Sunday, March 13, 2011

நான்

ல லட்சம் பேர்களை தள்ளிவிட்டு,
இலக்கு ஒன்றே குறியென பாய்ந்துத் தொட்டவன்,
லட்சம் உயிரை மாய்த்து குடத்தைக் குடைந்து அமர்தவன்..
சில ஆயிரம் பேரை கண்டோ திரும்பி நடைக்கட்டுவன்!
பாம்பின் கால் பாம்பு மட்டுமே அறிந்திடும் எனில்,
யானும் யாவரும் தாரிகை தான் முதலில்,
அவள் மனம் அறியேனோ!
யார் துணை உண்டு என்று அறியாமலே இதையம் துடித்தவன்,
எந்த வினைக்கு அஞ்சி நடிகிடுவேன்!
ஏதும் அறியாமல் நான் வரைந்தக் கோடு,
ரேகை என எதிர்காலம் சொல்லும் போது..
தூரிகையில் நான் போடும் கோடு அர்த்தம் பெறாதோ...
ஒரு குடம் நீரில் சில நூறு நாள் களித்தவன்,
இந்த குறு நிலம் ஆசையிலோ கர்மம் பிடிப்பேன்!
இருந்தது போதும் என்றே முட்டி முயற்ச்சித்து,
முகம் காட்டினேன்,
தோல்விக்குச் சுணங்கியோ முகவரி இழப்பேன்!
இருட்டுக் குடத்தில் சுருங்கிக் கிடந்தவனுக்கு,
பால் உண்ண கற்றுகொடுதவன் யார்..?
கங்கின் மேல் அமர்ந்து நெருப்பு மூட்டியது மாபெரும் துவக்கமாம்!
என் சிந்தைக்கு வழி காட்ட ஆள் வேண்டுமா!!?
துவக்கமே அறுத்துத் துவங்கிய போது,
உறவுகள் ஒட்ட வருவது எதுவரையோ..?
நீயின்றி நான் இல்லை என ஒட்ட வரும் உறவு,
என் பிறப்பு வரை வாழ்ந்தது எங்கனம்..
போகையில் அழைத்தால் வந்திடுமோ..?
கடைசியில் கடவுளே கதி என்றனரே,
படைப்பவன் தான் கடவுள் எனில்,
என்னை சுமந்தவளோ இல்லை சொட்ட விட்டவன் கடவுளோ..?
காப்பதும் அவனே எனில்,
என்னை காத்தவர் யாவரும் கடவுளோ...?
அழிப்பதும் அவனெனில்,
எதிரில் என்னை அழிக்க நிற்பவன் யாவனும் கடவுளோ...?
நானே எல்லாம் என்ற போதும்..
யாதும் என்றோ அவள் உருப்பு தானே,
இதில் ஆணாவது என்னவோ..
நானாவது என்னவோ..!?



No comments:

Post a Comment