Wednesday, February 29, 2012

இவ்வுறவை யாதென கொள்வேன்?

காலம் கடந்தும் கதைக்க செய்யும்
காதல்!
முதல் இரவோடு முடித்துக்கொள்ள துடிக்கும்
இச்சை!
காதல் என்ற சொல்லிற்கு காமம் என்ற பொருள் உண்டு
இச்சை என்ற சொல்லிற்கு காதல் என்ற பொருள் உண்டு
காமம் கடந்தும் இருந்துவிடின் காதல் என்று கொள்க
காதல் முடிந்தவுடன் இருக்க ஏதும் இல்லை எனில் இச்சை என்று கொள்க
இச்சை தீர்ந்த பின்பே உறுதிபட சொல்ல முடியுமோ காதலா என்று?
எதுவாயினும் நீ இன்றி என்னால் 
சுகமொடும் சுமையோடும் காலம் தள்ள முடிகிறதே
இவ்வுறவை யாதென கொள்வேன்?