Sunday, March 30, 2014

கோர்க்க நீயா வா!

ரையிர பேய் கூட
ஒத்த மரத்துல தூங்க போயாச்சு
ராத்திரி பொழுதெல்லா
தொலைச்ச தூக்கத்த தேடியே காணாம போகுது
என்னத்த தேடனு எத தொலச்சேனு
தேடும் போதே மறந்து போகுது
தூக்கம் கலஞ்சு கண்ணு தெறக்கும் போது தெரியுது
அதுவர நீ என் கூட பேசினத நினச்சுதா நேரம் போனது
பொண்ணுக்கு காதல் வந்தா
யாருக்கு தெரியாது
செரிக்காத சோரா
அவ நெஞ்சு கூட்டில கிடந்தது வாட்டி எடுக்கு
என் பொழப்பு இங்க வேற
காதல் வந்து வாட்றது எனக்கே தெரியாது
என்னைய வாட்றது அதுனே தெரியாம
என் மலே நானே வெறுப்பாகி கிடந்தே
எவனையும் கூட்டுல சேக்காம தனியாவே திரிஞ்சே
எல்லா புரிஞ்சு சொல்ல வரதுக்குள்ள
நீ போய்டே
நீ போ இப்போ நீயாவே
நா தொலச்சத தேடயில கிடச்சுது ஒ தூக்கோ
நீயாவே தேடிட்டு வா
நீ நானுங்கரத கொர்த்து நாமுனு ஆக்க
ஆயுசு இன்னு இருக்கு காத்துகிடக்க
நா கிடக்கே உனக்காக!

Monday, March 24, 2014

முதல் துளி நீ எனக்கு!

மொட்டை மாடி தூக்கத்தை கலைக்கும் சிறு தூறல் போல
உன் துப்பட்டா தீண்டும் போது
விழித்திருந்தும் மீண்டும் விழிக்கிறேன்..
பேசி முடித்து நீ போகும் போது
அடைமழையில் ஆடி தலை துவட்டி
சிறு தூறல் தேடி கை நினைக்க துடிக்கும் மனமாய்
வேறு என்ன பேச என்று தேடித்துடிக்கிறது..
நீ நில்லாமல் ஏதும் சொல்லாமல்
சிறு பார்வை வீசி குட்டி சிரிப்பை எறிகையில்
மழை தூறல் தாங்கிய இல்லைகள்
என் முகத்தில் சாரல் தெறிக்கிறது..
உன்னோடு நடக்கையில்
அந்த வானம் வெளிக்கிறது
இருந்தும் உன் சிரிப்பில் மின்னல் வெட்டி
அடைமழையே பொழிகிறது..
உனை காணாத போதும்
சிலந்தி வலையில் சிக்கிய துளியாய்
மின்னும் உன்னோடு இருந்த ஞாபகங்கள்..
எங்கிருந்தோ ஆரம்பித்து
ஆயிரம் மையில் கடந்து
எங்கு எதை தொட்டு வந்தபோதும்
என் நெற்றி மத்தியில் வந்து சேரும்
என்னை தொடும்
முதல் துளி நீ எனக்கு!