Showing posts with label இளமை. Show all posts
Showing posts with label இளமை. Show all posts

Wednesday, February 29, 2012

இவ்வுறவை யாதென கொள்வேன்?

காலம் கடந்தும் கதைக்க செய்யும்
காதல்!
முதல் இரவோடு முடித்துக்கொள்ள துடிக்கும்
இச்சை!
காதல் என்ற சொல்லிற்கு காமம் என்ற பொருள் உண்டு
இச்சை என்ற சொல்லிற்கு காதல் என்ற பொருள் உண்டு
காமம் கடந்தும் இருந்துவிடின் காதல் என்று கொள்க
காதல் முடிந்தவுடன் இருக்க ஏதும் இல்லை எனில் இச்சை என்று கொள்க
இச்சை தீர்ந்த பின்பே உறுதிபட சொல்ல முடியுமோ காதலா என்று?
எதுவாயினும் நீ இன்றி என்னால் 
சுகமொடும் சுமையோடும் காலம் தள்ள முடிகிறதே
இவ்வுறவை யாதென கொள்வேன்?







Sunday, March 27, 2011

நீண்ட இரயில் பயணத்தில் ஒரு சிறு காதல்!

நீண்ட இரயில் பயணம்,
சற்றுத் தள்ளி சன்னல் பக்கம் அவள்.
சிறிது தூரம் வரை மோதிக்கொல்லத்தான்வில்லை,
எங்கள் இரு விழிகள்!
யாரோ ஏதோ சொல்லக் கேட்டு நானும் சிரிக்க,
அவளும் என்னோடு கண் கலக்க,
இருவரும் ஒருவர் பால் ஒருவர் ஈர்க்க,
தொடர்ந்தது பயணம் மோதிக்கொண்டு!
கொஞ்சம் கொஞ்சமாய் விலகி நின்றேன்,
நண்பர்கள் அரட்டையில் இருந்து!
அவளும் கொஞ்சம் சிரிப்புமாய்,
கொஞ்சும் பார்வையுமாய்,
தோழிகளையும் என்னையும் பார்த்துக் கொண்டாள்,
அவை அடக்கமாக!
பேச்சுக்கள் வெட்டி வெட்டி போடப்பட்டன,
காற்றில் கலையாத முடியை
எனோ கைகள் சரி செய்து கொண்டே இருந்தன!
பேச்சிலே சேராத அவள், தூங்குவோம் என்றதும்,
இன்னும் கொஞ்சம் பேசுவோம் என்ன கெஞ்சினாள்!
ஒவ்வொரு முறை அவள் பார்வை என் மீது போர்த்தும் போதும்,
ஏதோ என்னிடமே தேடிப்பார்த்துக் கொண்டேன்!
கொஞ்ச நேரம் சன்னல் பக்கம் பார்வை போயினும்,
எதோ தொலைத்தவன் போல் பதறிப் போய் அவள் பக்கம் தேடினேன்!
தோழிகளின் தோள்களுக்கு இடையே இருந்து,
நடக்கும் வழியில் விழியால் நடந்து,
என் கண் வீடு அடைவாள் ஒவ்வொரு முறையும்!
வருவது தான் தொலைவு போல,
போவது சட்டென போய் சேர்த்து விடுவாள்,
யாரேனும் அவள் பேர் சொன்னாள்!
வந்து வந்து போய்கொண்டு இருந்ததில்,
நேரம் என்ன நொண்டியா..?
வேகமாக ஓடியது,
உறங்க போனோம் ஒன்றாக,
இரு குழுவும் தனித்தனியாக,
வேகமாக ஓடிய நேரம் எனோ நொண்டித்தான் நகர்ந்தது! 
விடுந்தும் விடியாமலும் எழுந்து
கதவோரம் காற்று வாங்கும் சாக்கில் நகர்ந்தால்
அங்கும் வரும் அசட்டு நண்பர்கள்!
தலை கொஞ்சம் மறைந்ததும்,
மறு கதவோரும் வந்து நின்று பார்வை போர்துவாள்...
என நான் நிற்க,
முடுச்சுகளோடு புடை சூழ இறங்கி நடந்தாள்,
அவள் பயணம் முடித்து!
இதுவும் காதல் தானே,
அவள் கடந்து போனதும்,
அவள் கொலுசு சத்தம் போல்
கனமில்லாமல் காற்றில் கசிந்து கரைந்து மறைந்து போனது,
அவள் பெயர் கூட நினைவில் நிற்க்காமல்!






Saturday, February 26, 2011

இதற்கேனவோ வந்தாய்!

தற்கென வந்தாய்...
யாரேனும் எதேட்சையாக என் அருகில் நின்றாலே,
முகம் மாற்றுகிறாய் என்னிடம் காட்டிக்கொல்லாமல்...
நீயாகவே வந்து கட்டிக்கொல்கிறாய் யாரும் பார்க்காமல்!
இதழ் எட்ட வந்தால் நாணத்தால் மூடிக்கொல்கிறாய்!
தூரத்தில் இருந்து நான் கேட்டால் கண் மூடித் திறந்து,
அணைத்த வெப்பம் தந்து செல்கிறாய்!
யாரோடும் நான் பேசினால்,
யார் பார்த்தலும் அறியாது என்னைச் சுடுகிறாய் சின்னக் கண்களால்,
நான் உன் கண் பார்த்து என்ன என புருவம் உயர்த்தினால்,
ஏதும் இல்லை என இடவலமாய் அசைகிறாய்!
நீ இல்லாமல் நடக்கையில் தெரிகிறது,
அழகு பெண்கள் எத்தனை நான் கடக்கிறேன் என்று!
எப்பொதும் ஒழித்தே வைகிறாய் உன் கையை என் உள்ளங்கையில்!
வெட்கப்படத் தெரியாது என்றாய்,
என் மூச்சு காற்று உன் முகம் தொட்டதும்,
என் சட்டையை இறுகப் பற்றிக்கொல்கிறாய்!
உன் சுவாசம் என்னைத் தீண்டவில்லை என்றதற்கு,
சாகடிகிறாய், முச்சு முட்டியது என்கிறாய்!
பிறந்தது என்னவோ ஆண் பிள்ளையாக,
நீதானே ஆளாகினாய் ஆம்பிளையாக!
இதற்கேனவோ வந்தாய்...