Thursday, January 15, 2015

மிருக வதை!

து வதை
உண்ண உட்காரும்போது
தள்ளி விடுவதும் வதையே..
நாம் குடிக்கும்
பாலும், தயிரும்..
கண்ணனவன் உண்ணும்
வெண்ணையும் மிருக வதையே!
 தன் கன்றுக்கு சுரக்கும் பாலை
திருடும் கள்ளர்கள் தானே நாம்..
நமக்கு கடவுளுக்கு
பின் காசுக்கும் விற்கும் நமக்கு
என்ன வதை பற்றி பேச வக்கு??
தன் மனம் போல் இல்லாது
அடக்கி தானே இங்கு உளவுக்கே பழக்கினோம்..
அப்படி பார்க்கையில் விவசாயமும் வதையல்லவோ?
தவறுகளை களைவது தானே முறை
பேருந்தில் கற்பழிக்கப்பட்டால்
பேருந்து ஓட்டத்தையே நிறுத்துதல் நியாயமாகுமோ?
முறை செய்வோம்... தழுவுதல் தொடர்வோம்!