Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts
Friday, June 14, 2013
Saturday, December 29, 2012
Sunday, September 16, 2012
மீண்டும் கண்டுனர்ந்தேன்!
அந்தி
கடந்து வந்த இருள்
அடிவானத்தில் மின்னல்
காலின் கீழ் கடல் அலை
தலை எல்லாம் மழை தூறல்
அங்கு கனம் கூடாது என
என் காதுமடல் கண் மூக்கு வழி
வழிந்தோடி ஒலியலை செய்யும் கடலோடு கலக்கும் நொடி
ஊரெல்லாம் என் உடன் இருப்பினும்
யாரெல்லாமோ என்னுடன் நடப்பினும்
ஆண் என்ற கர்வம் தலையில் இருப்பினும்
என் கரம் நீ பற்றி நடக்கையில்
என் எல்லா கர்வமும் உருகி
நான் இருந்த உலகம் என் பார்வையில் இருந்து விலகி
உன் விழியில் நம் உலகம் பார்த்த தருணம் மீண்டும்
கண்டேன்
இன்னும் மீளவில்லை என்பதனை இன்றும் உணர்ந்தேன்!
Saturday, September 10, 2011
மழை இரவில்..!
அனைத்தையும் தொட்டணைக்க வந்துக்கொண்டிருக்கும் மழையின்
அறைகூவலாய்
அனைத்தையும் சுழலவைதுக் கொண்டி ருந்தது காற்று!
வருகிறேன் என சொன்னதுதான் தாமதம் என்பது போல்,
விருட்டென வந்து கொட்டியது..
இந்த மழை..
எங்கோ சென்றுக்கொண்டிருந்த ஜோடி யை,
அந்த பாலத்தின் அடியில் ஒதுங்க வைத்து
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது!
பேருந்தில் சன்னால் ஓரம் தூங்கிகொண்டிருந்தவரை
சடாரென எழுப்பி விட்டு சிரித் தது மேகக் கூட்டம்!
வேகமாய் தன் கடையை பூட்டிக்
கிளம்பியவரை,
அதனினும் வேகமாய் திறக்கவைத்து,
சாலையோரம் சென்றுக்கொண்டிருந் தவரை தஞ்சம் அடையவைத்து,
அவர் மேல் சாரல் புன்னகை
விசிக்கொண்டிருந்தது!
ஐந்தாண்டுக்கு ஒருமுறை மட்டும் வாழும்-
அற்ப ஜீவனாய் ரோட்டோராதில் உறங்கிக்கொண்டிருந்தவரை,
உதற வைத்து இரக்கமின்றி அவரிடத் தை
ஈரமாக்கி விட்டிருந்தது-
தான் மண் மீது கொண்ட உரிமை பத் திரம் காட்டி!
கொஞ்சம் பயந்தார் போல் தான் வே கமாய் ஓடியது,
அவரிடத்தில் விழுந்த நீர் உரிமை நிலைநாட்டி இருப்பினும்!
சிலருக்கு அனந்த கண்ணீராக!
சிலருக்கு கொதி நீராக!
உலகிற்கு சம மழை என பெய்த போதும்,
பாகுபாடுகள் பல உண்டு இங்கு!
இரவோடு வந்ததால் இன்னமும் நெருக்கம் உண்டு
கொஞ்சம் வெறுப்போடு!
காலையும் கேட்கலாம் ஈரம் காய்தாலும்,
இந்த திடீர் மழையை பற்றி
பலவாறான பேச்சுக்களை!
பார்த்ததை காட்டிலும் கொஞ்சம் அதிகமாய்!
Subscribe to:
Posts (Atom)



