Tuesday, March 13, 2012

தாயுமானவன் நான்

யிலில் 
என் எதிரில் அமர்ந்து இருக்கும் குழந்தை 
கையை சன்னல் வழி வெளி நீட்ட
அதன் தாயானவள் அதட்டி கை இரண்டை கட்ட வைத்தாள்..
அது கண்டு ரசித்து புன்னகையுடன் தலை திருப்பின்
எதற்கோ அழுகின்ற அந்த குண்டு குழந்தையை 
துக்கி போட்டு, வயிறில் வாய் வைத்து ஊதி
தந்தை சிரிக்க வைக்க போராடிக்கொண்டிருந்தார்..
நானும் இப்படி தான்
திசை மாறி போகும் என் மனதை அதட்டி
அடக்குகிறேன் சில நேரம் தாயாய்
இழந்ததை நினைத்து அழும் பொழுது
தேற்றுகிறேன் தந்தையாய்!
என் மனதிற்கு தாயுமானவனாய் நான்!!!





No comments:

Post a Comment