Showing posts with label சாதியம். Show all posts
Showing posts with label சாதியம். Show all posts

Sunday, September 17, 2017

புத்தரின் இனவெறி

னிதா – தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதுவும் பரிச்சயமான பெயர். அவளின் மரணத்திற்கு பின் இருக்கும் அரசியலை தாண்டி, நீட்டை தாண்டி நம்மோடு நம் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை நேற்று வரை பங்கிட்டுக் கொண்டிருந்த ஒருத்தி இன்று இல்லையே என்ற ஆதங்கம் தான் இன்று பலரை உலுக்கியது.

அந்த ஆதங்கம் ரோகிந்திய இன மக்கள் மீது இந்திய அரசாங்கத்திற்கு இல்லாமல் போனது மிக வருத்தம்.

யார் இவர்கள், இசுலாமியர்கள் என்ற ஒற்றை வார்த்தையால் இன்று அண்ட நாடில்லாமல் ஒவ்வொரு நாட்டின் எல்லையிலும் நிற்கும் நாடோடியானவர்கள்.

உலகப் போரில் அமெரிக்கா சப்பானில் வீசிய அணுகுண்டின் வீச்சு இன்னமும் இருப்பதை போல இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியுற்ற போது இந்துக்களுக்கும் முசுலீம்களுக்கும் இடையே பிரிவினையை உண்டாக்கி பிரித்து சுதந்திர வேட்க்கையை நீர்த்து போக செய்த சூழ்ச்சி இன்றும் காச்மீரில் நம் மக்களை இழந்து கொண்டிருகிறோம். அது போல தான் மியான்மர் பர்மாவாக இந்தியாவோடு கிழக்கு இந்திய கம்பெனியின் ஆதிக்கத்தில் இருந்த போது பர்மா மக்கள் எதற்கும் லாயக்கு அற்றவர்கள் என்று ஒதுக்கி இந்தியர்களுக்கும், ரோகிந்திய இன மக்களுக்கும் அன்றைய முன்னுரிமை வழங்கியது.


அந்த வெறுப்பு சுதந்திரம் அடைந்து இராணுவ ஆட்சியில் 1982ல் அவர்களின் குடியுரிமை பறிக்கம் அளவு வளர்த்திருந்தது. திருமணம், கல்வி, வழிபாட்டு தளம் என அனைத்தும் மறுக்கப்பட்டன.

8/8 /1988ல் எழும்பும் 8888 (8888 uprising) என மாணவர்களால் ஏற்ப்பட்ட புரட்சியில் ஆங் சங் சுகி அடையாளம் காணப்பட்டார். ஒரு அகிம்சைவாதியாக தன்னை பிரகடனப் படுத்திக்கொண்டார். அந்த புரட்சிக்கு பின்னும் ரோகிந்திய இன மக்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் சுகி இராணுவ ஆட்சியை வெறுத்த இராணுவ அதிகாரிகளை கொண்டு கட்சி ஒன்றை துவங்கி 2015ல் ஆட்சி அமைத்தார். அதன் பின் ரோகிந்திய மக்களின் நிலை இன்னமும் மோசமாது. இதற்க்கு இடையில் 3/9/2014ல் அல் காயிதா அமைப்பு வெளியிட்ட கானொளியில் மியான்மர் முசுலீம்களை நாங்கள் மறக்கவில்லை. அவர்களை காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம் என்றது. அதற்கு அங்கிருந்த முசுலீம் குழுக்கள் எங்கள் தாய்நாட்டிற்கு எந்த அச்சுறுத்தல்களையும் ஏற்க்க மாட்டோம் என்று அறிக்கை வெளியிட்டது.

ஆனால் இன்று ‘மியான்மருக்கு திரும்புவதை வீட இந்தியாவில் மடிவதே மேல்’ என்ற ஒரு ரோகிந்திய அகதியின் வார்த்தை உணர்த்தும் அவர்கள் நிலையை.

பெளத்த சமயத்தை பிரதானமாக கொண்ட இலங்கையில் நடந்த கொடுமையின் நீட்சியே அதே பௌத்தத்தை கொண்ட மியான்மரில் அரங்கேறி வருகிறது.

துன்பத்துக்கான காரணம் பற்று என்ற புத்தரின் வழிவந்தவர்கள் மியான்மரை தங்கள் நாடு என சொந்தம் கொண்டாடி இவர்களின் குடியிரிமைகளை பறித்து விரட்டும் போது தென்னகத்தில் உள்ளவர்களை கீழ் பிறப்பாகவும், சமணர்களை கழுவேற்றிக் கொன்று தங்கள் சைவ சமயத்தை நிலை நிறுத்திய இந்தியா இவர்களால் தீவிரவாத அச்சுறுத்தல் வரும் என்று தடுப்பதில் எந்த முரணுமில்லை.

அல்லாவின் பெயரை சொன்னதற்காக ஒடுக்கப்பட்ட போது படை திரட்டி போரிட்ட முகமது நபியின் அந்த ஒரு சித்தாந்தத்தை மட்டுமே தவறாக புரிந்து கொண்டு இன்று சில குழுக்கள் அல்லாவின் பெயரை சொல்லி செய்யும் கொடுமைகள் இன்று அனைத்து முசுலிம்களையும் பயங்கரவாதிகளாய் பார்க்க வைக்கிறது.

இங்கு இனம், மொழி, நாடு என்று சொல்லி தினம் பல கொடூரங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் எல்லாம் தனியாக அடையாளப்படுதப்படுவதில்லை. குல்லாவும் தாடியும் வைதிருப்பாதால் இவர்களும் பயங்கரவாதிகள் என சொல்வது நம்மிடையே பகுத்தறிவு குறைவதையே நிருபிக்கிறது.


ஜெர்மனியில் தான் யூதன் என்றால் உடனே விசாரணைக்கு எடுத்து சென்று விடுவர், தான் ஜெர்மானியன் என்றால் தானில்லாது முன்னர் வாழ்த்த மூன்று தலைமுறையினரும் ஜெர்மானியர்கள் தான் என நிருபிக்க வேண்டும் தவறினால் விசாரணை கைதி தான், இது ஹிட்லர் கால நடை முறை. இன்று நாமும் அதையே தான் செய்து கொண்டிருக்கிறோம் ஹிட்லரை மட்டும் மனித மிருகம் என திட்டி தீர்த்து கொண்டு.


Saturday, July 8, 2017

வேற்றுமை கொல்

ன்று சமூக வலைதளங்களில் ஒரு படம் பகிரபட்டு வருகிறது. அது அமெரிக்கா இந்தியாவை பார்த்து இங்கு இடஒதுக்கீடு இருக்கும் வரை தங்கள் நாடு வளம்பெருமாம். அதாவது ஒதுக்கீடால் ‘அறிவாளிகள்(!??)’ இங்கு வேலை செய்யாமல் கடல் தாண்டி அங்கு செல்வதாக ஒரு கூற்று பரப்பப்பட்டு வருகிறது. அப்படி பார்த்தல் கல்வியில் இட ஒதுக்கீட்டால் மேல் குடியினர் (forward/general caste) கல்வி கற்க முடியாமல் போகிறது என்ற கூற்று பொய். இது போக எதோ பிற்படுத்தப்பட்டோருக்கும் பழங்குடியினருக்கும் (SC/ST - Scheduled Castes & Scheduled Tribes) மட்டும் தான் இந்த ஒதுக்கீடு இருப்பது போல் ஒரு தோற்றம் கொண்டு வரப்படுகிறது.


இந்திய அளவில் கல்வியில் 1954ல் கல்வி அமைச்சகம் 20% இட ஒதிக்கீட்டை பிற்படுத்தப்பட்டோருக்கும் பழங்குடியினருக்கும் (SC/ST) வழங்கியது. அதை தொடர்ந்து 1982ல் அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்வி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் 7.5% (அ) 15% இவர்களுக்கு ஒதுக்க உத்தரவிட்டது.

இதன்படி இவர்களுக்கு கல்விக் கதவுகள் திறந்தே 60 ஆண்டுகள் தான் ஆகிறது ஆனால் அதற்குள் ஐநூறு ஆண்டுகளாக ஏதோ இவர்கள் பரம்பரையே எளிதாக படித்துக்கொண்டு இருப்பது போல் ஒரு கூற்று காட்ட முயல்கின்றனர். இதனால் முன்னேறிய வகுப்பினர் (forward caste) எல்லாம் பின்தங்கி போய்விட்டது போலும் ஒரு பிம்பம் காட்டப்படுகிறது. அவர்கள் அப்படி பின்தங்கி எங்கும் மலம் அள்ளவோ, செருப்பு தெய்க்கவோ, சவரம் செய்யவோ, தெரு தெருவாக குப்பை பொறுக்கவோ இல்லை. வேதம் சொன்னதற்கு ஒரு பிராயாசித்தம் செய்துவிட்டு கடல் கடந்து மாட்டுக் கறியை விரும்பி உண்ணும் நாடுகளில் சம்பாதித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து
பாழியந்தோளுடை பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.”

இது ஆண்டாளின் நான்காவது திருப்பாவை இதில் மழையானது எப்படி பொழிகிறது என்றும் அதை பெருமாளோடு ஒப்பிட்டும் பாடப்படுகிறது. இப்படி பல்வேறு பாடல்களில் இன்று காணும் அறிவியல், மருத்துவம் என எல்லாம் இருக்கிறது.

ஒரு கையில் ஆராத்தி எடுப்பதும் இன்னொரு கையில் மணி அடிப்பது அந்தணர்கள் அன்றாடம் செய்யும் செயல். இப்படி இரு கரங்களில் இரு வேறு செயல்கள் செய்வது மூளையை ஒருங்கிணைந்து செயல்பட உதவும். இன்று மூளையின் செயல் திறன் அதிகரிக்க இப்படி சில வழிமுறைகள் சொல்லித்தறப்படுகிறது.

இவற்றை எல்லாம் ஒரு சமூகத்தினரே வைத்துக்கொண்டு மற்றவர்கள் கற்க விடவில்லை. ரிக் வேதத்தில் உள்ள வர்ண கோட்பாடை காட்டி வர்ணம் மாறுதல் தவறு என்ற பிம்பத்தை உண்டாக்கி, சவரம் செய்பவனை, செருப்பு தெய்பவனை, மலம் அள்ளுபவனையும் அவன் பரம்பரையையும் அப்படியே இருக்க வைத்தனர்.

கல்வி கற்பிப்பவன் அந்தணன், அவன் கற்பித்தது கோவில்களில், அங்கு எல்லோருக்கும் இடம் கிடையாது. ஒரு சில வகுப்பினர் மட்டுமே செல்ல முடியும் அவர்களிடம் கல்வி கற்க்கவும் முடியும்.இந்த நிலை மாற யாரும் எதுவும் கற்க வழி செய்யவே கொண்டுவரப்பட்டது ஒதுக்கீடு. இந்த தொழில் செய்பவர்கள் இன்ன குலம் இன்ன குலத்தோர் எல்லாம் இன்ன சாதி. இந்த சாதியில் பிறந்தவர்கள் அதே தொழில் தான் செய்ய வேண்டும் என்ற முறையில் தாழ்த்தப்பட்டோராக, தீண்டத்தகாதவராக பல சமூகங்கள் ஒதிக்கி வைக்கப்படுவதை தடுக்கவே ஒதுக்கீடு தேவைப்பட்டது.

சுதந்திரம் அடைந்து எழுவது ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில் இன்னும் எதற்கு இந்த ஒதுக்கீடு என்ற கூப்பாடு கேட்கத்துவங்கிவிட்டது. படிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் சாதியம் சார்த்த ஒதிக்கீடு தவறு என்ற சத்தம் வலுப்பெறுகிறது. அன்று சாதியின் பெயரால் பல சமூகத்திற்கு கல்வி மறுக்கப்பட்டது. இன்று அந்த சமூகத்திற்கு வழி செய்தால் சாதியம் வழியில் எதுவும் வழங்கப்படக் கூடாது என மீண்டும் தடுக்கப்படுகிறது. உண்மையில் இன்னமும் நீதித்துறையில், மத்திய மாநிலங்களில் அதிகாரம் கொண்ட அரசு துறைகளில் இன்னமும் முன்னேறிய வகுப்பினர் (forward caste) தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ISROவில் இருக்கும் விஞ்ஞானிகளின் பெயர்களே சொல்லும் அவர்கள் எந்த குடி என்று.

மேலும் இப்படி ‘எளிதாக’ இடம் கிடைத்து படிப்பவர்கலால் தரம் குறையத்துவங்கி உள்ளதாக ஒரு பேச்சும் பரவுகிறது. முதலில் எளிதாக எதுவும் வழங்கப்படவில்லை, ஒதுக்கீட்டில் இடம் கிடைத்து அதில் படிக்கும் மாணவர்களை மற்ற குடி மாணவர்கள் பார்க்கும் விதம் போதும், நரி குரவர் இனத்தை சேர்ந்த முதல் பட்டதாரியான ஒரு பெண்னின் வார்த்தைகள் சொல்லும் அந்த ‘எளிதான’ என்ற வார்த்தைக்கு பொருள். தரம் குறைய காரணம் யாதெனில்,1948ல் ராணுவதிற்க்காக சீப் (Jeep) வாங்கியதில் நெறிமுறைகளை மீறி செயல் பட்டார் வி.கே. கிருஷ்ணா மேனன் - இந்தியன் பிரிடன் உயர் ஆணையாளர் (மேனன் என்பது நாயர் வகுப்பின் உட்பிரிவு – நாயர் என்பது சத்திரிய குலம் பிராமணர்களாகிய நம்பூதிரிகளுக்கு அடுத்தது). இவர் எந்த ‘எளிய’ முறையில் இடம் கிடைத்து படித்தவர் அல்லவே. இவர் மீது நடந்த வழக்கில் அரசு நாட்டம் காட்டாததால் தள்ளுபடி செய்து இவரை விடுவித்தது நீதி மன்றம் – குற்றமற்றவர் என்று விடுதலை ஆகவில்லை. அவரே நேருவின் மந்திரி சபையில் பாதுகாப்புத் துறை மந்திரியானார். தரம் குறைய காரணம் இத்தகைய நெறிமுறை தவறுதலும், அவரே மீண்டும் ஆட்சி அதிகாரம் பெறுதலும் மட்டுமே அன்றி ஒதுக்கீடு இல்லை.


மருத்துவம் படித்த அந்த மருத்துவ தொழில் செய்பவர் ஸ்டெதாஸ்கோப் (stethoscope) அணிவர் பெயருக்கு முன் Dr எனவும் இருக்கும். அது அந்த தொழிலுக்கு அவசியம். இறை சேவை செய்தும், கற்பித்தும் வந்தவன் அந்தணன் என்னும் போது அவன் பூணூல் அணிவது ஒரு முறையாக இருந்தது ஆனால் இன்று  அந்த தொழில், அந்த வர்ணம் சார்ந்த எதையும் செய்யாது வியாபாரம், கணக்கு, அறிவியல், நடிப்பு, நாடகம் சார்ந்த தொழில் செய்யும் போதும் இன்னமும் இன்ன வகுப்பு இப்படி தான் நூல் அணிய வேண்டும், திருநாமம், பட்டை, குடுமி என திரிவதும், சத்திரியன் தொழில் நாடாள்வது போர் புரிவது, தேவர், கவுண்டர், நாயர் யாரும் ராணுவத்தில் சேராது பெயரின் பின்னால் மட்டும் சேர்பது என்ன மாறினாலும் நான் உயர் குடி என்றும் வர்ணம் பிறப்பினால் மட்டுமே வரும் வளர்போ, கல்வியோ தராது என்பதை காட்ட தானே தவிற வேறில்லை.