Thursday, July 7, 2016

ஒழுங்கீனம்!

அவள் பொதுவாழ்வில் இல்லை
பொது சொத்துக்களை களவாடவில்லை
பொது இடத்தில் கொலை செய்யப்பட்டதால்
அவளை தீக்குளித்துக் காட்டச்சொல்ல – இங்கு
ராமன் எவனும் இல்லை!
ஓங்கி ஒரு கல் எரிய துப்பில்லாதவன்
துப்பு தரவும் துப்பில்லாதவன்
அதற்க்கு ஓராயிரம் காரணங்கள்
இவனுடன் நடக்க எவரும் வருவரோ
உடன் வருவோர் தடுக்கி விழுந்தாலே
ஐயோ என இவன் அலறி ஒதுங்குவான்
இனியும் எத்தனை காலம் காரணம் தேடுவோம்
தைரியம் இல்லை என்பதை மறைக்க!