Showing posts with label சினம். Show all posts
Showing posts with label சினம். Show all posts

Monday, May 28, 2018

#BanSterlite

ஏதோ ஒரு கூட்டத்தில் யாரோ ஒருத்தன் செருப்பு எரிஞ்சா, அந்த செருப்பு தயாரித்த நாள் முதல், நிறுவனம் வரை போய் விலாவரியா அலசும் ஊடகங்கள் தூத்துக்குடி Sterlite நிறுவனம் என மட்டுமே மேம்போக்காக பேசிவிட்டு வேதாந்தா என்ற பெயரை கூட சொல்லாது ஒதுங்கிக்கொள்வதற்க்கு அவர்களின் பங்கு விலை சரிய கூடாது என்ற அக்கறையோ? இவர்களுக்கு ஏன் அந்த அக்கறை?




x

வேலை வாய்ப்பு என்ற பெயரில் உள்ளே வந்த வேதாந்தா நான்கு லட்சம் மக்கள் வாழும் துத்துக்குடியில் 1500 பேர், குடுபத்திற்கு நான்கு என்றாலும் 0.015% பேர் பலனடையே 1993ல் காங்கிரஸ் ஆட்சியில் நரசிமராவ் அடிக்கல் நாட்டி துவங்கியது.

2013 வரையில் 82 முறை விஷவாயுக் கசிவு ஏற்பட்டுதாக தமிழக அரசு (ஜெயலலிதா) குற்றம் சாட்டி சென்னை உயர் நீதி மன்றம் இதனை மூட உத்தரவிட்டது. அதே ஆண்டில் உச்ச நீதி மன்றம் அக்குற்றங்களுக்காக மூடுவது என்பது பொதுநலனுக்கு உகந்தது அல்ல என்று கூறி 100 கோடி அபராதம் விதித்து மீண்டும் இயங்க அனுமதி கொடுத்தது.

இந்த நிலையில் 3 star appreciation என்ற விருதை 2014ல்சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தந்து கௌரவித்தது. 2015ல் Green Manufacturing Unit என்ற விருதை பெற்றது (பஜக ஆட்சி). இதை தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டதில் சில மாற்றங்கள் கொண்டுவர பட்டது, அதில் சுற்றுச்சூழல் மாசு தொடர்ந்தாலும் சம்பத்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துவதில் இருந்து விலக்கு அளித்தனர் மேலும் அபராத தொகை 5-10கிமி வரை பாதிப்பு இருந்தால் 5 கோடி என்ற அபராதம்  10 கோடி வரை என மாற்றப்பட்டதே தவிர நடக்கும் அசம்பாவிததிற்கு ஏற்ப கணக்கிட்டு கேட்க்கும் படி இல்லை.

இப்படி ஒவ்வொரு கட்சியும் இவர்களுக்கு குடை பிடிக்க இப்போது 144 தடை உத்தரவை ஒரு தனியார் நிறுவனம் நீதிமன்றத்திடம் கேட்டு பெற்று தூத்துக்குடியில் ஒரு வெறியாட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது.

அப்படிபட்ட வேதாந்த குழுமம் யார் என தேடினால் Sterlite Tech என்ற நிறுவனம் வந்து நிற்கிறது, இது தூத்துக்குடியை உலுக்கும் sterlite Copper நிறுவனம் அல்ல ஆனால் இதுவும் அதே அனில் அகர்வால் நிறுவனமே. இது பக்தாள் எல்லாம் பெருமையாக பேசும் ஸ்மார்ட் சிட்டி, டிஜிட்டல் இந்தியா போன்ற அரசு சார் திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவில் காப்புரிமைகள் மீறல் வழக்கு, இந்தியாவில் 2002ல் சுங்க வரி எய்ப்பு வழக்கு என பல குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம். இந்த நிறுவனத்தோடு தான் இன்றைய பிரதமர் மோடியும் கூட்டு வைத்து smart சிட்டி, டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கப்போகிறார். இப்படிபட்ட அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமத்தை பற்றி எந்த ஊடகம் விவாதிக்கும்? 144 மட்டுமென்ன அவசர காலம் பிரகடனம் செய்துகூட இந்த ஆலை தொடரந்தாலும் ஆச்சர்யமில்லை.

இங்கு நடக்கும் எந்த தீங்கிற்கும் அந்த கட்சி இந்த கட்சி என பாகுபாடே பார்க்க தேவையில்லை மத்திய மாநில கட்சிகள் எல்லோரும் ஒன்று சேர்த்தே நமக்கு குழி பரித்திருப்பர். இனியேனும் பக்தாள் யாரும் இது திமுக துவங்கியது, காங்கிரஸ் அடிக்கல் நாட்டியது என பிரித்து பேச வேண்டாம்.

2017 ல் உச்ச நீதிமன்றமே வெளி நாட்டு நச்சு கழிவுகளை இங்கு கொண்டு வந்து கொட்டுவதற்கு இந்தியா குப்பை தொட்டி அல்ல. இந்த கழிவுகளால் வருமானம் இருந்தாலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு இதை நிறுத்த உத்தரவிட்டது. எனவே முற்போக்கு கழகங்களோ, காங்கிரசோ, பாஜகாவோ மொத்த இந்தியாவையும் கூருபோட்டோ குப்பையாக்கியோ விற்கவே இருக்கிறார்கள்.

இதனை எல்லாம் எதிர்த்து போராடினால் அந்நிய கைக்கூலியாகவும், தேச துரோகியாகவுமே நாம் சித்தரிக்கப்படுவோம்.


Sunday, September 17, 2017

புத்தரின் இனவெறி

னிதா – தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதுவும் பரிச்சயமான பெயர். அவளின் மரணத்திற்கு பின் இருக்கும் அரசியலை தாண்டி, நீட்டை தாண்டி நம்மோடு நம் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை நேற்று வரை பங்கிட்டுக் கொண்டிருந்த ஒருத்தி இன்று இல்லையே என்ற ஆதங்கம் தான் இன்று பலரை உலுக்கியது.

அந்த ஆதங்கம் ரோகிந்திய இன மக்கள் மீது இந்திய அரசாங்கத்திற்கு இல்லாமல் போனது மிக வருத்தம்.

யார் இவர்கள், இசுலாமியர்கள் என்ற ஒற்றை வார்த்தையால் இன்று அண்ட நாடில்லாமல் ஒவ்வொரு நாட்டின் எல்லையிலும் நிற்கும் நாடோடியானவர்கள்.

உலகப் போரில் அமெரிக்கா சப்பானில் வீசிய அணுகுண்டின் வீச்சு இன்னமும் இருப்பதை போல இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியுற்ற போது இந்துக்களுக்கும் முசுலீம்களுக்கும் இடையே பிரிவினையை உண்டாக்கி பிரித்து சுதந்திர வேட்க்கையை நீர்த்து போக செய்த சூழ்ச்சி இன்றும் காச்மீரில் நம் மக்களை இழந்து கொண்டிருகிறோம். அது போல தான் மியான்மர் பர்மாவாக இந்தியாவோடு கிழக்கு இந்திய கம்பெனியின் ஆதிக்கத்தில் இருந்த போது பர்மா மக்கள் எதற்கும் லாயக்கு அற்றவர்கள் என்று ஒதுக்கி இந்தியர்களுக்கும், ரோகிந்திய இன மக்களுக்கும் அன்றைய முன்னுரிமை வழங்கியது.


அந்த வெறுப்பு சுதந்திரம் அடைந்து இராணுவ ஆட்சியில் 1982ல் அவர்களின் குடியுரிமை பறிக்கம் அளவு வளர்த்திருந்தது. திருமணம், கல்வி, வழிபாட்டு தளம் என அனைத்தும் மறுக்கப்பட்டன.

8/8 /1988ல் எழும்பும் 8888 (8888 uprising) என மாணவர்களால் ஏற்ப்பட்ட புரட்சியில் ஆங் சங் சுகி அடையாளம் காணப்பட்டார். ஒரு அகிம்சைவாதியாக தன்னை பிரகடனப் படுத்திக்கொண்டார். அந்த புரட்சிக்கு பின்னும் ரோகிந்திய இன மக்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் சுகி இராணுவ ஆட்சியை வெறுத்த இராணுவ அதிகாரிகளை கொண்டு கட்சி ஒன்றை துவங்கி 2015ல் ஆட்சி அமைத்தார். அதன் பின் ரோகிந்திய மக்களின் நிலை இன்னமும் மோசமாது. இதற்க்கு இடையில் 3/9/2014ல் அல் காயிதா அமைப்பு வெளியிட்ட கானொளியில் மியான்மர் முசுலீம்களை நாங்கள் மறக்கவில்லை. அவர்களை காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம் என்றது. அதற்கு அங்கிருந்த முசுலீம் குழுக்கள் எங்கள் தாய்நாட்டிற்கு எந்த அச்சுறுத்தல்களையும் ஏற்க்க மாட்டோம் என்று அறிக்கை வெளியிட்டது.

ஆனால் இன்று ‘மியான்மருக்கு திரும்புவதை வீட இந்தியாவில் மடிவதே மேல்’ என்ற ஒரு ரோகிந்திய அகதியின் வார்த்தை உணர்த்தும் அவர்கள் நிலையை.

பெளத்த சமயத்தை பிரதானமாக கொண்ட இலங்கையில் நடந்த கொடுமையின் நீட்சியே அதே பௌத்தத்தை கொண்ட மியான்மரில் அரங்கேறி வருகிறது.

துன்பத்துக்கான காரணம் பற்று என்ற புத்தரின் வழிவந்தவர்கள் மியான்மரை தங்கள் நாடு என சொந்தம் கொண்டாடி இவர்களின் குடியிரிமைகளை பறித்து விரட்டும் போது தென்னகத்தில் உள்ளவர்களை கீழ் பிறப்பாகவும், சமணர்களை கழுவேற்றிக் கொன்று தங்கள் சைவ சமயத்தை நிலை நிறுத்திய இந்தியா இவர்களால் தீவிரவாத அச்சுறுத்தல் வரும் என்று தடுப்பதில் எந்த முரணுமில்லை.

அல்லாவின் பெயரை சொன்னதற்காக ஒடுக்கப்பட்ட போது படை திரட்டி போரிட்ட முகமது நபியின் அந்த ஒரு சித்தாந்தத்தை மட்டுமே தவறாக புரிந்து கொண்டு இன்று சில குழுக்கள் அல்லாவின் பெயரை சொல்லி செய்யும் கொடுமைகள் இன்று அனைத்து முசுலிம்களையும் பயங்கரவாதிகளாய் பார்க்க வைக்கிறது.

இங்கு இனம், மொழி, நாடு என்று சொல்லி தினம் பல கொடூரங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் எல்லாம் தனியாக அடையாளப்படுதப்படுவதில்லை. குல்லாவும் தாடியும் வைதிருப்பாதால் இவர்களும் பயங்கரவாதிகள் என சொல்வது நம்மிடையே பகுத்தறிவு குறைவதையே நிருபிக்கிறது.


ஜெர்மனியில் தான் யூதன் என்றால் உடனே விசாரணைக்கு எடுத்து சென்று விடுவர், தான் ஜெர்மானியன் என்றால் தானில்லாது முன்னர் வாழ்த்த மூன்று தலைமுறையினரும் ஜெர்மானியர்கள் தான் என நிருபிக்க வேண்டும் தவறினால் விசாரணை கைதி தான், இது ஹிட்லர் கால நடை முறை. இன்று நாமும் அதையே தான் செய்து கொண்டிருக்கிறோம் ஹிட்லரை மட்டும் மனித மிருகம் என திட்டி தீர்த்து கொண்டு.


Wednesday, August 10, 2016

ஐரோம் சர்மிளா


ஐரோம் சர்மிளா, நவம்பர் 2 , 2000 மணிப்பூர் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மலோம் என்ற சிற்றூரில் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பத்து பேர் இந்தியப் படைத்துறையின் துணைப்படையான அசாம் ரைபிள்சினால் சுடப்பட்டு இறந்தனர். அதில் 1988ஆம் ஆண்டின் தேசிய சிறார் வீரதீர விருது பெற்ற 18 வயது சினம் சந்திரமணி மற்றும் 62 வயதுடைய பெண்மணியும் அடக்கம்.

இந்த படுகொலைக்கு எதிராக 28 வயது ஐரோம் சர்மிளா நவம்பர் 4 உண்ணா போராட்டம் துவங்குகிறார். அன்றையில் இருந்து மூன்றாம் நாள் சர்மிளா தற்கொலைக்கு முயல்வதாக கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கிறது காவல்துறை. வலுகட்டயமாக மூக்கு வழியே உணவு தரப்பட்டுகிறது. இந்திய அமைப்பு சட்டத்தின்படி தற்கொலை முயற்சிக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை என்பதால் அன்றையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் விடுவித்து மீட்டும் கைது செய்யப்படுகிறார்.

இந்திய தலைநகர் டெல்லியில் பாலியில் வன்கொடுமைக்கு ஆளாகி உயிர் விட்ட பெண்ணை இன்று வரை உரித்து உரித்து பார்த்துக்கொண்டு இருக்கிறது நீதித்துறையும் அரசாங்கமும். நீதிமன்ற வேலை நேரம் முடித்து மீண்டும் தனி அமர்வில் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் மேல் முறையீட்டை கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அவர்களுக்கு என வாதாட வக்கீல் தரப்படுகிறது. அவரும் வாய்க்கு வந்த வண்ணம் இன்னும் அந்த பெண்ணை அறுத்து கூறுபோட்டு குற்றவாளிகள் விடுதலைக்கு அயராது பாடுபடுகிறார்.

ஆனால் இந்த ஐரோம் சர்மிளா விடுதலை கைது விடுதலை கைது என மாறி மாறி தன் வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கை உண்ணாமல் நோம்பு இருந்து கழித்ததன் காரணம் கேட்க ஆராய இன்று வரை எந்தத்துறையும் செவி சாய்க்கவில்லை.

16 வருடமாக ஐரோம் சர்மிளா இருந்ததன் நோக்கம் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 திரும்பப் பெற வேண்டும் என்பது இதற்க்கு இடையில் கருணாநிதி ஈழம் மலர உண்ணாவிரதம் இருந்தார், ரஜினி உடல் நிலை தேற ரசிகர்கள் உண்ணாவிரதம் இருந்தனர், ஜெயலிதா விடுதலை அடைய தமிழகமே(!!??) உண்ணாவிரதம் இருந்தது.

வடகிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள அந்த சட்டம் ஆயுதப்படைக்கு தரும் அதிகராம் யாதெனில் போராளி என சந்தேகிக்கும் எவரையும் காலவரையின்றி காவலில் வைக்ககாலம் சுட்டும் கொல்லலாம். மும்பையை அலறச் செய்த தீவிரவாதிக்கு தனி சிறை தனி நீதிமன்றம் அமைக்கத் தெரிந்த அரசிற்கு கிழக்கில் உள்ள போராளிகளின் கோரிக்கைக்கு செவி கொடுக்க ஏனோ வலிக்கிறது.

இன்னமும் அந்த சட்டம் அமலில் உள்ளது அவரினவரின் அடுத்த அடி மணிப்பூர் முதல்வர் இபோபி சிங்கிற்கு எதிராக சுஎத்சியாக தேர்தலில் போட்டியிடப்போவது

வரும் 15ம் தேதி வாய்கிழிய அகிம்சை போராட்டம் மூலம் கிட்டிய சுதந்திரம் என மார்தட்டும் போது நினைவில் கொள்ளவேண்டிய நிகழ்வு, உண்ணா போராட்டம் கைவிடப்பட்டவுடன் இம்பால் மாஜிஸ்திரேட் கோர்ட் தலைமை நீதிபதியிடம் ரூபாய்10ஆயிரத்திற்கான பத்திரத்தை அளித்து தற்கொலைக்கு முயல்கிறார் என அவர் மீது உள்ள வழக்கு தொடர்பான விசாரணை வருகிற 23ம் தேதிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டே பிணையத்தில் விடுவிக்கபட்டார் ஐரோம் சர்மிளா. கோட்சே அன்றே காந்தியை சுட்டது காந்திக்கு நல்லது என இன்று நீதித்துறை இன்று நிருபித்துக் காட்டியது.


Thursday, July 7, 2016

ஒழுங்கீனம்!

அவள் பொதுவாழ்வில் இல்லை
பொது சொத்துக்களை களவாடவில்லை
பொது இடத்தில் கொலை செய்யப்பட்டதால்
அவளை தீக்குளித்துக் காட்டச்சொல்ல – இங்கு
ராமன் எவனும் இல்லை!
ஓங்கி ஒரு கல் எரிய துப்பில்லாதவன்
துப்பு தரவும் துப்பில்லாதவன்
அதற்க்கு ஓராயிரம் காரணங்கள்
இவனுடன் நடக்க எவரும் வருவரோ
உடன் வருவோர் தடுக்கி விழுந்தாலே
ஐயோ என இவன் அலறி ஒதுங்குவான்
இனியும் எத்தனை காலம் காரணம் தேடுவோம்
தைரியம் இல்லை என்பதை மறைக்க!

Saturday, April 9, 2016

இந்திய பிரதமரின் பயணக்கட்டுரை

அமெரிக்க டாலருக்கு நிகராக அந்நாட்டின் பண மதிப்பு 20 லட்சத்தை தாண்டி சென்றது. அந்நாட்டின் அரசாங்கத்திற்கு எதிராக கட்சி துவங்கி போர் படையும் திரட்டி போரிட்டான் அந்நாட்டின் குடிமகன். அதில் தோற்று கைதானாவனுக்கு ஐந்தாண்டுகள் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது அதுவும் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யவும் வாய்ப்பு தரப்பட்டு வெறும் இரண்டு ஆண்டுகளில் விடுதலை அடைந்தான். அந்த இரண்டு ஆண்டுகளில் அவன் எழுதிய சுயசரிதை எனது யுத்தம்’ என்ற தலைப்பில் வெளியானது. அதிலிருந்து அந்நாட்டு மக்களின் புரட்சி தலைவனென்றானான். அடுத்த ஒன்பது ஆண்டுகளில் 240,000 பிரதிகள் விற்பனையானது அவனது கட்சி மாபெரும் வெற்றியும் பெற்றது.

அடுத்த ஆறு ஆண்டுகளில் அண்டை நாட்டை கைப்பற்றும் எண்ணத்துடன் போர் புரிய துவங்கினான். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் உலக யுத்தர்திற்கு காரணமானான். இருந்தும் அவன் பதவி ஏற்ற நாளில் இருந்து ஒரு வருடதிர்குள்ளாக வேலை இல்லாதோர் எண்ணிக்கை ஆறு மடங்கு குறைந்தது. பொருளாதாரம் வலுபெற்றது.

ஒரு இனத்தை கொன்றது, உலக அமைதிக்கு ஊரு விளைவித்தது போன்ற பல குற்றச்சாட்டுகள் இருந்த போதும் பொருளாதரத்தில் தத்தளித்த தன் நாட்டை அதன் வளம் கொண்டே மீட்டவன் அவன், அடால்ஃப் இட்லர்.

அவன் எந்த நாட்டுக்கும் பயணிக்கவில்லை, வெளி நாட்டு முதலீடுகள் கொண்டு வரவில்லை. உள்நாட்டின் திறம் மேன்படுதப்பட்து நீர் அணைகள், போக்குவரத்து சாலைகள், தொழிற்சாலைகள் (உள்ளூர் தொழிற்சாலைகள்) நிறுவப்பட்டன. வேலை நேரம் நீடிக்கப்பட்டது. ஆனால் நாம் இன்றும் வெளிநாட்டு முதலீட்டுக்காக காத்திருக்கிறோம்.

வெளிநாட்டு வியாபாரிகள் இங்கு இந்தியாவில் கடை போடவும் தொழிற்சாலைகள் அமைக்கவும் வரி விலக்கு தரப்படுகிறது. இதில் அரசாங்க வருமானம் போகும். ஆனால் வேலை வாய்ப்பு கிட்டும் என சொல்லப்படுகிறது. மேலும் தடை இல்லா மின்சாரம் வழங்கப்படுகிறது இதில் மின் உற்பத்தியில் எந்த முன்னேர்படும் செய்யப்படுவதில்லை. எனவே பிற மாவட்டங்களில் மின் தடை செய்யப்பட்டு இவர்களுக்கு தடை இல்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் உள்ளூர் தொழிற்சாலைகள், சிறு வியாபாரிகள், நெசவு தொழில், அச்சு தொழில் என பல்வேறு தொழில்கள் முடங்கி சுய தொழில் செய்வோர் வேலை இழக்கின்றனர். மொத்தத்தில் சுய தொழில் செய்வோர் வேலை இழந்து தான் நாம் இன்று வெளி நாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறோம். எனவே வேலை வாய்ப்பு என்பதும் ஒரு போலித்தனமான பிம்பம்.

இது மட்டும் அல்ல நல்லுறவு மேன்படுகிறது என்றும் ஒரு பிம்பம் உருவாக்குகின்றனர். அப்படி எனில் இலங்கை ராணுவம் இந்திய மீனார்கள் (தேசிய ஊடக மொழியில் தமிழக மீனவர்கள்) மீதான தாக்குதல் நின்றிருக்க வேண்டும் அது இன்றும் தொடர் கதையாகவே உள்ளது. சீனாவின் தரமில்லா சந்தைகள் சங்கடம் இல்லாமல் இன்னும் கடை விரித்துக்கொண்டேதான் இருக்கின்றன.

பசி என்று கதறுபவனுக்கு தாளிக்கும் வாசம் வந்திருந்தாலும் பொருத்திருப்பான். நம் பிரதமர் மளிகை சாமான்கள் வாங்கி வருவதாக சொல்லி தெரு முனையில் சிகரெட் பிடித்துக்கொண்டிருக்கிறார்.

அன்றாடம் வாங்கும் காய் கறிகள், பால், பருப்பு போன்றவற்றின் விலை நிர்ணயத்தில் கணிசமான பங்கு போக்குவரத்துக்கு உண்டு. கச்சா எண்ணையின் விலை பாதாளத்தில் சென்ற போதும் சிறு ஆட்டம் காணாத நம் உள்ளூர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் மாதம் இருமுறை ஏற்றம் காண்கிறது. அதில் அக்கறை காட்டவில்லை வெளிநாடு பயணம் செய்யும் பிரதமர்.

source: http://www.mycarhelpline.com/
கருப்பு பணம் மொத்தமும் வரும் வரி இருக்காது என ஓட்டு கேட்டவர் இன்று நாட்டை தூய்மை படுத்த ஒரு புது வரி (Swachh Bharat cess at the rate of 0.5% on all taxable services on November 6 to be effective from November 15). கச்சா எண்ணை விலை குறைந்ததில்  சுமத்த பட்ட வரிகளில் இருந்து எடுத்திருக்கலாமே?

மாட்டிறைச்சி காரணம் சொல்லி ஒரு முதியவரை அவ்வூராரே அடித்து கொன்ற போதும், தலித் சிறுவகள் கொல்ல பட்டபோதும், ஒரு பல்கலைக்கழகம் தீவிரவாதிகள் கூடாரமாக சித்தரிக்க பட்டு கேலிக்கூத்தான போதும், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அவர்களுக்கு எதிராக பேசியவர்களின் தலைகளுக்கு விலை வைத்த போதும் மௌனமே காத்தார் வெளிநாடு பயணம் செய்யும் பிரதமர். ஏதோ ஒரு மாநிலத்தில் நடக்கும் சில தவறுகளுக்கு எல்லாம் பிரதமர் பேச முடியாது எனில் யாரோ பதினோரு பேர் கொண்ட குழு மட்டையில் பந்தை அடித்து வெற்றி பெற்றதற்கு மாட்டும் வாழ்த்து சொல்ல நேரம் இருக்கிறதே வெளிநாடு பயணம் செய்யும் பிரதமர்க்கு.

அவர் நல்ல சூத்திரதாரி வாய் திறந்தால் தான் அது ஒரு செய்தியாகும் இவர் ஏதும் சொல்லாத போது இந்த ஊடகங்கள் அதை பற்றி பேசபோவது இல்லை. இவர்கள் பேசாத போது மக்கள் அதை பற்றி சிந்திக்க போவதும் இல்லை. எனவே வாருங்கள் அமைதியாய் கண்களை மூடி வெளி நாட்டு முதலீடு வருவதை உணர்வோம் எல்லோரும் யோகா தினம் கொண்டாடுவோம்.


(குறிப்பு: இதனால் இதற்க்கு முந்தைய காங்கிரச் ஆட்சி தேவலாம் என்று பொருள் கொள்ள வேண்டாம்.)

Sunday, March 15, 2015

உம்மூச்சுக் காத்து

வாழ்க்கை தரவனில்ல கடவுள்
வாழ கத்துத்தரவன் தான் கடவுள்
வாழ்க்கை எவனு
ஒரு நிமிச சந்தோசத்துக்கு தந்துட்டு போய்டலா
வெறு இருட்டுல...
எந்த கத்திரிக்காய்க்கோ இல்ல வெறு காமதுக்கோ
வாழ்க்கை தர முடியு..
பொறந்தது பொட்ட புள்ளைனு
பார்க்க வராதவன்
வளர வளர பக்கத்து வீட்டுக்கார.. எதுத்த வீட்டுக்கார
கூடவே வராத சொந்தக்காரனுக்கு பயந்து போய்
அத வழத்து கட்டிக் கொடுக்கும் போது மட்டு கண்ணீர் விடறவன் இல்ல..
வாழ கத்துத் தர உன் கூட விழுந்து
நீ அழும் போது அழுது..
அழ வெச்சவ கழுத்த எப்டி அறுக்கனுன்னு
கூடவே இருந்து கத்து எவன் தரானோ
அவன்தா சாமி
கடவுள்... உம்மூச்சுக் காத்து எல்லா..





Thursday, July 17, 2014

வர்த்தகம் மட்டுமே!

நான் கண்டது குருவை அல்ல விற்ப்பனையாளரை!
நான் பெற்றது கல்வி அல்ல சரக்குகளை!
நான் தேர்ச்சி பெற்றது வாழ அல்ல விற்ப்பனைக்கு!
நான் இருப்பது கோவிலில் அல்ல சந்தையில்!
புத்தகத்தில் இருந்ததை தலையில் ஏற்றி
நுணுக்கம் செய்து என் ஆற்றலை தரையில் கூறுகட்டி வைத்திருக்கிறேன்
என் கனவுகளை எல்லாம் புதைத்து
அதன் மீதமர்ந்து வியாபாரம் பேசுக்கிறேன்!
பள்ளிக்கூடம் மொத்தவிற்பனை நிலையம்!
மாணவர்கள் சில்லறை வர்த்தகர்கள்!
நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள்!
இதில் எங்கும் நடப்பது வர்த்தகம் மட்டுமே!




Monday, November 11, 2013

மிருகம்

சி இருக்கு
சாப்பிட சோறும் இருக்கு
ஆனா சாப்பிட தோனல
நல்லா தூக்கம் வருது
போய் கிடந்து படுத்தா பாதி ராவுல தூக்கம் களையுது
எல்லா சரியா இருக்கு
ஆனா ஏதோ குறையற மாறி இருக்கு
நல்ல பாட்டு கேட்டு
நல்ல நண்பன்கிட்ட பேசி நாள் கலியுது
இன்னு என்னவோ விட்ட மாறியே இருக்கு
இது காதல்னு சொன்னாங்க
ஆனா அது இல்ல ..
முடிக்க வேண்டியது ஒன்னு மிச்சம் இருக்கு
எவனோ ஆரம்பிச்சு வெச்சது இன்னு தலையில கிடக்கு
குரோதம் உள்ள இருக்கு
எல்லா விட்டு போக நானின்னு போதி மரம் பக்கம் போகல
மனுசனா பாக்க தெரிஞ்சாலு ஆதி மிருகம் தானே
இன்னிக்கு கடவுள் மனுசனா வந்து மன்னிக்க கத்துக்கொடுத்தாலு
ஆதில கத்து கொடுத்தது இந்த மிருகம் தானே
அடுச்சது தலைல இல்ல எல்லா மறந்து போக
முதுகுல குத்தினது மருந்து போட கைகூட எட்டல
மூணு தலைமுறை முன்னாடி கடந்த பாதைய கூட மறக்காது
குத்தினவன் முகம் மறக்குமா...




பிழைக்க வழி

சொந்த மண்ணில் பிழைக்க வழியில்லாமல்
என்றோ மனைவியை மீட்க கடந்த அந்த கடல் கடந்து
ஆண்டுகள் நூத்துக்கு மேல் அங்கு  வேர் ஊன்றி
உரிமைக்காக ஏங்கி
உறவை இழந்து
உரிமைக்காக ஆயுதம் ஏந்தியவர்கள்
ஒவ்வொருவராக மடிய
போராடியவர்கள் போர் குற்றவாளிகளாக
அவர்களுக்கு உரிய உரிமையும் இல்லாமல்
இழிவாகக் கொல்லப்பட்டு
மிஞ்சிய மக்கள்
இன்று சொந்த மண்ணிலும் திறந்தவெளிச் சிறையில்
இன்னமும் வாழ வழியில்லாமல்
காலம் கழிக்கும் அவர்களுக்கு
தமிழ் தமிழ் என முழங்கி ஆட்சி பிடித்தவர்கள்
மத்தியில் கிடைத்த பங்கிற்கு விலை போய்
மொழிக்கு ரயில் மறியல் செய்தவர்கள்
அம்மொழி பேசும் மக்கள் மானம் இழந்த போது
மொழியை செம்மொழியாக்கி மார்தட்டியவர்களா
நியாயம் பேசுவார்கள்?
ஆள்பவர்கள் ஆளுக்கு ஒரு தொலைக்காட்சி நிலையம் வைத்திருந்தும்
தம் மக்கள் அவலம் ஏதும் சொல்லாமல்
தீபாவளி பொங்கலுக்கு சிறப்பு படங்கள் மட்டும் நிறுத்தாது போடவர்களா
நியாயம் பேசுவார்கள்?
அவலங்கள் பதித்த குருந்தகுடுகள் வெளி வராது
வெளியிட்டவர்களை தண்டித்து
போராடியவர்களை கைதி செய்து
தம் மக்களை எரித்தவர்களின் கொடியை எரித்தது குற்றம் என்றனர்.
தமிழ் பேசி கட்சி வளர்த்த இவர்கள் மறைக்க நினைத்த
ஒவ்வொரு காட்சியையும் உலகிற்கு காட்டி விட்டது
ஆங்கிலம் பேசும் தொலைக்காட்சி!
தமிழை டமில் என்று உச்சரிபவர்கள் தான் இன்று குரல் கொடுக்கின்றனர்
தமிழர்களுக்காக..
புலம்பெயர்ந்தவர்களை கொல்ல ஆயுதமும் ஆட்களையும்
தந்து தந்து உதவியவர்களா போர் முறை தவறியவர்களை தண்டிப்பார்கள்?
தன் மண்ணில் பிழைக்க வழியில்லாமல் சென்ற
சொந்த மகள்களை பலாத்காரம் செய்ய பயிற்சி அழித்தவர்களா
நியாயம் பேசுவார்கள்?
சுதந்திரத்தின் போது கொடுத்த அத்துணை வாக்கையும்
ஆண்டுகள் உருண்டோடியும் தலைகள் பல உருண்டும்
சொந்த மண்ணிலேயே கைதிகளாய்
எந்த நடத்தைக்கும் சந்தேகத்துக்கு உரியவர்களாய்
தினம் தினம் சொந்த கஷ்மீர் மக்களையே ஏமாற்றி வரும்
இந்த இந்தியாவா புலம்பெயர்ந்தவர்களுக்கு பிழைக்க வழி சொல்லிவிடும்?





Wednesday, August 15, 2012

இந்தியன் அல்ல நான்!!!


ந்த அண்டத்தின் அழகுகளில் ஒன்றென இருக்கும் இடம்
அறுபத்தி ஆறு ஆண்டுகளுக்கு மேல் இன்னமும் குண்டுகள் தெறிக்க வாழுமிடம்
இன்னமும் சுதந்திரம் என்ற ஒன்றை முழுமையாக காணாத இடம்
சொந்த நாடென மிக நேசித்தது சகாக்களின் வாழ்வை சவமாக்கியும்
இன்னமும் அவ்விடத்தை கொண்டு என்ன செய்ய உத்தேசம்
என் தேசம் உரைத்தது இதுவல்லவே
இந்தியன் என்ற ஒரு சொல் தான் – அவர்கள்
கஷ்மீரில் வாழ இன்னமும் தடையாக இருப்பின்
அதை துறந்துவிடுகிறேன்!




Sunday, July 29, 2012

வேண்டுகோள்

கோபத்தையும், மகிழ்ச்சியையும் கண்ணாடிபோல் காட்டிய இம்முகம் வெளிறிப்போய்,
ஓடி ஆடிய கால்கள் ஓய்ந்து
எட்டி எட்டி பிடிக்க முயன்ற கைகள் விறைத்து
என் ஆவி பிரிந்து
இவ்வுடல் மட்டும் ஏதேனும் ஒரு தெருவில் –
கேட்பார் அற்று கிடக்குமாயின்,
அதன் அருகில் பதுங்கு குழிகள் இருக்கக் கூடும்
அதில் போட்டு போவோர் ஒவ்வொருவரும் ஒரு கை மண் தெளித்து போங்கள்
அருகில் கடல் இருப்பின் அதில் வீசிவிட்டு போங்கள்
காடெனில் விட்டு விட்டு போங்கள் இரையாகிப்போவேன்.
என்னோடு வந்தவர்களை வெற்றி வேகமாய் அழைத்திருக்கக்கூடும்
இல்லையேல் கொடுங்கைகள் அவர்களை நின்று நிதானிக்க விடாது விரட்டி இருக்கக்கூடும்.
காரணம் எதுவாயினும் இன்னும் முடிந்து விடவில்லை
ஒவ்வொரு விடியலும் புது ஆரம்பமே!
உணவுக்காக வரும் கூட்டம் நீங்கள் எனில்
என்னை உண்டு விடுங்கள்
சீரணம் ஆகும் போது உங்கள் குடல் வழி வண்டல் என வர மாட்டேன்
ரத்த நாளங்களில் புது ரத்தம் என பாய்ந்து வருவேன்
முன்னேரிச்செல்வோம்!



Thursday, March 29, 2012

என்னோடு என்னைக்கொல்லும் துரோகி



கண்கள் விழிக்கவே வெறுப்பாக இருந்தது. இருத்தும் விழித்து விட்டத்தை பார்த்தவாறே படுத்திருந்தான். கண்கள் கலங்கின. வெறுப்போடு அதை துடைத்து எறிந்தான். முகம் முழுக்க வெறுப்பு தொற்றிக்கொண்டு இருந்தது.

அப்போது தான் வந்தான் உள்ளே அவன். இன்னும் அதிக நிசப்தம் அந்த அறையில் நிலவியது. வந்தவன் முகத்தை பார்க்கக் கூட விரும்பாதவனாய் மறு புறம் திருப்பிக் கொண்டான்.

சில நிமிடங்கள் நிசப்தத்தோடே நகர்ந்தது. இன்னும் வெறுப்பு ஏறி முகம் சிவக்க அவனை பார்த்து கத்தினான்..

எங்க டா வந்தே?? உன்ன எல்லா.. இச்ச. பாரு இப்போ தினமும் என் முஞ்சி மாறுது. முன்னாடி எல்லாம் சொல்லுவியே கண்ணாடியே பார்த்து தல சீவிவிட்டு வான்னு. அப்போ எல்லாம் அதை பார்த்ததே இல்ல. ஆனா இப்போ தினம் தினம் .. ஒரு நாளிக்கே பல தடவ பார்க்கறே.. அப்டியே தா..

சொல்லி முடிக்கும் முன்னரே குரல் தழுதழுத்தது. கொஞ்சம் ஆசுவாசம் படுத்திக்கொண்டு மூக்கை துடைத்துக் கொண்டு தொடர்ந்தான்

அப்டியே தான் இருகேனானு... தலைய கோதின கையில அவ்ளோ முடி சின்ன புன்னகைக்கு பின் தொடந்தான் இந்த இதுக்கு எத்தன கடை ஏறி.. எந்த எந்த சலூன்.. கிரீன் இட்டிரேன்ஸ்...இச்ச...

தலையில் அடித்துக் கொண்டு தொடர்ந்தான்.. கண்கள் கலங்கிய படி..

வாயால சாப்பிட்டு எத்தன நாள் ஆச்சு தெரியுமா? காலைல சரியா பாத் ரூம் கூட போக முடியல.

இடைமறிக்க முயன்றவனை பார்த்து, கண்களை வேகமாக துடைத்துக் கொண்டு எழுந்து உட்கார்த்து

டேய் பேசாத சாவடுச்சுடுவேன்

 கைகள் உதற ஆரம்பித்தன, மேல் மூச்சு வாங்கியது. மீண்டும் மீண்டும் கண்ணில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே இருந்தான். வந்தவனுக்கு ஏது சொல்வது என்று தெரியாமல், வெளியே போகவும் தோணாமல் பேச்சு வாங்கியப்படி நின்றிருந்தான்.

எங்கே வலிக்குதுனே தெரியாது. ரொம்ப நேரம் தூங்கினா எங்கே செத்து போய்டேனோனு தூக்கத்திலயே பயமா இருக்கு. சொல்லிக்கொண்டே வெறுப்போடு அவனை ஒரு பார்வை பார்த்தான். வந்தவனுக்கு கைகள் விறைத்து போய்விட்டிருந்தது. வந்தவன் முகத்தை பார்க்க பார்க்க இவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. கத்ததத் துவங்கினான்.

எப்டி டா உனக்கு எல்லா ஒன்னும் ஆகல.. நல்லா இருக்க.. ஏன்டா இப்டி எல்லாரையும் சாகடிக்கறீங்க. தூ.. இதே மாதிரி எத்தன பேரை சாகடிச்சிருப்ப.. உன்ன மாறி ஆளுங்கள கொன்னா என்ன?”

சத்தம் கதவுகளை தாண்ட, வெளிய அமர்ந்து இருந்த செவிலி உள்ளே ஓடி வந்து அவனை அமைதியாக்கினாள். வந்தவனை அந்த அறையை விட்டு வெளியே கூட்டிச் சென்றாள்.

நீங்க தான் அவர் ரூம்மெட்டா?”

ம்ம்

சிகரெட் பழக்கம் இருக்கா?”

ஆமா, ஆன..

அவர் சும்மா செக் அப் வந்தப்ப டாக்டர் அவருக்கு பழக்கம் இல்லை அப்டிங்கரத நம்பவே இல்ல. போக போக தான் தெருஞ்சது பெசிவ் ஸ்மொகர் அப்டினு. மத்த புகை எல்லாம் ஒரு பக்கம்ன.. இது வேற மாதிரி சார். நீங்க இழுத்து வெளியே விட்டுருவீங்க ஆனா பெசிவ் ஸ்மொகர்ஸ் அத உள்ள இழுகரதொட சரி வெளிய வராது. புரியுதுங்களா?”

மேற்கொண்டு அவனால் ஒன்றும் கேட்க முடியவில்லை. முகத்தை மறைத்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வேகமாக வெளியே நடந்தான். வழியில் யாரோ ஒருவர் புகைதுக்கொண்டு இருக்க அருகில் நின்றிருந்த கர்பஸ்திரியையும் ஒரு நொடி நின்று பார்த்து நடந்தான்.

Monday, November 14, 2011

எதுவோ நிரந்தரம்!?

நானும் நீயும் நிரந்தரமோ..?
நானே போனபின் நீயிருன்தென்ன அவனிருந்துஎன்ன,
பரமனவன் இருந்தும் என்னக்கென்ன.
யாரோ சொல்லக் கேட்ட நிரந்தரம் என்ற வார்த்தை
நிரந்தரம் என்பதில் நிதர்சனம் ஏதும் இல்லை.
மாறி மாறி போன மொழியை பற்றி
வேள்வி நடத்தி,
மக்களை போட்டு எரித்து அரசியலும் செய்வர்,
எம் மொழி நிரந்தரமோ..?
மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டால் நிரந்தரமென்றாககுமோ,
மாறிப்போனால் நிரந்தரமெங்கே ஆவது.
எதுவோ நிரந்தரம்..?
உணர்ச்சிகளேனும் நிரந்திரமோ..?
இச்சைகளேனும் நிரந்திரமோ..?
நிரந்திரமாயின் பலர் பரத்தையர் சேரியிலேயே குடிகொண்டிருப்பர்,
மாறி மாறி மாற்றங்கள் கண்டு மக்கும்
பூத உடலே நிரந்திரமற்று இருக்கும் போது
அது மேல் கொள்ளும் இச்சை நிரந்தரமென்றாககுமோ..?
காதல் நிரந்தரமோ..?
கல்யாணத்திற்கு பிறகு பிறர்பால் வருவது
கள்ளக்காதல் எனில்,
யாரையோ காதலித்து விட்டு யாரையோ கை பிடிப்பது
கள்ளக்கல்யானம் ஆகாதோ..?
இப்படி கள்ளம் இருப்பது நிரந்திரமாகுமோ..?
கள்ளமேனும் நிரந்திரமோ..?
பழகியதை மாற்ற முடியுமோ,
மனம் போனதையாவது சொல்ல முடியுமோ..?
இந்த பாசமேனும் நிரந்திரமோ..?
பிறகு எதற்கு இத்துனை குழந்தைகள் அநாதை என்ற மதத்தில்..?
பற்றின்றி வாழ்வது வாழ்வு என்றவன் புத்தனவன்,
யாரும் பற்றோடு இராதீர் என்ற
பற்றை  மறந்தும் விடாமல் பற்றி இருந்தவன்,
அவன் பற்று நிரந்தரமோ..?
இதோ என் தேடல்
என் நாள் முடியும் வரை விடை காணாது இருந்தால்,
அதுவரை என் தேடல் நிரந்தம்!

--சித்ரன்


Sunday, August 7, 2011

எது வரை கேட்கும்...!?

ம் பொறுமையின் குடம் தீரும்வரையில்..
இவர்தம் காதுகள் கேளாது! 
ஒருநாளில் குற்றம் குறைக்க மந்திரம் ஏதும் தெரியாத நாய் மந்திரி இவர்!
ஏதும் ஒருநாளில் நடந்திடாதெனில்,
விலை உயர்வு மட்டும் எப்படியோ..
காலைப் பத்திரிக்கையிலும், மாலை பத்திரிக்கையிலும்
மாறி மாறி ஒரேநாளில் ஏறிவரும்..?
கொஞ்சம் கொஞ்சமாய் பரவி,
தலையை தாக்கும் விஷம்...
உம்ம விலை உயர்வும் அதுபோல் தானே..?
கொஞ்சம் கொஞ்சமாய் பரவும் போது பாராளுமன்றத்தில் 
யார் பெண் மயிரில் பூச்சுடிக்கொண்டிருந்திர்..?
பணம் பணம் என கேட்டுப் பிடுங்கும்,
பரத்தையர் சேரியானது உம்ம அலுவலகம்
நீர் இன்னும் அறிந்திருக்கமாட்டீர்!
அமாவாசையும் எமகண்டமும் பார்த்து பார்த்து,
மனு வாங்கும் இடம் பெயர் அறிவாலயமாம்,
இவர் மூடநம்பிக்கை ஒழிக்கும் ஒளிதருவாரம்!
அம்மா என்ற சொல்லே கேடவார்தையாக்கிவிட்டார்!
எம் முதுகு தோல் உரித்து..
என்னகே இலவச செருப்பு தருவர் ..
அதன் அச்சு உம்ம கன்னத்தில் பதியும் நாள் வரும்!
நீர் போடும் சட்டமும் வரியும்,
வந்தவன்தான் ஏற்பாரோ இல்லை..
போபவன்தானே என பொருப்பாரோ!
போட்ட சாலைக்கு வாகனம் செல்ல வரியாம்
இதில் சுங்க வரி என்று ஒவ்வொரு முக்கிலும் இன்னும் கேட்பாராம்,
பணம் கொண்டவன் கட்டித் தொலைப்பான்,
மானம் கொண்டவனே தட்டிக் கேட்பான்!
கிழக்கில் விடியவில்லை என்றாலென்ன,
இதோ மேற்கே ஒளி தெரிகிறது.. 
உமக்கு கிலி காட்ட வரும்!
புரட்சிகள் மீண்டும் வரும்..
அன்னியருக்கு எதிராய் மட்டும் கண்டிருப்பீர் இங்கு,
இதோ ஆளத்தெரியாதவருக்கு எதிராய்
அதிகார போதையில் திளைப்பவருக்கு எதிராய்!
இன்னுமா கேட்கவில்லை உமக்கு அந்த சத்தம்
காதைத் திறந்துவையும்!
பெற்ற அப்பனே ஆனாலும்
தவறென்று பட்டபின் பாசம் அறுத்து
ஊர் பார்க்க உலகம் கேட்க
உடனே அவன் தலை கொய்யும் துணிவு வரும் வரை கேட்கும்..
இந்த ஈனம் கெட்ட நாய்களின் குரைச்சல்...!