Friday, November 25, 2011

பகு கூட்டல் அறிதல்



என் ஆண்டவனுக்கு இன்னமும் அஞ்ஞாதவாசம்,
அதனால் தான் அவனுக்கு இன்று இத்துணை வேசம்!
யாரெவர் எப்பெயரில் வேண்டினாலும்,
தருவதும் வருவதும் அவன்
அவனிடத்தில் இருந்து தான்!
வனால் பிரிவினையாம்,
அவனால் மதமாம்,
மதத்தால் ஜாதியம்,
ஜாதியால் ஏற்றத்தாழ்வாம்,
இவையால் வெறியாம்,
வெறியால் உயிர் பலியாம்!
இத்துணைக்கும் காரணம் அவன் என அவன் மேல் பழி யாம்,
அவன் இல்லை என்று சொன்னால் பலி நின்றுடுமாம்!
பெரிய பகுத்தறிவாளிகளின் பலர்  முறையே சொல்லும் கதை இது.
தண்ணீரும், இந்த தமிழ்லும் பிரச்சினைகள் கொண்டுவந்திடுதலால்
தள்ளி வைப்பது என்ன முறை!!?
ஜாதகம் ஜோசியம் பஞ்சாங்கம் எல்லாம்
பழைய கிழவியின் அர்த்தமற்ற திண்ணை படைப்பாம்,
இது தான் இந்த கருப்பின் கூற்று!
நீண்ட பாதை செல்ல
வழி நெடுகிலும் பலகைகள் பல உண்டு
விபத்துகள் நேரிடும் பகுதி என எச்சரிக்கை அதில் கண்டு
திரும்பிப் போகும் அறிஞரிடத்தும்,
காணாது போகும் பகுத்தறிவாளரிடதும்
உள்ளது என்பேன் மூட நம்பிக்கை!
இவர்கள் யாவரும் பேசுவது எது வரை,
வெளியே பிச்சையிட்டு
உள்ளே உன்னிடத்தில் பிச்சை கேட்ப்போரின் உரை வரை!
தூது சொல்ல வந்தவர்கள்
நாடாள்வது என்ன முறை..?
நீயே கேட்பாய் இவர் குறை.
எத்தனையோ தோஷக்காலங்கள் உனக்கு உண்டு
அதில் கடந்து போகும் பகுக்க தெரிய கருப்பு துண்டு!
எத்தனையோ பெயரில் உன்னை தொளுததுண்டு,
இது உன்னை இல்லை என்று சொல்லும் மதம்,
இந்நாட்டு அரசியலுக்கு துணையாய் நீயும்
தமிழும் உண்டு!

--சித்ரன்


Tuesday, November 22, 2011

எனக்கென ஒருத்தி..

நான் எழுதுகையில் – மற்றொரு
கையில் ஏந்திக்கொள்ள சிணுங்கும் ஒருத்தி!
வேலைக்கு கிளம்பும் அவசரத்தில்,
முத்தம் தந்து மறையும் முகம் அவளுடையது!
என் முத்தத்தை எச்சை என துடைத்துக் கொண்டே,
இன்னொன்று எதிர் பார்க்கும் – அணைக்கும்
பார்வை அவளுடையது!
நடை பழகுபவள் போல் – எப்போதும்
என் கரம் பற்றி நடக்கும் – என்னை
வீழ்ந்துவிடாது காக்கும் கரம் அவளுடையது!
ஆண் பெண் பேதம் அறிந்தது முதல்-
நான் உணர்ந்த முதல் வாசம் அவளுடையது!
என் இதழை நினைத்த மறு இதழ் அவளுடையது!
என் மேல் புரண்ட – நான்
புரட்டி கற்றறிந்த புத்தகம் அவள் தேகம்!
எனக்காக கண்ணீரும் சுரந்து ,
என்னை தடுமாறியும் விழ செய்யும் சிறு கண்கள் அவளுடையது!
என் கைகள் கசக்க பூ சுடும் கூந்தல் அவளுடையது!
என் மகிழ்ச்சியாய் வந்த அவள்என்றும்
எனக்கான எனக்கென ஒருத்தி!




Saturday, November 19, 2011

இழப்பதில்தான் இன்பம்!

நாம் பெற்றவை எல்லாம் ஒன்றை இழந்து தான்,
ஆனால் யாரும் இழக்க தயாராய் இல்லை.
பெற எப்போதும் தயங்குவது இல்லை.
இதை இழக்க மட்டும் ஏனோ துடிக்கிறோம்,
ஊரை கூட்டி நேரம் கேட்கிறோம்,
இதை இழந்ததை நிரூபிக்கவே
கோயிலை சுற்றுகிறோம்.
ஆணாகட்டும் பெண்ணாகட்டும்,
கற்பை இழப்பதற்கே சேர்கிறோம்.
பெண்ணானவள் செல்வியை இழந்து திருமதி ஆகிறாள்,
ஆண் என்பவன் பிரமச்சரியத்தை இழக்கிறான்,
இன்பம் இல்லையேல்
இயற்றமாட்டார் இத்திருமணச்சடங்கை!




Monday, November 14, 2011

எதுவோ நிரந்தரம்!?

நானும் நீயும் நிரந்தரமோ..?
நானே போனபின் நீயிருன்தென்ன அவனிருந்துஎன்ன,
பரமனவன் இருந்தும் என்னக்கென்ன.
யாரோ சொல்லக் கேட்ட நிரந்தரம் என்ற வார்த்தை
நிரந்தரம் என்பதில் நிதர்சனம் ஏதும் இல்லை.
மாறி மாறி போன மொழியை பற்றி
வேள்வி நடத்தி,
மக்களை போட்டு எரித்து அரசியலும் செய்வர்,
எம் மொழி நிரந்தரமோ..?
மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டால் நிரந்தரமென்றாககுமோ,
மாறிப்போனால் நிரந்தரமெங்கே ஆவது.
எதுவோ நிரந்தரம்..?
உணர்ச்சிகளேனும் நிரந்திரமோ..?
இச்சைகளேனும் நிரந்திரமோ..?
நிரந்திரமாயின் பலர் பரத்தையர் சேரியிலேயே குடிகொண்டிருப்பர்,
மாறி மாறி மாற்றங்கள் கண்டு மக்கும்
பூத உடலே நிரந்திரமற்று இருக்கும் போது
அது மேல் கொள்ளும் இச்சை நிரந்தரமென்றாககுமோ..?
காதல் நிரந்தரமோ..?
கல்யாணத்திற்கு பிறகு பிறர்பால் வருவது
கள்ளக்காதல் எனில்,
யாரையோ காதலித்து விட்டு யாரையோ கை பிடிப்பது
கள்ளக்கல்யானம் ஆகாதோ..?
இப்படி கள்ளம் இருப்பது நிரந்திரமாகுமோ..?
கள்ளமேனும் நிரந்திரமோ..?
பழகியதை மாற்ற முடியுமோ,
மனம் போனதையாவது சொல்ல முடியுமோ..?
இந்த பாசமேனும் நிரந்திரமோ..?
பிறகு எதற்கு இத்துனை குழந்தைகள் அநாதை என்ற மதத்தில்..?
பற்றின்றி வாழ்வது வாழ்வு என்றவன் புத்தனவன்,
யாரும் பற்றோடு இராதீர் என்ற
பற்றை  மறந்தும் விடாமல் பற்றி இருந்தவன்,
அவன் பற்று நிரந்தரமோ..?
இதோ என் தேடல்
என் நாள் முடியும் வரை விடை காணாது இருந்தால்,
அதுவரை என் தேடல் நிரந்தம்!

--சித்ரன்


Sunday, November 13, 2011

எ மக!

ன் பிரணாப் பெருங்கனலால்
என் இனயவள் உதிர்த்த
வியர்வையின் உன்னதம் நீ!
உன்னை நுட்பமாய் தொட்டு ரசித்து சொல்லும்போது
எதுவும் புரியாமலேயே அவளோடு சிரிப்பேன்!
நீ நடக்கும்வரை நானும் உன்னோடு தவழ்வேன்,
அந்த வெயிலின் வெப்பத்தால் மட்டும்மல்ல -
என் உள்ளங்கையின் வெப்பத்தால் வளர்பவள் நீ,
என் கை பிடித்து நடக்கும் என் அன்னை நீ,
என் மார்பில் தூங்கும் என் அன்னை நீ,
சாப்பிட மறுத்து என் முகத்தில் உமிழ்ம் என் அன்னை நீ,
பள்ளி செல்ல அடம் பிடிக்கும் என் அன்னை,
என் தோளில் சாய்ந்து அழும் என் அன்னை நீ,
தாவணி போட ஊர் பார்க்க
வெட்கத்தில் என் பின்னல் ஓடிப்போய் ஒளியும் என் அன்னை நீ,
அடுத்தவன் கைபிடித்து உன்னை தாரைவாற்கும்போது -
கண்ணீர் துடைக்கும் என் அன்னை நீ,
நான் வளர்க்கும் என் அன்னை நீ,
என் வாழ்வின் ஆதாரம் நீ,
எங்கள் காதலின் அடையலாம் நீ,
என் மூன்றாம் அன்னை நீ!

--சித்ரன்



Saturday, November 12, 2011

நிஜத்தில் பொய்யாக

நினைவுகளோடு உறவாடி,
கனவுகளோடு சிரித்து,
நிஜத்தில் பொய்யாக புன்னகைத்து,
நடந்ததை மறந்து,
எனக்கு நானே உண்மையை மறைத்து,
வாழ தயாராகிறேன் தினம் தினம்!




Saturday, November 5, 2011

அவள் பெயர்!


தாவது நினைக்கும் போது வரும் அழுகைகும்
அழும்போதெல்லாம் வரும் நினைவுக்கும் -
இடையில் இருக்கும் அவள் பெயர்!
நீண்ட மௌனத்தை கலைத்து,
என்ன என்ற கேள்விக்கு
பதிலாய் வரும் ஒன்றுமில்லை -
என்பதில் இருக்கும் அவள் பெயர்!
காலை கண்கள் உறக்கத்தை உதறும் போதும்
இரவில் கண்கள் உறக்கத்தை அணைக்கும் போதும்
சட்டென வரும் நினைவு போல் அல்லாமல்,
சலனம் ஏதும் இன்றி எப்போதும்
என் மனதின் முனுமுனுப்பில் இருக்கும்
அவள் பெயர்!
அதுவாவது எனக்கானதாய் இருக்கட்டும்
எனக்கான எனக்கு மட்டும்மான
அவள் பெயர்!

--சித்ரன்

குறுக்கு சிறுத்தவள்!


லை கொதிப்பு போல் இவள் இயக்கம் இருக்கும்,
போட்டுத்தந்த பாதையில் மட்டுமே
இவள் பயணம் இருக்கும்,
அதிகம் ஒடிந்து போகமாட்டாள்,
அதிகம் உழைப்பில் களைக்கமாட்டாள்,
அதிகம் சுமப்பாள்,
யார் குருக்கிடினும்
இவள் கூர் வேகம் குறையாது,
இவள் பாதை இவளுக்கு மட்டுமே.
இப்படியும் ஒருத்தி வந்திருக்கிறாள்,
அதுவும் எப்போது என்பதை
எண்ணுதல் ஆச்சரியம் கூடும்.
எந்த பாதையிலும் சென்று,
வருவோர் போவோருக்கு வளைந்து கொடுத்து,
இப்படியாக இருந்தவர்கள் வாழ்த்த காலத்தில்
இவளும் வந்திருக்கிறாள் எனில்
இவளை பெற்றவனை என்னவென்று வைதிருப்பர்!
பலர் சிலாகித்திருந்தாலும்
சிலராயினும் சீன்டியிருக்கலாம்!
ஆனால் இன்று,
அவள் இடுப்பை வளைத்து செல்லும்
அழகை பார்க்கமாட்டார் இல்லை,
தினம் தினம் பார்பவருக்கும்
பரவசம் குறையவில்லை
யாருக்கும் குறையாத அவள் கூர் வேகம் போல்,
விழியில் பிரமிப்பு போகவில்லை
அவளோடு பல முறை பயணம் செய்தும்.
நன்றி மீண்டும் வருக என இரு கரம் கூப்பி
சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறாள்
அவளோடு பயணம் முடித்து
அவரவர் பாதை பார்த்து போவோருக்கு இன்று!
எப்போதோ எவனோ கொஞ்சம் மாத்தி யோசித்திருக்கிறேன்
மண்டைக்காரன் அவன்!

--சித்ரன்