Showing posts with label விடுதலை. Show all posts
Showing posts with label விடுதலை. Show all posts

Sunday, August 11, 2019

Unity vs. Uniformity

மிழ் நாட்டுக்கு இங்கே இருக்கற காவேரியே வராது காஷ்மீர் பிரச்சனையா வந்திட போகுது. ஆனாலும் நம்ம ஆளுங்க அடுச்சு விடறாங்க, போன வாரம் வேலையின் போது வேலை ஏதும் செய்யாம article 370 நீக்குனது செம அது இதுனு  ஐநா சபை அதிபர் மாறி பேசுனாங்க. காஸ்மீர்ல இதுவரைக்கும் பாக்கிஸ்தான் நியூஸ் மட்டும் தான் வருமாம் அதுனால தான் இவ்ளோ பிரச்சனையாம் இனி அப்படி இருக்காதாம்.

ஏதோ தனியாக கிடந்த காஷ்மீரை இன்று இந்தியாவோடு இணைத்து பாஜக போல தான் பேச்சுகள் பரவுகிறது ஆனால் உண்மை, இந்திய சுதந்திரத்தின் போது தனி தனி மாகாணங்களை தனி நாடாகலாம், இல்லை இந்தியா அல்லது பாகிஸ்தானோடு இணையலாம்மென இங்கிலாந்து சொன்னது அப்போது அவசரப்பட பாகிஸ்தான் காஷ்மீரை பிடிக்க  கொரில்லா தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவத்தின் உதவியோடு பாகிஸ்தானை எதிர்த்தது காஷ்மீர். பின்னர் இந்தியாவோடு இனைய  சலுகைகள் அளிக்கப்பட்டது அது ராணுவம், வெளியுறவு துறை, தகவல்தொடர்பு  மூன்றை மட்டுமே இந்திய அரசு காஷ்மீரில் நிர்வகிக்க முடியும் மற்ற துறை, அது சார்ந்த சட்டங்கள் காஷ்மீர் மக்கள் பிரதிநிதிகளால்  இயற்றிக்கொள்ளப்படும். இது தான் அந்த article 370. இதில் பல ஆண்டுகளாகவே மாற்றங்கள் செய்யப்பட்ட வந்திருக்கிறது.

இப்போ யோகியின் பாஜக அந்த 370'ஐ தான் நீக்கிருக்காங்க. அதுவும் அந்த ஊரில் இருக்கிற மொத்த தொலை தொடர்பையும் நிறுத்திவிட்டு. மொபைல் மட்டுமில்லை லேண்ட் லைன் கூட கிடையாது. ஒட்டு மொத்த மக்களையும் அடக்கி வீட்டில் பூட்டிவிட்டு இதை செய்ய வேண்டிய கட்டாயம் என்ன? இப்படி மொத்த காஷ்மீரையும் சில நாட்களில் தன் கட்டுப்பாடில் கொண்டு வர முடிகின்ற அரசால் புல்வாமாவில் வந்த வெடி குண்டை ஏன் கோட்டை விட்டது?

இப்போதும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரை மீட்போம் என்று மட்டுமே சொல்லி வருகிறது ஆளும் பாஜக, சு.சாமி உட்பட. எம்.ஜி.ஆர் தலையை போல இருந்த காஷ்மீர் பல ஆண்டுகளாக ஸ்பைக் வைத்தது போல் மாறிவிட்டது. ஒரு புறம் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு மறுபுறம் சீனா ஆக்ரமிப்பு. மீட்பது எனில் இரண்டையும் மீட்க வேண்டும் ஆனால் இந்தியா இங்கிலாந்து கிரிக்கெடை வீட இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெடில்  தான் நம் தேச பற்று அதிகம் பீறிட்டு வெளிவரும். அந்த காரணமோ என்னவோ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை மட்டுமே பேசி வருகிறார் 56" பிரதமர்.

மொத்த இந்தியாவுக்கும் ஒரே ரேசன் அட்டை என்பது போல் ஒரே மொழி, கல்வி, மதம், தலைவன் என மாற்றவே இது நடப்பதாக தெரிகிறது. இந்த போக்கு சர்ச்சிலின் வார்த்தையை உண்மையாக்கிவிடும்.  இதை இந்திய அரசியல் அமைப்பு 42ம் திருத்தமான மதசார்பற்ற நாடு என்பதை முதலில் மாற்றிவிட்டு மற்ற அரபு நாடுகள் போல இதை இந்து நாடு என அறிவித்துவிட்டு செய்யலாம், பொருத்தமாகவும் இருக்கும், அப்போது கேள்விக்கு இடமிருக்காது. Unity is different from uniform ...


Sunday, September 17, 2017

புத்தரின் இனவெறி

னிதா – தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதுவும் பரிச்சயமான பெயர். அவளின் மரணத்திற்கு பின் இருக்கும் அரசியலை தாண்டி, நீட்டை தாண்டி நம்மோடு நம் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை நேற்று வரை பங்கிட்டுக் கொண்டிருந்த ஒருத்தி இன்று இல்லையே என்ற ஆதங்கம் தான் இன்று பலரை உலுக்கியது.

அந்த ஆதங்கம் ரோகிந்திய இன மக்கள் மீது இந்திய அரசாங்கத்திற்கு இல்லாமல் போனது மிக வருத்தம்.

யார் இவர்கள், இசுலாமியர்கள் என்ற ஒற்றை வார்த்தையால் இன்று அண்ட நாடில்லாமல் ஒவ்வொரு நாட்டின் எல்லையிலும் நிற்கும் நாடோடியானவர்கள்.

உலகப் போரில் அமெரிக்கா சப்பானில் வீசிய அணுகுண்டின் வீச்சு இன்னமும் இருப்பதை போல இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியுற்ற போது இந்துக்களுக்கும் முசுலீம்களுக்கும் இடையே பிரிவினையை உண்டாக்கி பிரித்து சுதந்திர வேட்க்கையை நீர்த்து போக செய்த சூழ்ச்சி இன்றும் காச்மீரில் நம் மக்களை இழந்து கொண்டிருகிறோம். அது போல தான் மியான்மர் பர்மாவாக இந்தியாவோடு கிழக்கு இந்திய கம்பெனியின் ஆதிக்கத்தில் இருந்த போது பர்மா மக்கள் எதற்கும் லாயக்கு அற்றவர்கள் என்று ஒதுக்கி இந்தியர்களுக்கும், ரோகிந்திய இன மக்களுக்கும் அன்றைய முன்னுரிமை வழங்கியது.


அந்த வெறுப்பு சுதந்திரம் அடைந்து இராணுவ ஆட்சியில் 1982ல் அவர்களின் குடியுரிமை பறிக்கம் அளவு வளர்த்திருந்தது. திருமணம், கல்வி, வழிபாட்டு தளம் என அனைத்தும் மறுக்கப்பட்டன.

8/8 /1988ல் எழும்பும் 8888 (8888 uprising) என மாணவர்களால் ஏற்ப்பட்ட புரட்சியில் ஆங் சங் சுகி அடையாளம் காணப்பட்டார். ஒரு அகிம்சைவாதியாக தன்னை பிரகடனப் படுத்திக்கொண்டார். அந்த புரட்சிக்கு பின்னும் ரோகிந்திய இன மக்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் சுகி இராணுவ ஆட்சியை வெறுத்த இராணுவ அதிகாரிகளை கொண்டு கட்சி ஒன்றை துவங்கி 2015ல் ஆட்சி அமைத்தார். அதன் பின் ரோகிந்திய மக்களின் நிலை இன்னமும் மோசமாது. இதற்க்கு இடையில் 3/9/2014ல் அல் காயிதா அமைப்பு வெளியிட்ட கானொளியில் மியான்மர் முசுலீம்களை நாங்கள் மறக்கவில்லை. அவர்களை காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம் என்றது. அதற்கு அங்கிருந்த முசுலீம் குழுக்கள் எங்கள் தாய்நாட்டிற்கு எந்த அச்சுறுத்தல்களையும் ஏற்க்க மாட்டோம் என்று அறிக்கை வெளியிட்டது.

ஆனால் இன்று ‘மியான்மருக்கு திரும்புவதை வீட இந்தியாவில் மடிவதே மேல்’ என்ற ஒரு ரோகிந்திய அகதியின் வார்த்தை உணர்த்தும் அவர்கள் நிலையை.

பெளத்த சமயத்தை பிரதானமாக கொண்ட இலங்கையில் நடந்த கொடுமையின் நீட்சியே அதே பௌத்தத்தை கொண்ட மியான்மரில் அரங்கேறி வருகிறது.

துன்பத்துக்கான காரணம் பற்று என்ற புத்தரின் வழிவந்தவர்கள் மியான்மரை தங்கள் நாடு என சொந்தம் கொண்டாடி இவர்களின் குடியிரிமைகளை பறித்து விரட்டும் போது தென்னகத்தில் உள்ளவர்களை கீழ் பிறப்பாகவும், சமணர்களை கழுவேற்றிக் கொன்று தங்கள் சைவ சமயத்தை நிலை நிறுத்திய இந்தியா இவர்களால் தீவிரவாத அச்சுறுத்தல் வரும் என்று தடுப்பதில் எந்த முரணுமில்லை.

அல்லாவின் பெயரை சொன்னதற்காக ஒடுக்கப்பட்ட போது படை திரட்டி போரிட்ட முகமது நபியின் அந்த ஒரு சித்தாந்தத்தை மட்டுமே தவறாக புரிந்து கொண்டு இன்று சில குழுக்கள் அல்லாவின் பெயரை சொல்லி செய்யும் கொடுமைகள் இன்று அனைத்து முசுலிம்களையும் பயங்கரவாதிகளாய் பார்க்க வைக்கிறது.

இங்கு இனம், மொழி, நாடு என்று சொல்லி தினம் பல கொடூரங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் எல்லாம் தனியாக அடையாளப்படுதப்படுவதில்லை. குல்லாவும் தாடியும் வைதிருப்பாதால் இவர்களும் பயங்கரவாதிகள் என சொல்வது நம்மிடையே பகுத்தறிவு குறைவதையே நிருபிக்கிறது.


ஜெர்மனியில் தான் யூதன் என்றால் உடனே விசாரணைக்கு எடுத்து சென்று விடுவர், தான் ஜெர்மானியன் என்றால் தானில்லாது முன்னர் வாழ்த்த மூன்று தலைமுறையினரும் ஜெர்மானியர்கள் தான் என நிருபிக்க வேண்டும் தவறினால் விசாரணை கைதி தான், இது ஹிட்லர் கால நடை முறை. இன்று நாமும் அதையே தான் செய்து கொண்டிருக்கிறோம் ஹிட்லரை மட்டும் மனித மிருகம் என திட்டி தீர்த்து கொண்டு.


Tuesday, August 15, 2017

கும்பகோணத்திலிருந்து கோரக்பூர்

கோரக்பூர் – 70 மழலைகள் இறந்து விட்டனர். இதற்கு இடையில் சுதந்திர கொண்டாட்டம் அவசியமா என்ற கேள்வி எழுவது தவிற்க இயலாதது. கொண்டாட்டம் தேவை இல்லை ஆனால் கேள்வி கேட்க்கும் சுதந்திரம் பெற்றுத்தந்தவர்களை நினைவு கூற இந்த நாள் அவசியம். சரி இந்த கோர சம்பவம் யாருடைய தவறு யார் அலட்சியம், யோகியா, அந்த பிராணவாயு  தருவதற்கு மறுத்த புஷ்பா சேல்ஸ் நிறுவனமா?

இந்த கேள்விகளை சற்று ஒதுக்கி வைத்து விட்டு கும்பகோணம்  ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தை நினைவுகொள்வோம். 2004 சூலை 16 அன்று நடந்தது அந்த கோரா விபத்து(!?)

இதனை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி சம்பத் ஆணைக்குழு 2006 ஆம் ஆண்டு சமர்பித்த அறிக்கையின்படி, இரண்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.

அதில் வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய மாணவர்களின் பெற்றோர்கள் 5 பேர் கொண்ட குழுவாக ஒவ்வொரு வாரமும் பள்ளியில் ஆய்வு செய்யலாம். என்று சொல்லப்பட்டதை இன்று நடைமுறை படுத்துவது எந்த அளவு சாத்தியம். பள்ளிகளில் இடம் கிடைப்பதற்கே தவமாய் கிடக்கும் இவர்கள் ஆய்வு செய்வார்களா? இந்த சிந்தனை ஏன் அந்த நீதி அரசர்களுக்கு வரவில்லை. நமக்கு நம்மை நம் உரிமைகளை காக்க சட்டம் உள்ளது ஆனால் அதை எடுத்து கையாள தான் இங்கு நமக்கு தெம்பு இல்லை.

சரி இதன் பின் பள்ளி விபத்துக்கள் நடக்கவில்லையா, பள்ளி பேருந்துகள் விபதுக்குல்லாகவில்லையா?

மீண்டும் கோரக்பூர் – வியாபாரத்தில் கொடுத்த பொருளுக்கு பணம் சரிவர கட்ட தவறினால் மேற்கொண்டு பொருள் தந்து நிலுவை தொகையை ஏற்றிக்கொண்டு போனால் புஷ்பா சேல்ஸ் எப்படி வியாபாரம் செய்ய முடியும், இது தர்மம் தானே, என இன்று சுதந்திர தின கொண்டாட்டத்தை வெறுப்பவர்களும் அடுத்த 10 வருட விசாரனையில் இப்படி பேசக்கூடும்.


ஒரு மூன்று மாதம் பின்னோக்கி செல்வோம் போர்பஸ் பத்திரிக்கை உலகின் பணக்காரர்கள் பட்டியல் வெளியிட்டது, முதல் நாள் ஒரு பெயர் அடுத்த நாள் மீண்டும் பில் கேட்ஸ் தான் என நம் சட்டமன்ற தேர்தல் நிலவரம் போல் மாறியது. அதில் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் குழப்பமேதும் இன்றி முதலிடம் அம்பானி தான். ஆனால் அதில் முதல் நூறு பேர் யார், அவர்கள் செய்து வரும் தொழில் என்ன என்று அலசியபோது அதில் முதல் ஐந்து தொழில்கள், ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், கட்டுமானம் என முதல் இடத்தில ஒய்யாரமாக இருப்பது மருந்தும் அது சார்த்த தொழில்களும் தான்.

இம்பெரியல் பேங்க் (Imperial Bank of India) ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) என 1959ல் பொதுவுடைமையாக்கி இந்திய அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வந்து இதர வங்கிகளை வாரி அனைத்துக் கொண்டது போல, பர்மா ஆயில் பாரத் பெற்றோலியம் என  1976ல் தேசியமயமாகி இன்று வரை பொது மக்களுக்கு சேவை செய்வது போல இந்த பள்ளிகள், மருத்துவம், மருத்துவம் சார்ந்த தொழில்கள் எல்லாம் பொதுவுடைமையாக்க அரசாங்கம் முன் வரலாமே. இதனை விடுத்தது ஒவ்வொரு முறையும் ஆணைக்குழு அமைத்து அரசானை பிறப்பித்து அதை நடைமுறை படுத்த ஒரு குழுவை அமைத்து இப்படி குழு குழுவாக அமைப்பது தவிர்க்கலாமே.

தமிழ் நாட்டில் சாராயக்கடையை அரசாங்கம் அதன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல இந்த மருத்துவத்தையும், கல்வியையும் அரசாங்கம் தன் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் இத்தகைய வியாபார நோக்கில் நடக்கும் போக்கு மாறி இத்தகைய நிகழ்வுகளை தடுக்கலாமே. ஆனால் ஆள்பவர்கள் அதை குடும்பத் தொழிலாகவே செய்து வரும்போது இது எப்படி சாத்தியம்.

இந்தகைய சிந்தனை அவர்களுக்கு வராது காரணம் நம் பிரதமரை சுற்றி அமர்ந்திருப்பது வியாபாரிகள், இவர் ஆலோசனை நடத்துவதும் வியாபாரிகளோடு தான். அதனால் தான் இப்படி நாடு போய்கொண்டு இருக்க இன்னும் அரசாங்கத்திடம் இருப்பதையும் தனியாரிடம் ஒப்படைக்கவே நேரம் பார்த்து வருகிறார், சேலம் இரும்பாலை, ஏர்  இந்தியா என போகிறது அரசின் திட்டங்கள்.

எழுபதாம் முதல் சுதந்திர தின வாழ்த்துக்கள்!

Friday, August 29, 2014

சுதந்திரப் போராட்டம்

போட்ட சோற்றிற்கு வாலாட்டும்
காட்டிய இனையுடன் கட்டாய கல்யாணம்
பிறந்து ஈரம் உளறும் முன் விற்று காசு பார்ப்போம்...
நாம் பெற்றது வயதுக்கு வந்ததும்
திருமணம் செய்து வைப்போம்
வாங்கி வந்தவருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வோம்...
யாருக்கும் யாரும் சுதந்திரம் தரத்தேவையில்லை
இருப்பதை பறித்து
பறப்பதைப் பிடித்து சிறு கூட்டில் அடைத்து
பறக்க விடாது வீசிய உணவை உண்ணச் சொல்வோம்
பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும்...
குலத்தில் குளித்து கொட்டிய மழையில் ஆற்றில் மிதந்து
முடிந்த தூரம் நீந்தி விளையாடியவர்களை
இரண்டடி கண்ணாடி பெட்டியில் அடைத்து
யாரென்றே அறியாதவர்களோடு நீந்தி விளையாட சொல்வோம்
ஆனால் நாம் நம் சமயம் தாண்டி பெண் எடுக்க மாட்டோம்...
சேர்க்கைக்கு வழி விடாது
வீட்டிற்குள் தொட்டி வைத்து வளர்ப்போம்
இவர்கள் புணர்ச்சியையும் அழிப்போம் - உணர்சிகள் அற்று
யாரோ நான்கு பேருக்காக வாழும் வித்தையை
ஒவ்வொரு உயிருக்கும் கட்டாய வகுப்பெடுபோம்...
நேசிக்கிறோம் என்று சொல்லும் சர்வாதிகாரிகள் நாம்
இவர்களுக்கு போராட சொல்லித்தர யாருமில்லையோ?
இவர்கள் போராடினால் பேசாக  நானே போஸாக
ராணுவ படை  செய்வேன்!



Wednesday, August 15, 2012

இந்தியன் அல்ல நான்!!!


ந்த அண்டத்தின் அழகுகளில் ஒன்றென இருக்கும் இடம்
அறுபத்தி ஆறு ஆண்டுகளுக்கு மேல் இன்னமும் குண்டுகள் தெறிக்க வாழுமிடம்
இன்னமும் சுதந்திரம் என்ற ஒன்றை முழுமையாக காணாத இடம்
சொந்த நாடென மிக நேசித்தது சகாக்களின் வாழ்வை சவமாக்கியும்
இன்னமும் அவ்விடத்தை கொண்டு என்ன செய்ய உத்தேசம்
என் தேசம் உரைத்தது இதுவல்லவே
இந்தியன் என்ற ஒரு சொல் தான் – அவர்கள்
கஷ்மீரில் வாழ இன்னமும் தடையாக இருப்பின்
அதை துறந்துவிடுகிறேன்!




Thursday, March 22, 2012

நான் கேட்பதெல்லாம்

ங்களிடம் புது சட்டை கேட்கவில்லை
கிழிந்த என் சட்டையை தைக்க கற்றுக்கொடுங்கள் என கேட்டு நிற்கிறேன்
உங்கள் கரம் பிடித்து நடக்க வேண்டாம்
என் பாதையை விட்டு நீங்கள் விலகி நடத்தால் போதும் என்கிறேன்
உங்கள் அறிவுரைகளை நான் கேட்பதில்லை
என் அறிவு பசிக்கு தீனி கேட்கிறேன்
உங்களின் உபதேசம் தேவையில்லை
கலந்துரையாடி அறிவு பெற எண்ணுகிறேன்
தோள் கொடுத்து தூக்கிவிட வேண்டாம்
என் கால்களை இடராது இருங்கள்
நாங்கள் வளர்ந்து கொள்வோம்
எங்கள் எண்ணங்களை கொல்லாது இருந்தால் போதும்
உங்கள் ரசனைக்கு என்னை தீனியாக்காதீர்கள்
எனக்கென்று ரசனைகள் உண்டு, மதிப்பு கொடுங்கள் போதும்
உங்கள் கனவுகளுக்கு என்னை செயலாக்கம் செய்யாதீர்கள்
நீங்கள் இடறிய பாதையில் என் பயணத்தை தடுக்காதீர்கள்
தானாய் இடறி விழுந்தால் நானாய் எழ கற்றுக்கொள்வேன்

என்னை விட்டு விடுங்கள்!