Sunday, July 29, 2012

வேண்டுகோள்

கோபத்தையும், மகிழ்ச்சியையும் கண்ணாடிபோல் காட்டிய இம்முகம் வெளிறிப்போய்,
ஓடி ஆடிய கால்கள் ஓய்ந்து
எட்டி எட்டி பிடிக்க முயன்ற கைகள் விறைத்து
என் ஆவி பிரிந்து
இவ்வுடல் மட்டும் ஏதேனும் ஒரு தெருவில் –
கேட்பார் அற்று கிடக்குமாயின்,
அதன் அருகில் பதுங்கு குழிகள் இருக்கக் கூடும்
அதில் போட்டு போவோர் ஒவ்வொருவரும் ஒரு கை மண் தெளித்து போங்கள்
அருகில் கடல் இருப்பின் அதில் வீசிவிட்டு போங்கள்
காடெனில் விட்டு விட்டு போங்கள் இரையாகிப்போவேன்.
என்னோடு வந்தவர்களை வெற்றி வேகமாய் அழைத்திருக்கக்கூடும்
இல்லையேல் கொடுங்கைகள் அவர்களை நின்று நிதானிக்க விடாது விரட்டி இருக்கக்கூடும்.
காரணம் எதுவாயினும் இன்னும் முடிந்து விடவில்லை
ஒவ்வொரு விடியலும் புது ஆரம்பமே!
உணவுக்காக வரும் கூட்டம் நீங்கள் எனில்
என்னை உண்டு விடுங்கள்
சீரணம் ஆகும் போது உங்கள் குடல் வழி வண்டல் என வர மாட்டேன்
ரத்த நாளங்களில் புது ரத்தம் என பாய்ந்து வருவேன்
முன்னேரிச்செல்வோம்!



Saturday, July 21, 2012

எதையும் நம்பிடேன்


வனே இல்லை எனில் என் தமிழ் வளர்ந்தது எவ்வண்ணம்
அவனை பரிகாசம் செய்யின்.,
திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும் ஏற்றிய பாடல் கூற்று என்ன?
திருமூலர் சொன்னா திருமந்திரம் பொய்யென கொள்வேனோ?
இவன் பேச்சில் பெரிய புராணம் புதைந்துவிடின் என் தமிழ் என்னவாவது?
இன்னமும் கரம் பிடித்து தடுமாறி நடக்கும் – அறுவியல்
சொல்லும் நாள் வரை அவனை எண்ணாது இருக்குமோ என் மனம்
எல்லாம் அவன் என்றும்
அவன் என்னுள்ளும் என்ற பின்
இன்னும் தெருவில் தேடுவேனோ?
ஆனால் கையில் விதை இருக்க நிழல் கிட்டிடுமோ?
எடுத்து எரிந்து விட்டால் வளர்திடுமோ?
மூலவர் அவர் மந்திரமும்  இதுவன்றோ
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே.
எம் பசுவும் பால் சொரியும்
வெறி ஐந்தும் அடக்கிட முடியும்
என்னை நான் மேய்ப்பேன்!
என்னை என்னுள் கண்ட பிறகு தெரியும் அவன் யார் என்பது
அதுவரை நம்பிடேன் யவர் கூற்றும்!
சொல்லும் சொல் வண்ணமே கேட்கையில் சிலிர்த்திடும் என் மனமே
நம்பிடாதே நம்பி நின்றிடாதே
கேட்கையில் கிட்டிடும் சிலிர்ப்பை காட்டிலும் பெரியது காண்போம்
மெய்யாய் நாம் உணரும் போது!
அதனால் நம்பிடேன் யவர் கூற்றும்!





--சித்ரன்