Sunday, November 22, 2015

மழைத்துளி

ஒத்தத் துளியா மொத்தமா நினைசுடும்
கொட்டி தீர்த்த மழையா தொடாத இடமெல்லா நெளிஞ்சே போறே
உடுத்தின துணியா இன்னும் இருக்கமா என் மேல இருக்கே
உடம்பெல்லா ஊறி போன பின்னு
இன்னு உள்ளே சூடவே இருக்கேன்
நேரம் என்னனு ரெண்டு பேரும் கேட்கல
பொழியற மழை நேரங்காலமா பார்க்கும்
ஓடுற வெள்ளம் காடும் மலைய பார்த்தா நிக்கும்
கண்ணோட கண்ண வெச்சுகிட்டு
கையோடு கை வெச்சு அழுத்தி
காதோட மூச்சு காத்து அடிக்க சொன்னது
அடிவயிதுல எதிரொலிக்குது!