Sunday, September 17, 2017

புத்தரின் இனவெறி

னிதா – தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதுவும் பரிச்சயமான பெயர். அவளின் மரணத்திற்கு பின் இருக்கும் அரசியலை தாண்டி, நீட்டை தாண்டி நம்மோடு நம் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை நேற்று வரை பங்கிட்டுக் கொண்டிருந்த ஒருத்தி இன்று இல்லையே என்ற ஆதங்கம் தான் இன்று பலரை உலுக்கியது.

அந்த ஆதங்கம் ரோகிந்திய இன மக்கள் மீது இந்திய அரசாங்கத்திற்கு இல்லாமல் போனது மிக வருத்தம்.

யார் இவர்கள், இசுலாமியர்கள் என்ற ஒற்றை வார்த்தையால் இன்று அண்ட நாடில்லாமல் ஒவ்வொரு நாட்டின் எல்லையிலும் நிற்கும் நாடோடியானவர்கள்.

உலகப் போரில் அமெரிக்கா சப்பானில் வீசிய அணுகுண்டின் வீச்சு இன்னமும் இருப்பதை போல இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியுற்ற போது இந்துக்களுக்கும் முசுலீம்களுக்கும் இடையே பிரிவினையை உண்டாக்கி பிரித்து சுதந்திர வேட்க்கையை நீர்த்து போக செய்த சூழ்ச்சி இன்றும் காச்மீரில் நம் மக்களை இழந்து கொண்டிருகிறோம். அது போல தான் மியான்மர் பர்மாவாக இந்தியாவோடு கிழக்கு இந்திய கம்பெனியின் ஆதிக்கத்தில் இருந்த போது பர்மா மக்கள் எதற்கும் லாயக்கு அற்றவர்கள் என்று ஒதுக்கி இந்தியர்களுக்கும், ரோகிந்திய இன மக்களுக்கும் அன்றைய முன்னுரிமை வழங்கியது.


அந்த வெறுப்பு சுதந்திரம் அடைந்து இராணுவ ஆட்சியில் 1982ல் அவர்களின் குடியுரிமை பறிக்கம் அளவு வளர்த்திருந்தது. திருமணம், கல்வி, வழிபாட்டு தளம் என அனைத்தும் மறுக்கப்பட்டன.

8/8 /1988ல் எழும்பும் 8888 (8888 uprising) என மாணவர்களால் ஏற்ப்பட்ட புரட்சியில் ஆங் சங் சுகி அடையாளம் காணப்பட்டார். ஒரு அகிம்சைவாதியாக தன்னை பிரகடனப் படுத்திக்கொண்டார். அந்த புரட்சிக்கு பின்னும் ரோகிந்திய இன மக்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் சுகி இராணுவ ஆட்சியை வெறுத்த இராணுவ அதிகாரிகளை கொண்டு கட்சி ஒன்றை துவங்கி 2015ல் ஆட்சி அமைத்தார். அதன் பின் ரோகிந்திய மக்களின் நிலை இன்னமும் மோசமாது. இதற்க்கு இடையில் 3/9/2014ல் அல் காயிதா அமைப்பு வெளியிட்ட கானொளியில் மியான்மர் முசுலீம்களை நாங்கள் மறக்கவில்லை. அவர்களை காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம் என்றது. அதற்கு அங்கிருந்த முசுலீம் குழுக்கள் எங்கள் தாய்நாட்டிற்கு எந்த அச்சுறுத்தல்களையும் ஏற்க்க மாட்டோம் என்று அறிக்கை வெளியிட்டது.

ஆனால் இன்று ‘மியான்மருக்கு திரும்புவதை வீட இந்தியாவில் மடிவதே மேல்’ என்ற ஒரு ரோகிந்திய அகதியின் வார்த்தை உணர்த்தும் அவர்கள் நிலையை.

பெளத்த சமயத்தை பிரதானமாக கொண்ட இலங்கையில் நடந்த கொடுமையின் நீட்சியே அதே பௌத்தத்தை கொண்ட மியான்மரில் அரங்கேறி வருகிறது.

துன்பத்துக்கான காரணம் பற்று என்ற புத்தரின் வழிவந்தவர்கள் மியான்மரை தங்கள் நாடு என சொந்தம் கொண்டாடி இவர்களின் குடியிரிமைகளை பறித்து விரட்டும் போது தென்னகத்தில் உள்ளவர்களை கீழ் பிறப்பாகவும், சமணர்களை கழுவேற்றிக் கொன்று தங்கள் சைவ சமயத்தை நிலை நிறுத்திய இந்தியா இவர்களால் தீவிரவாத அச்சுறுத்தல் வரும் என்று தடுப்பதில் எந்த முரணுமில்லை.

அல்லாவின் பெயரை சொன்னதற்காக ஒடுக்கப்பட்ட போது படை திரட்டி போரிட்ட முகமது நபியின் அந்த ஒரு சித்தாந்தத்தை மட்டுமே தவறாக புரிந்து கொண்டு இன்று சில குழுக்கள் அல்லாவின் பெயரை சொல்லி செய்யும் கொடுமைகள் இன்று அனைத்து முசுலிம்களையும் பயங்கரவாதிகளாய் பார்க்க வைக்கிறது.

இங்கு இனம், மொழி, நாடு என்று சொல்லி தினம் பல கொடூரங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் எல்லாம் தனியாக அடையாளப்படுதப்படுவதில்லை. குல்லாவும் தாடியும் வைதிருப்பாதால் இவர்களும் பயங்கரவாதிகள் என சொல்வது நம்மிடையே பகுத்தறிவு குறைவதையே நிருபிக்கிறது.


ஜெர்மனியில் தான் யூதன் என்றால் உடனே விசாரணைக்கு எடுத்து சென்று விடுவர், தான் ஜெர்மானியன் என்றால் தானில்லாது முன்னர் வாழ்த்த மூன்று தலைமுறையினரும் ஜெர்மானியர்கள் தான் என நிருபிக்க வேண்டும் தவறினால் விசாரணை கைதி தான், இது ஹிட்லர் கால நடை முறை. இன்று நாமும் அதையே தான் செய்து கொண்டிருக்கிறோம் ஹிட்லரை மட்டும் மனித மிருகம் என திட்டி தீர்த்து கொண்டு.


No comments:

Post a Comment