Wednesday, November 19, 2014

என்னை நானாக்கியவளன்றோ!

நாதன் அவன் நடராஜன் ஆடலை கண்டோ
உமையவள் அவள் வந்தாள்
எந்த காளையின் தாளத்திற்கு
நான் எந்த காலையேயினும் உயர்த்தினேன் நீ வர
தலைவி நீ வரவே நான் தலைவனென்று ஆனேன்
உன் விழி இடறியதில்
தலைகீழாக வீழ்ந்ததை யாரறிவார் - நீ இன்றி
யார் இடறிட துணிவார்
தூணாக நீ இருக்கையில் உருளும் புவியே சமமாக இருப்பின்
என்னை இடர்வதேது!

Thursday, October 16, 2014

யாதாக்குவாயோ!

த்தனை முறை தான் சிரித்திட முடியும்
கண்ணில் பொங்கிடும் அழுகையை அடக்கி
நீ நான் எனபது எல்லாம் போக நாம் என்று ஆனபின்
மீண்டும் நான் ..
நீ விட்டு போவாயானால்
பத்து தலை இராவணன் என உனை கொண்டுவருவேன்
உன் தேவை எதுவாயினும் அதை நிவர்த்தி செய்திட
பத்து அவதாரமேனும் எடுப்பேன்
என்னில் உறங்கிக்கிடக்கும் தெய்வத்தை தட்டி எழுப்பி
ஊன் கொடுத்து வாழவைப்பதும்
வெளியே தெரியும் மிருகத்தை சீண்டி விட்டு ரசிப்பதும்
உன் இதழ் பேசும் மொழியன்றோ
இன்னும் என்னை யாதாகி ரசிக்கப்போகிறாயோ!

Thursday, September 11, 2014

கோவத்தில் பிரியத்தை தெளிப்பவளே

நீ திட்ட திட்ட திகடுதடி
திட்டித் தீர்த்தப் பின்னு
நாக்கிலே சப்பு கொட்டி கேட்க துடிக்குதடி..
உன் கோவத்தையும்
திருவிழாவா கொண்டாடி ரசிக்கிறனே..
கோவத்தில் நீ விடும் பெருமுச்சிக்குள் வசிக்கிறேனே..
அந்த கருவிழி உருள உருள
ஓடி களச்சு
ஒரு சோம்பு பச்சை தண்ணிகுடிச்சதா அடிவயிறு குளிருதடி..
திட்டி திட்டி எம்மேல உன் உரிமைய காட்டி
என் உயிரயே உலுக்கரியே..
இன்னு என்ன பண்ணி தொலைப்பியோ
நீ சிரிச்சு என் நெஞ்சோட சாஞ்சா
நா எப்படி சாவேனோ!

Friday, August 29, 2014

சுதந்திரப் போராட்டம்

போட்ட சோற்றிற்கு வாலாட்டும்
காட்டிய இனையுடன் கட்டாய கல்யாணம்
பிறந்து ஈரம் உளறும் முன் விற்று காசு பார்ப்போம்...
நாம் பெற்றது வயதுக்கு வந்ததும்
திருமணம் செய்து வைப்போம்
வாங்கி வந்தவருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வோம்...
யாருக்கும் யாரும் சுதந்திரம் தரத்தேவையில்லை
இருப்பதை பறித்து
பறப்பதைப் பிடித்து சிறு கூட்டில் அடைத்து
பறக்க விடாது வீசிய உணவை உண்ணச் சொல்வோம்
பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும்...
குலத்தில் குளித்து கொட்டிய மழையில் ஆற்றில் மிதந்து
முடிந்த தூரம் நீந்தி விளையாடியவர்களை
இரண்டடி கண்ணாடி பெட்டியில் அடைத்து
யாரென்றே அறியாதவர்களோடு நீந்தி விளையாட சொல்வோம்
ஆனால் நாம் நம் சமயம் தாண்டி பெண் எடுக்க மாட்டோம்...
சேர்க்கைக்கு வழி விடாது
வீட்டிற்குள் தொட்டி வைத்து வளர்ப்போம்
இவர்கள் புணர்ச்சியையும் அழிப்போம் - உணர்சிகள் அற்று
யாரோ நான்கு பேருக்காக வாழும் வித்தையை
ஒவ்வொரு உயிருக்கும் கட்டாய வகுப்பெடுபோம்...
நேசிக்கிறோம் என்று சொல்லும் சர்வாதிகாரிகள் நாம்
இவர்களுக்கு போராட சொல்லித்தர யாருமில்லையோ?
இவர்கள் போராடினால் பேசாக  நானே போஸாக
ராணுவ படை  செய்வேன்!



Wednesday, August 20, 2014

மௌனம் களையவிடு

ல்லா உறவுக்கும் பெயர் யார் சொல்ல
என் சிந்தை திருடும் உறவு இது
நான் எப்போது உன்னிடம் சொல்ல
கல்லுக்கடியில் காயாத ஈரத்தில்
துயிலும் சிறு வண்டு போல
உன்னோடு பேசிய
மங்காத நினைவுகளோடு பேசி பேசி
தினம் தினம் நான்
நீ இல்லாத நொடிகளை கொல்கிறேன்
நித்தம் யாவருடனும்
நான் பேசுவதே
உன்னை பற்றி என் சித்தம் குளிர
ஏதும் சொல்வார் என்றே
மறுமுறை பார்கையில்
உதட்டை சுளிக்காதே
காதோரம் சுருண்ட முடியை ஒதுக்காதே
நான் சொல்ல வந்ததை சொல்ல விடு!

Friday, August 8, 2014

தீண்டத் தொலைந்தேன்!

தீண்டின அடுப்புமேல வெச்ச பாலா பொங்குது எம்மனசு
நீ போன அப்பறம் தீஞ்சு போன வாசம் உன் நாசி எட்டியிருக்காது
நெடுந்தொலவு நானு கடக்கையில்
உன் நினப்புல தான் தொலச்சேன்
தொலைச்சது ஏதுன்னு தெரியல தேடிப்பார்க்க
போன இடம் போன பின்ன தெரிஞ்சது
வந்து சேர வேண்டிய இடத்ததா நானு தொலைச்சது
நீ உருட்டு அந்த கருவிழியில தானே என் பாதை நீளுது
சோகமோ இல்ல சிரிப்போ
எதுவோ ரகசியமா வெச்சா கூட
ஒடச்சு எட்டி பார்க்கற..
காரணம் கேட்டு சிரிக்கற
அப்புறம் காணாம போய்டற
எல்லோரு சுத்தி இருந்து
யாரும் இல்லாத இந்த பௌர்ணமி நிலவு கிட்ட நானு புலம்பி தவிக்கறே..
என் புலம்பல் கேட்டு கேட்டு அதுவும் இப்போ தேயுது!



Thursday, July 17, 2014

வர்த்தகம் மட்டுமே!

நான் கண்டது குருவை அல்ல விற்ப்பனையாளரை!
நான் பெற்றது கல்வி அல்ல சரக்குகளை!
நான் தேர்ச்சி பெற்றது வாழ அல்ல விற்ப்பனைக்கு!
நான் இருப்பது கோவிலில் அல்ல சந்தையில்!
புத்தகத்தில் இருந்ததை தலையில் ஏற்றி
நுணுக்கம் செய்து என் ஆற்றலை தரையில் கூறுகட்டி வைத்திருக்கிறேன்
என் கனவுகளை எல்லாம் புதைத்து
அதன் மீதமர்ந்து வியாபாரம் பேசுக்கிறேன்!
பள்ளிக்கூடம் மொத்தவிற்பனை நிலையம்!
மாணவர்கள் சில்லறை வர்த்தகர்கள்!
நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள்!
இதில் எங்கும் நடப்பது வர்த்தகம் மட்டுமே!




Saturday, May 31, 2014

யவன் பாடுவான் இனி கீதம்

வனோ என் தெய்வம்
எவன் துஷ்டன் அவனை கண்டு பொருக்காமல்
அவன் தலை கொய்வானோ அவனென்று ஆகாதோ
தவறுகள் கண்டு துடித்து எழுந்து
முடிந்தவரை முட்டி நான் மாண்டால்
என் பின் எவன் எழுந்து தவறுகள் களைய வருவானோ
அவன் என் குல சாமி ஆகானோ
பலனுக்கென்று பாராமல்
யாவருக்கும் தான் கொண்டது கணக்கிடாது
ஈய்து வாழ்பவன் அன்றோ
பின் இறக்காமல் இருந்துகொண்டே இருப்பவனா இறைவன்
இருக்கும் காலம் தொட்டு
வந்ததின் காரணம் உணர்ந்து கடமை முடிப்பவன் வேறு யாரோ
காணும் உயிரெல்லாம் நானே என்று
களத்தில் காண்டிபம் ஏந்தியவனுக்கு
பாடிய கீதம் தானே நான் மேல் சொன்ன தெய்வம் யாவும்
சொன்னது உணராது சொன்னவன் நாமம் சொல்லி மட்டும் இட்டு
இனம் கண்டு குணம் மறந்து
ஈனமாய் வாழும் இவர் மதி உரைக்க
இனி யார் பாடுவர் எந்த கீதம்?



Sunday, April 27, 2014

இல்லாமல் இருந்திருந்தால்

ருத்தியாக தானே வந்து நின்றாய்
ஏன் எனக்கு நவராத்திரி நாயகியாக தெரிந்தாய்
என்னோடு தோள் உரச நடந்து தோழனானாய்
தலையில் தட்டி தவறுகள் திருத்தினாய்
எனை சேயாக்கி தாயாகி
ஏனோ என்கையில் நீயே சேயானாய்
இன்னும் என்னென்னவாகி எனை என்னவாக்கா போகிறாய்?
எங்கோ கிடந்தது பார்த்திடும் மேகமா தாகம் தீர்க்கும்
நீ சீவி முடித்து வரும் கேசம் தீண்டினால் தீராதா?
பார்வை இருப்பதால் தானே
பார்த்துமட்டுமே தாகம் எடுக்க எட்டி நிற்கிறேன்
இல்லாமல் இருந்திருந்தால்
உனை தொட்டு பார்த்திருப்பேன்!
தினமும் உன்னால் அழகாக தெரியும் ஆகாயத்தையும் பூலோகத்தையும்
உன் பார்வையால் இன்னும் அழகாக கண்டிருப்பேன்!

Sunday, March 30, 2014

கோர்க்க நீயா வா!

ரையிர பேய் கூட
ஒத்த மரத்துல தூங்க போயாச்சு
ராத்திரி பொழுதெல்லா
தொலைச்ச தூக்கத்த தேடியே காணாம போகுது
என்னத்த தேடனு எத தொலச்சேனு
தேடும் போதே மறந்து போகுது
தூக்கம் கலஞ்சு கண்ணு தெறக்கும் போது தெரியுது
அதுவர நீ என் கூட பேசினத நினச்சுதா நேரம் போனது
பொண்ணுக்கு காதல் வந்தா
யாருக்கு தெரியாது
செரிக்காத சோரா
அவ நெஞ்சு கூட்டில கிடந்தது வாட்டி எடுக்கு
என் பொழப்பு இங்க வேற
காதல் வந்து வாட்றது எனக்கே தெரியாது
என்னைய வாட்றது அதுனே தெரியாம
என் மலே நானே வெறுப்பாகி கிடந்தே
எவனையும் கூட்டுல சேக்காம தனியாவே திரிஞ்சே
எல்லா புரிஞ்சு சொல்ல வரதுக்குள்ள
நீ போய்டே
நீ போ இப்போ நீயாவே
நா தொலச்சத தேடயில கிடச்சுது ஒ தூக்கோ
நீயாவே தேடிட்டு வா
நீ நானுங்கரத கொர்த்து நாமுனு ஆக்க
ஆயுசு இன்னு இருக்கு காத்துகிடக்க
நா கிடக்கே உனக்காக!

Monday, March 24, 2014

முதல் துளி நீ எனக்கு!

மொட்டை மாடி தூக்கத்தை கலைக்கும் சிறு தூறல் போல
உன் துப்பட்டா தீண்டும் போது
விழித்திருந்தும் மீண்டும் விழிக்கிறேன்..
பேசி முடித்து நீ போகும் போது
அடைமழையில் ஆடி தலை துவட்டி
சிறு தூறல் தேடி கை நினைக்க துடிக்கும் மனமாய்
வேறு என்ன பேச என்று தேடித்துடிக்கிறது..
நீ நில்லாமல் ஏதும் சொல்லாமல்
சிறு பார்வை வீசி குட்டி சிரிப்பை எறிகையில்
மழை தூறல் தாங்கிய இல்லைகள்
என் முகத்தில் சாரல் தெறிக்கிறது..
உன்னோடு நடக்கையில்
அந்த வானம் வெளிக்கிறது
இருந்தும் உன் சிரிப்பில் மின்னல் வெட்டி
அடைமழையே பொழிகிறது..
உனை காணாத போதும்
சிலந்தி வலையில் சிக்கிய துளியாய்
மின்னும் உன்னோடு இருந்த ஞாபகங்கள்..
எங்கிருந்தோ ஆரம்பித்து
ஆயிரம் மையில் கடந்து
எங்கு எதை தொட்டு வந்தபோதும்
என் நெற்றி மத்தியில் வந்து சேரும்
என்னை தொடும்
முதல் துளி நீ எனக்கு!

Thursday, February 13, 2014

பொழிந்திட வா!

வெளுத்திருந்த வானம் எங்கும் முகில் வந்தது
சேர்த்த முகில் அனைத்தும் உடைந்தது
உடைந்த முகில் நீராய் பொழிந்தது
பொழியும் நீராய் நீயே வந்தாய் என்றே ஓடினேன்
நான் வேகம் கூட்டுவதற்குள் ஏன் நின்றாய்??
ஒரு துளியும் நினையாமல்
உன் நினைவில் நான் நின்றேன் மீண்டும் வெளுத்த வானடியில்
மீண்டும் வருவாய் என்று இன்னும் நிற்கிறேன்
நீ பொழிந்தால் போகும் என் மீது நான் பூசிய கரையாவும்
போகும் போனது போனபின்னர் நான் மீண்டும் பிறப்பேன்
பிறந்த என்னை கையில் ஏந்த நீயே வா
நீ வருவாய் என்றே சிரித்துகொண்டு நானும் பிறப்பேன்!
உன் கரத்தில் நான் விளையாடிட
என் கண்ணின் விழியில் நீ உன்னை தேடிட
உன்னை கிள்ளி
உன் கரத்தில் இருந்து நான் கிளம்பிட
நீ துரத்தி வா என்னை
இந்த விளையாட்டு விளையாடிட
என்னை நினைக்க வா
இன்னும் நிற்கிறேன் வா அடியே
என்னை கலைத்து விட்டு போன நீயே – வா
என் மீது பொழிந்திட!





Saturday, February 8, 2014

அனுபவம் புதுமை

நீ மழலை இல்லை
இருந்தும் என் கையில் ஏந்தத்தவிக்கிறேன்
நீ இல்லாத போதும்
உன்னோடு பேசி சிரிக்கிறேன்
பொத்தி வைத்திருந்த பூவிலிருந்து
ஒரு பட்டம்புச்சி பறந்தது
உன் சிறு பார்வை என்னை கடக்கும் நேரம்
என் நிலை மங்கி உதடுகள் புன்னகை ஒன்று பூத்தது
என்னை நானே ரசித்தேன்
சிறு சிரிப்பால் சாகடித்தாய்
ஒரு புன்னகை வீசி எழுப்பிவிட்டு போனாய்
இன்னும் என்ன செய்வாய் – என்னை
என்றே காத்திருக்கிறேன் தினமும்!
காதல் என்று சொல்லிவிட்டால் கனம் குறையும் என்றே
சொல்லாமல் தாங்கினேன் அதோடு உன்னை!
அருகினில் உன்னை கண்டாலே
துளி துளியாய் சிதறினேன்
பட்டாம்பூச்சிகள் அடிவயிற்றில் படபடக்க!
உன்னோடு பேசிவிட்டு நடக்கும் நேரம்
அனைவரும் எனை ரசிப்பது போல் ஒரு கலக்கம் கொண்டேன்
என்ன? என்ற உன் கேள்விக்கு
எவ்வளவோ பதில் யோசித்தும்
ஒன்றுமில்லை என்று மட்டும் சொல்லி நகர்கிறேன்
உறக்கம் எல்லாம் என் அறையில் உறங்கிட
இரவுகள் எல்லாம் காதல் சாயம் பூசி செல்ல
பகல் எல்லாம் பைத்தியமாய்
கண்ணாடியில் என்னை கண்டே நான் வெட்கம் கொள்ள
குரல்வழி தண்ணிர் இறங்குகையிலேயே தாகம் கொள்ளும்
புது அனுபவம் கற்றேன் – உன்னால்
என்றால் பொய் என்று சொல்லும்
உன் மேல் கொண்ட ஈர்ப்பு!




Saturday, January 25, 2014

இனபடுகொலை

ர் இன மக்களை பூண்டோடு அழிப்பது மட்டும் இனபடுகொலை என்றாகாது. இனத்தின் மொழி, சடங்குகள், பழக்கவழக்கங்கள் என அவ்வினத்தின் அடையாளங்கள், அவ்வினம் இவ்வுலகிற்கு ஈட்டித்தந்த கண்டுப்பிடுப்புகள் என ஒட்டுமொத்தத்தையும் ஏதும் இன்றி செய்து அவ்வின மக்களை உயிரோடு விடுவதும் இனபடுகொலையே.

பதினெட்டாம் நுற்றாண்டுற்கு முன்பு இந்தியாவில் எங்கும் பல்கலைக்கழகங்கள் உண்டோ? அதற்க்கு முன்பு இந்த படிப்பறிவு இல்லாமல் தான் வானவியல் சாத்திரங்கள் வந்தது, இரும்பு கிரேக்கம் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது (இப்போது இருப்பது போன்று இல்லாது இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக இருந்தது).

எல்லா வணிகமும் நல்ல முறையில் நடந்து செழிப்பாக இருந்த அந்த காலக்கட்டத்தில் இங்கு இருந்தவர்களுக்கு முக்கியமாக இன்று இன்றியமையாததாக கருதப்படும் ஆங்கிலம் என்ற மொழி தெரிந்திருக்கவில்லை.

சீனாவின் மிக சிறந்த அறிஞர் லின் யுதங் தன் நூலான தி விஸ்டம் ஆப் சீனா அண்ட் இந்தியாவில் (The Wisdom of China and India) கணித குறியீடு, கணித சமன்பாடுகள் இலக்கணம் புராதன கதைகள், சதுரங்கம் ஆகியவற்றை, இந்தியாவிடம் இருந்து தான் இந்த உலகம் கற்றுக் கொண்டது என்கிறார்.

இங்கே கலை, கணிதம், அறிவியல், வானவியல், வரலாறு, மொழி என இப்போது பிள்ளைகள் தனித்தனியே படிப்பது எல்லாம் ஆன்மிகம் என்ற ஒன்றில் தான் இருந்தது. கோவில்கள் அன்றைய தினத்தில் வழிப்பாட்டு தளங்காலக மட்டும் இல்லாமால் அறிவை போதிக்கும் பாடசாலைகளாகவும் இருந்தது.

உதாரணம், வழிப்பாடு தளங்களில் உள்ள நவ கிரகங்கள் (9 planets), இவற்றை கண்டறிந்தது யார் என கேட்டால் இப்போது உள்ள பிள்ளைகள் சொல்லும் பெயர் கலிலியோ, பதினைந்தாம் நூற்றாண்டிற்கு பின் வாழ்தவர். இந்த நவகிரக வழிபாடு என்பது நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு இருந்து வந்துள்ளது. ஆனால் அறிவியலின் தந்தை என அழைக்கபடும், இதை உரைத்தவரான கலிலியோ பிறந்தது ஆறு நூற்றாண்டிற்கு முன்.

பகுத்தறிவு என்பது அறிவுக்கும் அடுத்த நிலை. நடக்கும் ஒன்று நல்லதாயினும் தீயதாயினும் அவற்றில் உள்ள நன்மை தீமைகளை பகுத்து அறிந்து நல்லதை மட்டும் எடுத்து வாழ்வாதாரத்தின் மேன்பாட்டுக்கு பயன்தருமாறு இருத்தல்.

ஆனால் இங்கு பகுத்தறிவாளிகள் என கூறிக் கொள்வோர் கடவுள் இல்லை என்ற பேச்சால் ஆன்மிகம் சார்த்து இருந்த எல்லா வாழ்வாதார மேன்பாட்டு சடங்குகளையும் தீயிட்டு கொளுத்தினர் செய்வோர் அனைவரையும் மதிகெட்டோர் என்றனர்.

பல நூற்றாண்டாக மாட்டின் சாணம் கொண்டு வாசல் தெளித்து கோலம் இட்டவர்களை கழிவில் இறைவி லட்சுமியா என இழித்து பேசியவர்கள். இன்று அறுவியல் சாணத்தில் கிருமி நாசினிகள் உண்டு என சொன்னா போது ஏதும் பேசவில்லை. இன்னமும் வளராத அறுவியல் சொல்வதை நம்பும் இவர்கள்,  நூற்றாண்டுகளாக வந்த பழக்கங்களை அதின் ஆள் அர்த்தத்தை அறியாதவர்கள், பகுக்க தெரியாதவர்கள் பகுத்தறிவாளிகள்.

நேர்மாறான கூற்று இடாலியில் (பைசா) நடந்தது, கலிலியோ தான் எழுதிய "டையலாக் கண்செர்நிங் தெ டூ சீப் வேர்ல்ட் சிஸ்டம்சில்" என்ற நூல்லில் சூரியன் உலகை சுற்றவில்லை உலகம் தான் சூரியனை சுற்றுகிறது என்ற தன் சூரியமைய கொள்கைக்கு நிறைய ஆதாரங்கள் அளித்தார் . ஆனால் அது போப் அர்பன் VIIIஐ தாக்குவது போல் தோன்றியதால், அவர் புலன் விசாரிக்கப்பட்டு வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார். இது வேறு கதை.

இங்கு பகுத்தறிவாளிகள் செய்திருக்க வேண்டியது, அன்று சில வகுப்பினர் மட்டும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப் படவில்லை. ஆதலால் அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. அவர்களும் கோவிலினுள் சென்று பயில வழி செய்திருக்க வேண்டும். கோவில்களில் உள்ள கல் வெட்டுக்கள் தெரியா வண்ணம் கற்பூரம் ஏற்றுபவர்களை தடுத்தல். அவர்களுக்கு கோவிலின் உண்மையான அர்த்தத்தை புரியவெய்தல் இது எல்லாம் செய்திருந்தால் பகுத்தறிவாளிகள்.

ஆள்பவர்கள் கையாண்டது இரண்டு வழிகளை. முதல் வழி ஆங்கிலயேர் கையாண்ட வழி பிரித்து ஆளுதல் (Divide & Rule) மொழியின் பெயரால் மக்களாட்சி வந்த நேரத்தில் தேசிய மொழியயை எதிர்த்து ஏதோ தமிழுக்கு பங்கம் வருவதாய் காட்டி ஓட்டு சேர்த்தனர். ஒட்டு மொத்த மக்களையும் தேசிய மொழியாக இருக்கும் இந்தி மொழிக்கு எதிராக நிறுத்தினர்.
பல குறுநில மன்னர்கள் ராஜியங்கலாக, வேறுபட்ட பழக்கவழக்கங்களை கொண்டு, வெவ்வேறு மொழிகள் பேசி இருந்த சிறு நிலங்களை ஒரு நாடாக இனைத்து அதற்க்கான ஒரு பொது தேசிய  மொழியாக இந்தி அருவிக்கப்பட்டது. அதனை கற்க விடாமல் தமிழ் மக்களை தனிமைபட செய்து. மத்திய அரசாங்கம், பிற மாநில மக்களுடன் நல் உறவு இல்லாமல் போனதருக்கு காரணமாய் இருந்தது இந்தி எதிர்ப்பு போராட்டம்.

இப்போது அன்று இருந்த தமிழும் இல்லை, தேசிய மொழியும் இல்லை இங்கு. அந்நிய மொழியாம் ஆங்கிலம் தெரிந்தவர்களே அறிவாளியாக சித்தரிக்க படுகிறார்கள்.
இந்தி ஆதிக்கம் செய்யாமல் தடுத்து, தமிழையும் கல்வி மொழியாக தந்திருந்தால் பகுத்து அறிந்து செயல் பட்ட பகுதரிவாளிகளாய் கொண்டாடலாம். இந்தியை எதிர்த்தவர்கள் ஆங்கிலத்தை பள்ளிகளில் மேலோங்க விட்டது எதனால்.

வெளிநாட்டவரின் யோசனைகளை கண்டு வியக்கும் இவர்கள், வேதம் எல்லாம் பொய் என பொதுவாய் தூக்கி எறிந்த இவர்களுக்கு தெரியுமோ இனி வரும் சமுதாயத்திற்கு தெரியுமோ இல்லையோ, அணுகுண்டு எனப்படும் மிக மோசமான கண்டுபிடுப்பு, வெடித்த நாளில் இருந்து பல நுற்றாண்டு காலம் வெடித்த சுற்றளவில் உயிரினம் வாழ விடாது செய்யும் மிக கொடியதும் சக்திவாய்ந்ததுமான இவற்றின் தந்தை என அறியப்படும் ஜெ. ராபர்ட் ஒப்பென்ஐமர் (J Robert Oppenheimer) ஜப்பானில் இரு குண்டுகள் வெடித்த பின் சொன்னா வார்த்தைகள்,

In battle, in the forest, at the precipice in the mountains,
On the dark great sea, in the midst of javelins and arrows,
In sleep, in confusion, in the depths of shame,
The good deeds a man has done before defend him

பகவத் கீதையில் இருந்து.

மற்றொரு வழி, நம் நீண்ட நாள் நம்பிக்கையை பொய் என உரைப்பின், அதற்க்கு நம்பத்தகும் சான்றுகள் கேட்குமிடத்தில் கவனம் குவியும். அப்படி கடவுள் இல்லை என்ற கோசம் உயர்த்தப்பட்டது.


இதனால் திருமூலரின் திரு மந்திரம் (தமிழ் நூல்) பல விஞ்ஞான மெய்ஞான கூற்றுகள் நிறைந்த நூல் ஒதுக்கப்பட்டது.

“அணுவின் அணுவினை ஆதிப்பிரானை
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே
"


இன்று அணுவின் கூறுகளை அன்றே சிவன் மேல் பாடாலாய் பாடியிருந்தார் திருமூலர்.  இவர் வாழ்த்த காலம் ஐந்து முதல் எட்டாம் நுற்றாண்டு முடிய மூவாயிரம் வருடங்கள் வாழ்ந்தவர். தொலைநோக்கி நுண்ணோக்கி போன்றவை வராத காலம், இவை இரண்டும் வந்தது பதினாறாம் நூற்றாண்டுக்கு பின்னரே. இந்த கூற்றை பகுத்து அறிய முடியாத பகுத்தறிவாளிகள் சொன்னது தான் கடவுள் இல்லை என்ற கூற்று.

Thursday, January 2, 2014

மார்கழித் திங்கள்

ன் பேர் எழுதின அரிசி விளையும் நிலம்
நீ வகுடு எடுத்து வாரும் உன் தலை  நேரடி
உன் உச்சந்தலை தாண்டி
அந்த வகுடு வழி வலிஞ்சு
உன் கூர் மூக்கின் நுனியில்
தாண்டவம் ஆடும் ஒரு பொட்டுத் துளி
அந்த துளி போதும் என் ஜென்மத்தின் தாகம் தனிக்க
அதுவும் தர மறுத்து சினுங்கி
உயிர் இருக்கும் நாள் வரை
நான் கிடந்தது உறங்கிட ஏங்கும் உன் இதழ் தொடுமாயின்
அந்த துளியாய் நான் மாற மாறும் என் தாகம்
காற்று வந்ததால் கொடி அசையுதோ
இல்ல கொடி அசைவதால் காற்று வந்ததான்னு
குழம்பி கிடக்கும் யாருக்கும்
உன் மூச்சு காத்தில் என் ஜீவன் வாழ்வது தெரிந்தால் என்னவாகுமோ?
கள்ளி நீ நீயா வந்து சிரிச்சாலு
பேயா மாறி வந்து பகை சொன்னாலு என் கண்ணுல காதல் குறையாது
இந்த சப்பாத்தி கள்ளி வாழ மும்மாரி கேட்காது
இந்த மார்கழி பனிகூட தந்ததில்லை
என் மார்பின் ஓரம் நீ சாய்ந்து படுத்து
உன் இதழின் ஈரம் படுகையில் என் உடலில் பரவும் சிலிர்ப்பை
இம்மாதம் வரும் நல்ல நாளும் கெட்ட நாளும்
எல்லா நாட்களும் பரமனவனுக்கே என்று
ஏது காரியமும் தைக்கு ஒத்தி போடுவர்
நீ அங்கு உறங்கிக் கிடக்கையில்
என் இமையா ஓய்ந்திடும்
இந்த உறக்கத்தை நானும் ஒத்திவைப்பேன்
நானும் எதையும் மறந்து ஆந்தை என விழித்திருந்து
உன் உறக்கத்தை ரசிப்பேன்
பாதியில் நீ சிறு பார்வை திறந்து
என்னவென்று கேட்டு என்னை உறங்கிட சொல்வாய் பாதி கண்ணால்...
என் கரம் பரவி கிடக்கும் உன் கேசம்
என் இரவென நானும்
என் கனவே என் மார்பில் கிடந்திட
இனி என் தூக்கத்தில் என்ன வருமோ என கண் அசர்வேன்
நானும் அரசனாவேன் என் அரசியென உன்னை பார்ப்பதால்!