Saturday, June 23, 2012

குரு

யாதுமானவன்
யாதும் அவன்
என்னுள் எனதை தேடிக்கொள்ள
கற்றுத்தருபவன் - அவன்
எல்லாம் என்னவென்ற கேள்விக்கும்
எல்லாவற்றிலும் நான் யார் என்ற கேள்விக்கும் 
விடை தேட வழி சொல்பவன்  அவன்
மூன்றில் என்னை முதன்மை படுத்தி
உணர்ந்திட உதவுபவன்  அவன்
கட்டுண்டு கிடப்பவன் அன்றே அவன்
கட்டுண்டு இருப்பின் என் கட்டை அவிழ்ப்பது எவ்வாறோ?
சுதந்திரமானவன்
சூத்திரங்கள் உமிழ்பவன்
கர்மம் அறுத்தவன்
தர்மம் அறிந்தவன்  அவன்
கோடியில் ஒருவன் அல்ல என் குரு
கோடிக்கணக்கானோர் என் குரு.




Saturday, June 16, 2012

என் ஜீவன் நீ!

நெருப்பென நான் இருப்பின்
காற்றென நீ வருவாய்
உன்னை உண்டு நான் ஜீவிப்பேன்
என் ஜீவனில் நீ மீண்டும் பிறப்பாய்
என் ஜீவன் அன்றோ நீ!