Monday, July 11, 2011

சிவப்பு கிளிகள்!

மராவதி அவசரத்தால் அவர் இருவர் காதல் தோற்றதாக கூறுவர்..!
லைலாவின் மீது கொண்ட காதல் மஜ்னுவை பைத்தியமாக்கியது என பலவாராய் கூறினர்!
ரோமியோ ஜூலியட் காதல் விஷத்தாலும் குத்துவாளாளும் முடிந்தது என்ன சொல்லக் கேட்டதுண்டு!
இவர்கள் காதல் என்றும் வாழ்ததுவே அன்றி இவர்கள் அல்ல!
காதலோடு வாழ்தவர்களில் யான் அறிந்தது இவர்கள்..
இவர்கள் கல்யாணம் மூன்று மரபு வேலிகளை தள்ளிவிட்டு நடந்தது..
அவள் இவனைக் காட்டிலும் பல வருடங்கள் முன்னரே இந்த பூவுலகில் பூத்திருந்தால், முதல் வேலி..
அவள் சீமானின் புதல்வியாகவே பிறந்திருந்தாள்,
இவன் நடுத்தர குடும்பத்தின் நாயகனாகவே அவதரித்திருந்தான், என்றும் இருக்கும் இரண்டாம் வேலி..
அவளின் தந்தை கண்டு எடுத்த மணமகனோடு நடந்த நிச்சயத்தை முறித்து இவனை கை பிடித்தாள்.. மூன்றாம் வேலி!
செவ்வெனவே துவங்கிய வாழ்க்கை அந்த சிகப்பு சித்தாந்தத்தில் சிக்கி கொஞ்சம் கொஞ்சமாய் துண்டானது!
இவனை மட்டும் அவள் நேசித்திருந்தால் இவன் என்றோ நின்றிருக்கக் கூடும்..
பிறந்த ஏழில் ஒன்று பெயர் வைக்கும் முன்னரே இறந்தது..
சவப்பெட்டி வாங்ககூட வழி இல்லாதவனாய் அவன் உலக சிந்தையில் இருந்தான்..
அவள் அப்போதும் அவனிடத்து காதல் குறையாது தான் இருந்தாள் - காரணம்
இவனின் சிதையில் சிந்தும் சிவப்பின் மேலும் அவள் காதல் பட்டுன்று இருந்தது!
அவள் மார்பிலும் வென் நிறப்பால் இன்றி அதிலும் அவன் சிகப்பே வழிந்த போதும் அவள் இருந்தாள் அவனோடு!
கார்ல் மார்க்ஸ்.. ஜென்னி கார்ல் மார்க்ஸ்..
மிகவுமாக அறியப்படாத சிவப்பு காதல் கிளிகள்!



Sunday, July 10, 2011

பிராணப் பெருங்கனல் . . . ! !

யாரும் விளக்கேற்றவில்லை..
தனி அறை இல்லை..
எதுவும் எச்சில் படவில்லை..
எந்தப் பழத்தையும் தேடிக் கடிக்கவில்லை..
இரு புறம் விரிந்த கைகளை தேடி பிடிக்கவில்லை..
உன் வியர்வை வாசம் உணரவில்லை..
உன் நெற்றியில் வியர்வை இல்லை..
ஆனால்...
உயிர் துளி விட்ட மூச்சு வாங்குதடி,
உன் கேசத்தின் வழி கடந்ததற்கே!