Showing posts with label கேள்வி. Show all posts
Showing posts with label கேள்வி. Show all posts

Sunday, August 11, 2019

Unity vs. Uniformity

மிழ் நாட்டுக்கு இங்கே இருக்கற காவேரியே வராது காஷ்மீர் பிரச்சனையா வந்திட போகுது. ஆனாலும் நம்ம ஆளுங்க அடுச்சு விடறாங்க, போன வாரம் வேலையின் போது வேலை ஏதும் செய்யாம article 370 நீக்குனது செம அது இதுனு  ஐநா சபை அதிபர் மாறி பேசுனாங்க. காஸ்மீர்ல இதுவரைக்கும் பாக்கிஸ்தான் நியூஸ் மட்டும் தான் வருமாம் அதுனால தான் இவ்ளோ பிரச்சனையாம் இனி அப்படி இருக்காதாம்.

ஏதோ தனியாக கிடந்த காஷ்மீரை இன்று இந்தியாவோடு இணைத்து பாஜக போல தான் பேச்சுகள் பரவுகிறது ஆனால் உண்மை, இந்திய சுதந்திரத்தின் போது தனி தனி மாகாணங்களை தனி நாடாகலாம், இல்லை இந்தியா அல்லது பாகிஸ்தானோடு இணையலாம்மென இங்கிலாந்து சொன்னது அப்போது அவசரப்பட பாகிஸ்தான் காஷ்மீரை பிடிக்க  கொரில்லா தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவத்தின் உதவியோடு பாகிஸ்தானை எதிர்த்தது காஷ்மீர். பின்னர் இந்தியாவோடு இனைய  சலுகைகள் அளிக்கப்பட்டது அது ராணுவம், வெளியுறவு துறை, தகவல்தொடர்பு  மூன்றை மட்டுமே இந்திய அரசு காஷ்மீரில் நிர்வகிக்க முடியும் மற்ற துறை, அது சார்ந்த சட்டங்கள் காஷ்மீர் மக்கள் பிரதிநிதிகளால்  இயற்றிக்கொள்ளப்படும். இது தான் அந்த article 370. இதில் பல ஆண்டுகளாகவே மாற்றங்கள் செய்யப்பட்ட வந்திருக்கிறது.

இப்போ யோகியின் பாஜக அந்த 370'ஐ தான் நீக்கிருக்காங்க. அதுவும் அந்த ஊரில் இருக்கிற மொத்த தொலை தொடர்பையும் நிறுத்திவிட்டு. மொபைல் மட்டுமில்லை லேண்ட் லைன் கூட கிடையாது. ஒட்டு மொத்த மக்களையும் அடக்கி வீட்டில் பூட்டிவிட்டு இதை செய்ய வேண்டிய கட்டாயம் என்ன? இப்படி மொத்த காஷ்மீரையும் சில நாட்களில் தன் கட்டுப்பாடில் கொண்டு வர முடிகின்ற அரசால் புல்வாமாவில் வந்த வெடி குண்டை ஏன் கோட்டை விட்டது?

இப்போதும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரை மீட்போம் என்று மட்டுமே சொல்லி வருகிறது ஆளும் பாஜக, சு.சாமி உட்பட. எம்.ஜி.ஆர் தலையை போல இருந்த காஷ்மீர் பல ஆண்டுகளாக ஸ்பைக் வைத்தது போல் மாறிவிட்டது. ஒரு புறம் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு மறுபுறம் சீனா ஆக்ரமிப்பு. மீட்பது எனில் இரண்டையும் மீட்க வேண்டும் ஆனால் இந்தியா இங்கிலாந்து கிரிக்கெடை வீட இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெடில்  தான் நம் தேச பற்று அதிகம் பீறிட்டு வெளிவரும். அந்த காரணமோ என்னவோ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை மட்டுமே பேசி வருகிறார் 56" பிரதமர்.

மொத்த இந்தியாவுக்கும் ஒரே ரேசன் அட்டை என்பது போல் ஒரே மொழி, கல்வி, மதம், தலைவன் என மாற்றவே இது நடப்பதாக தெரிகிறது. இந்த போக்கு சர்ச்சிலின் வார்த்தையை உண்மையாக்கிவிடும்.  இதை இந்திய அரசியல் அமைப்பு 42ம் திருத்தமான மதசார்பற்ற நாடு என்பதை முதலில் மாற்றிவிட்டு மற்ற அரபு நாடுகள் போல இதை இந்து நாடு என அறிவித்துவிட்டு செய்யலாம், பொருத்தமாகவும் இருக்கும், அப்போது கேள்விக்கு இடமிருக்காது. Unity is different from uniform ...


Sunday, July 7, 2019

தக்கன பிழைத்து வாழ்தல்

புறநானுறில் இருந்து சில வார்த்தைகள் இப்போ மொத்த பட்ஜெட்டும் அழகா தெரியுது. ஓட்டு வாங்காமா அமைச்சர் ஆனதுக்கு என்ன செய்யமுடியுமா செமயா செஞ்சுட்டமா. தமிழகத்தில் தாமரை மலர என்ன செய்யனுமோ அதை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். எங்க பார்த்தாலும் wow, செம, தமிழ் வாழ்க தான்..

ஆனா உண்மை, 2014ல கச்சா எண்ணெய் $80 - $90 அப்போ இங்கே பெட்ரோல் 70-₹80 .. இப்போ கச்சா எண்ணெய் $40 - $ 50 பெட்ரோல் அதே 70 - ₹80 சில நாள் அதுக்கு மேல. 2014 வரைக்கும் மானியம் தந்து பெட்ரோல் விலைய கட்டுப்பாடுல வெச்சிருந்தாங்க. மோடி வந்ததுல இருந்து அது தேவையில்லாம இருந்துது. இப்போ இத்தனை வரிகளும் போதாதுன்னு மேல 1 ஏத்திருக்காங்க.


கடந்த ஐந்தாண்டுகளில் பெட்ரோல் விலை மாற்றத்தால் விலைவாசி ஏறவில்லைனு கூப்பாடு போடறாங்க. ஆனா உண்மை ஏறின விலைவாசியை பத்தி எந்த ஊடகமும் பேசவில்லை அதனால விலைவாசி ஏறலைன்னு அர்த்தமில்லை. உதாரணம் கார் விற்பனை சரிவு. பொதுவாக மாதாந்திர செலவுகள், சொந்த வீடு என எல்லாம் நிறைவுறும் போது மக்கள் சிந்திக்கும் செலவு கார். இதன் விற்பனை சரிவை மொத்த விலை வாசி ஏற்றத்தை பிரதிபலிப்பதை காட்டுகிறது.


அடுத்து, அந்நிய முதலீடு இதை தான் அதிகமா பேசினாங்க மோடி ஒவ்வொரு முறை விமானம் ஏறும்போதும். இப்போதும் சில்லறை வர்த்தகத்தில் தாராளம் காட்டியுள்ளது. இப்படி அந்நிய முதலீடு என்ன செய்யும்னு தெரியணும்னா Thums up குடிக்கணும். 1977ல் Coke இந்தியாவை விட்டு வெளியேறியது. அந்த காரணமும் சுவாரசியமானது. அப்போதைய சட்டம் coke தயாரிப்பு முறையை கோரியது மேலும் அதனின் 60% பங்கை இந்திய நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்றும் சொன்னது. அதனால் இந்தியாவை விட்டு வெளியேறியது Coke.


1977ல் Thums Up அறிமுகமானது. அப்போது Gold Spot, Limca,  Campa Cola, Double Seven, Dukes போன்றவையும் இருந்தன. 1991ல் உலகமயம், பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் கதவுகள் திறக்கப்பட்டது Pepsi வந்தது. அதை தொடர்ந்து வந்த Coke அன்றைய 77% சந்தையை கையில் வைத்திருந்த Thums Up'ஐ மொத்தமாக வாங்கி விழுக்கியது. இருந்தும் Thums Up வாங்குபவர்கள் Pepsi பக்கம் போய்விட கூடாது என்பதற்காக மீண்டும் அதை சந்தைப்  படுத்தியது. 


Start Up - புது தொழில் முனைவு.. இதற்கு சில திட்டங்களை சொல்லிவிட்டு சில்லறை வர்தகத்தில் அந்நிய முதலீட்டை தாராளம் செய்தால் 77% சந்தையை கொண்ட Thums Up'ஐ வாங்கி விழுங்கியவர்களுக்கு Start Up எம்மாத்திரம். மொத்தமாக இந்தியர்கள் வெளி நாட்டு முதலாளிக்கு வேலை செய்ய வேண்டும் அதற்க்கு பெரும் ஊதியத்தில் அதே வெளி நாட்டுகள் விற்கும் பொருட்களை வாங்க வேண்டும்.



'தக்கன பிழைத்து வாழ்தல்' இது சட்டுனு புரியாது இதையே தான் 'survival of the fittest'னு புரியற மாறி சொல்லுவாங்க. இந்த அந்நிய முதலீடுகளுக்கு முட்டு கொடுக்க இதை சொல்லலாம். அப்படி எடுத்துக்கொண்டால் தெருவில் தாலி ஆறுப்பவன், வீடு புகுந்து கொள்ளை அடிப்பவன் இப்படி எல்லாவற்றையும் குறை சொல்லி கைது செய்யக்கூடாது. They are the Fittest.

சீக்கிரம் படிச்சு பட்டம் வாங்கிடணும், சீக்கிரம் நிறைய சாம்பாதிக்கணும், சீக்கிரம் செத்தர்னும். ரெண்டு மணிநேரதுக்கு 10,000 கோடி சேலம் - சென்னை 8 வழி பசுமை சாலை. இந்த காசுல எத்தனை ஏரி, குலங்களை தூர் வாரியிருக்கலாம்? கடல் நீரை குடி நீராக்க பயன் படுத்தலாம். தண்ணீர், உணவு இதை அடுத்து தான் எந்த வளர்ச்சியும்.


நேரடி வரி, மறைமுக வரி: இந்த நேரடி வரியை அதிகப்படுத்தி மறைமுக வரியை குறைக்க வேண்டும் அது தான் வளர்ச்சி. தனி நபர் நேரடி வரியை குறைக்க வில்லை ஆனால் பெருநிறுவனங்களுக்கு வரியை குறைந்திருக்கிறது. 250 கோடி வரை விற்றுமுதல் (Turnover) செய்யும் நிறுவனம் 30% அல்லாது 25% வரி செலுத்தினால் போதும் என்பதை 400 கோடியாக உயர்த்தி உள்ளது. இதனால் 99.3% நிறுவனங்கள் பயனடையும்.  அதாவது 0.7% தான் டாடா, அம்பானி, அதானி போன்ற பெரிய முதலைகள்.


மறைமுக வரி என்பது GST. கூலி தொழிலாளியும், அந்த 0.7% உள்ள பெரு முதலைகள் இந்த GST கட்டியே ஆக வேண்டும். உதாரணம் இப்போது பெட்ரோலுக்கான ₹1 வரி இது TVS 50 வைத்திருப்பவருக்கும், Maserati வைத்திருப்பவரும் கட்டியே தீரவேண்டும். இதை குறைத்து பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் பயனடைய கோடிகளில் லாபம் ஈட்டும் நபர்களிடம் அதிக நேரடி வரி வாங்கி சமம் செய்ய வேண்டும்.

இந்த வகை வரி விதிப்புகள் ஏதும் இல்லாததனால் இதுவும் வழக்கமான கார்பொரேட் பட்ஜெட் தான்.


Sunday, September 17, 2017

புத்தரின் இனவெறி

னிதா – தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதுவும் பரிச்சயமான பெயர். அவளின் மரணத்திற்கு பின் இருக்கும் அரசியலை தாண்டி, நீட்டை தாண்டி நம்மோடு நம் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை நேற்று வரை பங்கிட்டுக் கொண்டிருந்த ஒருத்தி இன்று இல்லையே என்ற ஆதங்கம் தான் இன்று பலரை உலுக்கியது.

அந்த ஆதங்கம் ரோகிந்திய இன மக்கள் மீது இந்திய அரசாங்கத்திற்கு இல்லாமல் போனது மிக வருத்தம்.

யார் இவர்கள், இசுலாமியர்கள் என்ற ஒற்றை வார்த்தையால் இன்று அண்ட நாடில்லாமல் ஒவ்வொரு நாட்டின் எல்லையிலும் நிற்கும் நாடோடியானவர்கள்.

உலகப் போரில் அமெரிக்கா சப்பானில் வீசிய அணுகுண்டின் வீச்சு இன்னமும் இருப்பதை போல இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியுற்ற போது இந்துக்களுக்கும் முசுலீம்களுக்கும் இடையே பிரிவினையை உண்டாக்கி பிரித்து சுதந்திர வேட்க்கையை நீர்த்து போக செய்த சூழ்ச்சி இன்றும் காச்மீரில் நம் மக்களை இழந்து கொண்டிருகிறோம். அது போல தான் மியான்மர் பர்மாவாக இந்தியாவோடு கிழக்கு இந்திய கம்பெனியின் ஆதிக்கத்தில் இருந்த போது பர்மா மக்கள் எதற்கும் லாயக்கு அற்றவர்கள் என்று ஒதுக்கி இந்தியர்களுக்கும், ரோகிந்திய இன மக்களுக்கும் அன்றைய முன்னுரிமை வழங்கியது.


அந்த வெறுப்பு சுதந்திரம் அடைந்து இராணுவ ஆட்சியில் 1982ல் அவர்களின் குடியுரிமை பறிக்கம் அளவு வளர்த்திருந்தது. திருமணம், கல்வி, வழிபாட்டு தளம் என அனைத்தும் மறுக்கப்பட்டன.

8/8 /1988ல் எழும்பும் 8888 (8888 uprising) என மாணவர்களால் ஏற்ப்பட்ட புரட்சியில் ஆங் சங் சுகி அடையாளம் காணப்பட்டார். ஒரு அகிம்சைவாதியாக தன்னை பிரகடனப் படுத்திக்கொண்டார். அந்த புரட்சிக்கு பின்னும் ரோகிந்திய இன மக்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் சுகி இராணுவ ஆட்சியை வெறுத்த இராணுவ அதிகாரிகளை கொண்டு கட்சி ஒன்றை துவங்கி 2015ல் ஆட்சி அமைத்தார். அதன் பின் ரோகிந்திய மக்களின் நிலை இன்னமும் மோசமாது. இதற்க்கு இடையில் 3/9/2014ல் அல் காயிதா அமைப்பு வெளியிட்ட கானொளியில் மியான்மர் முசுலீம்களை நாங்கள் மறக்கவில்லை. அவர்களை காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம் என்றது. அதற்கு அங்கிருந்த முசுலீம் குழுக்கள் எங்கள் தாய்நாட்டிற்கு எந்த அச்சுறுத்தல்களையும் ஏற்க்க மாட்டோம் என்று அறிக்கை வெளியிட்டது.

ஆனால் இன்று ‘மியான்மருக்கு திரும்புவதை வீட இந்தியாவில் மடிவதே மேல்’ என்ற ஒரு ரோகிந்திய அகதியின் வார்த்தை உணர்த்தும் அவர்கள் நிலையை.

பெளத்த சமயத்தை பிரதானமாக கொண்ட இலங்கையில் நடந்த கொடுமையின் நீட்சியே அதே பௌத்தத்தை கொண்ட மியான்மரில் அரங்கேறி வருகிறது.

துன்பத்துக்கான காரணம் பற்று என்ற புத்தரின் வழிவந்தவர்கள் மியான்மரை தங்கள் நாடு என சொந்தம் கொண்டாடி இவர்களின் குடியிரிமைகளை பறித்து விரட்டும் போது தென்னகத்தில் உள்ளவர்களை கீழ் பிறப்பாகவும், சமணர்களை கழுவேற்றிக் கொன்று தங்கள் சைவ சமயத்தை நிலை நிறுத்திய இந்தியா இவர்களால் தீவிரவாத அச்சுறுத்தல் வரும் என்று தடுப்பதில் எந்த முரணுமில்லை.

அல்லாவின் பெயரை சொன்னதற்காக ஒடுக்கப்பட்ட போது படை திரட்டி போரிட்ட முகமது நபியின் அந்த ஒரு சித்தாந்தத்தை மட்டுமே தவறாக புரிந்து கொண்டு இன்று சில குழுக்கள் அல்லாவின் பெயரை சொல்லி செய்யும் கொடுமைகள் இன்று அனைத்து முசுலிம்களையும் பயங்கரவாதிகளாய் பார்க்க வைக்கிறது.

இங்கு இனம், மொழி, நாடு என்று சொல்லி தினம் பல கொடூரங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் எல்லாம் தனியாக அடையாளப்படுதப்படுவதில்லை. குல்லாவும் தாடியும் வைதிருப்பாதால் இவர்களும் பயங்கரவாதிகள் என சொல்வது நம்மிடையே பகுத்தறிவு குறைவதையே நிருபிக்கிறது.


ஜெர்மனியில் தான் யூதன் என்றால் உடனே விசாரணைக்கு எடுத்து சென்று விடுவர், தான் ஜெர்மானியன் என்றால் தானில்லாது முன்னர் வாழ்த்த மூன்று தலைமுறையினரும் ஜெர்மானியர்கள் தான் என நிருபிக்க வேண்டும் தவறினால் விசாரணை கைதி தான், இது ஹிட்லர் கால நடை முறை. இன்று நாமும் அதையே தான் செய்து கொண்டிருக்கிறோம் ஹிட்லரை மட்டும் மனித மிருகம் என திட்டி தீர்த்து கொண்டு.


Monday, May 1, 2017

ஒதுக்குப்புறம்

ன் பள்ளி பருவத்தில் எங்கள் ஊரில் இருந்தது ஐந்து திரையரங்குகள். அதில் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்திருந்த ஒன்றில் தான் ரஜினி படம் வெளியாகும். அடுத்த இரண்டில் வேறு புது படங்கள் வெளியாகும். மற்ற இரண்டில் எப்போதும் பழைய படமும் ‘A’ படம் மட்டுமே வெளியாகும்.


அந்த ‘A’ பட சுவரொட்டிகள் ஒட்டப்படிருக்கும் பக்கம் பார்ப்பதே ஏதோ பெரியா குற்றம் என்பது போலவே கடந்து போவேன். என் அப்பா Speed , MIB போன்ற படங்களுக்கு என்னை அழைத்து போவார் அப்படி தான் ஒரு நாள் Titanic போவோம் என்றார். பின்னர் பள்ளி நண்பர்கள் மூலம் அந்த படத்தில் கதாநாயகியின் நிர்வாண காட்சி மட்டுமே சுமார் பதினைந்து நிமிடங்கள் வருவதாக அறிந்து என் அப்பாவின் அறியாமையை கடிந்து கொண்ட காலமும் உண்டு.

ஆனால் இன்று அதை வீட ‘நல்ல’ படங்கள் கைகளில் ஓடுகிறது. ‘எனக்கு போன் வாங்கி தரலைனா அடுத்த எக்சாம்ல பெயில் ஆகிடுவேன்’ என மிரட்டி கைபேசி வாங்குகின்றனர் பள்ளி மாணவர்கள்.

அப்பாவுக்கு புகை பழக்கம் இருந்தது ஆனால் அந்த சிகரெட்டே பாக்கெடை எப்போதும் என் கைக்கு எட்டதா இடத்தில் தான் வைப்பார். வெளியே சென்று வீடு திரும்பியதும் சட்டை பையிலிருந்து எடுத்து எட்டாத இடத்தில் வைத்து விடுவார். அதுவும் நான் இன்று புகைக்காததர்க்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

அதே போல் அன்று மது கடைகள் ஊருக்கு அப்பால் இறைச்சி வெட்டும் இடங்களுக்கு அருகில் இருந்தது ஆனால் இன்று ஊர் எல்லையிலேயே வரவேற்கிறது முதல் கடை. தெருவுக்கு ஒன்றாய் கடை விரித்து விட்டு ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என திரைப்படத்தில் மட்டும் கட்டாயமாக எழுத்து போடுவது என்ன மக்கள் நலனோ?

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னரை காட்டிலும் இன்று பாலியல் குற்றங்கள் அதிகரித்திருக்க மேல் சொன்ன இரண்டும் முக்கிய காரணங்களாக கருதுகிறேன். யாரும் எந்த நேரத்திலும் எதுவும் பார்த்திட உதவும் கை பேசி, அதில் வக்கிர படங்களை பார்க்கும் ஒருவர் கிடைக்கும் யாரிடமும் அந்த இச்சைய தனிக்க முற்படுவதே இந்தகைய குற்றங்கள் அதிகரிக்க காரணம். சென்னையில் முகலிவாக்கத்தில் நடந்த ஒரு சிறுமியும் படுகொலை ஒரு உதாரணம். பெரும்பான்மையாக இத்தகைய குற்றத்தில் பிடிபடுவோர் யாரும் இதே குற்ற பின்னணியோ அல்லது வேறு எந்த தவறுக்கான பின்புலம் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். இப்படி வக்கிர படங்களை பார்த்து வெறி ஏறினவர்கள் தனிமையில் பார்க்கும் பெண்களிடத்திலோ, குழந்தைகள் இடத்திலோ தங்கள் இச்சையை தீர்க்க பார்ப்பது தான் இத்தகைய குற்றத்திற்கான காரணம்.

இது மட்டுமின்றி இப்படியான தவறுகளின் போது அரசியல் தலைவர்கள் பெண்கள் உடுத்தும் உடைகள் மீதே அந்த குற்றத்தை சுமத்தும் போது அடுத்து தவறு செய்வோருக்கு அது ஒரு நியாயம் கற்பித்துவிடுகிறது.

இதில் இன்னமும் எண்ணை விடுவது போல் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே மது வந்து சேரும் சேவையை துவங்கி இருக்கின்றனர். மது கடைக்கு செல்ல கூச்சப்படுவோருக்கும் விடும் அழைப்பே இது. மது அருந்தியவர்கள் வெட்கமும் மானமும் மறந்து குருட்டு தைரியத்தில் கத்துவது போல் இனி குற்றங்களும் அதிகரிக்கும்.

இதில் இன்னுமொரு உளவியல் சார்த்த ஒரு அணுகுமுறை குறைபாடு உள்ளது. அது ஆண்களுக்கான அறிவுரையில்லாது போனது. பெண் வயதுக்கு வந்தவுடன் அம்மா, சித்தி, அத்தை, பக்கத்து வீட்டு பெரியம்மா என அனைவரும் பல அறிவுரைகள் சொல்லியே வளர்க்கின்றனர். ஆனால் ஒரு ஆண் வயதுக்கு வந்ததே அவனுக்கு மட்டுமே தெரிகிறது. உணர்சிகளை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும். இனி எப்படியான மனோரீதியான மாற்றங்கள் நிகழும் அதற்க்கு எப்போது எப்படி நடந்து கொள்வது என்று சொல்லும் பழக்கம் எங்கேயோ தொலைத்து விட்டோம்.

விரதம் அனுசரிப்பது, அதிகாலையில் குளிர் நீரில் குளிப்பது, சில காலங்களில் சில உணவுகளை கட்டாயம் தவிர்ப்பது போன்றவற்றை மொத்தமும் ஒதுக்கி ஆத்திகம் பேசியதும் சற்று தடம் மாற்றி விட்டது. உண்மையில் இதகையே நடைமுறையும் கூட ஒரு வகுப்பினருக்கு மட்டுமே சார்த்து சாதி பேதம் பார்த்தே வழக்கமாக வைத்து இன்னொரு பிரிவினரை குற்றம் பரம்பரையாகவே இருக்க வைத்திருக்க வேண்டும்.


இப்படி உளவியல் ரீதியாக அணுக வேண்டியவற்றை வெறும் சட்டம் கொண்டு மட்டும் கொரூர தண்டனைகள் மூலம் தீர்வு காண முடியாது.


Monday, November 7, 2016

சீவகாருண்யர்கள்

விருந்திற்கு தான் அழைத்தனர்
சீவகாருண்யர்கள் என்று தான் சொல்லிக்கொண்டனர்
கீரையும் கூட்டும் தான் என்றனர்
அவர் இல் சென்ற போது அவர்கள் சைவம் என்று உணர்த்தியது - வீட்டு வாசலில்
குருதி தேய இணை இணையாய் கிடந்தத மாடுகள்
கல்லூரிக்கு ஓடிய மூத்த மகன் முதுகில் பொதிகள் நிரம்பிய
 கழுத்தறுக்கப்பட்ட குரும்பாடு
அடுத்து வந்த இளைய மகள் இதழில் வழிந்த குரங்கின் கண்ணீர்
அவர் மனைவியின் தோள்லில் தொங்கிய – எழுவது ஆண்டுகள்
என்ற சராசரியை கொண்ட இரண்டே வயதில் கழுத்தறுபட்ட முதலை
அவர் இடையில் நெளிந்த நடு உடலில் கத்தியால் கீறி கிழிக்கப்பட அரவம்
சமணர்களை கழுவேற்றிய சைவத்தினரிடம் யாது காருண்யம் கண்டிட முடியும்!!?



Wednesday, August 10, 2016

ஐரோம் சர்மிளா


ஐரோம் சர்மிளா, நவம்பர் 2 , 2000 மணிப்பூர் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மலோம் என்ற சிற்றூரில் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பத்து பேர் இந்தியப் படைத்துறையின் துணைப்படையான அசாம் ரைபிள்சினால் சுடப்பட்டு இறந்தனர். அதில் 1988ஆம் ஆண்டின் தேசிய சிறார் வீரதீர விருது பெற்ற 18 வயது சினம் சந்திரமணி மற்றும் 62 வயதுடைய பெண்மணியும் அடக்கம்.

இந்த படுகொலைக்கு எதிராக 28 வயது ஐரோம் சர்மிளா நவம்பர் 4 உண்ணா போராட்டம் துவங்குகிறார். அன்றையில் இருந்து மூன்றாம் நாள் சர்மிளா தற்கொலைக்கு முயல்வதாக கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கிறது காவல்துறை. வலுகட்டயமாக மூக்கு வழியே உணவு தரப்பட்டுகிறது. இந்திய அமைப்பு சட்டத்தின்படி தற்கொலை முயற்சிக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை என்பதால் அன்றையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் விடுவித்து மீட்டும் கைது செய்யப்படுகிறார்.

இந்திய தலைநகர் டெல்லியில் பாலியில் வன்கொடுமைக்கு ஆளாகி உயிர் விட்ட பெண்ணை இன்று வரை உரித்து உரித்து பார்த்துக்கொண்டு இருக்கிறது நீதித்துறையும் அரசாங்கமும். நீதிமன்ற வேலை நேரம் முடித்து மீண்டும் தனி அமர்வில் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் மேல் முறையீட்டை கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அவர்களுக்கு என வாதாட வக்கீல் தரப்படுகிறது. அவரும் வாய்க்கு வந்த வண்ணம் இன்னும் அந்த பெண்ணை அறுத்து கூறுபோட்டு குற்றவாளிகள் விடுதலைக்கு அயராது பாடுபடுகிறார்.

ஆனால் இந்த ஐரோம் சர்மிளா விடுதலை கைது விடுதலை கைது என மாறி மாறி தன் வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கை உண்ணாமல் நோம்பு இருந்து கழித்ததன் காரணம் கேட்க ஆராய இன்று வரை எந்தத்துறையும் செவி சாய்க்கவில்லை.

16 வருடமாக ஐரோம் சர்மிளா இருந்ததன் நோக்கம் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 திரும்பப் பெற வேண்டும் என்பது இதற்க்கு இடையில் கருணாநிதி ஈழம் மலர உண்ணாவிரதம் இருந்தார், ரஜினி உடல் நிலை தேற ரசிகர்கள் உண்ணாவிரதம் இருந்தனர், ஜெயலிதா விடுதலை அடைய தமிழகமே(!!??) உண்ணாவிரதம் இருந்தது.

வடகிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள அந்த சட்டம் ஆயுதப்படைக்கு தரும் அதிகராம் யாதெனில் போராளி என சந்தேகிக்கும் எவரையும் காலவரையின்றி காவலில் வைக்ககாலம் சுட்டும் கொல்லலாம். மும்பையை அலறச் செய்த தீவிரவாதிக்கு தனி சிறை தனி நீதிமன்றம் அமைக்கத் தெரிந்த அரசிற்கு கிழக்கில் உள்ள போராளிகளின் கோரிக்கைக்கு செவி கொடுக்க ஏனோ வலிக்கிறது.

இன்னமும் அந்த சட்டம் அமலில் உள்ளது அவரினவரின் அடுத்த அடி மணிப்பூர் முதல்வர் இபோபி சிங்கிற்கு எதிராக சுஎத்சியாக தேர்தலில் போட்டியிடப்போவது

வரும் 15ம் தேதி வாய்கிழிய அகிம்சை போராட்டம் மூலம் கிட்டிய சுதந்திரம் என மார்தட்டும் போது நினைவில் கொள்ளவேண்டிய நிகழ்வு, உண்ணா போராட்டம் கைவிடப்பட்டவுடன் இம்பால் மாஜிஸ்திரேட் கோர்ட் தலைமை நீதிபதியிடம் ரூபாய்10ஆயிரத்திற்கான பத்திரத்தை அளித்து தற்கொலைக்கு முயல்கிறார் என அவர் மீது உள்ள வழக்கு தொடர்பான விசாரணை வருகிற 23ம் தேதிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டே பிணையத்தில் விடுவிக்கபட்டார் ஐரோம் சர்மிளா. கோட்சே அன்றே காந்தியை சுட்டது காந்திக்கு நல்லது என இன்று நீதித்துறை இன்று நிருபித்துக் காட்டியது.


Sunday, May 22, 2016

எதிநியன் சனநாயகம்

மூன்று பக்கமும் நீர் சூழ்ந்த ஒரு சிறு நகரம் அதில் அடிக்கடி களவு நடக்க இதற்கென்று ஒரு காவல் ஆள் நியமிக்க முடிவு செய்யப்படுகிறது. அவருக்கு சாப்பாடு தங்கும் இடம் என எல்லா சௌகரியங்களும் செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்படியான வசதிகள் செய்ய அந்நகர மக்களிடம் மாதம் இன்ன தொகை வசூலிக்கவும் முடிவு எடுத்தனர்.

இப்படி அந்நகர மக்களின் பணம் கொண்டு செய்யப்படுவதால் இந்த வேலைக்கு பலர் முன்வந்தால் அதில் ஒருவரை தேர்ந்தெடுப்பதில் மக்களின் பங்கும் அவசியம் என கருதி வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்தனர்.

எண்ணியது போலவே போட்டியிட பலர் முன் வந்தனர். இறுதியில் மூன்று பேர் மட்டுமே அதிக வாக்குகள் பெற்றனர். முதலில் அந்நகரில் கூத்தாடுபவன் அடுத்து அதில் அந்த நகரத்தில் இருக்கும் பெரும்பான்மையான சமூகத்தை சேர்த்தவன், மூன்றாவதாக மிக யோகியன் என்று பெயரெடுத்தவன். கூத்துக்காரன் பதவி ஏற்ற நாளில் இருந்து களவு குறையத்துவங்கியது. பாராட்டுக்கள் குவிந்தன.

தடீரென யோகியன் ஊர் கூட்டத்தை கூட்டினான். கூத்துக்காரன் பதவி ஏற்ற நாளில் இருந்து களவு என்னவோ குறைந்து தான் இருக்கிறது ஆனால் களவு போன பொருட்களின் மதிப்பு என்னவோ கூடி இருக்கிறதே என்று குற்றம் சாட்டினான். அந்நகரத்தின் ஒரு பிரிவினர் இவன் பொறாமையால் பேசுகிறான் என்றனர். மற்றவர் களவு போன கணக்கு சொல்வது போல் அதிகமாகவே இருக்கிறதே என்றனர். கூதுக்கரனால் சரி வர காரணம் ஏதும் சொல்ல முடியவில்லை. புதியதாய் ஒருவரை தேர்ந்தெடுக்க மீண்டும் வாக்கெடுப்பு நடந்தது.

அதில் திரும்பவும் கூத்துக்காரனும் நின்றான். இம்முறை பெரும்பான்மையான  சமூகத்தை சேர்த்த சாதியக்காரன் வென்றான் பதவியேற்றான். நாட்கள் கடந்தது களவும் குறைவாக தொடர்ந்தது. காவல் ஆளுக்காக வசூலிக்கப்படும் தொகையும் கூடிகொண்டே போனது. மக்கள் கேள்வி எழுப்பத் துவங்கினர் களவு ஏன் இன்னும் தொடர்கிறது என்று. இந்த கேள்விகள் தொகை கூடியதால் வந்தது என கருதினர் இருப்பினும் கேள்வி சரியே என்பதால் இது குற்றச்சாட்டாக கருதி பதிலளிக்க சாதியக்காரனை அழைத்தனர்.

கூட்டத்தில் பெரும் வாக்கு வாதம் நடந்தது அவன் சாதிக்காரர்கள் அவனுக்கு இணக்கமாக பேச மற்றவர்கள் எதிர்க்கவும் வாக்கு வாதம் சூடேறியது. இப்படி குற்றம் சாட்டுபவர்களே ஏன் வந்து இரவு எல்லாம் கண் விழித்து காவல் காக்கக் கூடாது என்றான் சாதியக்காரன். சலசலப்பு ஓய்ந்தது சத்தமே வரவில்லை.

“அந்த வக்கு எங்களுக்கு இல்லாததை உணர்ந்ததால் தான் நாங்கள் வாக்கு மட்டும் செலுத்துகிறோம். அது இருக்கு என்று முன் வந்து எங்கள் பணத்தில் நீ உண்பதால் தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம்” என்றான் ஒருவன். இம்முறை சாதியக்காரனிடம் பதில் இல்லை.

கூட்டம் இந்த தனி ஒருவன் சொல்வது சரி என இவன் பக்கம் சாயத்துவங்கினர். அந்த ஒருவன் தொடர்ந்தான், “நாம் எப்படி வாக்களித்தோம்? இந்த வேலைக்கு தகுதியானவன் ஒரு வலியவன். அப்படி ஒருவனை அடையலாம் கண்டா வாக்களித்தோம். கூத்துக்கரனை நகரம் முழுவதும் தெரியும் அதனால் அவன் முதல் முறை அதிக வாக்குகள் பெற்று வென்றான். அடுத்து வென்றவனின் சமூகம் இங்கு அதிகம் போக கூதுக்காரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சடால் கூடுதல் வாக்குகள் பெற்றான். யார் சரியானவன் என்பதை விடுத்து யார் தெரிந்தவன் என்பதை கருத்தில் கொண்டு தானே வாக்களித்தோம்.”

மூன்று பக்கமும் கடல் சூழ்த்த நாடு இந்தியா, 1948ல் நெறிமுறைகளை மீறி செயல் பட்ட வி.கே. கிருஷ்ணா மேனன் நேருவின் மந்திரி சபையில் பாதுகாப்புத் துறை மந்திரியானார். இன்று வரை குற்றப் பின்னணி உள்ளவர்கள் நாட்டை ஆளும் அவலம் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

காரணம் இங்கு இருக்கும் பழம்பெரும் கட்சிகளுக்கு பிரதானா வாக்காளர்கள் இருக்கிறார்கள் நல்லதோ கேட்டதோ அவர்கள் அதே கட்சிகளுக்கு தான் வாக்களிப்பார்கள் சராசரியாக நாற்பது சதவீதம். இது போக கட்சிசாரா மக்களின் முடிவே தலைவர் யார் என்பதை நிர்னைக்கும், அது மீதம் உள்ள அறுவது சதவீதம் அதில் இருப்பவர்களில் அதீதமானவர்கள் இன்று நான் வாக்களித்தால் நாளை எனக்கு என்ன கிடைக்கும் என்ற குறுகிய எண்ணத்தோடு  வாக்களிப்பதால் மாற்றம் வர வாய்பில்லை.

Source: https://data.gov.in/catalog/number-students 
2014 தேர்தல் கணக்கின் படி மொத்தம் 81.14 கோடி வாக்களர்கள். இதில் அறுவது சதவீதம் என்பது 48.8 கோடி. அத்தனை போரையும் மெருகேற்றி யோசிக்க செய்ய அடிப்படை கல்வியில் அரசியலை கொண்டு சேர்திருக்க வேண்டும். அரசியலின் முக்கியத்துவம், வாக்களிக்கும்போது கணக்கில் கொள்ள வேண்டிய பிரதான உண்மைகள், நாட்டின் வளர்ச்சி விகிதத்தில் தேர்தல் நேர வாக்குறுதிகள் என்ன பங்கு ஆற்றும் என்பதை கணக்கிடும் பக்குவம் என எல்லாமும் இருக்கும்படியான ஒரு கல்வி முறை இன்று வந்தால் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளில் மாற்றம் வரலாம். நாற்பது ஆண்டுகள் என்பதும் படித்து முடித்து வரும் இளைய சமுதாயத்தை கருத்தில் கொண்டு சொல்லப்படும் கணக்கே.

இத்தகைய குறுகிய என்னமுடையவர்களை கருத்தில் கொண்டே கிரேக்கத்தில் எதிநியன் சனநாயகம் உருவாக்கப்பட்டபோது பிளாடோ எதிர்த்தார். இன்றும் கட்சிசாரா வாக்காளர்கள் தெரிந்த சின்னத்தில் தான் வாக்களிக்கின்றனர் வேறு எந்த ஒரு எண்ணம் கொண்டும் இல்லை. இதற்க்கு சரியான உதாரணம் இன்று காணும் விளம்பரங்கள், சச்சினுக்கும் எழுதுகோலுக்கும், காற்றடிக்கும் என்ன சம்மந்தம் ஆனால் அவர் அந்த விளம்பரத்தில் வருகிறார். தெரிந்த முகம் ஒன்று தேவைப்படுகிறது கவனம் ஈர்க்க. இதை தான் அரசியல் கட்சிகளும் கையாளுகின்றன.

கல்வியில் மட்டும் இல்லாமல் மாற்றம் சநனாயக கூற்றிலும் தேவை. இன்று ஆட்சி செய்பவர்கள் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை கொண்டு அவர்களின் செயல் பாடுகள் அளவிட்டு அடுத்த தேர்தலை சந்திக்க அனுமதி அளிக்கவேண்டும். தேர்தல் அறிக்கைகளும் சரி பார்த்து அதனின் சாத்தியங்கள் கணக்கிட்டே வெளியிட வேண்டும் இவைகளை கையாள தேர்தல் ஆணையம் போல் அரசு சாரா துறை ஒன்று கொண்டுவரப்பட வேண்டும். இத்துறையில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் அறிவு சார்தவர்களே இருத்தல் வேண்டும். இதனால் வெறும் வாக்குறுதிகள் மட்டும் தந்து செயல் பாடாதவர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருக்காது. ஏமாற்று வாக்குறுதிகள் தவிர்க்கப்படும்.

இவ்வாறு செய்யப்படின் ஆளுமை உள்ளவர்களில் மக்கள் செல்வாக்கு மிக்கவர் ஆட்சி அமைக்க முடியும். இப்போது உள்ள கூற்றின் படி செல்வாக்கு மிக்கவரும் வாக்குறுதிகள் அளிப்பவருமே மீண்டும் மீண்டும் ஆட்சி அமைப்பர். ஆனால் இதை ஒரு பொருட்டாக விவாதத்திற்காக கூட எந்த ஒரு கட்சியும் எடுக்காது என்பது நிதர்சனம். அளவீடு இல்லாது இருப்பதே இன்று நாம் இந்த நிலையிலேயே இருக்கக் காரணம்.


Monday, May 9, 2016

Enough Is Enough

Everyone needs money n would have seen Italian Job, Ocean 11, 12 & 13 but no one dare to attempt because we are all in fear of getting caught and most with a thought of running rest of our lives with that shame. Then with what trend a girl is being sexually abused by her own relations and strangers. In other way accused can be categorised as known person, VIP and strangers. Way to get rid of a crime is to understand why it is happening because some crime cannot be stopped by punishment alone.

If accused is known person (like her own relatives or school teacher or own cab driver or neighbour) they would’ve done this with a thought like a girl will not shout about this in the name of culture because they know her family and they can threaten the victim. As most of such cases victims are minor. They may not even know the difference between the fields called sex in application and sexual intercourse. So they use their ignorance or fear on society for their pleasure.

In case of VIPs (like politicians or millionaires or big shot’s heirs) they have good value to do that as they have power and money to cover it up so they may not think about any consequences.

If we take 2012 Delhi rape case (as we all heard often without any option) all the accused were strangers and more particularly she died only after 13 days so which means she was alive at the time they threw her out of bus they didn’t try to kill her and cause of death is brutality. Then importantly they didn’t even bother about a boy who came along with her. So in which means they didn’t even think they can get caught as they don’t even have any strong background. This raises too many questions on many cases.

National Crime Records Bureau data (as at 2015) show out of 100 registered cases in India the accused is known to the victim 86 times. So if we teach our princess about difference between good touch and bad touch we can more or less avoid 86% but not that easy as I say. In other way 86% criminals are very well known faces and not anonymous. Notable point is as at 2013 it is 98%

Not able to get the split for remaining 14%, where it’d be better if they maintain as VIP and stranger.

As mentioned earlier if accused is VIP like politician or millionaire’s heir they must be punished without any mercy as they do it because of the power they have and money they own. When it comes to strangers it should be properly investigated as even there are chances of VIPs get involved in such crime, intention of the investigation should be in finding the hidden faces and not letting the accused free.

But amendment made after 2012 Delhi Rape case mostly about the act of penetration of
penis and the word rape has been changed to sexual assault. In case of punishment it still says not less than 20 years but which may extend to imprisonment for life, which means life imprisonment is the last option and no word for capital punishment. Verma committee’s recommendation was not completely taken into consideration but Government stand is like suggestions were not rejected but changes can be made after proper discussion. So until the discussion gets over please be prepared and not sure whether it has been started.

In other hand media took some cases especially brutal one for their TRP and creates a wrong perspective as India is no safe for women. NCRB reports actual rate is 2 per 100,000 people tracked by United Nations and main intention to say this is such a fear should not kill her freedom.


Friday, May 6, 2016

ஓட்டு சரியா தவறா


ஓட்டு என்பது தமிழா? இதற்கு ஆம் என்ற தவறான பதிலோ இல்லை என்ற சரியான பதிலோ யோசிக்கும் நேரம் பசியோடு யாரேனும் ஒருவர் ஒரு வாய் உணவுக்காக காத்திருக்கலாம். ஏதோ ஒரு கிரகம் மாறுவதால் யாரோ ஒருவர் உங்களை ஒரு ஏழைக்கு ஒரு வேளை உணவு தானம் செய்ய சொல்லி அது முடியாமல் போகுமேயானால் அன்று உண்மையான மக்கள் ஆட்சி நடைபெற்றதற்கான சான்றாக இருக்கும்.

வாக்குப் பதிவு செய்தல் நம் உரிமை என்றும் நூறு சதவீத  வாக்கு பதிவிற்கு கமல், சூர்யா என நடிகர்கள் கதறுவதையும் கேட்க்கும் போது எங்கள் உரிமைகளை நினைவூட்டுவதை விட்டுவிட்டு நடிப்பதை மாட்டும் பாருங்கள் என சொல்லத் தோன்றுகிறது.
இந்த நினைவூடலில் மக்களாட்சி என்பது என்ன என நினைவுக்கு வந்தது. மக்களால் மக்களுக்காக மக்களிலில் இருந்து என இருக்க வேண்டும்.

மக்களில் இருந்து

இது என்றோ வழக்கொழிந்து போய் விட்டது. ஒருமுறை ஒருவர் தலைவரானால் அவர் பிள்ளை, மருமகன், மாமன், மச்சான், இவர் ஏதேனும் புகரில் சிறை சென்றால் அவர் துணைவியார் என யார் யாரோ பதவிவகிக்கலாம் ஆனால் அவர் பரம்பரையாக இருக்க வேண்டும்.

மக்களுக்காக...

அப்படி ஒரு ஆட்சி சுதந்திரம் அடைந்ததில் இருந்து... இல்லை இந்தியா என்ற ஒரு தேசம் ஒருங்கிணைக்கப்பட்டதிலிருந்து நடந்திருந்தால் நேதாஜி அவர்கள் இந்திய தேசிய ராணுவதிற்காக சேர்த்த நூறு பலுக்கல் (KG) தங்கத்தில் வெறும் பதினோரு மட்டும் டெல்லி தேசிய அருங்காட்சியகதில் இருக்காது மற்றும் அது சம்மந்தமான ஆவணங்கள் வெளியிடக்கூடாது என்ற குறிப்போடு பிரதமர் அலுவலகத்தில் பத்திரப்படுத்தி இன்றுவரை உறங்கிக்கொண்டே இருக்காது. அந்த தங்கங்களை எடுத்தவர்கலாவது யார் என்று எ.கே.டார் (A.K.Dar) டோக்யோ தூதர் 1956ல் எழுதிய கடிதத்துக்கும் பதில் போகாமல் இருந்திருக்காது.

நேதாஜியின் தனிப்பட்ட சொத்து அல்ல அது இந்திய தேசிய ராணுவம் அமைய இந்தியாவில் வாழ்வோர் மட்டுமல்லாது மலேசிய, பர்மா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் இந்திய விடுதலைக்காக கொடுத்தது.

ஆக இன்று நாம் காடும் வரி பணம் மட்டும் அல்ல அன்று விடுதலைக்கு கொடுத்த பணத்திற்கும் கணக்கு காட்டவில்லை எனபது நிதர்சனம்.

மக்களுக்காக நடக்கும் ஆட்சி எனில் 1948ல் ராணுவதிற்க்காக சீப் (Jeep) வாங்கியதில் நெறிமுறைகளை மீறி செயல் பட்ட வி.கே. கிருஷ்ணா மேனன் (இந்தியன் பிரிடன் உயர் ஆணையாளர்) மீதான விசாரணையை, ‘இந்திய அரசாங்கமே இந்த வழக்கை கைவிட என்னும் போது இதை தொடர்ந்து விசாரிப்பதில் பயனில்லை, இதை எதிர் தரப்பு ஏற்க்காவிட்டால் தேர்தல் பிரச்சனையாக கையாளலாம்’ என சொல்லி அனந்தசயனம் ஐய்யங்கார் நிருதியிருக்க மாட்டார். வி.கே. கிருஷ்ணா மேனன் நேருவின் மந்திரி சபையில் பாதுகாப்புத் துறை மந்திரியாகி இருக்க மாட்டார்.

மக்களால் ...

விதைக்க மட்டுமே உரிமை எனில் அறுக்க ஐந்தாண்டுகள் பொறுத்தே ஆகவேண்டும் என்பது என்ன தூரமான ஒரு உரிமை. வாக்களிபவர்கள் அளித்த வாக்கை திரும்பப்பெறும் நிலை வருமே எனில் அதுவே முழு உரிமை. இது வர பல அடுக்கு கேள்விகள், ஆராய்சிகள் தாண்ட வேண்டும்.

நேரு... கிருஷ்ணா மேனன்
இது இல்லாவிடினும் அவர் சொல்லும் வாய் சவடால்களை நம்பி எம்முரிமைக் கொண்டு ஒருவரை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தி அவர் சொன்னதேதும் செய்யாமல் போனாலும் மீண்டும் வேறு சவடால் விட்டு எம்மிடத்தே வருவது யாதொரு முறையாகும்.

அதுவே தேர்தல் அறிக்கைகளைக் கொண்டு அவர் ஆட்சி செய்த திறத்தை அளவிட்டு அடுத்த தேர்தலில் போட்டியிட அனுமதித்தால் என்ன? அவை நடைமுறை படுத்திய விதம், பயனீட்டாளர்களின் விகிதம், துறை சார்ந்த அமைச்சர்களின் செயல்பாடுகள் எல்லாம் ஆராய்ந்தே அடுத்த தேர்தல் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதை தேர்தல் ஆணையம் ஏற்று நடத்த வேண்டும். இது சார்ந்த விளக்கம் எல்லா ஊடகங்களிலும் வர வேண்டும். இதில் பொய்யோ பித்தலாடமோ நடந்தால் அந்த ஆணையர் மற்றும் அவரின் இரத்த பந்தங்கள் எல்லோருக்கும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

அப்படி ஒரு நிலை இருந்தால் அந்த கிருஷ்ணா மேனனோ இல்லை தமிழகம் நான்கு ஆண்டுகளாக இருளில் இருக்க காரணமான தி.மு.க இன்று நம் தெருவில் வந்து முடியட்டும் விடியட்டும் என்று சொல்ல முடியுமா இல்லை இரண்டு லட்சத்தி பதினோரு ஆயிரத்தி நானூத்தி எம்பதி மூன்று கோடி கடனை தலையில் வைத்துவிட்டு ஒளிரும் நிகழ்காலம் மிளிரும் வருங்காலம்னு இந்தம்மா தான் வாய்திறக்க முடியுமா?


சரியா தவறா.. வாக்கு!

Sunday, March 8, 2015

காரணங்கள் தேடிய இரவு!

க்ரிச்டோபர் நோலன் படம் என்றாலே பிடிக்க வில்லை என சொல்லும் ஆள் யாரும் கிடையாது. ஒரு பக்கம் ‘செம படம்’ என சிலாகிக்கும் கூட்டம். மறுப்பக்கம் ‘என்னதான்டா சொல்றான்’  என புலம்பும் கூட்டம். புரிந்தால் தானே பிடிக்காமல் போக. நேற்று இரவு காட்சி ‘எனக்குள் ஒருவன்’, மொத்தம் இன்செப்சன் (Inception), கனவுக்குக் காரணம் லிமிட்லேஸ் (Limitless) என இரு ஆங்கிலப் படங்களின் கலவை. இதில் இயக்குனர் பங்கு நிறக்குருடு (color blindness) புதிதாக ஒன்றும் இல்லை, இப்படி படத்தை பற்றி கோபப்பட்டு வீட்டு வாசலில் இரவு இரண்டு மணிக்கு நானும் நண்பனும் பேசிக்கொண்டு இருந்தோம்.

எங்களை சுற்றி வளைத்தார் போல தெரு நாய்கள். ‘எங்கே இருந்து வருது இவ்வுளவு, அங்கே ஒன்னே பாரு என்னமோ லையன் கிங் மாறி லைடிங்ல படுத்துட்டு இருக்கு’ என்றான் சுரேன். ஒரு நாய் மட்டும் ஒய்யாரமாக காதுகள் சிலிர்த்து நிற்க, சோடியம் விளக்கின் கீழ் படுத்திருந்தது.

‘பின்னாடி பாரு அங்கே செவுத்துல படம் வரஞ்சிருக்கே அதுக்கு அடுத்த வீட்ல வண்டிய வெளியே தான் நிறுத்து வாங்க. நா அடிக்கடி பார்த்திருக்கேன் நைட்ல அந்த ஆளு தெருவுல ஒரு நாய்க்கு மாட்டும் பிஸ்கடோ ஏதோ போட்டு அவன் வீட்டு முன்னால இருக்கற மாறி பார்த்துப்பான். இப்போ எல்லா அந்த நாய் வந்தா இந்த நாய் அதை விரட்டுற்றான். என்னனு பார்த்தா அவரே ஒரு நாய் குட்டி புடுச்சுட்டுவன்டாரு .’

pet lovers, care takers, என்னங்க டா டேய்.. அம்மா கிட்ட இருந்து குட்டிய புடுச்சுட்டு வந்து கட்டி போட்டு சோறு போட்டா pet lovers’அ?’ என்றான்

‘போன வெள்ளிக்கிழமை காலைல மாடில இருந்து பார்த்தேன், அந்த ஆளோட வைப் வாசல் தெளிக்க முன்னாடி கேட் திறந்து வந்துது. வரும் போதே சத்தம், இது எல்லா யாரு வளிக்கறதுனு கத்திகிட்டே வந்துது. வாசல் தெளிச்சதும் அதோட பொண்ணுகிட்ட இன்னு தண்ணி எடுத்துட்டு வா கருமத்த கழுவனுனுச்சு. அந்த பொண்ணுக்கு அந்த குட்டி நாய் பார்த்த பயம் போல. அது பாவம் சந்தோசமா குதிக்குது. அதுக்குள்ள அடுத்த வீட்டம்மா பொண்ணு கைல இருந்து தண்ணிய புடிகிட்டு வந்து இது எல்லா சரி பட்டு வராதுன்னே. பேசமா துரத்தி விற்றுனுசு. பாரேன் இவங்களுக்கு வேணும்னா அது அம்மா கிட்ட பால் குடுசுகிட்டு இருந்தத புடிங்கிட்டு வந்துடறது இப்போ வேண்டானா தூக்கி ஏறியுறது. இதுக குழைந்த அசிங்கம்பன்னா இப்டி தான் தூக்கி எறிவாங்களோ? இதுகெல்லா ஊர்ல எல்லோரும் 
பெத்துகுக்ககாராங்களேனு புள்ளைய பெத்து வழக்கறதுங்க.’ என்றேன்.

நாயோ பூனையா ஒரு தாயின் ஏக்கம், குட்டிகளின் மன நிலை புரியாதவர்கள் பெரும் பேரு வேறு என்னவாக இருக்க முடியும் என்றே தோணியது.

‘இந்த நாய் எதுக்கு வந்துது நாம எதுக்கு வந்தோம்னு ஒன்னு புரியல இதுல ஆபீஸ்ல அது இல்ல இது புரியலைன்னு வேற. எதுக்கு நட்பு இப்போ இங்கே வந்திருகோம்’ என்று பிரபஞ்ச ரகசியத்தை ஒரு வரியில் கேட்டு முடித்தான்.

இக்ரிச்டோபர் நோலன் படம் புரியாவிட்டால் என்ன, நாம் இங்கு இந்த புவியில் வந்தது எதற்கு, எதை நோக்கி நம் பயணம், இறப்பு நம் பயணத்தின் முடிவா இல்லை அது அடுத்த நிலைக்கானா ஆரம்பமா? இங்கு வருவதற்கு முன் தண்ணீர் நிறைந்த பெரும் குவளையில் நீந்தி வளர்ந்தோம். தொப்புள் கொடியில் உணவு உண்டோம், ருசியா கண்டோம், கண்டது மை இருட்டு, கேட்டிருந்த ஒரே சத்தம் இதையத்துடிப்பு. ஈரைந்து மாதத்தில் அடுத்த நிலை.

படி ஏறி இரண்டாவது மாடியில் இருக்கும் என் அறை வருவதற்குள் கருவரைமுதல் கல்லறை வரை சென்று வந்தேன். காரணங்கள் விளங்கவில்லை.

படம் பற்றி சமூக வலைத்தளத்தில் பதிய வைக்கும் ஆர்வத்தில் இருந்தேன், வெளியில் பூனைகளின் சண்டையிடும் சத்தம். அவசரமாக புகைப்பட கருவியோடு ஓடினேன். நான் இருக்கும் அறைக்கு பின்னால் ஒரு பூனை இரு குட்டிகளை ஈன்றிருந்தது. சில நாட்கள் அது விளையாட்டை, பால் அருந்துவதை புகைப்படமாக பதிவு செய்திருக்கிறேன். அந்த தாயுடன் அது அறியா வண்ணம் உணவு பகிர்ந்திருக்கிறேன்.

நான் எதிர் பார்த்து ஓடியது வேறு ஒரு பூனை நான் ஊற்றிய பாலை குடிக்க வந்திருக்க சண்டை துவங்கியிருக்கும் என்று. ஆனால் அங்கு வேறொரு பூனை இந்தத் தாயின் குட்டியை தூக்கிக் கொண்டு ஓடியது. துரத்தி சென்று பாதியில் முடியாமல் அடுத்த வீட்டு கிணற்றின் மேல் படுத்து தன்னை ஆசுவாசப்படித்திக் கொண்டிருந்தது. நான் அந்த குட்டிகள் இருக்கும் இடத்தை பார்த்தேன். எச்சங்கள் இருந்தது, குட்டிகள் பயத்தில் கழித்திருக்கலாம்.

வேகமாக அறைக்கு ஓடினேன், கணினியில் பூனை மற்றொரு பூனையின் குட்டியை தின்னுமா? என தேடினேன். பெண் பூனைகள் மற்றும் ஆண் பூனைகள் தின்னும் எனவும் அதற்க்கு பல காரணங்களும் கூறப்பட்டிருந்தது.

பெண் பூனைகள் தங்களின் குட்டி ஊனமாக இருந்தாலும். மற்ற குட்டிகளுக்கு பாலுட்ட ஏதும் இல்லாத போதும் ஒரு குட்டியை தின்னுமாம். ஆண் பூனைகள் தன் கூட்டத்தில் இருக்கும் பெண் பூனைகள் வேறு ஆணோடு கலவை கொண்டு பெரும் குட்டிகளை கொல்லுமாம். ஒரு கூட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட ஆண் தேடி வந்து குட்டிகளை கொல்லும். கலவையின் போது இடையுறாக இருந்தால், பல ஆண் குட்டிகள் இருந்தால் தன் நிலைக்கு ஆபத்து என்பதால், விளையாட்டின் போது சில நேரம் இரையை போல் நினைத்து கடித்துவிடுமாம் என பல கரணங்கள்.

மீண்டும் வெளிய போய் பார்த்தேன். இப்போது குட்டிகளோடு விளையாடிய இடத்தில அந்த பூனை தனியே வந்து படுத்திருந்தது. முன்னர் எல்லாம் நான் அந்த இடத்தை கடக்கும் போது ஒரு சீற்றம் இருக்கும், இப்போது ஒரு சலனமும் இல்லை அதனிடம். மீதி இருந்த பாலை அதற்க்கு ஊற்றினேன். வேறு என்ன செய்ய எடுத்த படங்களையா தரமுடியும் ஞாபகத்திற்க்கு.

என்ன காரணம் இருக்கும் இந்த தாயின் தனிமைக்கு? எதுவாயினும் அதுவும் ஒரு இயற்கையின் கோற்பாடாகவே இருக்கும் வேறு என்ன இருக்க முடியும். கோட்படுகள் அறியப்படாத வரை பரிதாபம் மட்டுமே மிஞ்சி இருக்கும்.


அந்த தாய் மெல்ல கத்திக்கொண்டிருந்தது, அந்த ‘மியோவ்’ இப்போது வேறு மாறி கேட்டது.

Friday, August 29, 2014

சுதந்திரப் போராட்டம்

போட்ட சோற்றிற்கு வாலாட்டும்
காட்டிய இனையுடன் கட்டாய கல்யாணம்
பிறந்து ஈரம் உளறும் முன் விற்று காசு பார்ப்போம்...
நாம் பெற்றது வயதுக்கு வந்ததும்
திருமணம் செய்து வைப்போம்
வாங்கி வந்தவருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வோம்...
யாருக்கும் யாரும் சுதந்திரம் தரத்தேவையில்லை
இருப்பதை பறித்து
பறப்பதைப் பிடித்து சிறு கூட்டில் அடைத்து
பறக்க விடாது வீசிய உணவை உண்ணச் சொல்வோம்
பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும்...
குலத்தில் குளித்து கொட்டிய மழையில் ஆற்றில் மிதந்து
முடிந்த தூரம் நீந்தி விளையாடியவர்களை
இரண்டடி கண்ணாடி பெட்டியில் அடைத்து
யாரென்றே அறியாதவர்களோடு நீந்தி விளையாட சொல்வோம்
ஆனால் நாம் நம் சமயம் தாண்டி பெண் எடுக்க மாட்டோம்...
சேர்க்கைக்கு வழி விடாது
வீட்டிற்குள் தொட்டி வைத்து வளர்ப்போம்
இவர்கள் புணர்ச்சியையும் அழிப்போம் - உணர்சிகள் அற்று
யாரோ நான்கு பேருக்காக வாழும் வித்தையை
ஒவ்வொரு உயிருக்கும் கட்டாய வகுப்பெடுபோம்...
நேசிக்கிறோம் என்று சொல்லும் சர்வாதிகாரிகள் நாம்
இவர்களுக்கு போராட சொல்லித்தர யாருமில்லையோ?
இவர்கள் போராடினால் பேசாக  நானே போஸாக
ராணுவ படை  செய்வேன்!



Saturday, January 25, 2014

இனபடுகொலை

ர் இன மக்களை பூண்டோடு அழிப்பது மட்டும் இனபடுகொலை என்றாகாது. இனத்தின் மொழி, சடங்குகள், பழக்கவழக்கங்கள் என அவ்வினத்தின் அடையாளங்கள், அவ்வினம் இவ்வுலகிற்கு ஈட்டித்தந்த கண்டுப்பிடுப்புகள் என ஒட்டுமொத்தத்தையும் ஏதும் இன்றி செய்து அவ்வின மக்களை உயிரோடு விடுவதும் இனபடுகொலையே.

பதினெட்டாம் நுற்றாண்டுற்கு முன்பு இந்தியாவில் எங்கும் பல்கலைக்கழகங்கள் உண்டோ? அதற்க்கு முன்பு இந்த படிப்பறிவு இல்லாமல் தான் வானவியல் சாத்திரங்கள் வந்தது, இரும்பு கிரேக்கம் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது (இப்போது இருப்பது போன்று இல்லாது இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக இருந்தது).

எல்லா வணிகமும் நல்ல முறையில் நடந்து செழிப்பாக இருந்த அந்த காலக்கட்டத்தில் இங்கு இருந்தவர்களுக்கு முக்கியமாக இன்று இன்றியமையாததாக கருதப்படும் ஆங்கிலம் என்ற மொழி தெரிந்திருக்கவில்லை.

சீனாவின் மிக சிறந்த அறிஞர் லின் யுதங் தன் நூலான தி விஸ்டம் ஆப் சீனா அண்ட் இந்தியாவில் (The Wisdom of China and India) கணித குறியீடு, கணித சமன்பாடுகள் இலக்கணம் புராதன கதைகள், சதுரங்கம் ஆகியவற்றை, இந்தியாவிடம் இருந்து தான் இந்த உலகம் கற்றுக் கொண்டது என்கிறார்.

இங்கே கலை, கணிதம், அறிவியல், வானவியல், வரலாறு, மொழி என இப்போது பிள்ளைகள் தனித்தனியே படிப்பது எல்லாம் ஆன்மிகம் என்ற ஒன்றில் தான் இருந்தது. கோவில்கள் அன்றைய தினத்தில் வழிப்பாட்டு தளங்காலக மட்டும் இல்லாமால் அறிவை போதிக்கும் பாடசாலைகளாகவும் இருந்தது.

உதாரணம், வழிப்பாடு தளங்களில் உள்ள நவ கிரகங்கள் (9 planets), இவற்றை கண்டறிந்தது யார் என கேட்டால் இப்போது உள்ள பிள்ளைகள் சொல்லும் பெயர் கலிலியோ, பதினைந்தாம் நூற்றாண்டிற்கு பின் வாழ்தவர். இந்த நவகிரக வழிபாடு என்பது நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு இருந்து வந்துள்ளது. ஆனால் அறிவியலின் தந்தை என அழைக்கபடும், இதை உரைத்தவரான கலிலியோ பிறந்தது ஆறு நூற்றாண்டிற்கு முன்.

பகுத்தறிவு என்பது அறிவுக்கும் அடுத்த நிலை. நடக்கும் ஒன்று நல்லதாயினும் தீயதாயினும் அவற்றில் உள்ள நன்மை தீமைகளை பகுத்து அறிந்து நல்லதை மட்டும் எடுத்து வாழ்வாதாரத்தின் மேன்பாட்டுக்கு பயன்தருமாறு இருத்தல்.

ஆனால் இங்கு பகுத்தறிவாளிகள் என கூறிக் கொள்வோர் கடவுள் இல்லை என்ற பேச்சால் ஆன்மிகம் சார்த்து இருந்த எல்லா வாழ்வாதார மேன்பாட்டு சடங்குகளையும் தீயிட்டு கொளுத்தினர் செய்வோர் அனைவரையும் மதிகெட்டோர் என்றனர்.

பல நூற்றாண்டாக மாட்டின் சாணம் கொண்டு வாசல் தெளித்து கோலம் இட்டவர்களை கழிவில் இறைவி லட்சுமியா என இழித்து பேசியவர்கள். இன்று அறுவியல் சாணத்தில் கிருமி நாசினிகள் உண்டு என சொன்னா போது ஏதும் பேசவில்லை. இன்னமும் வளராத அறுவியல் சொல்வதை நம்பும் இவர்கள்,  நூற்றாண்டுகளாக வந்த பழக்கங்களை அதின் ஆள் அர்த்தத்தை அறியாதவர்கள், பகுக்க தெரியாதவர்கள் பகுத்தறிவாளிகள்.

நேர்மாறான கூற்று இடாலியில் (பைசா) நடந்தது, கலிலியோ தான் எழுதிய "டையலாக் கண்செர்நிங் தெ டூ சீப் வேர்ல்ட் சிஸ்டம்சில்" என்ற நூல்லில் சூரியன் உலகை சுற்றவில்லை உலகம் தான் சூரியனை சுற்றுகிறது என்ற தன் சூரியமைய கொள்கைக்கு நிறைய ஆதாரங்கள் அளித்தார் . ஆனால் அது போப் அர்பன் VIIIஐ தாக்குவது போல் தோன்றியதால், அவர் புலன் விசாரிக்கப்பட்டு வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார். இது வேறு கதை.

இங்கு பகுத்தறிவாளிகள் செய்திருக்க வேண்டியது, அன்று சில வகுப்பினர் மட்டும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப் படவில்லை. ஆதலால் அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. அவர்களும் கோவிலினுள் சென்று பயில வழி செய்திருக்க வேண்டும். கோவில்களில் உள்ள கல் வெட்டுக்கள் தெரியா வண்ணம் கற்பூரம் ஏற்றுபவர்களை தடுத்தல். அவர்களுக்கு கோவிலின் உண்மையான அர்த்தத்தை புரியவெய்தல் இது எல்லாம் செய்திருந்தால் பகுத்தறிவாளிகள்.

ஆள்பவர்கள் கையாண்டது இரண்டு வழிகளை. முதல் வழி ஆங்கிலயேர் கையாண்ட வழி பிரித்து ஆளுதல் (Divide & Rule) மொழியின் பெயரால் மக்களாட்சி வந்த நேரத்தில் தேசிய மொழியயை எதிர்த்து ஏதோ தமிழுக்கு பங்கம் வருவதாய் காட்டி ஓட்டு சேர்த்தனர். ஒட்டு மொத்த மக்களையும் தேசிய மொழியாக இருக்கும் இந்தி மொழிக்கு எதிராக நிறுத்தினர்.
பல குறுநில மன்னர்கள் ராஜியங்கலாக, வேறுபட்ட பழக்கவழக்கங்களை கொண்டு, வெவ்வேறு மொழிகள் பேசி இருந்த சிறு நிலங்களை ஒரு நாடாக இனைத்து அதற்க்கான ஒரு பொது தேசிய  மொழியாக இந்தி அருவிக்கப்பட்டது. அதனை கற்க விடாமல் தமிழ் மக்களை தனிமைபட செய்து. மத்திய அரசாங்கம், பிற மாநில மக்களுடன் நல் உறவு இல்லாமல் போனதருக்கு காரணமாய் இருந்தது இந்தி எதிர்ப்பு போராட்டம்.

இப்போது அன்று இருந்த தமிழும் இல்லை, தேசிய மொழியும் இல்லை இங்கு. அந்நிய மொழியாம் ஆங்கிலம் தெரிந்தவர்களே அறிவாளியாக சித்தரிக்க படுகிறார்கள்.
இந்தி ஆதிக்கம் செய்யாமல் தடுத்து, தமிழையும் கல்வி மொழியாக தந்திருந்தால் பகுத்து அறிந்து செயல் பட்ட பகுதரிவாளிகளாய் கொண்டாடலாம். இந்தியை எதிர்த்தவர்கள் ஆங்கிலத்தை பள்ளிகளில் மேலோங்க விட்டது எதனால்.

வெளிநாட்டவரின் யோசனைகளை கண்டு வியக்கும் இவர்கள், வேதம் எல்லாம் பொய் என பொதுவாய் தூக்கி எறிந்த இவர்களுக்கு தெரியுமோ இனி வரும் சமுதாயத்திற்கு தெரியுமோ இல்லையோ, அணுகுண்டு எனப்படும் மிக மோசமான கண்டுபிடுப்பு, வெடித்த நாளில் இருந்து பல நுற்றாண்டு காலம் வெடித்த சுற்றளவில் உயிரினம் வாழ விடாது செய்யும் மிக கொடியதும் சக்திவாய்ந்ததுமான இவற்றின் தந்தை என அறியப்படும் ஜெ. ராபர்ட் ஒப்பென்ஐமர் (J Robert Oppenheimer) ஜப்பானில் இரு குண்டுகள் வெடித்த பின் சொன்னா வார்த்தைகள்,

In battle, in the forest, at the precipice in the mountains,
On the dark great sea, in the midst of javelins and arrows,
In sleep, in confusion, in the depths of shame,
The good deeds a man has done before defend him

பகவத் கீதையில் இருந்து.

மற்றொரு வழி, நம் நீண்ட நாள் நம்பிக்கையை பொய் என உரைப்பின், அதற்க்கு நம்பத்தகும் சான்றுகள் கேட்குமிடத்தில் கவனம் குவியும். அப்படி கடவுள் இல்லை என்ற கோசம் உயர்த்தப்பட்டது.


இதனால் திருமூலரின் திரு மந்திரம் (தமிழ் நூல்) பல விஞ்ஞான மெய்ஞான கூற்றுகள் நிறைந்த நூல் ஒதுக்கப்பட்டது.

“அணுவின் அணுவினை ஆதிப்பிரானை
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே
"


இன்று அணுவின் கூறுகளை அன்றே சிவன் மேல் பாடாலாய் பாடியிருந்தார் திருமூலர்.  இவர் வாழ்த்த காலம் ஐந்து முதல் எட்டாம் நுற்றாண்டு முடிய மூவாயிரம் வருடங்கள் வாழ்ந்தவர். தொலைநோக்கி நுண்ணோக்கி போன்றவை வராத காலம், இவை இரண்டும் வந்தது பதினாறாம் நூற்றாண்டுக்கு பின்னரே. இந்த கூற்றை பகுத்து அறிய முடியாத பகுத்தறிவாளிகள் சொன்னது தான் கடவுள் இல்லை என்ற கூற்று.