Saturday, September 29, 2012

நம்மோடு நாம்!

சுவர் இல்லா அறையின் கதவுகளை தாளிட்டு உன்னை
நான் நெருங்கும் போதும்,
கதவை திறப்பது போல் உன் சிறு விழிகள் நம்
இடையேயான இடைவெளியை அளக்கும்!
அருகில் வந்து உன்னை தீண்டும் முன்பே
போக விடு என பொய் சொல்லும் உன் சிவந்த உதடு!
கரம் பற்றியவுடன் மார்பில் சாய்ந்து
தொல்லை செய்யாதே என முத்தம் கேட்க்கும்
என் மேல் நீ கொண்ட நான் காணாத காதல்!
முத்தம் தீர்ந்தவுடன்
எச்சி பன்னிட்டஎன சட்டையோடு என்னை தள்ளிவிட்டு
மார்போடு சாய்ந்துக்கொள்ளும் தருணம் நீ கேட்டுணர்வாய்
உன்னோடு நான் கொண்ட காதல்!




Sunday, September 16, 2012

மீண்டும் கண்டுனர்ந்தேன்!

ந்தி கடந்து வந்த  இருள்
அடிவானத்தில் மின்னல்
காலின் கீழ் கடல் அலை
தலை எல்லாம் மழை தூறல்
அங்கு கனம் கூடாது என
என் காதுமடல் கண் மூக்கு வழி
வழிந்தோடி ஒலியலை செய்யும் கடலோடு கலக்கும் நொடி
ஊரெல்லாம் என் உடன் இருப்பினும்
யாரெல்லாமோ என்னுடன் நடப்பினும்
ஆண் என்ற கர்வம் தலையில் இருப்பினும்
என் கரம் நீ பற்றி நடக்கையில்
என் எல்லா கர்வமும் உருகி
நான் இருந்த உலகம் என் பார்வையில் இருந்து விலகி
உன் விழியில் நம் உலகம் பார்த்த தருணம் மீண்டும் கண்டேன்
இன்னும் மீளவில்லை என்பதனை இன்றும் உணர்ந்தேன்!