Sunday, January 8, 2017

புத்தரின் மனையாள்

லகில் இனம், மதம் என எல்லாவற்றிக்கும் முன்னரே தீண்டாமையைச் சந்தித்தவள் இவள். மாதவிடாய் காலத்தில் வரும் இரத்தம் தீட்டு என ஒதிக்கி வைக்கப்பட்டாள். அந்த நாட்களில் தொடுவதற்கே ஏற்றவளல்ல என புனித சடங்குகளில் இருந்த ஒதுக்கியே வைக்கப்பட்டிருக்கிறாள்.

தங்கள் பேரரசில் சூரியன் மறைவதே இல்லை என்று பெருமை பட்டுக்கொண்ட, இன்று ஒரு பெண் அரசியை கொண்ட இங்கிலாத்தில் 1918ல் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. முதல் பொதுத் தேர்தல் 1708ல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் கறுப்பின மக்கள் என ஒடுக்கப்படவர்களுக்கு வாக்குரிமை 1870ல் வழங்கப்பட்ட போது கூட பெண்களுக்கு இல்லை, அவள் 1920ல் தான் பெற்றாள்.

இவள் இன்ன உடை தான் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள், இவள் அங்கம் தெரிந்தால் அவன் உணர்சிகள் தூண்டப்படும் என்று ஒரு ஆணின் கண்ணோட்டத்தில் சொல்லப்படுகிறதே தவிற பொது சித்தனை இல்லை. முறுக்கிய மீசை, பரந்த மார்பு என திரியும் ஆணைக்கண்டு அவள் உணர்சிகள் பொங்கக் கூடும் என்று ஆணை போர்த்திக்கொள்ள சொல்லும் மதங்கள் இங்கு இல்லை. உண்மையில் அவள் ஒரு மணி நேரத்தில் பல முறை உச்சம் அடைய முடியும், அப்படி பார்த்தல் அவள் உணர்சிகள் தூண்டப்பட்டால் பல கொலைகள் அன்றாடம் நடக்கும்.

கட்டிய மனைவியை விட்டு நாட்டியக்காரியிடம் சென்றவனை தலைவனாகக் கொண்ட சிலப்பதிகாரத்தை ஏற்றுக்கொள்பவர்கள் கூட மகாபாரதத்தை விமர்சிக்கும் போது திருமணதிற்கு மும்பு பிள்ளை பெற்றவள், ஐவரை திருமணம் செய்யும் பெண் நாயகியாக சொல்லும் கீழ்த்தரமான காவியம் என்று ஒரு பெண்ணின் நெறியை தொட்டே இடித்துரைப்பர்.

Prince Siddhattha & Princess Yasodhara's marriage
இப்படியாக அவள் கட்டுப்பாடுகளுக்குள் தான் இன்றும் தினிக்கப்பட்டிருக்கிறாள். பாற்கடலில் ஆதிசேசன் மேல் விஷ்ணுவின் திருவடிகளை பற்றியவாறு தான் லட்சுமி இருக்கிறாள். இங்கு குழந்தை இடை கூடுதலாக இருந்ததால் உறுப்பை கீறி அவள் பிரசவிக்கிறாள், பின்னர் எட்டு தையல்கள் போடப்பட்டு பிழைத்து வருகிறாள். அதை உணர்ந்த அவள் பெற்றோர் அவளை தாங்குகிறார்கள் அதற்க்கு பேரன் பிறந்ததில் மகிழ்ச்சி இல்லையோ உன்னை மட்டுமே தாங்குகிறார்கள் என்று உரும்பும் கணவர்களோடும் அவள் வாழ்கிறாள்.

நான் பார்த்தவரையில் என் தந்தை எந்த வீட்டு வேலையும் செய்தது இல்லை. என் அன்னை வீடிற்கு எதுவும் சம்பாதித்ததும் இல்லை. இப்போது காதலித்து மணமுடித்த கணவன் தான் சம்பாதிப்பதில் பாதி சம்பாத்தியமே பெற்றாலும் அகம்பாவம் இல்லாது இல்லறம் நடத்துகிறாள். அவள் காலையில் தூங்கும் கணவனுக்கு, அவன் பெற்றோருக்கு, மத்தியம் அவளுக்கும் சமைத்து கட்டி எடுத்துக்கொண்டு இனி ராத்திரி திரும்பி என்ன சமைக்க என்ற சிந்தனையோடே வேலைக்கும் ஓடி ஒரு பதவி உயர்வு பெற்றுவிட்டால் அவள் பல முறை தீக்குளிக்க வேண்டி இருக்கும். அவள் வேலை செய்யும் இடத்தில் அத்துனை ராவணன்கள், துட்சாதனங்கள், துரியோதனன்கள் உண்டு.

வேலைக்கு போகும் அவளை ஏன் வீட்டு வேலை வாங்குகிறீர்கள் என்று கேட்டால் சட்டென பெருமிதமாய் வரும் பதில் ‘என்ன சொன்னாலும் நானே செய்யறேன்றா’. இதையே தன் மகன் சொல்லி சரி என கால் நீட்டி அமர்ந்து கிடக்கும் தாயை நான் கண்டதில்லை. ஆனால் அதே வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருந்தால் அவள் பள்ளிப் பருவம் தொட்டே துவைக்கவில்லை என்றாலும் துணிகளை மடிக்க கற்றுக்கொடுக்கப் பட்டிருப்பாள். சமைக்கவில்லை என்றாலும் பாத்திரம் தேய்க்க கற்றுக்கொடுக்கப் பட்டிருப்பாள். இவன் தான் உண்ட தட்டை கூட கழுவாமல் வளர்க்கப்படிருப்பான்.

இனி அவளுக்கு சமமாக இவன் இருக்க பெற்றோர்கள் இனி இவனுக்கு வீட்டு வேலை செய்ய கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும். அவள் இன்று சம்பாதிக்கவும் செய்கிறாள் இவனுக்கு மேலாகவே.


இப்படி மாற வேண்டியது அவளை சுற்றி இருப்பவர்கள் தான் அன்றி அவளில்லை. அவள் விருப்பம் போல் உடை அணிந்து, விம்பிய நேரத்தில் விரும்பிய இடத்திற்கு செல்ல பாதுகாப்பு இல்லை என்றால் அது அந்த நாட்டிற்க்கு கேவலமே அன்றி அவளின் விருப்பங்களின் பிழை இல்லை. இதை உணராதோர் ஆளும் நாட்டில் பெண்ணியம் ஏட்டுச் சுரைக்காயாக தான் இருக்கும். இவள் தான் பாதிக்கப்பட்டும் குற்றத்திற்கு காரணமாக பழியையும் சுமக்கிறாள். இது கேவலமான நாடு தான்.

No comments:

Post a Comment