Saturday, September 19, 2015

இன்னு என்ன சொல்ல..

ந்த நெத்தியில நீ தீட்டும் பொட்டுக்குள்ள
நீண்டு கிடக்குறேன்.. எழுந்து தான் நீட்டி படுக்கறேன்..
திட்டு உன் கோவத்துல தீ மூட்டி குளிக்கறேன்..
உன் நினைப்பு சத்தியம்தானு காட்ட கருகி கிடக்கிறேன்..
காதோரமா சுருட்டி வைக்கும் அந்த கேசம் போதுமே,
நான் தூங்க அந்த நீண்ட சடை கூட வேண்டாமே..
கண்ண குத்துமுன்னா சாமிக்கு பொங்க வெச்சேன்,
நீ வந்து நின்னா போதுமுன்னு தானே
கோவில் வாசலிலே குத்தவெச்சேன்..
இன்னு சும்மாவே சுழட்டி பார்க்காதே,
அப்போ பார்த்த பார்வைக்கே வீடு தெரு மறந்து நிக்குறேன்..
இன்னு எங்கே போறே நானே இங்கே என்னை விதைச்சு வைச்சிருக்கையிலே
வாய துறந்து சொல்ல வாக்கு ஒன்னுமில்ல
நீ என்னை கடக்கு முன்னமே சிணுங்கி எனக்கு சொல்லும்
உன் வலவிக்கு தெரியும் நீ கேளு அதுவே சொல்லும்!