Monday, March 24, 2014

முதல் துளி நீ எனக்கு!

மொட்டை மாடி தூக்கத்தை கலைக்கும் சிறு தூறல் போல
உன் துப்பட்டா தீண்டும் போது
விழித்திருந்தும் மீண்டும் விழிக்கிறேன்..
பேசி முடித்து நீ போகும் போது
அடைமழையில் ஆடி தலை துவட்டி
சிறு தூறல் தேடி கை நினைக்க துடிக்கும் மனமாய்
வேறு என்ன பேச என்று தேடித்துடிக்கிறது..
நீ நில்லாமல் ஏதும் சொல்லாமல்
சிறு பார்வை வீசி குட்டி சிரிப்பை எறிகையில்
மழை தூறல் தாங்கிய இல்லைகள்
என் முகத்தில் சாரல் தெறிக்கிறது..
உன்னோடு நடக்கையில்
அந்த வானம் வெளிக்கிறது
இருந்தும் உன் சிரிப்பில் மின்னல் வெட்டி
அடைமழையே பொழிகிறது..
உனை காணாத போதும்
சிலந்தி வலையில் சிக்கிய துளியாய்
மின்னும் உன்னோடு இருந்த ஞாபகங்கள்..
எங்கிருந்தோ ஆரம்பித்து
ஆயிரம் மையில் கடந்து
எங்கு எதை தொட்டு வந்தபோதும்
என் நெற்றி மத்தியில் வந்து சேரும்
என்னை தொடும்
முதல் துளி நீ எனக்கு!

No comments:

Post a Comment