Sunday, April 26, 2015

உன் விருப்பம் போல் ..

னக்காக எதையும் உதறி விட்டு
வந்தவள் அல்லவே நீ..
தான் கொண்ட ஆசைகளை
துடைத்தவளில்லை நீ..
நான் இறுக்கும் போது
வடியும் வியர்வையிலும்
தன் விருப்பும் வெறுப்பும்
அழியாமல் என்னை அனைத்தவள்..
நான் பதித்த எச்சி துடைக்கும் போதும்
உன் வண்ணம் அழியா வண்ணம் துடைத்தவளன்றோ..
பசியில் நான் பற்கள் பதித்த போது
வளர்த்து வைத்திருந்த நகத்தால்
என் புறத்தை கீரியவள்..
நின்னையா தேடினேன்
நீ விரல் கோர்த்த பின்னரே
தேடலின் உன்னதம் உணர்தேன்
உன் மனம் நீ கொண்ட பாதை
என் விரல் விட்டு நடந்தாய்..
சின்னஞ்சிறு ரகியமா நீ
இனி எல்லாமுமாய் – உன்னையும்
செரிக்கும் ஒருத்தி மடிசாய காத்திருக்கிறேன்!