Saturday, November 5, 2011

அவள் பெயர்!


தாவது நினைக்கும் போது வரும் அழுகைகும்
அழும்போதெல்லாம் வரும் நினைவுக்கும் -
இடையில் இருக்கும் அவள் பெயர்!
நீண்ட மௌனத்தை கலைத்து,
என்ன என்ற கேள்விக்கு
பதிலாய் வரும் ஒன்றுமில்லை -
என்பதில் இருக்கும் அவள் பெயர்!
காலை கண்கள் உறக்கத்தை உதறும் போதும்
இரவில் கண்கள் உறக்கத்தை அணைக்கும் போதும்
சட்டென வரும் நினைவு போல் அல்லாமல்,
சலனம் ஏதும் இன்றி எப்போதும்
என் மனதின் முனுமுனுப்பில் இருக்கும்
அவள் பெயர்!
அதுவாவது எனக்கானதாய் இருக்கட்டும்
எனக்கான எனக்கு மட்டும்மான
அவள் பெயர்!

--சித்ரன்