Showing posts with label அவள். Show all posts
Showing posts with label அவள். Show all posts

Sunday, January 8, 2017

புத்தரின் மனையாள்

லகில் இனம், மதம் என எல்லாவற்றிக்கும் முன்னரே தீண்டாமையைச் சந்தித்தவள் இவள். மாதவிடாய் காலத்தில் வரும் இரத்தம் தீட்டு என ஒதிக்கி வைக்கப்பட்டாள். அந்த நாட்களில் தொடுவதற்கே ஏற்றவளல்ல என புனித சடங்குகளில் இருந்த ஒதுக்கியே வைக்கப்பட்டிருக்கிறாள்.

தங்கள் பேரரசில் சூரியன் மறைவதே இல்லை என்று பெருமை பட்டுக்கொண்ட, இன்று ஒரு பெண் அரசியை கொண்ட இங்கிலாத்தில் 1918ல் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. முதல் பொதுத் தேர்தல் 1708ல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் கறுப்பின மக்கள் என ஒடுக்கப்படவர்களுக்கு வாக்குரிமை 1870ல் வழங்கப்பட்ட போது கூட பெண்களுக்கு இல்லை, அவள் 1920ல் தான் பெற்றாள்.

இவள் இன்ன உடை தான் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள், இவள் அங்கம் தெரிந்தால் அவன் உணர்சிகள் தூண்டப்படும் என்று ஒரு ஆணின் கண்ணோட்டத்தில் சொல்லப்படுகிறதே தவிற பொது சித்தனை இல்லை. முறுக்கிய மீசை, பரந்த மார்பு என திரியும் ஆணைக்கண்டு அவள் உணர்சிகள் பொங்கக் கூடும் என்று ஆணை போர்த்திக்கொள்ள சொல்லும் மதங்கள் இங்கு இல்லை. உண்மையில் அவள் ஒரு மணி நேரத்தில் பல முறை உச்சம் அடைய முடியும், அப்படி பார்த்தல் அவள் உணர்சிகள் தூண்டப்பட்டால் பல கொலைகள் அன்றாடம் நடக்கும்.

கட்டிய மனைவியை விட்டு நாட்டியக்காரியிடம் சென்றவனை தலைவனாகக் கொண்ட சிலப்பதிகாரத்தை ஏற்றுக்கொள்பவர்கள் கூட மகாபாரதத்தை விமர்சிக்கும் போது திருமணதிற்கு மும்பு பிள்ளை பெற்றவள், ஐவரை திருமணம் செய்யும் பெண் நாயகியாக சொல்லும் கீழ்த்தரமான காவியம் என்று ஒரு பெண்ணின் நெறியை தொட்டே இடித்துரைப்பர்.

Prince Siddhattha & Princess Yasodhara's marriage
இப்படியாக அவள் கட்டுப்பாடுகளுக்குள் தான் இன்றும் தினிக்கப்பட்டிருக்கிறாள். பாற்கடலில் ஆதிசேசன் மேல் விஷ்ணுவின் திருவடிகளை பற்றியவாறு தான் லட்சுமி இருக்கிறாள். இங்கு குழந்தை இடை கூடுதலாக இருந்ததால் உறுப்பை கீறி அவள் பிரசவிக்கிறாள், பின்னர் எட்டு தையல்கள் போடப்பட்டு பிழைத்து வருகிறாள். அதை உணர்ந்த அவள் பெற்றோர் அவளை தாங்குகிறார்கள் அதற்க்கு பேரன் பிறந்ததில் மகிழ்ச்சி இல்லையோ உன்னை மட்டுமே தாங்குகிறார்கள் என்று உரும்பும் கணவர்களோடும் அவள் வாழ்கிறாள்.

நான் பார்த்தவரையில் என் தந்தை எந்த வீட்டு வேலையும் செய்தது இல்லை. என் அன்னை வீடிற்கு எதுவும் சம்பாதித்ததும் இல்லை. இப்போது காதலித்து மணமுடித்த கணவன் தான் சம்பாதிப்பதில் பாதி சம்பாத்தியமே பெற்றாலும் அகம்பாவம் இல்லாது இல்லறம் நடத்துகிறாள். அவள் காலையில் தூங்கும் கணவனுக்கு, அவன் பெற்றோருக்கு, மத்தியம் அவளுக்கும் சமைத்து கட்டி எடுத்துக்கொண்டு இனி ராத்திரி திரும்பி என்ன சமைக்க என்ற சிந்தனையோடே வேலைக்கும் ஓடி ஒரு பதவி உயர்வு பெற்றுவிட்டால் அவள் பல முறை தீக்குளிக்க வேண்டி இருக்கும். அவள் வேலை செய்யும் இடத்தில் அத்துனை ராவணன்கள், துட்சாதனங்கள், துரியோதனன்கள் உண்டு.

வேலைக்கு போகும் அவளை ஏன் வீட்டு வேலை வாங்குகிறீர்கள் என்று கேட்டால் சட்டென பெருமிதமாய் வரும் பதில் ‘என்ன சொன்னாலும் நானே செய்யறேன்றா’. இதையே தன் மகன் சொல்லி சரி என கால் நீட்டி அமர்ந்து கிடக்கும் தாயை நான் கண்டதில்லை. ஆனால் அதே வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருந்தால் அவள் பள்ளிப் பருவம் தொட்டே துவைக்கவில்லை என்றாலும் துணிகளை மடிக்க கற்றுக்கொடுக்கப் பட்டிருப்பாள். சமைக்கவில்லை என்றாலும் பாத்திரம் தேய்க்க கற்றுக்கொடுக்கப் பட்டிருப்பாள். இவன் தான் உண்ட தட்டை கூட கழுவாமல் வளர்க்கப்படிருப்பான்.

இனி அவளுக்கு சமமாக இவன் இருக்க பெற்றோர்கள் இனி இவனுக்கு வீட்டு வேலை செய்ய கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும். அவள் இன்று சம்பாதிக்கவும் செய்கிறாள் இவனுக்கு மேலாகவே.


இப்படி மாற வேண்டியது அவளை சுற்றி இருப்பவர்கள் தான் அன்றி அவளில்லை. அவள் விருப்பம் போல் உடை அணிந்து, விம்பிய நேரத்தில் விரும்பிய இடத்திற்கு செல்ல பாதுகாப்பு இல்லை என்றால் அது அந்த நாட்டிற்க்கு கேவலமே அன்றி அவளின் விருப்பங்களின் பிழை இல்லை. இதை உணராதோர் ஆளும் நாட்டில் பெண்ணியம் ஏட்டுச் சுரைக்காயாக தான் இருக்கும். இவள் தான் பாதிக்கப்பட்டும் குற்றத்திற்கு காரணமாக பழியையும் சுமக்கிறாள். இது கேவலமான நாடு தான்.

Wednesday, February 24, 2016

சின்னஞ்சிறு ரகசியமே!

என் பதியே என்னில் பாதியையா தந்தேன்
என்னோடு நீ கலந்ததில் தானே நானே முழுமையானேன்
உன் பாதை தேடி ஓடிவர - மோதிரம் தந்து
அனுமனை அனுப்பிவைக்க உன்னை தீக்குளிக்க வைக்கும் ராமனல்லவே நான்
பொழுதொன்று போனதும் களையும் ஆசையா கொண்டேன்
யார் விதைத்ததுவோ என்னுள் வளர்ந்தொங்கிய,
ஒவ்வொரு தேவையாய் கொன்ற பின்னும்
மிச்சமாய் நீயே நிற்கிறாய்!


Sunday, April 26, 2015

உன் விருப்பம் போல் ..

னக்காக எதையும் உதறி விட்டு
வந்தவள் அல்லவே நீ..
தான் கொண்ட ஆசைகளை
துடைத்தவளில்லை நீ..
நான் இறுக்கும் போது
வடியும் வியர்வையிலும்
தன் விருப்பும் வெறுப்பும்
அழியாமல் என்னை அனைத்தவள்..
நான் பதித்த எச்சி துடைக்கும் போதும்
உன் வண்ணம் அழியா வண்ணம் துடைத்தவளன்றோ..
பசியில் நான் பற்கள் பதித்த போது
வளர்த்து வைத்திருந்த நகத்தால்
என் புறத்தை கீரியவள்..
நின்னையா தேடினேன்
நீ விரல் கோர்த்த பின்னரே
தேடலின் உன்னதம் உணர்தேன்
உன் மனம் நீ கொண்ட பாதை
என் விரல் விட்டு நடந்தாய்..
சின்னஞ்சிறு ரகியமா நீ
இனி எல்லாமுமாய் – உன்னையும்
செரிக்கும் ஒருத்தி மடிசாய காத்திருக்கிறேன்!

Sunday, March 15, 2015

உம்மூச்சுக் காத்து

வாழ்க்கை தரவனில்ல கடவுள்
வாழ கத்துத்தரவன் தான் கடவுள்
வாழ்க்கை எவனு
ஒரு நிமிச சந்தோசத்துக்கு தந்துட்டு போய்டலா
வெறு இருட்டுல...
எந்த கத்திரிக்காய்க்கோ இல்ல வெறு காமதுக்கோ
வாழ்க்கை தர முடியு..
பொறந்தது பொட்ட புள்ளைனு
பார்க்க வராதவன்
வளர வளர பக்கத்து வீட்டுக்கார.. எதுத்த வீட்டுக்கார
கூடவே வராத சொந்தக்காரனுக்கு பயந்து போய்
அத வழத்து கட்டிக் கொடுக்கும் போது மட்டு கண்ணீர் விடறவன் இல்ல..
வாழ கத்துத் தர உன் கூட விழுந்து
நீ அழும் போது அழுது..
அழ வெச்சவ கழுத்த எப்டி அறுக்கனுன்னு
கூடவே இருந்து கத்து எவன் தரானோ
அவன்தா சாமி
கடவுள்... உம்மூச்சுக் காத்து எல்லா..





Thursday, October 16, 2014

யாதாக்குவாயோ!

த்தனை முறை தான் சிரித்திட முடியும்
கண்ணில் பொங்கிடும் அழுகையை அடக்கி
நீ நான் எனபது எல்லாம் போக நாம் என்று ஆனபின்
மீண்டும் நான் ..
நீ விட்டு போவாயானால்
பத்து தலை இராவணன் என உனை கொண்டுவருவேன்
உன் தேவை எதுவாயினும் அதை நிவர்த்தி செய்திட
பத்து அவதாரமேனும் எடுப்பேன்
என்னில் உறங்கிக்கிடக்கும் தெய்வத்தை தட்டி எழுப்பி
ஊன் கொடுத்து வாழவைப்பதும்
வெளியே தெரியும் மிருகத்தை சீண்டி விட்டு ரசிப்பதும்
உன் இதழ் பேசும் மொழியன்றோ
இன்னும் என்னை யாதாகி ரசிக்கப்போகிறாயோ!

Thursday, September 11, 2014

கோவத்தில் பிரியத்தை தெளிப்பவளே

நீ திட்ட திட்ட திகடுதடி
திட்டித் தீர்த்தப் பின்னு
நாக்கிலே சப்பு கொட்டி கேட்க துடிக்குதடி..
உன் கோவத்தையும்
திருவிழாவா கொண்டாடி ரசிக்கிறனே..
கோவத்தில் நீ விடும் பெருமுச்சிக்குள் வசிக்கிறேனே..
அந்த கருவிழி உருள உருள
ஓடி களச்சு
ஒரு சோம்பு பச்சை தண்ணிகுடிச்சதா அடிவயிறு குளிருதடி..
திட்டி திட்டி எம்மேல உன் உரிமைய காட்டி
என் உயிரயே உலுக்கரியே..
இன்னு என்ன பண்ணி தொலைப்பியோ
நீ சிரிச்சு என் நெஞ்சோட சாஞ்சா
நா எப்படி சாவேனோ!

Wednesday, August 20, 2014

மௌனம் களையவிடு

ல்லா உறவுக்கும் பெயர் யார் சொல்ல
என் சிந்தை திருடும் உறவு இது
நான் எப்போது உன்னிடம் சொல்ல
கல்லுக்கடியில் காயாத ஈரத்தில்
துயிலும் சிறு வண்டு போல
உன்னோடு பேசிய
மங்காத நினைவுகளோடு பேசி பேசி
தினம் தினம் நான்
நீ இல்லாத நொடிகளை கொல்கிறேன்
நித்தம் யாவருடனும்
நான் பேசுவதே
உன்னை பற்றி என் சித்தம் குளிர
ஏதும் சொல்வார் என்றே
மறுமுறை பார்கையில்
உதட்டை சுளிக்காதே
காதோரம் சுருண்ட முடியை ஒதுக்காதே
நான் சொல்ல வந்ததை சொல்ல விடு!

Sunday, April 27, 2014

இல்லாமல் இருந்திருந்தால்

ருத்தியாக தானே வந்து நின்றாய்
ஏன் எனக்கு நவராத்திரி நாயகியாக தெரிந்தாய்
என்னோடு தோள் உரச நடந்து தோழனானாய்
தலையில் தட்டி தவறுகள் திருத்தினாய்
எனை சேயாக்கி தாயாகி
ஏனோ என்கையில் நீயே சேயானாய்
இன்னும் என்னென்னவாகி எனை என்னவாக்கா போகிறாய்?
எங்கோ கிடந்தது பார்த்திடும் மேகமா தாகம் தீர்க்கும்
நீ சீவி முடித்து வரும் கேசம் தீண்டினால் தீராதா?
பார்வை இருப்பதால் தானே
பார்த்துமட்டுமே தாகம் எடுக்க எட்டி நிற்கிறேன்
இல்லாமல் இருந்திருந்தால்
உனை தொட்டு பார்த்திருப்பேன்!
தினமும் உன்னால் அழகாக தெரியும் ஆகாயத்தையும் பூலோகத்தையும்
உன் பார்வையால் இன்னும் அழகாக கண்டிருப்பேன்!

Sunday, March 30, 2014

கோர்க்க நீயா வா!

ரையிர பேய் கூட
ஒத்த மரத்துல தூங்க போயாச்சு
ராத்திரி பொழுதெல்லா
தொலைச்ச தூக்கத்த தேடியே காணாம போகுது
என்னத்த தேடனு எத தொலச்சேனு
தேடும் போதே மறந்து போகுது
தூக்கம் கலஞ்சு கண்ணு தெறக்கும் போது தெரியுது
அதுவர நீ என் கூட பேசினத நினச்சுதா நேரம் போனது
பொண்ணுக்கு காதல் வந்தா
யாருக்கு தெரியாது
செரிக்காத சோரா
அவ நெஞ்சு கூட்டில கிடந்தது வாட்டி எடுக்கு
என் பொழப்பு இங்க வேற
காதல் வந்து வாட்றது எனக்கே தெரியாது
என்னைய வாட்றது அதுனே தெரியாம
என் மலே நானே வெறுப்பாகி கிடந்தே
எவனையும் கூட்டுல சேக்காம தனியாவே திரிஞ்சே
எல்லா புரிஞ்சு சொல்ல வரதுக்குள்ள
நீ போய்டே
நீ போ இப்போ நீயாவே
நா தொலச்சத தேடயில கிடச்சுது ஒ தூக்கோ
நீயாவே தேடிட்டு வா
நீ நானுங்கரத கொர்த்து நாமுனு ஆக்க
ஆயுசு இன்னு இருக்கு காத்துகிடக்க
நா கிடக்கே உனக்காக!

Monday, March 24, 2014

முதல் துளி நீ எனக்கு!

மொட்டை மாடி தூக்கத்தை கலைக்கும் சிறு தூறல் போல
உன் துப்பட்டா தீண்டும் போது
விழித்திருந்தும் மீண்டும் விழிக்கிறேன்..
பேசி முடித்து நீ போகும் போது
அடைமழையில் ஆடி தலை துவட்டி
சிறு தூறல் தேடி கை நினைக்க துடிக்கும் மனமாய்
வேறு என்ன பேச என்று தேடித்துடிக்கிறது..
நீ நில்லாமல் ஏதும் சொல்லாமல்
சிறு பார்வை வீசி குட்டி சிரிப்பை எறிகையில்
மழை தூறல் தாங்கிய இல்லைகள்
என் முகத்தில் சாரல் தெறிக்கிறது..
உன்னோடு நடக்கையில்
அந்த வானம் வெளிக்கிறது
இருந்தும் உன் சிரிப்பில் மின்னல் வெட்டி
அடைமழையே பொழிகிறது..
உனை காணாத போதும்
சிலந்தி வலையில் சிக்கிய துளியாய்
மின்னும் உன்னோடு இருந்த ஞாபகங்கள்..
எங்கிருந்தோ ஆரம்பித்து
ஆயிரம் மையில் கடந்து
எங்கு எதை தொட்டு வந்தபோதும்
என் நெற்றி மத்தியில் வந்து சேரும்
என்னை தொடும்
முதல் துளி நீ எனக்கு!

Thursday, February 13, 2014

பொழிந்திட வா!

வெளுத்திருந்த வானம் எங்கும் முகில் வந்தது
சேர்த்த முகில் அனைத்தும் உடைந்தது
உடைந்த முகில் நீராய் பொழிந்தது
பொழியும் நீராய் நீயே வந்தாய் என்றே ஓடினேன்
நான் வேகம் கூட்டுவதற்குள் ஏன் நின்றாய்??
ஒரு துளியும் நினையாமல்
உன் நினைவில் நான் நின்றேன் மீண்டும் வெளுத்த வானடியில்
மீண்டும் வருவாய் என்று இன்னும் நிற்கிறேன்
நீ பொழிந்தால் போகும் என் மீது நான் பூசிய கரையாவும்
போகும் போனது போனபின்னர் நான் மீண்டும் பிறப்பேன்
பிறந்த என்னை கையில் ஏந்த நீயே வா
நீ வருவாய் என்றே சிரித்துகொண்டு நானும் பிறப்பேன்!
உன் கரத்தில் நான் விளையாடிட
என் கண்ணின் விழியில் நீ உன்னை தேடிட
உன்னை கிள்ளி
உன் கரத்தில் இருந்து நான் கிளம்பிட
நீ துரத்தி வா என்னை
இந்த விளையாட்டு விளையாடிட
என்னை நினைக்க வா
இன்னும் நிற்கிறேன் வா அடியே
என்னை கலைத்து விட்டு போன நீயே – வா
என் மீது பொழிந்திட!





Thursday, January 2, 2014

மார்கழித் திங்கள்

ன் பேர் எழுதின அரிசி விளையும் நிலம்
நீ வகுடு எடுத்து வாரும் உன் தலை  நேரடி
உன் உச்சந்தலை தாண்டி
அந்த வகுடு வழி வலிஞ்சு
உன் கூர் மூக்கின் நுனியில்
தாண்டவம் ஆடும் ஒரு பொட்டுத் துளி
அந்த துளி போதும் என் ஜென்மத்தின் தாகம் தனிக்க
அதுவும் தர மறுத்து சினுங்கி
உயிர் இருக்கும் நாள் வரை
நான் கிடந்தது உறங்கிட ஏங்கும் உன் இதழ் தொடுமாயின்
அந்த துளியாய் நான் மாற மாறும் என் தாகம்
காற்று வந்ததால் கொடி அசையுதோ
இல்ல கொடி அசைவதால் காற்று வந்ததான்னு
குழம்பி கிடக்கும் யாருக்கும்
உன் மூச்சு காத்தில் என் ஜீவன் வாழ்வது தெரிந்தால் என்னவாகுமோ?
கள்ளி நீ நீயா வந்து சிரிச்சாலு
பேயா மாறி வந்து பகை சொன்னாலு என் கண்ணுல காதல் குறையாது
இந்த சப்பாத்தி கள்ளி வாழ மும்மாரி கேட்காது
இந்த மார்கழி பனிகூட தந்ததில்லை
என் மார்பின் ஓரம் நீ சாய்ந்து படுத்து
உன் இதழின் ஈரம் படுகையில் என் உடலில் பரவும் சிலிர்ப்பை
இம்மாதம் வரும் நல்ல நாளும் கெட்ட நாளும்
எல்லா நாட்களும் பரமனவனுக்கே என்று
ஏது காரியமும் தைக்கு ஒத்தி போடுவர்
நீ அங்கு உறங்கிக் கிடக்கையில்
என் இமையா ஓய்ந்திடும்
இந்த உறக்கத்தை நானும் ஒத்திவைப்பேன்
நானும் எதையும் மறந்து ஆந்தை என விழித்திருந்து
உன் உறக்கத்தை ரசிப்பேன்
பாதியில் நீ சிறு பார்வை திறந்து
என்னவென்று கேட்டு என்னை உறங்கிட சொல்வாய் பாதி கண்ணால்...
என் கரம் பரவி கிடக்கும் உன் கேசம்
என் இரவென நானும்
என் கனவே என் மார்பில் கிடந்திட
இனி என் தூக்கத்தில் என்ன வருமோ என கண் அசர்வேன்
நானும் அரசனாவேன் என் அரசியென உன்னை பார்ப்பதால்!


Wednesday, October 16, 2013

நிலாவொளி நிழல்

நிலாவொளி நிழலோடு நான் நடக்கையில்
உன்னோடு நடந்த அந்த ஞாபகம் எல்லா தெறிக்க
எட்டாத அன்னிலவில் உன் முகம் கண்டு என் பாதை நான் மறக்க
நீ இப்போ என்னோடு இல்லையே என்ற எண்ணம் நான் மறக்கவோ
பிறை என்றாலும் உன் சிரிப்பை காணமல் போவேனோ...
கருசக்காட்டு பக்கம் வானத்தில் மேகம் ஏதும் கூடாம
மண்ணெல்லாம் ஈரம் காஞ்சு கிடப்பது போல
இனி விழ துளி இல்லைனு கண் காஞ்சு நிக்க
உன் பேர் கேட்கும் போது எல்லா அடி வயித்தில் புளி கரைக்க
ஏமாற போறேன்னு தெருஞ்சே
உதிர்ந்த பட்டாம்பபூச்சி இறகா ஓசை வந்த திசை திரும்பி
சீனி தின்ன வந்து, ஊதின காற்றில் பறந்து விழும் எறும்பா ஏமாந்து நிப்பேன்
ஊரெல்லாம் அடங்கி ஏத்தின விளக்கு திரி கருகி போக
இன்னும் என் மனசுல நடக்கும் போர் முடியல
முடுச்சு வெக்க நீ இல்ல
முடுச்சு போட உன் கழுத்தும் இல்ல
கண்ணு தூங்க போனாலு கொடுக்கர தெய்வம் தான் கூரை பிரிக்கறதா
வீட்டு கூரையையே கொட்ட கொட்ட பார்த்து போகுது இந்த ரா பொழுது
எங்கே கிடந்தாலு நீ வந்து மிதிக்கவே விட்டம் பார்த்து கிடக்கும் நெஞ்சு
நஞ்சு எடுத்து குடுச்சாலு கண்ணுறக்கம் வரதில்லையே
நீ வந்து முடி கோதி உன் மடி கொடுத்து செத்து போனு சொல்லு
ஏதும் சொல்லாம போகும் இந்த உசுரு...




Sunday, August 25, 2013

ஒரு பெண்ணாக

நான் மறந்துவிட்டேன்
உன் கரத்தில் புதைந்த என் கரத்தை
சாலை ஓரம் நடக்கையில்
யாரும் இல்லா இடம் வரும் போது
உன் கரம் தேடி பிடித்த என் சந்தோசம்
நான் மறந்துவிட்டேன்
யாரோடு நீ பேசினாலும்
யாது வேலை எனக்கு இருந்த போதும்
கண்கொட்டாமல் உன்னை பார்த்த நொடிகள்
நான் மறந்துவிட்டேன்
ஊரே கேட்க
உன்னை நான் கேலி செய்து சிரித்த சிரிப்புகள்
நான் மறந்துவிட்டேன்
உன் குறுஞ்செய்தியின் வருகைக்கு காத்திருந்து
கடந்து போன நொடிகளை ஏமாற்றி மீண்டும்
காத்துக்கிடந்த காலங்கள் யாவையும்
நான் மறந்துவிட்டேன்
எனக்காக நீ அழுத அழகை யாவையும்
உன் அழகான பொய்கள் கேட்க நான் பூண்ட பொய் கோபம் யாவையும்
என் சோகம் தீர்க்க நீ சொன்னா வார்த்தைகள் யாவையும்
உன் கண்ணில் என்னை நான் கண்டு வெட்கப்பட்ட நேரம் யாவையும்
என் முகம் எங்கும் பரவிய உன் மூச்சு காற்றையும்
நான் மறந்துவிட்டேன்
என் தந்தைக்கு மகளாய்!
என்றைக்கும் சுமையென சுகமான உன் நினைவுகள்
கண்ணீரால் சூடாக்கும் என் தலையனையை...
ஒரு பெண்ணாக அது வழிந்திட வழி கொடுப்பேன்!







Tuesday, May 21, 2013

எப்போ வர போரே!

ப்போ வர போரே
வாங்கி வெச்ச தேனீர் ஆறி திரிஞ்சு போச்சு
காத்து காத்து நின்னு
காலில் எறும்பு ஊறி தடம் பதிஞ்சு போச்சு
வானம் பாத்து பாத்து பெருமூச்சு விட்டு மேகம் எல்லா
கலஞ்சு போச்சு
நீ வரு வழி பார்த்து பார்த்து
விளக்கு எறுஞ்சு அனஞ்சு பார்வ எடுக்க மறந்து
தூக்கம் தொலஞ்சு போச்சு
நேத்தி நினப்பில இன்னிக்கு காலம் போகுது
இன்னு எத்தன நாள் நானு கடக்க
எப்போ வர போரே
நினைக்க நினைக்க நாளு கடக்குது
கண்ணுல நீர் கண்ணம் வழி வழியுது
நீர் காஞ்சும் வழுஞ்ச தடம் கூட துடைக்க மறந்து அடுத்த
நினப்புக்கு போறேன் தினம் தினம்..
பழைய தடம் தேடி இப்போ புது நீர் வழிஞ்சு
கழுத்து காது மடல் எல்லா நினஞ்சு போச்சு
உன் நினைப்புல கண்ணு வழி வரு நீருல நானு வளருரே
எப்போ வர போரே
என்ன சிருச்சு வளரவைக்க
எப்போ வர போரே!






Thursday, December 20, 2012

நோக்கெதிர் நோக்குதல்

ரு மாதம் முன்னர், ஒரு வாரக்கடைசியில் நானும் என் நண்பனும்  தி-நகர் சென்று கொண்டிருந்தோம், வழக்கம் போல தலை கவசம் இல்லை. ஒரு காவல் அதிகாரி வண்டியை  நிறுத்தி அவர்கள் வழக்கத்தை  கேட்டார்,

“வா வா இப்டி ஓரமா போடு வா... ஹெல்மெட் இல்ல.. வண்டி நம்பர் ப்ளேட் வேற உங்க இஷ்டத்துக்கு இருக்கு. ஹ்ம்ம்”

friend ஓட வண்டி சார்”

“ஆனா நீ தானே ஒட்டு வந்தே... ஹெல்மெட்க்கு இருநூறு, நம்பர் ப்ளேட்கு நூறு.. சரி தானே”

“சார் எல்லாத்தையும் பார்த்தா எப்டி.. கொஞ்சோ பாத்து சொல்லுங்க”

“சனிக்கிழம நீங்க சரக்கு அடிக்க போவீங்க நாங்க என்ன செய்யறது?” னு ஒரு கேள்வி கேட்டுட்டு கலகலனு ஒரு சிரிப்பு வேற

“இல்ல சார்.. சரகெள்ளா அடிக்கரதில்ல”

“அஹ! சரக்கு இல்லையா..?” என ஆச்சர்ய பட்டவர் வேற ஒரு நல்ல கொக்கி போட்டாரு..

“உங்கள மாறி கொஞ்சோ கலர இருந்தா பரவால.. எதாவது மடியும்.. என்ன பாரு.. எதாவது வாங்கி பூசனும்ல அப்போ தான் உங்க அளவு இல்லைனாலும் எனக்கும் எதாவது மடங்கும்”

“நீங்க வேற.. அதுவே பெரும் குழப்பத்துல இருக்கு” என சொல்லி ஒரு நூறு ரூபாயை கட்டி விட்டு நகர்தோம்.

சரி... அவர் சொன்னது பற்றிய யோசனை தொடங்கியது போய் வரும் வழி நெடுகிலும்,

ஒரு ஆணுக்கு ஒரு விஷயம் இருந்தால் அவன் தன் வாழ்கையின் அடுத்த தேவைகளை நோக்கி வேகமாய் ஓடாத் துவங்குவான். அந்த விஷயம் தான் பெண். தன்னை பற்றி தன்னை காட்டிலும் அதிகம் சிந்திக்கும் ஒருத்தி. சதா தன்னை சுற்றியே வரும் ஒருத்தி. எங்கே யாரிடம் நின்று பேசினாலும் ஒரு பார்வையில் தன் அருகே இழுக்கும் ஒருத்தி. அவள் ஒருத்தி தான் வேண்டும்.

இவனுக்கு காதல் எப்படி வரும் எனில்,

காணும் பெண் இடத்திலெல்லாம் வந்திடாது காதல்.
யவர் கண் நோக்கும் கால் - தன் கண்
விழித்திருப்பது மறந்து - அவள் விழி
இவன் வயிறு வரை பாய்கிறதோ – அதுவே
காதல் என கொள்வான் அவன்!

அந்த ஒருத்திக்கு என்ன வேண்டும். அவள் தன்னை நோக்க இவன் என்ன செய்ய வேண்டும்? மிருக இனத்தை பொறுத்தமட்டில் தன் ஆண்மை பலம் நிரூபித்தால் போதும். ஆதியில் மனிதனும் அப்படி ஆரம்பித்தது தான். பலம் பொருந்தியவன் தான் காட்டில் பிற மிருகங்களிடமிருந்து தன்னை காத்து, வேட்டையாடி தனக்கும் தன் சந்திதியினருக்கும் உணவளிக்க முடியும் என நம்பினாள் அவள்.

அனால் இன்று கதை வேறு... நிறம் முக்கியமா? அவள் நிறம் பார்த்தா  காதல் வயப்படுகிறாள்?

முத்தம் தரும்பொழுதிலே ஆண் அவள் கண்கள் நோக்கி அவளை நோக்கி இருப்பான், அவளோ அதை கண்கள் முடியே உணர்வாள். அவள் உணர்வுகளால் ரசிக்கத் தெரிந்தவள். நிறம் கண்டு போபவள் அல்ல.

அவள் கனவுகளை மதிக்க வேண்டும் அதன் பின்னரே அவள் அவனின் சொற்களுக்கு செவி சாய்ப்பால். அதே கனவிற்கு சரியாக வண்ணமிட்டு அழகு படுத்தி அவள் முன் நிறுத்தினால் போதும் அவள் அவனை நம்பி வந்து அவன் மார்போடு தலை சாய்ப்பால்.
எந்த ஒரு தருணத்திலும் ஏது ஒரு செய்கையும் அவள் அல்லாது ஒரு உலகம் தன்னை மகிழ்விக்கும் என ஆண் இருந்தால் பின் அவளோடு கொண்ட பந்தம் விட்டுப்போக அவளே வழி செய்வாள். காரணம் அவளுக்கு அவன் மட்டுமே உலகம் என்று ஆகி இருக்கும். இருவர் வாழ அவள் ஓர் உலகம் செய்வாள், அவளை மதித்தால் போதும், அவள் சொல்லுக்கு மதிப்பளிதால் போதும்.

வள்ளுவர் சொல்வது இதனை விட பெரியது,

பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு1311

பெண்ணாக பிறந்த எல்லோரையும் பொதுவாக எண்ணி கண்களால் உண்பதால் கற்ப்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பை பாவை நான் தழுவ மாட்டேன் என கொபம்கொல்லுவாள். பார்தவே இப்படி ஆகும் என்கிறார் வள்ளுவர்.