Sunday, November 13, 2011

எ மக!

ன் பிரணாப் பெருங்கனலால்
என் இனயவள் உதிர்த்த
வியர்வையின் உன்னதம் நீ!
உன்னை நுட்பமாய் தொட்டு ரசித்து சொல்லும்போது
எதுவும் புரியாமலேயே அவளோடு சிரிப்பேன்!
நீ நடக்கும்வரை நானும் உன்னோடு தவழ்வேன்,
அந்த வெயிலின் வெப்பத்தால் மட்டும்மல்ல -
என் உள்ளங்கையின் வெப்பத்தால் வளர்பவள் நீ,
என் கை பிடித்து நடக்கும் என் அன்னை நீ,
என் மார்பில் தூங்கும் என் அன்னை நீ,
சாப்பிட மறுத்து என் முகத்தில் உமிழ்ம் என் அன்னை நீ,
பள்ளி செல்ல அடம் பிடிக்கும் என் அன்னை,
என் தோளில் சாய்ந்து அழும் என் அன்னை நீ,
தாவணி போட ஊர் பார்க்க
வெட்கத்தில் என் பின்னல் ஓடிப்போய் ஒளியும் என் அன்னை நீ,
அடுத்தவன் கைபிடித்து உன்னை தாரைவாற்கும்போது -
கண்ணீர் துடைக்கும் என் அன்னை நீ,
நான் வளர்க்கும் என் அன்னை நீ,
என் வாழ்வின் ஆதாரம் நீ,
எங்கள் காதலின் அடையலாம் நீ,
என் மூன்றாம் அன்னை நீ!

--சித்ரன்



Saturday, November 12, 2011

நிஜத்தில் பொய்யாக

நினைவுகளோடு உறவாடி,
கனவுகளோடு சிரித்து,
நிஜத்தில் பொய்யாக புன்னகைத்து,
நடந்ததை மறந்து,
எனக்கு நானே உண்மையை மறைத்து,
வாழ தயாராகிறேன் தினம் தினம்!




Saturday, November 5, 2011

அவள் பெயர்!


தாவது நினைக்கும் போது வரும் அழுகைகும்
அழும்போதெல்லாம் வரும் நினைவுக்கும் -
இடையில் இருக்கும் அவள் பெயர்!
நீண்ட மௌனத்தை கலைத்து,
என்ன என்ற கேள்விக்கு
பதிலாய் வரும் ஒன்றுமில்லை -
என்பதில் இருக்கும் அவள் பெயர்!
காலை கண்கள் உறக்கத்தை உதறும் போதும்
இரவில் கண்கள் உறக்கத்தை அணைக்கும் போதும்
சட்டென வரும் நினைவு போல் அல்லாமல்,
சலனம் ஏதும் இன்றி எப்போதும்
என் மனதின் முனுமுனுப்பில் இருக்கும்
அவள் பெயர்!
அதுவாவது எனக்கானதாய் இருக்கட்டும்
எனக்கான எனக்கு மட்டும்மான
அவள் பெயர்!

--சித்ரன்

குறுக்கு சிறுத்தவள்!


லை கொதிப்பு போல் இவள் இயக்கம் இருக்கும்,
போட்டுத்தந்த பாதையில் மட்டுமே
இவள் பயணம் இருக்கும்,
அதிகம் ஒடிந்து போகமாட்டாள்,
அதிகம் உழைப்பில் களைக்கமாட்டாள்,
அதிகம் சுமப்பாள்,
யார் குருக்கிடினும்
இவள் கூர் வேகம் குறையாது,
இவள் பாதை இவளுக்கு மட்டுமே.
இப்படியும் ஒருத்தி வந்திருக்கிறாள்,
அதுவும் எப்போது என்பதை
எண்ணுதல் ஆச்சரியம் கூடும்.
எந்த பாதையிலும் சென்று,
வருவோர் போவோருக்கு வளைந்து கொடுத்து,
இப்படியாக இருந்தவர்கள் வாழ்த்த காலத்தில்
இவளும் வந்திருக்கிறாள் எனில்
இவளை பெற்றவனை என்னவென்று வைதிருப்பர்!
பலர் சிலாகித்திருந்தாலும்
சிலராயினும் சீன்டியிருக்கலாம்!
ஆனால் இன்று,
அவள் இடுப்பை வளைத்து செல்லும்
அழகை பார்க்கமாட்டார் இல்லை,
தினம் தினம் பார்பவருக்கும்
பரவசம் குறையவில்லை
யாருக்கும் குறையாத அவள் கூர் வேகம் போல்,
விழியில் பிரமிப்பு போகவில்லை
அவளோடு பல முறை பயணம் செய்தும்.
நன்றி மீண்டும் வருக என இரு கரம் கூப்பி
சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறாள்
அவளோடு பயணம் முடித்து
அவரவர் பாதை பார்த்து போவோருக்கு இன்று!
எப்போதோ எவனோ கொஞ்சம் மாத்தி யோசித்திருக்கிறேன்
மண்டைக்காரன் அவன்!

--சித்ரன்

Sunday, October 2, 2011

என்னவள்!

லையில் விழும் நீரானது -
அங்கத்தோடு தழுவி அங்கங்கே தங்கிச் செல்வது போல்,
என் சிந்தையோடு தழுவி என்றும் தங்கிடுதல் அவள் ஆகுமோ!
பார்த்ததும் விழச் செய்திடும் அழகான அகண்ட கண்கள்
அதன் மேல்சீரான புருவமும், கூரான நாசியும் கொண்டு,
தாரான கூந்தல் முதுகு தாண்டி தொட்டிட்டால் அவள் ஆகுமோ..?
அதன் முன்புறம் அவள் அழகு கூட்டினல்
அவள் நகைக்க, இதழ் நினைக்க என் தொண்டை வற்ற செயல் அவளேன்றாகுமோ?
அடிமேல் அடி வைத்து அவள் நடக்க
என் காலம் நின்றுவிட்டால் அவளேன்றாகுமோ?
என் தவறினை ரசித்துத் திருத்திட்டால் தெரிந்திடுமோ அவள் என்று!?
இது எல்லாமோ நான் பார்ப்பேன்,
கோவம் கொள்ளும் வேளையில் என்னை போ எனச் சொல்லி,
மார்போடு சாய்ந்து அழும் அவளுக்கென்ன!
வர வேண்டாம் என சொல்லி எனக்காகக் காத்திருக்கும் அவளுக்கென்ன!
சிரித்தாலே மறைத்திடும் விழியானாலும்
எங்கிருந்தும் என்னை குத்திடும் அவளுக்கென்ன!
என்னை போல் என் மேல் காதல் கொள்ளுதல் போதாது
அவள் என்னவள் என நான் உணர்ந்திட!





Saturday, September 10, 2011

மழை இரவில்..!

னைத்தையும் தொட்டணைக்க வந்துக்கொண்டிருக்கும் மழையின் அறைகூவலாய்
அனைத்தையும் சுழலவைதுக் கொண்டிருந்தது காற்று!
வருகிறேன் என சொன்னதுதான் தாமதம் என்பது போல்,
விருட்டென வந்து கொட்டியது..
இந்த மழை..
எங்கோ சென்றுக்கொண்டிருந்த ஜோடியை,
அந்த பாலத்தின் அடியில் ஒதுங்க வைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது!
பேருந்தில் சன்னால் ஓரம் தூங்கிகொண்டிருந்தவரை
சடாரென எழுப்பி விட்டு சிரித்தது மேகக் கூட்டம்!
வேகமாய் தன் கடையை பூட்டிக் கிளம்பியவரை
அதனினும் வேகமாய் திறக்கவைத்து,
சாலையோரம் சென்றுக்கொண்டிருந்தவரை தஞ்சம் அடையவைத்து,
அவர் மேல் சாரல் புன்னகை விசிக்கொண்டிருந்தது!
ஐந்தாண்டுக்கு ஒருமுறை மட்டும் வாழும்-
அற்ப ஜீவனாய் ரோட்டோராதில் உறங்கிக்கொண்டிருந்தவரை,
உதற வைத்து இரக்கமின்றி அவரிடத்தை ஈரமாக்கி விட்டிருந்தது-
தான் மண் மீது கொண்ட உரிமை பத்திரம் காட்டி!
கொஞ்சம் பயந்தார் போல் தான் வேகமாய் ஓடியது,
அவரிடத்தில் விழுந்த நீர் உரிமை நிலைநாட்டி இருப்பினும்!
சிலருக்கு அனந்த கண்ணீராக!
சிலருக்கு கொதி நீராக!
உலகிற்கு சம மழை என பெய்த போதும்,
பாகுபாடுகள் பல உண்டு இங்கு!
இரவோடு வந்ததால் இன்னமும் நெருக்கம் உண்டு
கொஞ்சம் வெறுப்போடு!
காலையும் கேட்கலாம் ஈரம் காய்தாலும்
இந்த திடீர் மழையை பற்றி
பலவாறான பேச்சுக்களை!
பார்த்ததை காட்டிலும் கொஞ்சம் அதிகமாய்!






Sunday, August 7, 2011

எது வரை கேட்கும்...!?

ம் பொறுமையின் குடம் தீரும்வரையில்..
இவர்தம் காதுகள் கேளாது! 
ஒருநாளில் குற்றம் குறைக்க மந்திரம் ஏதும் தெரியாத நாய் மந்திரி இவர்!
ஏதும் ஒருநாளில் நடந்திடாதெனில்,
விலை உயர்வு மட்டும் எப்படியோ..
காலைப் பத்திரிக்கையிலும், மாலை பத்திரிக்கையிலும்
மாறி மாறி ஒரேநாளில் ஏறிவரும்..?
கொஞ்சம் கொஞ்சமாய் பரவி,
தலையை தாக்கும் விஷம்...
உம்ம விலை உயர்வும் அதுபோல் தானே..?
கொஞ்சம் கொஞ்சமாய் பரவும் போது பாராளுமன்றத்தில் 
யார் பெண் மயிரில் பூச்சுடிக்கொண்டிருந்திர்..?
பணம் பணம் என கேட்டுப் பிடுங்கும்,
பரத்தையர் சேரியானது உம்ம அலுவலகம்
நீர் இன்னும் அறிந்திருக்கமாட்டீர்!
அமாவாசையும் எமகண்டமும் பார்த்து பார்த்து,
மனு வாங்கும் இடம் பெயர் அறிவாலயமாம்,
இவர் மூடநம்பிக்கை ஒழிக்கும் ஒளிதருவாரம்!
அம்மா என்ற சொல்லே கேடவார்தையாக்கிவிட்டார்!
எம் முதுகு தோல் உரித்து..
என்னகே இலவச செருப்பு தருவர் ..
அதன் அச்சு உம்ம கன்னத்தில் பதியும் நாள் வரும்!
நீர் போடும் சட்டமும் வரியும்,
வந்தவன்தான் ஏற்பாரோ இல்லை..
போபவன்தானே என பொருப்பாரோ!
போட்ட சாலைக்கு வாகனம் செல்ல வரியாம்
இதில் சுங்க வரி என்று ஒவ்வொரு முக்கிலும் இன்னும் கேட்பாராம்,
பணம் கொண்டவன் கட்டித் தொலைப்பான்,
மானம் கொண்டவனே தட்டிக் கேட்பான்!
கிழக்கில் விடியவில்லை என்றாலென்ன,
இதோ மேற்கே ஒளி தெரிகிறது.. 
உமக்கு கிலி காட்ட வரும்!
புரட்சிகள் மீண்டும் வரும்..
அன்னியருக்கு எதிராய் மட்டும் கண்டிருப்பீர் இங்கு,
இதோ ஆளத்தெரியாதவருக்கு எதிராய்
அதிகார போதையில் திளைப்பவருக்கு எதிராய்!
இன்னுமா கேட்கவில்லை உமக்கு அந்த சத்தம்
காதைத் திறந்துவையும்!
பெற்ற அப்பனே ஆனாலும்
தவறென்று பட்டபின் பாசம் அறுத்து
ஊர் பார்க்க உலகம் கேட்க
உடனே அவன் தலை கொய்யும் துணிவு வரும் வரை கேட்கும்..
இந்த ஈனம் கெட்ட நாய்களின் குரைச்சல்...!