Showing posts with label புகை பழக்கம். Show all posts
Showing posts with label புகை பழக்கம். Show all posts

Thursday, June 14, 2018

சிகரெட் அரசியலும் மக்கள் நீதி மைய்யமும்


டம் பார்க்க போனா கூட யாருனே தெரியாத  முகேஷ்ல இருந்து நம்ம ராகுல் டிராவிட் வரைக்கும் எல்லாரும் புகை பழக்கத நிறுத்த சொல்றாங்க. நம்ம அரசாங்கம் ஆண்டு தோறும் நிதிநிலை அறிக்கை (என்னமோன்னு நினைக்க வேண்டாம் பட்ஜெட் தான் தமிழ்ல சொல்லிருக்கு) தாக்கல் செஞ்சா விலை கூடிட்டே தான் போகுது  ஆனாலும் புகை பழக்கம் மட்டும் குறைந்த பாடில்லை. புகை பழக்கத நிறுத்த வைக்க விலையை கூடக்கூடாது குறைக்கனும்.

புரியலையா? வரியை குறைக்காமல் சிகரெட் விலையை அரசாங்கம் தீர்மானித்தால், அதாவது திரையரங்கு கட்டணம் 120னு சொல்லிட்டு கேளிக்கை வரியை மாட்டும் உயர்துனான்களே அப்படி (ஆனா அந்த மிச்ச காச பாப்கார்ன்லயும், பார்கிங் டிக்கெட்லயும் வாங்கிடாங்க). இதை செஞ்சா வரியை சிகரெட் தயாரிப்பு நிறுவனம் செலுத்த வேண்டிய நிலை வரும் அவங்களே தயாரிப்ப நிறுத்திடுவாங்க.

இப்படி நிறுவனங்களை மூடினா அங்க வேலை செய்யற தொழிலார்கள் கதி என்னவாகும்னு இப்போ துத்துக்குடி ஸ்டேர்லைட் ஆலைக்கு கவலைபட்ட மாறி சில பக்தாள் கேட்கலாம், அங்கேயே மொத்தம் 1500 பேர் தான் வேலை செஞ்சாங்க. சிகரெட் எல்லா கைல சுத்தி பஞ்சு வெச்சு அடச்சு போட்டில  போட்டு விக்கற கதை இல்லை, எல்லாம் இயந்திர மையம். அப்படியே அங்கே வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வேறு உதவிகள் செய்யலாம், அது காச நோயிக்கும், புற்றுநோயிர்க்கும் அரசாங்க மருத்துவமனையில் தரும் சிகுச்சை செலவிலும் குறைவாகவே வரும்.

இதுக்கு தான் மக்கள் நீதி மைய்யம் அரம்பிச்சிருக்காரு நம்மவர்னு சொல்ற நம்மவர் பக்தாளுக்கும் முன்னாடி சொன்ன சிகரெட் கணக்கே தான். கேளிக்கை வரி அதிகம்னு போராட்டம் செஞ்சு 120 ருபாய்ல இருந்து இப்போ 165.78 ஆக்கி மக்கள் தலைல போட்ட கூடத்துல இந்த நம்மவரும், அந்த தலைவரும் ஒருத்தர் தான்.

இதற்க்கு பதிலா இந்த கதாநாயகன், நாயகி சம்பளத்தை குறைச்சிருந்தாவே படத்தோட மொத்த செலவு குறைந்து வரி குறைந்து (ஏன்னா வரி என்பது சதவீதம் தான்) விநியோகம் செய்யும் விலையும் குறைந்து, திரையரங்குக்கு வரும் போது 120 ரூபாயில் (இல்லை அதற்கும் குறைவாகவே கூட) மக்களுக்கும் திரையரங்க உரிமையாளருக்கும் லாபவம் கிடைத்திருக்கும்.

அதையேல்லா விட்டுட்டு சாட்டிலைட் உரிமை, Netflix, Amazon prime அப்படின்னு பன்னாட்டு நிறுவனங்களுக்கு தான் இன்றைய அரசியல்வாதிகளை போலவே தாரை வார்த்தனர். நடிக்கும் போதே இவர்களை வாழவைக்கும் ரசிகனை பற்றிய சித்தனை இல்லாதவன் இப்போ நமக்கு என்னத்த செஞ்சிட போறாரு?

ஆமா இவனுகளும் இப்படி தான் நாம தான் காசு வாங்காம ஓட்டு போடணும், மாற்றம் நம்ம கிட்ட இருந்து ஆரம்பிக்கணும்னு சொல்ற ஆளுங்களுக்கு ஒன்னு இருக்கு, அவங்க பணம் கொடுக்கறது அவங்களுக்கு ஓட்டு போடணும்னு மட்டும் இல்லை நாம ஓட்டுன்னு ஒன்னு போட்டவே போதும் அவங்க பிழைச்சுப்பாங்க.

ஏன்னா இது அப்படி ஒரு தொழில். வேலைக்கு போனாலும் இல்லை தொழில் செய்தாலும் அதை சரியா செய்யலைன்னா வேலை போய்டும், போட்ட பணம் போய்டும். ஆனா இந்த அரசியல் தொழில் அப்படி இல்லை.

லஞ்சம் ஊழல் பத்தி எல்லா வேண்டாம், ஒரு நாலு ஆண்டுகள் தமிழகம் எல்லாம் சென்னைய தவிற எட்டு மணி நேரத்துக்கும் குறைவான மின்சாரமே இருந்தது, இதற்கும் மின் துறைக்குன்னு ஒரு அமைச்சர் இருந்தார் அவருக்கும், அவர்  சார்ந்த கட்சியும் என்ன நடந்தது 98 உருப்பினர்களோடு எதிர் கட்சியாக தான் இருக்கிறது இன்றும். அவர்கள் வருமானம் குறையவில்லை.

புரியற மாறி சொல்லனும்னா ஸ்டேர்லைட் போன்று இன்னும் எத்தனையோ நிறுவனம் இங்கே மட்டும் இல்லை உலக முழுவதிலும் இருக்கு. அப்படி அந்த மண்ணை மலடாக்கி, நீரையும் காற்றையும் நச்சாக்கும் நிறுவனம் வரும்போது அதற்க்கு பல கெடுபிடி சட்டங்களை  வளைத்து உள்ளே விட ஆளும் கட்சிக்கும், எதிர் கட்சிக்கும் ‘நன்கொடை’ தரப்படும். அதனால தான் அதிமுக இது திமுக கொண்டு வந்துதுன்னும் பாஜக காங்கிரஸ் கொண்டுவந்ததுன்னு இப்போ மக்கள் எழுச்சிக்கு அப்பறம் அவங்கள கைய காட்டி இவங்க நழுவராங்க, அப்பவும் இவங்க உயிரோட ஆட்சில தானே இருந்தாங்க ஏன் வர்ற விட்டாங்க?

புது ரூபாய்களை கூட தயார் செய்யாது ஒட்டுமொத்த இந்திய மக்களின் கைகளில் இருந்த பணத்தை எல்லாம் மொத்தமாக செல்லாது என ஒரு சில நொடிகளில் சொல்லி திண்டாட விட்டுட்டு, ஆண்டுகள் இரண்டாகியும் கிடைத்த கருப்புப்பணம் எவ்வுளவு என ஒரு விவரமும் சொல்லாமல் அது ஒரு பெரிய சாதனையை போலவே சித்தரிக்கும் இவர்களை கேள்வி கேட்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடமோ, நீதித்துறை இடமோ ஏன் மக்களிடமோ கூட இல்லை. அப்படியும் மீறி கேள்வி கேட்க ஒன்று கூடினால் காவல் துறை அடிக்கும், சுடும், சமூக விரோதிகள் என சொல்லி கைது செய்வார்கள்.

இவர்கள் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை செய்யாததற்கு தண்டனையை வீட கேள்வி கூட கேட்க முடியாது நம்மால் அப்புறம் என்ன இதுக்கு இந்த உரிமை?
சரி யாருமே வாக்கே செலுத்தவில்லை என்றால் என்னவாகும்? (சங்கர் படம் போல் ஒன்றுமில்லாத பிரம்மாண்டம் போல தான் இருக்கும் இனி வருவது) ஜனாதிபதியின் கீழ் ஆளுநரின்  ஆட்சி வரும். அவர்களும் மத்திய அரசு ஆட்கள் தானே என்றால். இது இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் எல்லாம் நடந்தால், உலக பார்வையில் வரும் அரசியல்வாதிகளை கேள்வி கேட்க்கும் ஒரு துறையும், அதற்க்கான சட்டங்களும் இயற்றப்படும். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாத கட்சிகள் அடுத்த தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும். கட்சியின் தலைவர் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றால் கட்சியே கலைக்கப்படும் சட்டம் வேண்டும்.

இப்படி நடந்தால் இனி மக்களின் பணத்தில் தெர்மாகோல் விடும், கோடிக்கணக்கில் சமோசாவும், டீயும் குடிக்கும்  அமைச்சர்கள் வரமாட்டார்கள். தாயின் முந்தானையை பிடித்தே வளர்த்த எந்த பிள்ளையும் பிரதமராகும் ஆசையில் வாய் திறக்காது. வெளி நாட்டுடன் நல் உறவுக்கும், வெளிநாட்டு மூதலீட்டை கொண்டுவர மாதந்தோறும் மக்கள் பணத்தில் பறக்கும் பிரதமர்கள் இருக்கமாட்டார்கள். வாக்களித்தால் கருப்புப்பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15லட்சம் போடப்படும் என்ற பொய் வாக்குறிதியோடு யாரும் வரமாட்டார்கள்.

அறுவது வயது வரை சம்பாதித்துவிட்டு காலம் போன காலத்தில் நாட்டை திருத்தும் நம்மவர்கள் வரமாட்டார்கள். கடவுள் மறுப்பாளர் பெரியாரை அன்று தலைவனாகவும் இன்று முருகனின், உத்திர பிரதேசத்தில் பிறந்த கண்ணனின் கொள்ளு பேரன்களும் வர மாட்டார்கள்.

(‘தலைவர’ சொல்லவே இல்லைன்னு யாரும் கோவப்பட வேண்டாம் இன்னு கட்சிக்கு பேர் கூட வைக்கலை, எப்படியும் வர மாட்டார் என்ற நம்பிக்கையில் இந்த பட்டியலில் அவர் இடம்பெறவில்லை)



Monday, May 1, 2017

ஒதுக்குப்புறம்

ன் பள்ளி பருவத்தில் எங்கள் ஊரில் இருந்தது ஐந்து திரையரங்குகள். அதில் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்திருந்த ஒன்றில் தான் ரஜினி படம் வெளியாகும். அடுத்த இரண்டில் வேறு புது படங்கள் வெளியாகும். மற்ற இரண்டில் எப்போதும் பழைய படமும் ‘A’ படம் மட்டுமே வெளியாகும்.


அந்த ‘A’ பட சுவரொட்டிகள் ஒட்டப்படிருக்கும் பக்கம் பார்ப்பதே ஏதோ பெரியா குற்றம் என்பது போலவே கடந்து போவேன். என் அப்பா Speed , MIB போன்ற படங்களுக்கு என்னை அழைத்து போவார் அப்படி தான் ஒரு நாள் Titanic போவோம் என்றார். பின்னர் பள்ளி நண்பர்கள் மூலம் அந்த படத்தில் கதாநாயகியின் நிர்வாண காட்சி மட்டுமே சுமார் பதினைந்து நிமிடங்கள் வருவதாக அறிந்து என் அப்பாவின் அறியாமையை கடிந்து கொண்ட காலமும் உண்டு.

ஆனால் இன்று அதை வீட ‘நல்ல’ படங்கள் கைகளில் ஓடுகிறது. ‘எனக்கு போன் வாங்கி தரலைனா அடுத்த எக்சாம்ல பெயில் ஆகிடுவேன்’ என மிரட்டி கைபேசி வாங்குகின்றனர் பள்ளி மாணவர்கள்.

அப்பாவுக்கு புகை பழக்கம் இருந்தது ஆனால் அந்த சிகரெட்டே பாக்கெடை எப்போதும் என் கைக்கு எட்டதா இடத்தில் தான் வைப்பார். வெளியே சென்று வீடு திரும்பியதும் சட்டை பையிலிருந்து எடுத்து எட்டாத இடத்தில் வைத்து விடுவார். அதுவும் நான் இன்று புகைக்காததர்க்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

அதே போல் அன்று மது கடைகள் ஊருக்கு அப்பால் இறைச்சி வெட்டும் இடங்களுக்கு அருகில் இருந்தது ஆனால் இன்று ஊர் எல்லையிலேயே வரவேற்கிறது முதல் கடை. தெருவுக்கு ஒன்றாய் கடை விரித்து விட்டு ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என திரைப்படத்தில் மட்டும் கட்டாயமாக எழுத்து போடுவது என்ன மக்கள் நலனோ?

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னரை காட்டிலும் இன்று பாலியல் குற்றங்கள் அதிகரித்திருக்க மேல் சொன்ன இரண்டும் முக்கிய காரணங்களாக கருதுகிறேன். யாரும் எந்த நேரத்திலும் எதுவும் பார்த்திட உதவும் கை பேசி, அதில் வக்கிர படங்களை பார்க்கும் ஒருவர் கிடைக்கும் யாரிடமும் அந்த இச்சைய தனிக்க முற்படுவதே இந்தகைய குற்றங்கள் அதிகரிக்க காரணம். சென்னையில் முகலிவாக்கத்தில் நடந்த ஒரு சிறுமியும் படுகொலை ஒரு உதாரணம். பெரும்பான்மையாக இத்தகைய குற்றத்தில் பிடிபடுவோர் யாரும் இதே குற்ற பின்னணியோ அல்லது வேறு எந்த தவறுக்கான பின்புலம் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். இப்படி வக்கிர படங்களை பார்த்து வெறி ஏறினவர்கள் தனிமையில் பார்க்கும் பெண்களிடத்திலோ, குழந்தைகள் இடத்திலோ தங்கள் இச்சையை தீர்க்க பார்ப்பது தான் இத்தகைய குற்றத்திற்கான காரணம்.

இது மட்டுமின்றி இப்படியான தவறுகளின் போது அரசியல் தலைவர்கள் பெண்கள் உடுத்தும் உடைகள் மீதே அந்த குற்றத்தை சுமத்தும் போது அடுத்து தவறு செய்வோருக்கு அது ஒரு நியாயம் கற்பித்துவிடுகிறது.

இதில் இன்னமும் எண்ணை விடுவது போல் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே மது வந்து சேரும் சேவையை துவங்கி இருக்கின்றனர். மது கடைக்கு செல்ல கூச்சப்படுவோருக்கும் விடும் அழைப்பே இது. மது அருந்தியவர்கள் வெட்கமும் மானமும் மறந்து குருட்டு தைரியத்தில் கத்துவது போல் இனி குற்றங்களும் அதிகரிக்கும்.

இதில் இன்னுமொரு உளவியல் சார்த்த ஒரு அணுகுமுறை குறைபாடு உள்ளது. அது ஆண்களுக்கான அறிவுரையில்லாது போனது. பெண் வயதுக்கு வந்தவுடன் அம்மா, சித்தி, அத்தை, பக்கத்து வீட்டு பெரியம்மா என அனைவரும் பல அறிவுரைகள் சொல்லியே வளர்க்கின்றனர். ஆனால் ஒரு ஆண் வயதுக்கு வந்ததே அவனுக்கு மட்டுமே தெரிகிறது. உணர்சிகளை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும். இனி எப்படியான மனோரீதியான மாற்றங்கள் நிகழும் அதற்க்கு எப்போது எப்படி நடந்து கொள்வது என்று சொல்லும் பழக்கம் எங்கேயோ தொலைத்து விட்டோம்.

விரதம் அனுசரிப்பது, அதிகாலையில் குளிர் நீரில் குளிப்பது, சில காலங்களில் சில உணவுகளை கட்டாயம் தவிர்ப்பது போன்றவற்றை மொத்தமும் ஒதுக்கி ஆத்திகம் பேசியதும் சற்று தடம் மாற்றி விட்டது. உண்மையில் இதகையே நடைமுறையும் கூட ஒரு வகுப்பினருக்கு மட்டுமே சார்த்து சாதி பேதம் பார்த்தே வழக்கமாக வைத்து இன்னொரு பிரிவினரை குற்றம் பரம்பரையாகவே இருக்க வைத்திருக்க வேண்டும்.


இப்படி உளவியல் ரீதியாக அணுக வேண்டியவற்றை வெறும் சட்டம் கொண்டு மட்டும் கொரூர தண்டனைகள் மூலம் தீர்வு காண முடியாது.


Thursday, March 29, 2012

என்னோடு என்னைக்கொல்லும் துரோகி



கண்கள் விழிக்கவே வெறுப்பாக இருந்தது. இருத்தும் விழித்து விட்டத்தை பார்த்தவாறே படுத்திருந்தான். கண்கள் கலங்கின. வெறுப்போடு அதை துடைத்து எறிந்தான். முகம் முழுக்க வெறுப்பு தொற்றிக்கொண்டு இருந்தது.

அப்போது தான் வந்தான் உள்ளே அவன். இன்னும் அதிக நிசப்தம் அந்த அறையில் நிலவியது. வந்தவன் முகத்தை பார்க்கக் கூட விரும்பாதவனாய் மறு புறம் திருப்பிக் கொண்டான்.

சில நிமிடங்கள் நிசப்தத்தோடே நகர்ந்தது. இன்னும் வெறுப்பு ஏறி முகம் சிவக்க அவனை பார்த்து கத்தினான்..

எங்க டா வந்தே?? உன்ன எல்லா.. இச்ச. பாரு இப்போ தினமும் என் முஞ்சி மாறுது. முன்னாடி எல்லாம் சொல்லுவியே கண்ணாடியே பார்த்து தல சீவிவிட்டு வான்னு. அப்போ எல்லாம் அதை பார்த்ததே இல்ல. ஆனா இப்போ தினம் தினம் .. ஒரு நாளிக்கே பல தடவ பார்க்கறே.. அப்டியே தா..

சொல்லி முடிக்கும் முன்னரே குரல் தழுதழுத்தது. கொஞ்சம் ஆசுவாசம் படுத்திக்கொண்டு மூக்கை துடைத்துக் கொண்டு தொடர்ந்தான்

அப்டியே தான் இருகேனானு... தலைய கோதின கையில அவ்ளோ முடி சின்ன புன்னகைக்கு பின் தொடந்தான் இந்த இதுக்கு எத்தன கடை ஏறி.. எந்த எந்த சலூன்.. கிரீன் இட்டிரேன்ஸ்...இச்ச...

தலையில் அடித்துக் கொண்டு தொடர்ந்தான்.. கண்கள் கலங்கிய படி..

வாயால சாப்பிட்டு எத்தன நாள் ஆச்சு தெரியுமா? காலைல சரியா பாத் ரூம் கூட போக முடியல.

இடைமறிக்க முயன்றவனை பார்த்து, கண்களை வேகமாக துடைத்துக் கொண்டு எழுந்து உட்கார்த்து

டேய் பேசாத சாவடுச்சுடுவேன்

 கைகள் உதற ஆரம்பித்தன, மேல் மூச்சு வாங்கியது. மீண்டும் மீண்டும் கண்ணில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே இருந்தான். வந்தவனுக்கு ஏது சொல்வது என்று தெரியாமல், வெளியே போகவும் தோணாமல் பேச்சு வாங்கியப்படி நின்றிருந்தான்.

எங்கே வலிக்குதுனே தெரியாது. ரொம்ப நேரம் தூங்கினா எங்கே செத்து போய்டேனோனு தூக்கத்திலயே பயமா இருக்கு. சொல்லிக்கொண்டே வெறுப்போடு அவனை ஒரு பார்வை பார்த்தான். வந்தவனுக்கு கைகள் விறைத்து போய்விட்டிருந்தது. வந்தவன் முகத்தை பார்க்க பார்க்க இவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. கத்ததத் துவங்கினான்.

எப்டி டா உனக்கு எல்லா ஒன்னும் ஆகல.. நல்லா இருக்க.. ஏன்டா இப்டி எல்லாரையும் சாகடிக்கறீங்க. தூ.. இதே மாதிரி எத்தன பேரை சாகடிச்சிருப்ப.. உன்ன மாறி ஆளுங்கள கொன்னா என்ன?”

சத்தம் கதவுகளை தாண்ட, வெளிய அமர்ந்து இருந்த செவிலி உள்ளே ஓடி வந்து அவனை அமைதியாக்கினாள். வந்தவனை அந்த அறையை விட்டு வெளியே கூட்டிச் சென்றாள்.

நீங்க தான் அவர் ரூம்மெட்டா?”

ம்ம்

சிகரெட் பழக்கம் இருக்கா?”

ஆமா, ஆன..

அவர் சும்மா செக் அப் வந்தப்ப டாக்டர் அவருக்கு பழக்கம் இல்லை அப்டிங்கரத நம்பவே இல்ல. போக போக தான் தெருஞ்சது பெசிவ் ஸ்மொகர் அப்டினு. மத்த புகை எல்லாம் ஒரு பக்கம்ன.. இது வேற மாதிரி சார். நீங்க இழுத்து வெளியே விட்டுருவீங்க ஆனா பெசிவ் ஸ்மொகர்ஸ் அத உள்ள இழுகரதொட சரி வெளிய வராது. புரியுதுங்களா?”

மேற்கொண்டு அவனால் ஒன்றும் கேட்க முடியவில்லை. முகத்தை மறைத்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வேகமாக வெளியே நடந்தான். வழியில் யாரோ ஒருவர் புகைதுக்கொண்டு இருக்க அருகில் நின்றிருந்த கர்பஸ்திரியையும் ஒரு நொடி நின்று பார்த்து நடந்தான்.