Monday, November 7, 2016

சீவகாருண்யர்கள்

விருந்திற்கு தான் அழைத்தனர்
சீவகாருண்யர்கள் என்று தான் சொல்லிக்கொண்டனர்
கீரையும் கூட்டும் தான் என்றனர்
அவர் இல் சென்ற போது அவர்கள் சைவம் என்று உணர்த்தியது - வீட்டு வாசலில்
குருதி தேய இணை இணையாய் கிடந்தத மாடுகள்
கல்லூரிக்கு ஓடிய மூத்த மகன் முதுகில் பொதிகள் நிரம்பிய
 கழுத்தறுக்கப்பட்ட குரும்பாடு
அடுத்து வந்த இளைய மகள் இதழில் வழிந்த குரங்கின் கண்ணீர்
அவர் மனைவியின் தோள்லில் தொங்கிய – எழுவது ஆண்டுகள்
என்ற சராசரியை கொண்ட இரண்டே வயதில் கழுத்தறுபட்ட முதலை
அவர் இடையில் நெளிந்த நடு உடலில் கத்தியால் கீறி கிழிக்கப்பட அரவம்
சமணர்களை கழுவேற்றிய சைவத்தினரிடம் யாது காருண்யம் கண்டிட முடியும்!!?



No comments:

Post a Comment