Sunday, May 22, 2016

எதிநியன் சனநாயகம்

மூன்று பக்கமும் நீர் சூழ்ந்த ஒரு சிறு நகரம் அதில் அடிக்கடி களவு நடக்க இதற்கென்று ஒரு காவல் ஆள் நியமிக்க முடிவு செய்யப்படுகிறது. அவருக்கு சாப்பாடு தங்கும் இடம் என எல்லா சௌகரியங்களும் செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்படியான வசதிகள் செய்ய அந்நகர மக்களிடம் மாதம் இன்ன தொகை வசூலிக்கவும் முடிவு எடுத்தனர்.

இப்படி அந்நகர மக்களின் பணம் கொண்டு செய்யப்படுவதால் இந்த வேலைக்கு பலர் முன்வந்தால் அதில் ஒருவரை தேர்ந்தெடுப்பதில் மக்களின் பங்கும் அவசியம் என கருதி வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்தனர்.

எண்ணியது போலவே போட்டியிட பலர் முன் வந்தனர். இறுதியில் மூன்று பேர் மட்டுமே அதிக வாக்குகள் பெற்றனர். முதலில் அந்நகரில் கூத்தாடுபவன் அடுத்து அதில் அந்த நகரத்தில் இருக்கும் பெரும்பான்மையான சமூகத்தை சேர்த்தவன், மூன்றாவதாக மிக யோகியன் என்று பெயரெடுத்தவன். கூத்துக்காரன் பதவி ஏற்ற நாளில் இருந்து களவு குறையத்துவங்கியது. பாராட்டுக்கள் குவிந்தன.

தடீரென யோகியன் ஊர் கூட்டத்தை கூட்டினான். கூத்துக்காரன் பதவி ஏற்ற நாளில் இருந்து களவு என்னவோ குறைந்து தான் இருக்கிறது ஆனால் களவு போன பொருட்களின் மதிப்பு என்னவோ கூடி இருக்கிறதே என்று குற்றம் சாட்டினான். அந்நகரத்தின் ஒரு பிரிவினர் இவன் பொறாமையால் பேசுகிறான் என்றனர். மற்றவர் களவு போன கணக்கு சொல்வது போல் அதிகமாகவே இருக்கிறதே என்றனர். கூதுக்கரனால் சரி வர காரணம் ஏதும் சொல்ல முடியவில்லை. புதியதாய் ஒருவரை தேர்ந்தெடுக்க மீண்டும் வாக்கெடுப்பு நடந்தது.

அதில் திரும்பவும் கூத்துக்காரனும் நின்றான். இம்முறை பெரும்பான்மையான  சமூகத்தை சேர்த்த சாதியக்காரன் வென்றான் பதவியேற்றான். நாட்கள் கடந்தது களவும் குறைவாக தொடர்ந்தது. காவல் ஆளுக்காக வசூலிக்கப்படும் தொகையும் கூடிகொண்டே போனது. மக்கள் கேள்வி எழுப்பத் துவங்கினர் களவு ஏன் இன்னும் தொடர்கிறது என்று. இந்த கேள்விகள் தொகை கூடியதால் வந்தது என கருதினர் இருப்பினும் கேள்வி சரியே என்பதால் இது குற்றச்சாட்டாக கருதி பதிலளிக்க சாதியக்காரனை அழைத்தனர்.

கூட்டத்தில் பெரும் வாக்கு வாதம் நடந்தது அவன் சாதிக்காரர்கள் அவனுக்கு இணக்கமாக பேச மற்றவர்கள் எதிர்க்கவும் வாக்கு வாதம் சூடேறியது. இப்படி குற்றம் சாட்டுபவர்களே ஏன் வந்து இரவு எல்லாம் கண் விழித்து காவல் காக்கக் கூடாது என்றான் சாதியக்காரன். சலசலப்பு ஓய்ந்தது சத்தமே வரவில்லை.

“அந்த வக்கு எங்களுக்கு இல்லாததை உணர்ந்ததால் தான் நாங்கள் வாக்கு மட்டும் செலுத்துகிறோம். அது இருக்கு என்று முன் வந்து எங்கள் பணத்தில் நீ உண்பதால் தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம்” என்றான் ஒருவன். இம்முறை சாதியக்காரனிடம் பதில் இல்லை.

கூட்டம் இந்த தனி ஒருவன் சொல்வது சரி என இவன் பக்கம் சாயத்துவங்கினர். அந்த ஒருவன் தொடர்ந்தான், “நாம் எப்படி வாக்களித்தோம்? இந்த வேலைக்கு தகுதியானவன் ஒரு வலியவன். அப்படி ஒருவனை அடையலாம் கண்டா வாக்களித்தோம். கூத்துக்கரனை நகரம் முழுவதும் தெரியும் அதனால் அவன் முதல் முறை அதிக வாக்குகள் பெற்று வென்றான். அடுத்து வென்றவனின் சமூகம் இங்கு அதிகம் போக கூதுக்காரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சடால் கூடுதல் வாக்குகள் பெற்றான். யார் சரியானவன் என்பதை விடுத்து யார் தெரிந்தவன் என்பதை கருத்தில் கொண்டு தானே வாக்களித்தோம்.”

மூன்று பக்கமும் கடல் சூழ்த்த நாடு இந்தியா, 1948ல் நெறிமுறைகளை மீறி செயல் பட்ட வி.கே. கிருஷ்ணா மேனன் நேருவின் மந்திரி சபையில் பாதுகாப்புத் துறை மந்திரியானார். இன்று வரை குற்றப் பின்னணி உள்ளவர்கள் நாட்டை ஆளும் அவலம் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

காரணம் இங்கு இருக்கும் பழம்பெரும் கட்சிகளுக்கு பிரதானா வாக்காளர்கள் இருக்கிறார்கள் நல்லதோ கேட்டதோ அவர்கள் அதே கட்சிகளுக்கு தான் வாக்களிப்பார்கள் சராசரியாக நாற்பது சதவீதம். இது போக கட்சிசாரா மக்களின் முடிவே தலைவர் யார் என்பதை நிர்னைக்கும், அது மீதம் உள்ள அறுவது சதவீதம் அதில் இருப்பவர்களில் அதீதமானவர்கள் இன்று நான் வாக்களித்தால் நாளை எனக்கு என்ன கிடைக்கும் என்ற குறுகிய எண்ணத்தோடு  வாக்களிப்பதால் மாற்றம் வர வாய்பில்லை.

Source: https://data.gov.in/catalog/number-students 
2014 தேர்தல் கணக்கின் படி மொத்தம் 81.14 கோடி வாக்களர்கள். இதில் அறுவது சதவீதம் என்பது 48.8 கோடி. அத்தனை போரையும் மெருகேற்றி யோசிக்க செய்ய அடிப்படை கல்வியில் அரசியலை கொண்டு சேர்திருக்க வேண்டும். அரசியலின் முக்கியத்துவம், வாக்களிக்கும்போது கணக்கில் கொள்ள வேண்டிய பிரதான உண்மைகள், நாட்டின் வளர்ச்சி விகிதத்தில் தேர்தல் நேர வாக்குறுதிகள் என்ன பங்கு ஆற்றும் என்பதை கணக்கிடும் பக்குவம் என எல்லாமும் இருக்கும்படியான ஒரு கல்வி முறை இன்று வந்தால் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளில் மாற்றம் வரலாம். நாற்பது ஆண்டுகள் என்பதும் படித்து முடித்து வரும் இளைய சமுதாயத்தை கருத்தில் கொண்டு சொல்லப்படும் கணக்கே.

இத்தகைய குறுகிய என்னமுடையவர்களை கருத்தில் கொண்டே கிரேக்கத்தில் எதிநியன் சனநாயகம் உருவாக்கப்பட்டபோது பிளாடோ எதிர்த்தார். இன்றும் கட்சிசாரா வாக்காளர்கள் தெரிந்த சின்னத்தில் தான் வாக்களிக்கின்றனர் வேறு எந்த ஒரு எண்ணம் கொண்டும் இல்லை. இதற்க்கு சரியான உதாரணம் இன்று காணும் விளம்பரங்கள், சச்சினுக்கும் எழுதுகோலுக்கும், காற்றடிக்கும் என்ன சம்மந்தம் ஆனால் அவர் அந்த விளம்பரத்தில் வருகிறார். தெரிந்த முகம் ஒன்று தேவைப்படுகிறது கவனம் ஈர்க்க. இதை தான் அரசியல் கட்சிகளும் கையாளுகின்றன.

கல்வியில் மட்டும் இல்லாமல் மாற்றம் சநனாயக கூற்றிலும் தேவை. இன்று ஆட்சி செய்பவர்கள் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை கொண்டு அவர்களின் செயல் பாடுகள் அளவிட்டு அடுத்த தேர்தலை சந்திக்க அனுமதி அளிக்கவேண்டும். தேர்தல் அறிக்கைகளும் சரி பார்த்து அதனின் சாத்தியங்கள் கணக்கிட்டே வெளியிட வேண்டும் இவைகளை கையாள தேர்தல் ஆணையம் போல் அரசு சாரா துறை ஒன்று கொண்டுவரப்பட வேண்டும். இத்துறையில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் அறிவு சார்தவர்களே இருத்தல் வேண்டும். இதனால் வெறும் வாக்குறுதிகள் மட்டும் தந்து செயல் பாடாதவர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருக்காது. ஏமாற்று வாக்குறுதிகள் தவிர்க்கப்படும்.

இவ்வாறு செய்யப்படின் ஆளுமை உள்ளவர்களில் மக்கள் செல்வாக்கு மிக்கவர் ஆட்சி அமைக்க முடியும். இப்போது உள்ள கூற்றின் படி செல்வாக்கு மிக்கவரும் வாக்குறுதிகள் அளிப்பவருமே மீண்டும் மீண்டும் ஆட்சி அமைப்பர். ஆனால் இதை ஒரு பொருட்டாக விவாதத்திற்காக கூட எந்த ஒரு கட்சியும் எடுக்காது என்பது நிதர்சனம். அளவீடு இல்லாது இருப்பதே இன்று நாம் இந்த நிலையிலேயே இருக்கக் காரணம்.


Monday, May 9, 2016

Enough Is Enough

Everyone needs money n would have seen Italian Job, Ocean 11, 12 & 13 but no one dare to attempt because we are all in fear of getting caught and most with a thought of running rest of our lives with that shame. Then with what trend a girl is being sexually abused by her own relations and strangers. In other way accused can be categorised as known person, VIP and strangers. Way to get rid of a crime is to understand why it is happening because some crime cannot be stopped by punishment alone.

If accused is known person (like her own relatives or school teacher or own cab driver or neighbour) they would’ve done this with a thought like a girl will not shout about this in the name of culture because they know her family and they can threaten the victim. As most of such cases victims are minor. They may not even know the difference between the fields called sex in application and sexual intercourse. So they use their ignorance or fear on society for their pleasure.

In case of VIPs (like politicians or millionaires or big shot’s heirs) they have good value to do that as they have power and money to cover it up so they may not think about any consequences.

If we take 2012 Delhi rape case (as we all heard often without any option) all the accused were strangers and more particularly she died only after 13 days so which means she was alive at the time they threw her out of bus they didn’t try to kill her and cause of death is brutality. Then importantly they didn’t even bother about a boy who came along with her. So in which means they didn’t even think they can get caught as they don’t even have any strong background. This raises too many questions on many cases.

National Crime Records Bureau data (as at 2015) show out of 100 registered cases in India the accused is known to the victim 86 times. So if we teach our princess about difference between good touch and bad touch we can more or less avoid 86% but not that easy as I say. In other way 86% criminals are very well known faces and not anonymous. Notable point is as at 2013 it is 98%

Not able to get the split for remaining 14%, where it’d be better if they maintain as VIP and stranger.

As mentioned earlier if accused is VIP like politician or millionaire’s heir they must be punished without any mercy as they do it because of the power they have and money they own. When it comes to strangers it should be properly investigated as even there are chances of VIPs get involved in such crime, intention of the investigation should be in finding the hidden faces and not letting the accused free.

But amendment made after 2012 Delhi Rape case mostly about the act of penetration of
penis and the word rape has been changed to sexual assault. In case of punishment it still says not less than 20 years but which may extend to imprisonment for life, which means life imprisonment is the last option and no word for capital punishment. Verma committee’s recommendation was not completely taken into consideration but Government stand is like suggestions were not rejected but changes can be made after proper discussion. So until the discussion gets over please be prepared and not sure whether it has been started.

In other hand media took some cases especially brutal one for their TRP and creates a wrong perspective as India is no safe for women. NCRB reports actual rate is 2 per 100,000 people tracked by United Nations and main intention to say this is such a fear should not kill her freedom.


Friday, May 6, 2016

ஓட்டு சரியா தவறா


ஓட்டு என்பது தமிழா? இதற்கு ஆம் என்ற தவறான பதிலோ இல்லை என்ற சரியான பதிலோ யோசிக்கும் நேரம் பசியோடு யாரேனும் ஒருவர் ஒரு வாய் உணவுக்காக காத்திருக்கலாம். ஏதோ ஒரு கிரகம் மாறுவதால் யாரோ ஒருவர் உங்களை ஒரு ஏழைக்கு ஒரு வேளை உணவு தானம் செய்ய சொல்லி அது முடியாமல் போகுமேயானால் அன்று உண்மையான மக்கள் ஆட்சி நடைபெற்றதற்கான சான்றாக இருக்கும்.

வாக்குப் பதிவு செய்தல் நம் உரிமை என்றும் நூறு சதவீத  வாக்கு பதிவிற்கு கமல், சூர்யா என நடிகர்கள் கதறுவதையும் கேட்க்கும் போது எங்கள் உரிமைகளை நினைவூட்டுவதை விட்டுவிட்டு நடிப்பதை மாட்டும் பாருங்கள் என சொல்லத் தோன்றுகிறது.
இந்த நினைவூடலில் மக்களாட்சி என்பது என்ன என நினைவுக்கு வந்தது. மக்களால் மக்களுக்காக மக்களிலில் இருந்து என இருக்க வேண்டும்.

மக்களில் இருந்து

இது என்றோ வழக்கொழிந்து போய் விட்டது. ஒருமுறை ஒருவர் தலைவரானால் அவர் பிள்ளை, மருமகன், மாமன், மச்சான், இவர் ஏதேனும் புகரில் சிறை சென்றால் அவர் துணைவியார் என யார் யாரோ பதவிவகிக்கலாம் ஆனால் அவர் பரம்பரையாக இருக்க வேண்டும்.

மக்களுக்காக...

அப்படி ஒரு ஆட்சி சுதந்திரம் அடைந்ததில் இருந்து... இல்லை இந்தியா என்ற ஒரு தேசம் ஒருங்கிணைக்கப்பட்டதிலிருந்து நடந்திருந்தால் நேதாஜி அவர்கள் இந்திய தேசிய ராணுவதிற்காக சேர்த்த நூறு பலுக்கல் (KG) தங்கத்தில் வெறும் பதினோரு மட்டும் டெல்லி தேசிய அருங்காட்சியகதில் இருக்காது மற்றும் அது சம்மந்தமான ஆவணங்கள் வெளியிடக்கூடாது என்ற குறிப்போடு பிரதமர் அலுவலகத்தில் பத்திரப்படுத்தி இன்றுவரை உறங்கிக்கொண்டே இருக்காது. அந்த தங்கங்களை எடுத்தவர்கலாவது யார் என்று எ.கே.டார் (A.K.Dar) டோக்யோ தூதர் 1956ல் எழுதிய கடிதத்துக்கும் பதில் போகாமல் இருந்திருக்காது.

நேதாஜியின் தனிப்பட்ட சொத்து அல்ல அது இந்திய தேசிய ராணுவம் அமைய இந்தியாவில் வாழ்வோர் மட்டுமல்லாது மலேசிய, பர்மா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் இந்திய விடுதலைக்காக கொடுத்தது.

ஆக இன்று நாம் காடும் வரி பணம் மட்டும் அல்ல அன்று விடுதலைக்கு கொடுத்த பணத்திற்கும் கணக்கு காட்டவில்லை எனபது நிதர்சனம்.

மக்களுக்காக நடக்கும் ஆட்சி எனில் 1948ல் ராணுவதிற்க்காக சீப் (Jeep) வாங்கியதில் நெறிமுறைகளை மீறி செயல் பட்ட வி.கே. கிருஷ்ணா மேனன் (இந்தியன் பிரிடன் உயர் ஆணையாளர்) மீதான விசாரணையை, ‘இந்திய அரசாங்கமே இந்த வழக்கை கைவிட என்னும் போது இதை தொடர்ந்து விசாரிப்பதில் பயனில்லை, இதை எதிர் தரப்பு ஏற்க்காவிட்டால் தேர்தல் பிரச்சனையாக கையாளலாம்’ என சொல்லி அனந்தசயனம் ஐய்யங்கார் நிருதியிருக்க மாட்டார். வி.கே. கிருஷ்ணா மேனன் நேருவின் மந்திரி சபையில் பாதுகாப்புத் துறை மந்திரியாகி இருக்க மாட்டார்.

மக்களால் ...

விதைக்க மட்டுமே உரிமை எனில் அறுக்க ஐந்தாண்டுகள் பொறுத்தே ஆகவேண்டும் என்பது என்ன தூரமான ஒரு உரிமை. வாக்களிபவர்கள் அளித்த வாக்கை திரும்பப்பெறும் நிலை வருமே எனில் அதுவே முழு உரிமை. இது வர பல அடுக்கு கேள்விகள், ஆராய்சிகள் தாண்ட வேண்டும்.

நேரு... கிருஷ்ணா மேனன்
இது இல்லாவிடினும் அவர் சொல்லும் வாய் சவடால்களை நம்பி எம்முரிமைக் கொண்டு ஒருவரை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தி அவர் சொன்னதேதும் செய்யாமல் போனாலும் மீண்டும் வேறு சவடால் விட்டு எம்மிடத்தே வருவது யாதொரு முறையாகும்.

அதுவே தேர்தல் அறிக்கைகளைக் கொண்டு அவர் ஆட்சி செய்த திறத்தை அளவிட்டு அடுத்த தேர்தலில் போட்டியிட அனுமதித்தால் என்ன? அவை நடைமுறை படுத்திய விதம், பயனீட்டாளர்களின் விகிதம், துறை சார்ந்த அமைச்சர்களின் செயல்பாடுகள் எல்லாம் ஆராய்ந்தே அடுத்த தேர்தல் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதை தேர்தல் ஆணையம் ஏற்று நடத்த வேண்டும். இது சார்ந்த விளக்கம் எல்லா ஊடகங்களிலும் வர வேண்டும். இதில் பொய்யோ பித்தலாடமோ நடந்தால் அந்த ஆணையர் மற்றும் அவரின் இரத்த பந்தங்கள் எல்லோருக்கும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

அப்படி ஒரு நிலை இருந்தால் அந்த கிருஷ்ணா மேனனோ இல்லை தமிழகம் நான்கு ஆண்டுகளாக இருளில் இருக்க காரணமான தி.மு.க இன்று நம் தெருவில் வந்து முடியட்டும் விடியட்டும் என்று சொல்ல முடியுமா இல்லை இரண்டு லட்சத்தி பதினோரு ஆயிரத்தி நானூத்தி எம்பதி மூன்று கோடி கடனை தலையில் வைத்துவிட்டு ஒளிரும் நிகழ்காலம் மிளிரும் வருங்காலம்னு இந்தம்மா தான் வாய்திறக்க முடியுமா?


சரியா தவறா.. வாக்கு!