடையலாம் நீ,
என் மூன்றாம் அன்னை நீ!

--சித்ரன்



Saturday, November 12, 2011

நிஜத்தில் பொய்யாக

நினைவுகளோடு உறவாடி,
கனவுகளோடு சிரித்து,
நிஜத்தில் பொய்யாக புன்னகைத்து,
நடந்ததை மறந்து,
எனக்கு நானே உண்மையை மறைத்து,
வாழ தயாராகிறேன் தினம் தினம்!




Saturday, November 5, 2011

அவள் பெயர்!


தாவது நினைக்கும் போது வரும் அழுகைகும்
அழும்போதெல்லாம் வரும் நினைவுக்கும் -
இடையில் இருக்கும் அவள் பெயர்!
நீண்ட மௌனத்தை கலைத்து,
என்ன என்ற கேள்விக்கு
பதிலாய் வரும் ஒன்றுமில்லை -
என்பதில் இருக்கும் அவள் பெயர்!
காலை கண்கள் உறக்கத்தை உதறும் போதும்
இரவில் கண்கள் உறக்கத்தை அணைக்கும் போதும்
சட்டென வரும் நினைவு போல் அல்லாமல்,
சலனம் ஏதும் இன்றி எப்போதும்
என் மனதின் முனுமுனுப்பில் இருக்கும்
அவள் பெயர்!
அதுவாவது எனக்கானதாய் இருக்கட்டும்
எனக்கான எனக்கு மட்டும்மான
அவள் பெயர்!

--சித்ரன்

குறுக்கு சிறுத்தவள்!


லை கொதிப்பு போல் இவள் இயக்கம் இருக்கும்,
போட்டுத்தந்த பாதையில் மட்டுமே
இவள் பயணம் இருக்கும்,
அதிகம் ஒடிந்து போகமாட்டாள்,
அதிகம் உழைப்பில் களைக்கமாட்டாள்,
அதிகம் சுமப்பாள்,
யார் குருக்கிடினும்
இவள் கூர் வேகம் குறையாது,
இவள் பாதை இவளுக்கு மட்டுமே.
இப்படியும் ஒருத்தி வந்திருக்கிறாள்,
அதுவும் எப்போது என்பதை
எண்ணுதல் ஆச்சரியம் கூடும்.
எந்த பாதையிலும் சென்று,
வருவோர் போவோருக்கு வளைந்து கொடுத்து,
இப்படியாக இருந்தவர்கள் வாழ்த்த காலத்தில்
இவளும் வந்திருக்கிறாள் எனில்
இவளை பெற்றவனை என்னவென்று வைதிருப்பர்!
பலர் சிலாகித்திருந்தாலும்
சிலராயினும் சீன்டியிருக்கலாம்!
ஆனால் இன்று,
அவள் இடுப்பை வளைத்து செல்லும்
அழகை பார்க்கமாட்டார் இல்லை,
தினம் தினம் பார்பவருக்கும்
பரவசம் குறையவில்லை
யாருக்கும் குறையாத அவள் கூர் வேகம் போல்,
விழியில் பிரமிப்பு போகவில்லை
அவளோடு பல முறை பயணம் செய்தும்.
நன்றி மீண்டும் வருக என இரு கரம் கூப்பி
சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறாள்
அவளோடு பயணம் முடித்து
அவரவர் பாதை பார்த்து போவோருக்கு இன்று!
எப்போதோ எவனோ கொஞ்சம் மாத்தி யோசித்திருக்கிறேன்
மண்டைக்காரன் அவன்!

--சித்ரன்

Sunday, October 2, 2011

என்னவள்!

லையில் விழும் நீரானது -
அங்கத்தோடு தழுவி அங்கங்கே தங்கிச் செல்வது போல்,
என் சிந்தையோடு தழுவி என்றும் தங்கிடுதல் அவள் ஆகுமோ!
பார்த்ததும் விழச் செய்திடும் அழகான அகண்ட கண்கள்
அதன் மேல்சீரான புருவமும், கூரான நாசியும் கொண்டு,
தாரான கூந்தல் முதுகு தாண்டி தொட்டிட்டால் அவள் ஆகுமோ..?
அதன் முன்புறம் அவள் அழகு கூட்டினல்
அவள் நகைக்க, இதழ் நினைக்க என் தொண்டை வற்ற செயல் அவளேன்றாகுமோ?
அடிமேல் அடி வைத்து அவள் நடக்க
என் காலம் நின்றுவிட்டால் அவளேன்றாகுமோ?
என் தவறினை ரசித்துத் திருத்திட்டால் தெரிந்திடுமோ அவள் என்று!?
இது எல்லாமோ நான் பார்ப்பேன்,
கோவம் கொள்ளும் வேளையில் என்னை போ எனச் சொல்லி,
மார்போடு சாய்ந்து அழும் அவளுக்கென்ன!
வர வேண்டாம் என சொல்லி எனக்காகக் காத்திருக்கும் அவளுக்கென்ன!
சிரித்தாலே மறைத்திடும் விழியானாலும்
எங்கிருந்தும் என்னை குத்திடும் அவளுக்கென்ன!
என்னை போல் என் மேல் காதல் கொள்ளுதல் போதாது
அவள் என்னவள் என நான் உணர்ந்திட!





Saturday, September 10, 2011

மழை இரவில்..!

னைத்தையும் தொட்டணைக்க வந்துக்கொண்டிருக்கும் மழையின் அறைகூவலாய்
அனைத்தையும் சுழலவைதுக் கொண்டிருந்தது காற்று!
வருகிறேன் என சொன்னதுதான் தாமதம் என்பது போல்,
விருட்டென வந்து கொட்டியது..
இந்த மழை..
எங்கோ சென்றுக்கொண்டிருந்த ஜோடியை,
அந்த பாலத்தின் அடியில் ஒதுங்க வைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது!
பேருந்தில் சன்னால் ஓரம் தூங்கிகொண்டிருந்தவரை
சடாரென எழுப்பி விட்டு சிரித்தது மேகக் கூட்டம்!
வேகமாய் தன் கடையை பூட்டிக் கிளம்பியவரை
அதனினும் வேகமாய் திறக்கவைத்து,
சாலையோரம் சென்றுக்கொண்டிருந்தவரை தஞ்சம் அடையவைத்து,
அவர் மேல் சாரல் புன்னகை விசிக்கொண்டிருந்தது!
ஐந்தாண்டுக்கு ஒருமுறை மட்டும் வாழும்-
அற்ப ஜீவனாய் ரோட்டோராதில் உறங்கிக்கொண்டிருந்தவரை,
உதற வைத்து இரக்கமின்றி அவரிடத்தை ஈரமாக்கி விட்டிருந்தது-
தான் மண் மீது கொண்ட உரிமை பத்திரம் காட்டி!
கொஞ்சம் பயந்தார் போல் தான் வேகமாய் ஓடியது,
அவரிடத்தில் விழுந்த நீர் உரிமை நிலைநாட்டி இருப்பினும்!
சிலருக்கு அனந்த கண்ணீராக!
சிலருக்கு கொதி நீராக!
உலகிற்கு சம மழை என பெய்த போதும்,
பாகுபாடுகள் பல உண்டு இங்கு!
இரவோடு வந்ததால் இன்னமும் நெருக்கம் உண்டு
கொஞ்சம் வெறுப்போடு!
காலையும் கேட்கலாம் ஈரம் காய்தாலும்
இந்த திடீர் மழையை பற்றி
பலவாறான பேச்சுக்களை!
பார்த்ததை காட்டிலும் கொஞ்சம் அதிகமாய்!






Sunday, August 7, 2011

எது வரை கேட்கும்...!?

ம் பொறுமையின் குடம் தீரும்வரையில்..
இவர்தம் காதுகள் கேளாது! 
ஒருநாளில் குற்றம் குறைக்க மந்திரம் ஏதும் தெரியாத நாய் மந்திரி இவர்!
ஏதும் ஒருநாளில் நடந்திடாதெனில்,
விலை உயர்வு மட்டும் எப்படியோ..
காலைப் பத்திரிக்கையிலும், மாலை பத்திரிக்கையிலும்
மாறி மாறி ஒரேநாளில் ஏறிவரும்..?
கொஞ்சம் கொஞ்சமாய் பரவி,
தலையை தாக்கும் விஷம்...
உம்ம விலை உயர்வும் அதுபோல் தானே..?
கொஞ்சம் கொஞ்சமாய் பரவும் போது பாராளுமன்றத்தில் 
யார் பெண் மயிரில் பூச்சுடிக்கொண்டிருந்திர்..?
பணம் பணம் என கேட்டுப் பிடுங்கும்,
பரத்தையர் சேரியானது உம்ம அலுவலகம்
நீர் இன்னும் அறிந்திருக்கமாட்டீர்!
அமாவாசையும் எமகண்டமும் பார்த்து பார்த்து,
மனு வாங்கும் இடம் பெயர் அறிவாலயமாம்,
இவர் மூடநம்பிக்கை ஒழிக்கும் ஒளிதருவாரம்!
அம்மா என்ற சொல்லே கேடவார்தையாக்கிவிட்டார்!
எம் முதுகு தோல் உரித்து..
என்னகே இலவச செருப்பு தருவர் ..
அதன் அச்சு உம்ம கன்னத்தில் பதியும் நாள் வரும்!
நீர் போடும் சட்டமும் வரியும்,
வந்தவன்தான் ஏற்பாரோ இல்லை..
போபவன்தானே என பொருப்பாரோ!
போட்ட சாலைக்கு வாகனம் செல்ல வரியாம்
இதில் சுங்க வரி என்று ஒவ்வொரு முக்கிலும் இன்னும் கேட்பாராம்,
பணம் கொண்டவன் கட்டித் தொலைப்பான்,
மானம் கொண்டவனே தட்டிக் கேட்பான்!
கிழக்கில் விடியவில்லை என்றாலென்ன,
இதோ மேற்கே ஒளி தெரிகிறது.. 
உமக்கு கிலி காட்ட வரும்!
புரட்சிகள் மீண்டும் வரும்..
அன்னியருக்கு எதிராய் மட்டும் கண்டிருப்பீர் இங்கு,
இதோ ஆளத்தெரியாதவருக்கு எதிராய்
அதிகார போதையில் திளைப்பவருக்கு எதிராய்!
இன்னுமா கேட்கவில்லை உமக்கு அந்த சத்தம்
காதைத் திறந்துவையும்!
பெற்ற அப்பனே ஆனாலும்
தவறென்று பட்டபின் பாசம் அறுத்து
ஊர் பார்க்க உலகம் கேட்க
உடனே அவன் தலை கொய்யும் துணிவு வரும் வரை கேட்கும்..
இந்த ஈனம் கெட்ட நாய்களின் குரைச்சல்...!




Monday, July 11, 2011

சிவப்பு கிளிகள்!

மராவதி அவசரத்தால் அவர் இருவர் காதல் தோற்றதாக கூறுவர்..!
லைலாவின் மீது கொண்ட காதல் மஜ்னுவை பைத்தியமாக்கியது என பலவாராய் கூறினர்!
ரோமியோ ஜூலியட் காதல் விஷத்தாலும் குத்துவாளாளும் முடிந்தது என்ன சொல்லக் கேட்டதுண்டு!
இவர்கள் காதல் என்றும் வாழ்ததுவே அன்றி இவர்கள் அல்ல!
காதலோடு வாழ்தவர்களில் யான் அறிந்தது இவர்கள்..
இவர்கள் கல்யாணம் மூன்று மரபு வேலிகளை தள்ளிவிட்டு நடந்தது..
அவள் இவனைக் காட்டிலும் பல வருடங்கள் முன்னரே இந்த பூவுலகில் பூத்திருந்தால், முதல் வேலி..
அவள் சீமானின் புதல்வியாகவே பிறந்திருந்தாள்,
இவன் நடுத்தர குடும்பத்தின் நாயகனாகவே அவதரித்திருந்தான், என்றும் இருக்கும் இரண்டாம் வேலி..
அவளின் தந்தை கண்டு எடுத்த மணமகனோடு நடந்த நிச்சயத்தை முறித்து இவனை கை பிடித்தாள்.. மூன்றாம் வேலி!
செவ்வெனவே துவங்கிய வாழ்க்கை அந்த சிகப்பு சித்தாந்தத்தில் சிக்கி கொஞ்சம் கொஞ்சமாய் துண்டானது!
இவனை மட்டும் அவள் நேசித்திருந்தால் இவன் என்றோ நின்றிருக்கக் கூடும்..
பிறந்த ஏழில் ஒன்று பெயர் வைக்கும் முன்னரே இறந்தது..
சவப்பெட்டி வாங்ககூட வழி இல்லாதவனாய் அவன் உலக சிந்தையில் இருந்தான்..
அவள் அப்போதும் அவனிடத்து காதல் குறையாது தான் இருந்தாள் - காரணம்
இவனின் சிதையில் சிந்தும் சிவப்பின் மேலும் அவள் காதல் பட்டுன்று இருந்தது!
அவள் மார்பிலும் வென் நிறப்பால் இன்றி அதிலும் அவன் சிகப்பே வழிந்த போதும் அவள் இருந்தாள் அவனோடு!
கார்ல் மார்க்ஸ்.. ஜென்னி கார்ல் மார்க்ஸ்..
மிகவுமாக அறியப்படாத சிவப்பு காதல் கிளிகள்!



Sunday, July 10, 2011

பிராணப் பெருங்கனல் . . . ! !

யாரும் விளக்கேற்றவில்லை..
தனி அறை இல்லை..
எதுவும் எச்சில் படவில்லை..
எந்தப் பழத்தையும் தேடிக் கடிக்கவில்லை..
இரு புறம் விரிந்த கைகளை தேடி பிடிக்கவில்லை..
உன் வியர்வை வாசம் உணரவில்லை..
உன் நெற்றியில் வியர்வை இல்லை..
ஆனால்...
உயிர் துளி விட்ட மூச்சு வாங்குதடி,
உன் கேசத்தின் வழி கடந்ததற்கே!




Monday, May 30, 2011

சந்திப்பு!

தும் நடந்திராது போல் தான் கேட்டு விட்டாய்..
'ஹே! எப்படி இருக்க?' என்று,
நானும் உண்மையை மறைத்து தான் சொல்லிவிட்டேன்,
'ம்.. நல்லா இருக்கே' என்று!
எதிர்பார்த்திருப்பாய் நானும் கேட்பேன் என,
அல்லது முறைக்காவது நான் கேட்டிருக்க வேண்டும்
நீ? எனவாவுது சின்னதாக ஒரு கேள்வி!
நீ எது பதிலாக சொன்னாலும் வலித்திடும் என்றே - உன்
அடுத்த கேள்வி வரை மௌன மொழி கொட்டித்தீர்தேன்!
'ம்' என சொன்னாலும் சரி,
'இல்ல டா' என நின்றிருந்தாலும்!
பிரிந்துசென்ற போது ஏற்பட்ட ரணத்தில் இயம் வார்தற்போல் எரிந்திருப்பேன்!
நானும் வழி கண்டுபிடித்து திரும்பி நடந்திருப்பேன்,
பார்த்ததும் தடுக்கிடும் கயல்விழி என இருந்திருந்தால்..
அந்த சின்னக் கண்ணில் நான் விழுந்தது எப்படி எனவே அறியாத போதே..
ஆராய்ச்சியில் நான் கிடந்த போதே ஏனோ சென்றுவிட்டாய்!
இன்னமும் கேட்கிறது கடைசியாக..
என் கரம் பிடித்து உன் கரத்தை அதில் புதைத்து நீ சொன்னது..
'பத்திரமா தானே இருக்கு... அப்படியே இருந்திட கூடாதானு தோணுது' - என
முடிக்கும் முன்னரே தழுதழுத்த உன் குரல்!



--சித்ரன்