Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Wednesday, February 24, 2016

சின்னஞ்சிறு ரகசியமே!

என் பதியே என்னில் பாதியையா தந்தேன்
என்னோடு நீ கலந்ததில் தானே நானே முழுமையானேன்
உன் பாதை தேடி ஓடிவர - மோதிரம் தந்து
அனுமனை அனுப்பிவைக்க உன்னை தீக்குளிக்க வைக்கும் ராமனல்லவே நான்
பொழுதொன்று போனதும் களையும் ஆசையா கொண்டேன்
யார் விதைத்ததுவோ என்னுள் வளர்ந்தொங்கிய,
ஒவ்வொரு தேவையாய் கொன்ற பின்னும்
மிச்சமாய் நீயே நிற்கிறாய்!


Sunday, November 22, 2015

மழைத்துளி

ஒத்தத் துளியா மொத்தமா நினைசுடும்
கொட்டி தீர்த்த மழையா தொடாத இடமெல்லா நெளிஞ்சே போறே
உடுத்தின துணியா இன்னும் இருக்கமா என் மேல இருக்கே
உடம்பெல்லா ஊறி போன பின்னு
இன்னு உள்ளே சூடவே இருக்கேன்
நேரம் என்னனு ரெண்டு பேரும் கேட்கல
பொழியற மழை நேரங்காலமா பார்க்கும்
ஓடுற வெள்ளம் காடும் மலைய பார்த்தா நிக்கும்
கண்ணோட கண்ண வெச்சுகிட்டு
கையோடு கை வெச்சு அழுத்தி
காதோட மூச்சு காத்து அடிக்க சொன்னது
அடிவயிதுல எதிரொலிக்குது!

Saturday, September 19, 2015

இன்னு என்ன சொல்ல..

ந்த நெத்தியில நீ தீட்டும் பொட்டுக்குள்ள
நீண்டு கிடக்குறேன்.. எழுந்து தான் நீட்டி படுக்கறேன்..
திட்டு உன் கோவத்துல தீ மூட்டி குளிக்கறேன்..
உன் நினைப்பு சத்தியம்தானு காட்ட கருகி கிடக்கிறேன்..
காதோரமா சுருட்டி வைக்கும் அந்த கேசம் போதுமே,
நான் தூங்க அந்த நீண்ட சடை கூட வேண்டாமே..
கண்ண குத்துமுன்னா சாமிக்கு பொங்க வெச்சேன்,
நீ வந்து நின்னா போதுமுன்னு தானே
கோவில் வாசலிலே குத்தவெச்சேன்..
இன்னு சும்மாவே சுழட்டி பார்க்காதே,
அப்போ பார்த்த பார்வைக்கே வீடு தெரு மறந்து நிக்குறேன்..
இன்னு எங்கே போறே நானே இங்கே என்னை விதைச்சு வைச்சிருக்கையிலே
வாய துறந்து சொல்ல வாக்கு ஒன்னுமில்ல
நீ என்னை கடக்கு முன்னமே சிணுங்கி எனக்கு சொல்லும்
உன் வலவிக்கு தெரியும் நீ கேளு அதுவே சொல்லும்!

Sunday, April 26, 2015

உன் விருப்பம் போல் ..

னக்காக எதையும் உதறி விட்டு
வந்தவள் அல்லவே நீ..
தான் கொண்ட ஆசைகளை
துடைத்தவளில்லை நீ..
நான் இறுக்கும் போது
வடியும் வியர்வையிலும்
தன் விருப்பும் வெறுப்பும்
அழியாமல் என்னை அனைத்தவள்..
நான் பதித்த எச்சி துடைக்கும் போதும்
உன் வண்ணம் அழியா வண்ணம் துடைத்தவளன்றோ..
பசியில் நான் பற்கள் பதித்த போது
வளர்த்து வைத்திருந்த நகத்தால்
என் புறத்தை கீரியவள்..
நின்னையா தேடினேன்
நீ விரல் கோர்த்த பின்னரே
தேடலின் உன்னதம் உணர்தேன்
உன் மனம் நீ கொண்ட பாதை
என் விரல் விட்டு நடந்தாய்..
சின்னஞ்சிறு ரகியமா நீ
இனி எல்லாமுமாய் – உன்னையும்
செரிக்கும் ஒருத்தி மடிசாய காத்திருக்கிறேன்!

Wednesday, November 19, 2014

என்னை நானாக்கியவளன்றோ!

நாதன் அவன் நடராஜன் ஆடலை கண்டோ
உமையவள் அவள் வந்தாள்
எந்த காளையின் தாளத்திற்கு
நான் எந்த காலையேயினும் உயர்த்தினேன் நீ வர
தலைவி நீ வரவே நான் தலைவனென்று ஆனேன்
உன் விழி இடறியதில்
தலைகீழாக வீழ்ந்ததை யாரறிவார் - நீ இன்றி
யார் இடறிட துணிவார்
தூணாக நீ இருக்கையில் உருளும் புவியே சமமாக இருப்பின்
என்னை இடர்வதேது!

Thursday, October 16, 2014

யாதாக்குவாயோ!

த்தனை முறை தான் சிரித்திட முடியும்
கண்ணில் பொங்கிடும் அழுகையை அடக்கி
நீ நான் எனபது எல்லாம் போக நாம் என்று ஆனபின்
மீண்டும் நான் ..
நீ விட்டு போவாயானால்
பத்து தலை இராவணன் என உனை கொண்டுவருவேன்
உன் தேவை எதுவாயினும் அதை நிவர்த்தி செய்திட
பத்து அவதாரமேனும் எடுப்பேன்
என்னில் உறங்கிக்கிடக்கும் தெய்வத்தை தட்டி எழுப்பி
ஊன் கொடுத்து வாழவைப்பதும்
வெளியே தெரியும் மிருகத்தை சீண்டி விட்டு ரசிப்பதும்
உன் இதழ் பேசும் மொழியன்றோ
இன்னும் என்னை யாதாகி ரசிக்கப்போகிறாயோ!

Thursday, September 11, 2014

கோவத்தில் பிரியத்தை தெளிப்பவளே

நீ திட்ட திட்ட திகடுதடி
திட்டித் தீர்த்தப் பின்னு
நாக்கிலே சப்பு கொட்டி கேட்க துடிக்குதடி..
உன் கோவத்தையும்
திருவிழாவா கொண்டாடி ரசிக்கிறனே..
கோவத்தில் நீ விடும் பெருமுச்சிக்குள் வசிக்கிறேனே..
அந்த கருவிழி உருள உருள
ஓடி களச்சு
ஒரு சோம்பு பச்சை தண்ணிகுடிச்சதா அடிவயிறு குளிருதடி..
திட்டி திட்டி எம்மேல உன் உரிமைய காட்டி
என் உயிரயே உலுக்கரியே..
இன்னு என்ன பண்ணி தொலைப்பியோ
நீ சிரிச்சு என் நெஞ்சோட சாஞ்சா
நா எப்படி சாவேனோ!

Wednesday, August 20, 2014

மௌனம் களையவிடு

ல்லா உறவுக்கும் பெயர் யார் சொல்ல
என் சிந்தை திருடும் உறவு இது
நான் எப்போது உன்னிடம் சொல்ல
கல்லுக்கடியில் காயாத ஈரத்தில்
துயிலும் சிறு வண்டு போல
உன்னோடு பேசிய
மங்காத நினைவுகளோடு பேசி பேசி
தினம் தினம் நான்
நீ இல்லாத நொடிகளை கொல்கிறேன்
நித்தம் யாவருடனும்
நான் பேசுவதே
உன்னை பற்றி என் சித்தம் குளிர
ஏதும் சொல்வார் என்றே
மறுமுறை பார்கையில்
உதட்டை சுளிக்காதே
காதோரம் சுருண்ட முடியை ஒதுக்காதே
நான் சொல்ல வந்ததை சொல்ல விடு!

Friday, August 8, 2014

தீண்டத் தொலைந்தேன்!

தீண்டின அடுப்புமேல வெச்ச பாலா பொங்குது எம்மனசு
நீ போன அப்பறம் தீஞ்சு போன வாசம் உன் நாசி எட்டியிருக்காது
நெடுந்தொலவு நானு கடக்கையில்
உன் நினப்புல தான் தொலச்சேன்
தொலைச்சது ஏதுன்னு தெரியல தேடிப்பார்க்க
போன இடம் போன பின்ன தெரிஞ்சது
வந்து சேர வேண்டிய இடத்ததா நானு தொலைச்சது
நீ உருட்டு அந்த கருவிழியில தானே என் பாதை நீளுது
சோகமோ இல்ல சிரிப்போ
எதுவோ ரகசியமா வெச்சா கூட
ஒடச்சு எட்டி பார்க்கற..
காரணம் கேட்டு சிரிக்கற
அப்புறம் காணாம போய்டற
எல்லோரு சுத்தி இருந்து
யாரும் இல்லாத இந்த பௌர்ணமி நிலவு கிட்ட நானு புலம்பி தவிக்கறே..
என் புலம்பல் கேட்டு கேட்டு அதுவும் இப்போ தேயுது!



Sunday, April 27, 2014

இல்லாமல் இருந்திருந்தால்

ருத்தியாக தானே வந்து நின்றாய்
ஏன் எனக்கு நவராத்திரி நாயகியாக தெரிந்தாய்
என்னோடு தோள் உரச நடந்து தோழனானாய்
தலையில் தட்டி தவறுகள் திருத்தினாய்
எனை சேயாக்கி தாயாகி
ஏனோ என்கையில் நீயே சேயானாய்
இன்னும் என்னென்னவாகி எனை என்னவாக்கா போகிறாய்?
எங்கோ கிடந்தது பார்த்திடும் மேகமா தாகம் தீர்க்கும்
நீ சீவி முடித்து வரும் கேசம் தீண்டினால் தீராதா?
பார்வை இருப்பதால் தானே
பார்த்துமட்டுமே தாகம் எடுக்க எட்டி நிற்கிறேன்
இல்லாமல் இருந்திருந்தால்
உனை தொட்டு பார்த்திருப்பேன்!
தினமும் உன்னால் அழகாக தெரியும் ஆகாயத்தையும் பூலோகத்தையும்
உன் பார்வையால் இன்னும் அழகாக கண்டிருப்பேன்!

Sunday, March 30, 2014

கோர்க்க நீயா வா!

ரையிர பேய் கூட
ஒத்த மரத்துல தூங்க போயாச்சு
ராத்திரி பொழுதெல்லா
தொலைச்ச தூக்கத்த தேடியே காணாம போகுது
என்னத்த தேடனு எத தொலச்சேனு
தேடும் போதே மறந்து போகுது
தூக்கம் கலஞ்சு கண்ணு தெறக்கும் போது தெரியுது
அதுவர நீ என் கூட பேசினத நினச்சுதா நேரம் போனது
பொண்ணுக்கு காதல் வந்தா
யாருக்கு தெரியாது
செரிக்காத சோரா
அவ நெஞ்சு கூட்டில கிடந்தது வாட்டி எடுக்கு
என் பொழப்பு இங்க வேற
காதல் வந்து வாட்றது எனக்கே தெரியாது
என்னைய வாட்றது அதுனே தெரியாம
என் மலே நானே வெறுப்பாகி கிடந்தே
எவனையும் கூட்டுல சேக்காம தனியாவே திரிஞ்சே
எல்லா புரிஞ்சு சொல்ல வரதுக்குள்ள
நீ போய்டே
நீ போ இப்போ நீயாவே
நா தொலச்சத தேடயில கிடச்சுது ஒ தூக்கோ
நீயாவே தேடிட்டு வா
நீ நானுங்கரத கொர்த்து நாமுனு ஆக்க
ஆயுசு இன்னு இருக்கு காத்துகிடக்க
நா கிடக்கே உனக்காக!

Monday, March 24, 2014

முதல் துளி நீ எனக்கு!

மொட்டை மாடி தூக்கத்தை கலைக்கும் சிறு தூறல் போல
உன் துப்பட்டா தீண்டும் போது
விழித்திருந்தும் மீண்டும் விழிக்கிறேன்..
பேசி முடித்து நீ போகும் போது
அடைமழையில் ஆடி தலை துவட்டி
சிறு தூறல் தேடி கை நினைக்க துடிக்கும் மனமாய்
வேறு என்ன பேச என்று தேடித்துடிக்கிறது..
நீ நில்லாமல் ஏதும் சொல்லாமல்
சிறு பார்வை வீசி குட்டி சிரிப்பை எறிகையில்
மழை தூறல் தாங்கிய இல்லைகள்
என் முகத்தில் சாரல் தெறிக்கிறது..
உன்னோடு நடக்கையில்
அந்த வானம் வெளிக்கிறது
இருந்தும் உன் சிரிப்பில் மின்னல் வெட்டி
அடைமழையே பொழிகிறது..
உனை காணாத போதும்
சிலந்தி வலையில் சிக்கிய துளியாய்
மின்னும் உன்னோடு இருந்த ஞாபகங்கள்..
எங்கிருந்தோ ஆரம்பித்து
ஆயிரம் மையில் கடந்து
எங்கு எதை தொட்டு வந்தபோதும்
என் நெற்றி மத்தியில் வந்து சேரும்
என்னை தொடும்
முதல் துளி நீ எனக்கு!

Thursday, February 13, 2014

பொழிந்திட வா!

வெளுத்திருந்த வானம் எங்கும் முகில் வந்தது
சேர்த்த முகில் அனைத்தும் உடைந்தது
உடைந்த முகில் நீராய் பொழிந்தது
பொழியும் நீராய் நீயே வந்தாய் என்றே ஓடினேன்
நான் வேகம் கூட்டுவதற்குள் ஏன் நின்றாய்??
ஒரு துளியும் நினையாமல்
உன் நினைவில் நான் நின்றேன் மீண்டும் வெளுத்த வானடியில்
மீண்டும் வருவாய் என்று இன்னும் நிற்கிறேன்
நீ பொழிந்தால் போகும் என் மீது நான் பூசிய கரையாவும்
போகும் போனது போனபின்னர் நான் மீண்டும் பிறப்பேன்
பிறந்த என்னை கையில் ஏந்த நீயே வா
நீ வருவாய் என்றே சிரித்துகொண்டு நானும் பிறப்பேன்!
உன் கரத்தில் நான் விளையாடிட
என் கண்ணின் விழியில் நீ உன்னை தேடிட
உன்னை கிள்ளி
உன் கரத்தில் இருந்து நான் கிளம்பிட
நீ துரத்தி வா என்னை
இந்த விளையாட்டு விளையாடிட
என்னை நினைக்க வா
இன்னும் நிற்கிறேன் வா அடியே
என்னை கலைத்து விட்டு போன நீயே – வா
என் மீது பொழிந்திட!





Saturday, February 8, 2014

அனுபவம் புதுமை

நீ மழலை இல்லை
இருந்தும் என் கையில் ஏந்தத்தவிக்கிறேன்
நீ இல்லாத போதும்
உன்னோடு பேசி சிரிக்கிறேன்
பொத்தி வைத்திருந்த பூவிலிருந்து
ஒரு பட்டம்புச்சி பறந்தது
உன் சிறு பார்வை என்னை கடக்கும் நேரம்
என் நிலை மங்கி உதடுகள் புன்னகை ஒன்று பூத்தது
என்னை நானே ரசித்தேன்
சிறு சிரிப்பால் சாகடித்தாய்
ஒரு புன்னகை வீசி எழுப்பிவிட்டு போனாய்
இன்னும் என்ன செய்வாய் – என்னை
என்றே காத்திருக்கிறேன் தினமும்!
காதல் என்று சொல்லிவிட்டால் கனம் குறையும் என்றே
சொல்லாமல் தாங்கினேன் அதோடு உன்னை!
அருகினில் உன்னை கண்டாலே
துளி துளியாய் சிதறினேன்
பட்டாம்பூச்சிகள் அடிவயிற்றில் படபடக்க!
உன்னோடு பேசிவிட்டு நடக்கும் நேரம்
அனைவரும் எனை ரசிப்பது போல் ஒரு கலக்கம் கொண்டேன்
என்ன? என்ற உன் கேள்விக்கு
எவ்வளவோ பதில் யோசித்தும்
ஒன்றுமில்லை என்று மட்டும் சொல்லி நகர்கிறேன்
உறக்கம் எல்லாம் என் அறையில் உறங்கிட
இரவுகள் எல்லாம் காதல் சாயம் பூசி செல்ல
பகல் எல்லாம் பைத்தியமாய்
கண்ணாடியில் என்னை கண்டே நான் வெட்கம் கொள்ள
குரல்வழி தண்ணிர் இறங்குகையிலேயே தாகம் கொள்ளும்
புது அனுபவம் கற்றேன் – உன்னால்
என்றால் பொய் என்று சொல்லும்
உன் மேல் கொண்ட ஈர்ப்பு!




Thursday, January 2, 2014

மார்கழித் திங்கள்

ன் பேர் எழுதின அரிசி விளையும் நிலம்
நீ வகுடு எடுத்து வாரும் உன் தலை  நேரடி
உன் உச்சந்தலை தாண்டி
அந்த வகுடு வழி வலிஞ்சு
உன் கூர் மூக்கின் நுனியில்
தாண்டவம் ஆடும் ஒரு பொட்டுத் துளி
அந்த துளி போதும் என் ஜென்மத்தின் தாகம் தனிக்க
அதுவும் தர மறுத்து சினுங்கி
உயிர் இருக்கும் நாள் வரை
நான் கிடந்தது உறங்கிட ஏங்கும் உன் இதழ் தொடுமாயின்
அந்த துளியாய் நான் மாற மாறும் என் தாகம்
காற்று வந்ததால் கொடி அசையுதோ
இல்ல கொடி அசைவதால் காற்று வந்ததான்னு
குழம்பி கிடக்கும் யாருக்கும்
உன் மூச்சு காத்தில் என் ஜீவன் வாழ்வது தெரிந்தால் என்னவாகுமோ?
கள்ளி நீ நீயா வந்து சிரிச்சாலு
பேயா மாறி வந்து பகை சொன்னாலு என் கண்ணுல காதல் குறையாது
இந்த சப்பாத்தி கள்ளி வாழ மும்மாரி கேட்காது
இந்த மார்கழி பனிகூட தந்ததில்லை
என் மார்பின் ஓரம் நீ சாய்ந்து படுத்து
உன் இதழின் ஈரம் படுகையில் என் உடலில் பரவும் சிலிர்ப்பை
இம்மாதம் வரும் நல்ல நாளும் கெட்ட நாளும்
எல்லா நாட்களும் பரமனவனுக்கே என்று
ஏது காரியமும் தைக்கு ஒத்தி போடுவர்
நீ அங்கு உறங்கிக் கிடக்கையில்
என் இமையா ஓய்ந்திடும்
இந்த உறக்கத்தை நானும் ஒத்திவைப்பேன்
நானும் எதையும் மறந்து ஆந்தை என விழித்திருந்து
உன் உறக்கத்தை ரசிப்பேன்
பாதியில் நீ சிறு பார்வை திறந்து
என்னவென்று கேட்டு என்னை உறங்கிட சொல்வாய் பாதி கண்ணால்...
என் கரம் பரவி கிடக்கும் உன் கேசம்
என் இரவென நானும்
என் கனவே என் மார்பில் கிடந்திட
இனி என் தூக்கத்தில் என்ன வருமோ என கண் அசர்வேன்
நானும் அரசனாவேன் என் அரசியென உன்னை பார்ப்பதால்!


Sunday, December 1, 2013

மகுடி

ரு முறை உண்டு
தினங்கள் இரண்டு சுருண்டு கிடந்தேன்
உறவுகள் எல்லாம்
மாதம் கிழித்து எறியும் சட்டையென இருந்தேன்
என் வட்டாரத்தில் யாரும் வரலாம்
யவரும் தங்கிட முடியாது
யாரையும் தாங்கிட நான் இல்லை என்றிருந்தேன்
ஒரு முறை பட்ட சலனத்தில்
சிக்கி இப்படி மாறினேனோ
இல்லை இப்பிறப்பே எனக்கு இப்படிதானோ என்றிருந்தேன்
மகுடியாய் வந்தாய்
சிரிக்க வைத்தாய்
என்னை நானே ரசித்தேன்
என் கனவுகளை உணவாய் உண்டாய்
பாவம் ஏதும் பார்க்காதவனுக்கு
பயம் தொற்றிக்கொள்கிறது
என் இருளினை எரித்து
காணாத வெளிச்சம் தந்தாய்
காயத்திற்கு மருந்து தேடாதவனை
உன்னோடு பேச காரணம் தேட வைத்தாய்
இதுவரை தனியாய் இரவும் பகலும் கடந்தவன்
இந்த மகுடிக்கு
ஒவ்வொரு நொடிக்கும் ஏங்கி
உற்றத்தோழனாய் இருந்த தனிமைக்கு பயந்தவனானேன்!



Saturday, November 16, 2013

வா!

ன் அழகை என் கர்வத்தில்
கணக்கிட்டு கொள்ளும் தனித்துவமான என் அழகே
நீண்ட தூரம் நீ சென்று விட்ட போதும்
பேசாமல் நாட்கள் கடந்து போகின்ற போதும்
இன்னும் என் கண்கள் உன்னை காண்கிறதே
என் செவியில் உன் சிரிப்பின் இசை ஒலிக்கிறதே
இரவுகள் கலைந்தாலும்
கண்களில் கனவுகள் உரைகிரதே
யாரென்னை அழைத்த போதும் திரும்பவில்லை நான்
உன் பெயர் வரும் திசை திரும்ப மறக்கவில்லை
யாவரும் தேடும்படி
என்னை நான் துலைத்துவிட்டேன்
உன் கண்கள் என்னை துளைத்தவுடன்
மீண்டும் எய்துவிடதே உன் பார்வையை
இப்போதே இரண்டாக உணர்கிறேன் நான்
இன்னும் என்னை உடைக்காதே
உன்னை அள்ளி அணைக்கையில் ஒட்டிக்கொள்வேன்
வெட்க்க அணையை உடைத்துவிட்டு வா
நீல வானத்தில் மேகம் அள்ளி தெளிப்பேன்
இந்நாள் வரை உன் முகம் காட்டிய
அந்நிலவை கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்வேன்
நீண்ட நிலத்தில்
அடர்ந்த காடுகள் தேடி புற்கள் பறித்துப்பரப்பிவிடுவேன்
உன்னோடு கிடந்து அந்த வானத்தில் மேகம் கலைத்து விளையாடிட
வா!


Wednesday, October 16, 2013

நிலாவொளி நிழல்

நிலாவொளி நிழலோடு நான் நடக்கையில்
உன்னோடு நடந்த அந்த ஞாபகம் எல்லா தெறிக்க
எட்டாத அன்னிலவில் உன் முகம் கண்டு என் பாதை நான் மறக்க
நீ இப்போ என்னோடு இல்லையே என்ற எண்ணம் நான் மறக்கவோ
பிறை என்றாலும் உன் சிரிப்பை காணமல் போவேனோ...
கருசக்காட்டு பக்கம் வானத்தில் மேகம் ஏதும் கூடாம
மண்ணெல்லாம் ஈரம் காஞ்சு கிடப்பது போல
இனி விழ துளி இல்லைனு கண் காஞ்சு நிக்க
உன் பேர் கேட்கும் போது எல்லா அடி வயித்தில் புளி கரைக்க
ஏமாற போறேன்னு தெருஞ்சே
உதிர்ந்த பட்டாம்பபூச்சி இறகா ஓசை வந்த திசை திரும்பி
சீனி தின்ன வந்து, ஊதின காற்றில் பறந்து விழும் எறும்பா ஏமாந்து நிப்பேன்
ஊரெல்லாம் அடங்கி ஏத்தின விளக்கு திரி கருகி போக
இன்னும் என் மனசுல நடக்கும் போர் முடியல
முடுச்சு வெக்க நீ இல்ல
முடுச்சு போட உன் கழுத்தும் இல்ல
கண்ணு தூங்க போனாலு கொடுக்கர தெய்வம் தான் கூரை பிரிக்கறதா
வீட்டு கூரையையே கொட்ட கொட்ட பார்த்து போகுது இந்த ரா பொழுது
எங்கே கிடந்தாலு நீ வந்து மிதிக்கவே விட்டம் பார்த்து கிடக்கும் நெஞ்சு
நஞ்சு எடுத்து குடுச்சாலு கண்ணுறக்கம் வரதில்லையே
நீ வந்து முடி கோதி உன் மடி கொடுத்து செத்து போனு சொல்லு
ஏதும் சொல்லாம போகும் இந்த உசுரு...