Sunday, May 5, 2019

இயற்கை!

ருட்டிலேயே இருந்து விட்டால் - வெளிச்சம்

போய் வந்தால் கவலை இல்லையே!

இறக்கும் வரை இருந்து விட்டால் - அதுவே

ஒரு சரித்திரம் என்று யாரும் உணர வில்லையே!

பல கோடிகளை கொன்று விட்டு வந்து சேர்ந்தது நீயும் நானும்

இன்னும் இங்கே எதை சேர இத்தனை ஓட்டம்?

சிந்தனை என்பதை நிறுத்திவிட்டால் காடே வீடுதானடி

நாம் அங்கு இருந்தவரையிலே எந்த புலியும் சாகவில்லையே

புலி பசிக்கு மான் தான்

எந்த புலியும் மானின் வம்சம் அழித்ததில்லையே

என்னை உன்னை சாகடிக்கும் ஏதும் இன்று இல்லையே

நானும் நீயும் தின்று ருசிக்கும் கோழி நம்மை வீட கூடவே

நம்மை அழிக்கும் எந்த உயிரும் அத்தனை இன்று இல்லையே

இனி நீயும் நானும் அடித்து கொண்டால் - மீதி

அந்த கடவுள் மட்டுமே!



No comments:

Post a Comment