Sunday, March 30, 2014

கோர்க்க நீயா வா!

ரையிர பேய் கூட
ஒத்த மரத்துல தூங்க போயாச்சு
ராத்திரி பொழுதெல்லா
தொலைச்ச தூக்கத்த தேடியே காணாம போகுது
என்னத்த தேடனு எத தொலச்சேனு
தேடும் போதே மறந்து போகுது
தூக்கம் கலஞ்சு கண்ணு தெறக்கும் போது தெரியுது
அதுவர நீ என் கூட பேசினத நினச்சுதா நேரம் போனது
பொண்ணுக்கு காதல் வந்தா
யாருக்கு தெரியாது
செரிக்காத சோரா
அவ நெஞ்சு கூட்டில கிடந்தது வாட்டி எடுக்கு
என் பொழப்பு இங்க வேற
காதல் வந்து வாட்றது எனக்கே தெரியாது
என்னைய வாட்றது அதுனே தெரியாம
என் மலே நானே வெறுப்பாகி கிடந்தே
எவனையும் கூட்டுல சேக்காம தனியாவே திரிஞ்சே
எல்லா புரிஞ்சு சொல்ல வரதுக்குள்ள
நீ போய்டே
நீ போ இப்போ நீயாவே
நா தொலச்சத தேடயில கிடச்சுது ஒ தூக்கோ
நீயாவே தேடிட்டு வா
நீ நானுங்கரத கொர்த்து நாமுனு ஆக்க
ஆயுசு இன்னு இருக்கு காத்துகிடக்க
நா கிடக்கே உனக்காக!

No comments:

Post a Comment